வாசிப்பின் நிலப்பரப்பு: ஜாய்ஸின் டப்ளின்

கதைகள் சாதாரண வாழ்க்கையின் பல்வேறு அடுக்குகளைத் தாண்டிச் செல்கின்றன, நிச்சயமாக அவை அந்தச் சாதாரணத்துவதையும் அது ஏற்படுத்தும் விரக்திகளின் பட்டியல்கள் மட்டுமே அல்ல. ஜாய்ஸ் குறிப்பிட்ட “scruplously mean” மொழி , கட்டுப்பாடு, துல்லியம், நடையின் சிக்கனம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது, அழகியலும் தார்மீகத் துல்லியமும் அவற்றில் பொதிந்திருந்தன. ‘எபிஃபனீஸ்’ (epiphanies) என்ற விஷயத்தைப் பேசிவிட்டு, இந்த உரைநடை பாணிக்கு வருகிறேன். இது ‘டப்ளினர்ஸ் -இன் புகழ்பெற்ற அடையாளமாக மாறிவிட்டது

காண்பதுவே உறுதி கண்டோம்

எனக்கென்ன தோன்றுகிறது என்றால்…ஒருவருடைய நிலை, ஆளுமை நியாயவாதியா, பொய்யரா என்பது அனிச்சையாகத்தான், நிகழும் அந்த கணத்தில்தான் தெரியவரும்…கொஞ்சம் மாற்றிச்சொன்னால்…யோசிக்க நேரம் எடுத்துக்கொண்டாலே தங்களுக்கு ஏற்ப, சூழ்நிலைகளை ஆராய்ந்து தக்க எதிர்வினை செய்யலாம் என்றாலே ஒரு மாதிரி நீர்த்து போய்விடுகிறதோ என்று படுகிறது…”

சிக்கலான வன்முறை செறிந்த விட்டேத்தியான உலகமும், நக்கலான அபத்த எதிர்வினையும்

‘ஈருருவில் ஒளிரும் ஒற்றைக் கலைச்சுடர்’ என வர்ணிக்கப்படும் இந்த சகோதரர்கள், கூட்டாக தங்கள் படங்களை எழுதுகிறார்கள், இயக்குகிறார்கள், தயாரிக்கிறார்கள், மேலும் படத்தொகுப்பும் செய்கிறார்கள்; பிந்தையப் பணியை பொதுவாக ரோட்ரிக் ஜெயின்ஸ் (Roderick Jaynes) என்ற புனைப்பெயரில் மேற்கொள்கிறார்கள். ஒரு கருவின் முதல் பொறி முதல் இறுதி வடிவம் வரை நீளும் இத்தகைய விரிவான தனித்துவமிக்க செயற்பாடு, ஒரு வாழ்க்கை வரலாற்றுச் சித்திரம் மட்டுமல்ல, அவர்களின் நிலையான கலைத்துவ முத்திரையை இயக்கும் மற்றும் வரையறுக்கும் ஒரு முதன்மை நெறிமுறையாகும். இந்த ஒருங்கிணைந்த செயல்முறை கட்டுப்பாடு, அவர்களின் தனித்துவமான திரைமொழியை அவர்களின் தனித்துவமான காட்சி மற்றும் தொனிநயத்துடன் தடையின்றி சங்கமிக்க அனுமதிக்கிறது

இரவு

உள்ளே
எங்கேயோ
இந்தப் பிரபஞ்சத்துக்குள்
ஒரு பேனா மூடி அளவேயான
குப்பி உள்ளது.
உள்ளதா?
கடல் கொண்டும் அதை
நிரப்ப முடிவதில்லை.

ஒலிமுகவாசல்

அந்தச் சிறு அவகாசத்திற்குள் அவன் அந்தப் பெண்ணைக் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தான். அவர்கள் கடற்கொள்ளைக்காரர்களா, தரையில் கொள்ளையடிப்பவர்களா என்பதில் அவனுக்கு ஒரு குழப்பம் இருந்தது. கொள்ளைக்காரர்களை விரட்டி விட்டு, அவளது சிவிகையை ஒற்றைத் தோளில் சுமந்து அரசரிடம் ஒப்படைத்து இருந்தான்.

உணவாகும் எச்சில்!

அக்கூடுகள் தீவின் சுண்ணாம்புக் குகையின் சுவர்களில் அமைக்கப்பட்டிருந்தன.  சின்ன உழவாரப்பறவைகள்  (swiftlets) முட்டையிட்டு குஞ்சுகள் வெளிவந்ததும் கைவிடப்பட்ட ஏராளமான கூடுகளைச்சேகரித்து உணவாக உண்பதை அத்தீவுவாசிகள் பலகாலமாக செய்துகொண்டிருந்தார்கள். அக்கூடுகள் சுவையாக இருந்ததோடு  உண்பவருக்கு நல்ல ஆற்றல் அளித்து அவர்களை இளமையாக வைத்திருக்கவும் உதவின.  மிகவும் அதிசயித்துப்போன ஜிங் ஹெ அந்தப்பறவைக்கூடுகளை  அப்போது பதவியேற்றிருந்த மிங் சாம்ராஜ்யத்தின்  புதிய இளம் பேரரசருக்குக் கொண்டு வந்தார்.

துரதிருஷ்டம்

“எப்படி? எப்படி முடிப்பீர்கள்? 2120ல் நடந்த கொலை, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது.  பகலில் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சிசிடிவிக்கள். அதை வைத்து வீட்டிற்கு யாரும் வரவில்லை, யாரும் வீட்டிலிருந்தும் வெளியே செல்லவும் இல்லை என்பது தெளிவு. ஆனால், ஜெய் கிஷோர் கொல்லப்பட்டிருக்கிறார். அதுவும் கத்தியால் நடுமார்பில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். கத்தில் கைரேகைகள் ஏதும் இல்லை.

நியூயார்க் ஓணம்

ஒன்றும் இணங்காமலிருந்தாலும் இடையில்
சமரசம் செய்பவன் கொழுத்திடுவான்
சொந்தமாய் ஒருவரைக் கொண்டு சேர்த்தே
ஒருவன் இரண்டாமவனைப் புறந் தள்ளுவான்

தோட்டத்தின் நடுவில் இரு மரங்கள்

ப்ரபஞ்சம் முழுதையும் படைத்த கர்த்தர், பரலோக ராஜ்ஜியத்தைத் தான் ஆண்டுகொள்வதாகக் கூறி, பூமியை இவர்கள் ஆண்டுகொள்ளும் உரிமையை அளித்திருந்தார். இவர்கள் இருவரும் வசிப்பதற்காகவே இந்த ஏதேன் தோட்டத்தை உருவாக்கினார். சுற்றிலும் பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களும், செடி கொடிகளும் உண்டாயின. தோட்டத்தின் நடுவில் ஜீவ விருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார்

எழுது சித்திரம்

கண்ணனின் குழலிசையும் அதற்கான விலங்குகளின் எதிர்வினையும் கவிதையில் இரண்டிரண்டு அடிகளில் மிகச்சரியாக வகிர்ந்து அளிக்கப் படுகின்றன. குழலூதும் கண்ணனின் மெய்ப்பாடுகளும், இசை நுகரும் விலங்குகளின், பறவைகளின் உடல் மொழியும் இயல்பாகக் கவிதையில் பதிவு செய்யப் பட்டுள்னை, அளவான விவரணைகளும் அவற்றின் துல்லியமும் அதி கேள்வி அனுபவத்தைக் காட்சி அனுபவமாக மாற்றிக் கொடுத்து விடுகின்றன.

சோற்றுப் பொட்டலம்

பசியையும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வியர்க்க, விறுவிறுக்க தங்கள் வகுப்பறைகளுக்குள் வந்தனர். கஞ்சி அல்லது சோறு சாப்பிட்டு விட்டு வந்திருந்த அதிர்ஷ்டவசமான குழந்தைகள், வீட்டில் எதுவும் அன்று சமைக்கவில்லை என்று தெரிந்தே வந்திருந்த அதிர்ஷ்டமற்ற குழந்தைகள் என்று எல்லோரும் உட்கார, பெஞ்சுகள் நிரம்பின. சோற்றுப் பொட்டலங்களச் சாப்பிட்ட குழந்தைகள் திருப்தியாகவும், சாப்பாடு இல்லாத குழந்தைகள் பக்கத்திலுள்ள கிணற்றுத் தண்ணீரில் வயிற்றை நிரப்பிக் கொண்டும், தங்களிடத்தில் உட்கார்ந்து கொண்டனர்.

சின்னச் சின்ன இழைகள் நெய்யும் தத்துவச் சித்திரம்

பொய்யான மீபொருண்மையை (Metaphysics) விடவும் மோசமானது, மீபொருண்மையைப் பற்றிய எச்சரிக்கைகள். எப்போது, ஐம்புலன்களால் மட்டுமே அறிந்ததைத் தாண்டி செல்கிறோமோ, அப்போது அது ஆடம்பரமாகத் தோன்றும் என்பது வெளிப்படைதான். ஆனால், அது மீபொருண்மையின் குற்றமல்ல; அது துறை சார்ந்த ஒரு ஆபத்து; எப்படி மூட நம்பிக்கைகள், மதம் சார்ந்த விபரீதங்களோ, தர்க்கப் பூர்வமாக விவாதிக்கையில், வறட்டுப் பிடிவாதம் வரட்சியைத் தருமோ, (சரியான காரணங்கள் அமையாத நிலையில் அது போடும் ஆவேச வேடம்!) அவ்விதம் தான் மீபொருண்மையிலும் நிகழ்கிறது. நான் ஆடம்பரம் என்று தான் சொன்னேன்- தவறு என்று சொல்லவில்லை.

பைசாசம்

சதா சர்வகாலமும் காதில் குறி சொல்லிக்கொண்டே இருக்குமொரு “கர்ண யக்ஷினி” தம்மிடம் இருந்ததாகவும், அதன் இடையறாத குரல்களைக் கேட்டு, தம்முடைய இடப்பக்க செவி, கேட்கும் திறனற்றுப் போனதாகவும், பிறகு தமது குருநாதரின் உதவியுடன் பெரும் ப்ரயத்தனப் பட்டு அந்த யக்ஷிணியை தம்மிடமிருந்து விடுவித்துக் கொண்டதாகவும் ஒருமுறை சங்கரனிடம் கூறினார்.

ஒரு செல்லுக்கு தன்னைப் பற்றி என்ன தெரியும்?

ஒரு செல்லுக்கு “நினைவு” என்பது, நம் போன்ற பழைய நினைவுகளை நினைவுகூர்வது அல்ல. அது, முன்னர் நடந்த அனுபவங்களின் அடிப்படை மாற்றங்களால், அடுத்த முறை ஒரு சைகை வரும்போது அதை வேறு விதமாக எதிர்கொள்வது. ஒரு செல், ஊட்டச்சத்து, ஹார்மோன், அருகில் உள்ள செல்களின் சைகைகள் போன்ற வேதியியல் வடிவங்களை ஒவ்வொரு தருணத்திலும் பெறுகிறது. அந்த அனுபவங்கள், செல்களின் உள்ளே உள்ள புரோட்டீன்/டிஎன்ஏ செயல்பாடுகளை மாற்றுகிறது.

றெக்கை – அத்தியாயம் மூன்று

This entry is part 3 of 20 in the series றெக்கை

“சூல் பிடிச்சிருக்குன்னா என்ன? லோகத்துலே வேறே யாரும்  குழந்தை பெத்துக்கலியா? அவ   தாத்தா செல்லம், அப்பா செல்லம். நான் சொன்னா எங்கே கேட்கப்  போறா. போங்கோ நடந்து போயோ பறந்து போயோ  பெரிய பொதியா உம்ம பேத்திக்கு தேன்  முட்டாயி வாங்கிண்டு வந்து கொடுங்கோ”

கவரப்பட்ட குழந்தை 

ஆடித் திரியும் ஆறு
மேலிருக்கும் மலையிலிருந்து
இறங்கி வரும் பாதையெல்லாம்
குட்டி நட்சத்திரமும் குளிக்க முடியாத
குட்டைகளாய் தேங்கும்.
அங்கு
பெரும் தூக்கத்திலிருக்கும்
மீன்களை பிடித்து
கலக்கமுறும் கனவுகள் உண்டாக
காதில் மந்திரங்கள் ஓதுவோம்.

சம்பந்தம்

நான் ஒரு செயல் செய்தால், அதுக்கு உலகம் ஒன்றை திருப்பி செய்யுது. என்ன திரும்பச் செய்யும் என்பது என் கையில் இல்லை, அது எனக்கு பிடிச்சதாகவும் இருக்கலாம், பிடிக்காமலும் போகலாம்… நான் அதில் எது வந்தாலும் அதில் நிற்கனும்…”  அவன் கண்கள் ஒரு நொடி கலங்கி தெளிந்தன. அவன் திரும்பி மாலியை பார்த்தான். அடுத்த நொடி அவன் முகம் பழைய நிலைக்குத் திரும்பியது. ”சாரி உங்களை குழப்புகின்றேன். நான் என் பர்சனல் மம்போ ஜம்போவை எங்கள் தீவின் விருந்தினரிடம் சொல்லி விட்டேன். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நான் பார்த்துப்பேன்

கே. சிவாரெட்டி

பெண்ணியம் தீவிரமான வடிவம் எடுப்பதற்கு முன்பாகவே கே. சிவாரெட்டி ஆணாதிக்கத்தை நிபந்தனையின்றி எதிர்த்து, பெண் சார்புடையவராக எழுதத் தொடங்கினார். “கைவிரல் குகை” (சேத்தி வேள்ள குஹ) என்று சிவாரெட்டி பயன்படுத்திய குறியீடு, திருமண அமைப்பு என்ற பெயரில் ஆண், பெண்ணை அடிமைப்படுத்தும் விதத்தைக் குறிக்கிறது.   

பை பை ஜெஜு

This entry is part 3 of 5 in the series தென்கொரியப் பயணம்

வீடுகளைச் சுற்றி எரிமலைக் கற்களால் சுவர்களைக் கட்டியிருந்தார்கள். எல்லா வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருந்தது. சதுர வடிவில் நான்கைந்து பேர் அமரும் வகையில் மரப்பலகை இருக்கை. அருகில் இருந்த பேக்கரிக்குச் சென்றால் அங்கே தொடரை எடுத்த காட்சிகளைப் படங்களாக மாட்டியிருந்தார். சிறிது நேரம் தொடரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். என்னைப் போன்ற கே-ட்ராமா பைத்தியங்கள் அதிகம் பேர் அந்த ஊருக்கு வந்து செல்வதாகவும் அருகில் இருக்கும் கிராமத்தில் கூட பல காட்சிகள் எடுத்திருப்பதாகவும் கூறினார். டாஞ்செரின் கேக் அத்தனை சுவையாக இருந்தது.

12. என்றென்றும் நிலைத்திருப்பது  

கார்ல் பாப்பர் எது அறிவியல் என்று வரையறை செய்தவுடன் மற்ற மருத்துவ முறைகள் பொய்ப்பித்தலின் வழியே அறிவியலை விட்டு வெளியே சென்றுவிட்டன. பொதுவாக மாற்று மருத்துவம் என்ற சொல்லாடலில் எனக்கு உவப்பு இல்லை. வேண்டுமென்றால் 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஹிப்னிடிசம், ஐசோபதி, ஆண்டிபதி போன்றவற்றை அப்படி கூறலாம். மற்றபடி ஆயுர்வேதம், சித்தா, சீன மருத்துவம் போன்றவை மாற்று அல்ல. நவீன அறிவியல் கொள்கைக்கு பின் அவை வரையறைக்கு உட்படாமல் போனவை.

வீரனாக மாறிய பேடி

துவக்கத்தில் பெருமை பேசிக்கொண்டு வந்த உத்திரகுமாரன் நேரம் செல்ல பயம் கொள்ள துவங்கினான். ஒருகட்டத்தில் தேரில் இருந்து குதித்து துவங்கினான். அவனைத் துரத்தி சென்ற பிருகன்னளை அவனை தூக்கி தேரில் போட்டுக் கொண்டு அங்கிருந்த வன்னி மரத்தை நோக்கி தேரை செலுத்தினான். அங்கே, கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு துணிமூட்டையை கீழே இறக்கினான்

மின்மினிகள்

காரில் அமர்ந்து ராஜாவாக சவாரி போகிற கற்பனை அவனுக்குள் செத்து விழுந்தது. உடம்போடு மனமும் சேர்ந்து இடிபட, கால்களுக்கு நடுவில் நசுங்கிக் கொண்டு உட்கார்ந்தான். காரின் ஜன்னல் வழியே பார்த்தால் வானமும் மேகமும்தான் தெரிந்தன. பஸ்ஸில் போனால் ரோட்டோர மரங்களும் மக்களும் பின்நோக்கி வேகமாகப் போவார்களென்று கேட்டிருந்ததெல்லாம் ஞாபகம் வந்தது. எக்கினால் வெளியே பார்க்கலாம். ஆனால் உட்கார்ந்திருப்பவர்களின் முழங்கால்களை இடித்துக்கொண்டு எழுந்திருக்கவேண்டும். ‘உட்காரு, உட்காரு’ என்று முதுகில் அழுத்தி, கீழே மீண்டும் உட்கார்த்திவிட்டால் இன்னும் அவமானம். ‘நடந்தே வந்திருக்கலாம். கஷ்டம்தான், இருந்தாலும் இப்படி கூனி குறுகுவதற்கு அந்த கஷ்டமே பரவாயில்லை.’

தொடரும் தேடல்

புது நிலப் பகுதி. அடர்ந்த காடுகளை அறியாதவன். ஆனாலும், மனம் சகோதரியை தேடும் ஒரே நினைவுடன் இருந்ததால், பல நாட்கள் அங்கேயே சுற்றி வந்தான்.  ஒரு நாள் அந்த வனத்தின் தலைவனைக் கண்டான்.  அவன் பெயர் சரபகேது என்பவரின் மகன் வியாக்ர கேது என்று அறிந்தான்.  அருகில் ஒர் சிறுவன்.  ஒரு நிமிடம் அவனையும் தன்னையும் அரசன் ஒப்பிட்டு பார்த்து கொண்டான் போல இருந்தது.

வதனமுறு பெரும் கொள்கை

காலம் தொடர்பான இந்நிகழ்வு பொருட்கள் ஏன் விழுகின்றன என்பதைக் குறித்து சுவாரஸ்யமான விளக்கம் ஒன்றை அளிக்கிறது. நியூயார்க்கிலிருந்து ரோம் நகருக்கான விமான பாதை நேரானதாக இல்லாமல் வடக்கு நோக்கி வளைந்து செல்வதை வரைபடத்தில் காணலாம். ஏன்?  பூமி வளைந்துள்ளதால், நேராக செல்வதை விட வடக்குமுகமாக வளைந்து செல்வதே குறைவான தூரமாகும்.  இரு தீர்க்க ரேகைகளுக்கு இடையேயுள்ள தொலைவு வடக்கு நோக்கி செல்கையில் குறையும் – எனவே வடதிசை நோக்கிய பயணப்பாதையே குறைவான தூரம் உடையதாகும்.

வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு

This entry is part 8 of 12 in the series சமூக உணர்ச்சி

அதே போல குடுபங்களுக்கென ஒரு கொள்கைப் பிடிப்பு அறம் உண்டு. அது எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். சில குடுபங்களில் கடின உழைப்பு, நேர்மை, சில குடுபங்களில் எதிலும் விட்டுக்கொடுக்காத தன்மானம், வேறு சில குடுபங்களில் காலத்தோடு காரியமாற்றும் பண்பு என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். அந்த கொள்கைப் பிடிப்புகளை விட்டுவிடாமல் செயலாற்ற பழக வேண்டும். இல்லை எனில் குடும்பச் சூழல் இனிக்காது. 

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்

நுணுக்கங்கள் தெரியாமல், இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த என்னைப் போன்றவர்களுக்கும் உணர்வின் உச்சத்தை அடைய இசையைக் கட்டமைத்துக் கொடுத்தது அவரின் பெரும் கருணையே. ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உணர்வுகள் இருப்பதை அதற்குரிய ராக தளங்கள் வழியே ராஜன் அவர்கள் கட்டமைத்து, ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் வித்தியாசத்தைக் காண்பித்திருந்ததுவே இந்த இசைக் கச்சேரியின் சிறப்பு எனலாம்.   

பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்

அமெரிக்காவும் இந்தியாவும் 1. ஸ்டீபன் கோல்பெர்ட் கேன்சல் – ஒடுக்கப்படுகிறதா அமெரிக்க பேச்சுரிமை? தினேஷ் ஜெயபாலன் | பாஸ்டன் பாலாஜி வரி, வட்டி, கிஸ்தி – அமெரிக்க இந்திய உறவு? தினேஷ் ஜெயபாலன் | பத்ரி சேஷாத்ரி | ஶ்ரீகாந்த் மீனாக்க்ஷி சினிமா – மிகை நாடும் கலை “பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்”

றெக்கை – அத்தியாயம் 2

This entry is part 2 of 20 in the series றெக்கை

கடந்த இரண்டு மாதமாக இப்படி மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் திடீரென அந்தச் சிறுமிக்கு வெண்சிறகுகள் முளைத்து விடுகின்றன. லேசான சூட்டில் ஒரு கோப்பை வெந்நீர் குடிக்கக் கொடுத்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அவை உதிர்ந்து விடுகின்றன. விழுந்த வெண் இறகுக் குவியலைத் தலையணைக்குள் பஞ்சுக்குப் பதிலாக அடைத்தால் நேர்த்தியான தலையணை தயார். நல்ல உறக்கம் தரும்.

சுழற்சி

வள் புறஒலிகளை இரத்து செய்து விட்டு காதுகளைக் கூர்ந்தாள். அய்யோ… என்னதிது? என்னவாயிற்று உனக்கு? குரலற்றுப் போனதா உன் சொற்களுக்கு? நண்பனே… என்ன வேண்டும் சொல். உனக்கென்ன வேண்டும்? எனக்கென்ன வேண்டும்? நமக்கென்ன வேண்டும்… சொல்… அய்யோ… என்னால் புரிந்துக் கொள்ள இயலவில்லையே. அவள் கண்களில் நீர் வழிந்தது. அலைகளின் நாவுகள் ஒன்றின் பின் ஒன்றாக கரையை மோதி ஒலிகளற்று பின்னகர்வதை அவள் இதுவரைக் கண்டதில்லை.

பாட்டினைப் போல் ஒரு விந்தை பாரின் மிசை இல்லை

நமது சங்கீதமே ஒரு ராகத்தின் நுணுக்கங்களை எல்லாம் ஒரு பாடகன் அல்லது ஒரு வாத்தியக்காரன் நுணுகி நுணுகி வெளியிடுவதில் தான் இருக்கிறது மேற்கத்திய இசையில் பல ஸ்கேல்களில் குறுக்கும் நெடுக்கும் தறியில் நெய்யப் படுவது போல் அனந்தமான இழைகளால் அது ஊடும் பாவுமாய் உருவாக்கப்படுகிறது

நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1

சில ஆண் எழுத்தாளர்கள், பெண்கள் எழுதிவரும் பெண்ணியக்  கருத்தியலோடு ஒன்றுபட்டு, பெண்களின் உணர்வுகளை மதித்து, பல படைப்புகளைச் செய்தனர். பெண்கள் மட்டுமே அன்றி அவர்களுக்குத் துணையாக ஆண் எழுத்தாளர்களும் தம் பங்கு உதவியை அனைவரும் ஏற்கும் விதமாக அளித்து வருகிறார்கள். அவற்றில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற அனைத்தும் உள்ளன. 

தேவாலயங்களின் நகரம்

“எங்களுக்குனு சில பழக்கம், கொள்கை இருக்கு சுற்று வட்டார ஊரில் இருந்து கொஞ்சம் வேற மாதிரி இருக்கலாம். எங்க இடத்தை பற்றி நிறைய எழுதி இருக்காங்க. ஒரு முறை, டிவியில கூட நாலு நிமிடம் வந்தது. மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடி, “தேவாலயங்களின் நகரம்” அப்படின்னு ஒரு நிகழ்ச்சி.   

“இந்த மாதிரி ஒரு இடத்தில நான் வாழணும் ன்னா, எனக்கே எனக்குன்னு ஒரு இடம் வேணும்”   செசீலியா சொன்னாள்.

11. அறிவின் ஒளி  

பசுவுடன் தொடர்புடைய பால்காரர்களுக்கு பெரியம்மை தொற்று ஏற்படுவதில்லை என்று கவனித்த ஜென்னர் தன் வேலைக்காரர் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற 10 வயது சிறுவனுக்கு மாட்டின் அம்மை (cowpox) கொப்புளத்திலிருந்து எடுத்த சீழை உட்செலுத்தினார். பின்னர் அவனுக்கு பெரியம்மை (smallpox) பொருக்குகளை உட்செலுத்தியும் பெரியம்மை நோய் அறிகுறிகள் ஏற்படவில்லை. பின்னர் தன் மகன் உட்பட பலரிடம் சோதனை செய்து நோய்த்தடுப்பூசி முறையை முன்வைத்தார். 

உயிர்க்குளிர்

அலை அடித்துக்கொண்டே இருக்கிறது
துமிகள் பறந்துகொண்டே இருக்கின்றன
காற்று ஏந்திக்கொண்டே இருக்கிறது
அத்தனை அத்தனை மௌனமாய்
துமிகள் அலைமீதே விழுகின்றன

வெளிச்சம்

“ஒரு சில கருந்துளைகள் நமது அண்டத்தில் உள்ளன. அவை நமது பூமியிலிருந்து பல இலட்சம் மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றைப் பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அறிவியலாளர்களுக்கே இவற்றைப் பற்றிய முழு புரிதல் தற்போது இல்லை. ஆனால் இப்படி அண்டப் பெருவெளியில் தோன்றும் கருந்துளைகள் கோள்களையும் நட்சத்திரங்களையுமே கூட விழுங்க வல்லன” என்றார்.

பேய்ச்சி – பேரன்பும் பெருவெறியும்

தன் குலத்தொழிலான வெட்டியான் வேலையை வெறுத்து அங்கிருந்து ஓடி வந்து, தன் குருவைக் கண்டடைந்து சிலம்பம் கற்றுக்கொள்கிறார். அங்கிருந்து தோட்ட முதலாளியிடம் சேர்ந்து, எவ்வாறோ அவரும் ஓலம்மாவின் அதே தோட்டத்திற்கு வந்து சேர்ந்து, அவளை மணந்துகொண்டு வாழத்துவங்கிறார். மணியத்தின் வீரம், குருவின் சொல்லுக்காக மதுவைத் தொடாதிருப்பது,    பெரியார் மீதுள்ள பற்று, தோட்டத்து மக்களின் நலனுக்காக நீதி கேட்டுப் போராடுவது என அவரது வெளித்தோற்றம் இளைஞர்களின் தலைவனாக அவரை ஆக்குகிறது.

அறுதி விடியல்

மரணம் வரை சென்றவன், பிழைத்தலின் இறுதிக் கட்ட சாத்தியங்களைப் பார்த்தும் அனுபவரீதியாகப் புரிந்தும் விடுகிறான். அந்த இடத்திற்கு பெரும்பாலும் வேறு எவரும் செல்வதில்லை என்பதே அவனுக்குச் சாதகமான அம்சமாகிவிடுகிறது. அந்தப் புள்ளியில் அவன் என்ன கற்றுக்கொள்கிறானோ,அந்தக் கல்வி, அந்த ஞானம் அவனுக்கு மட்டுமே சாதகமாக வேலை செய்யும் கருவியாகிவிடுகிறது. இல்லையா?

சகோதரியை தேடி

‘தேவ! ராஜ்யவர்தன தேவன் மறைந்த பின், குசஸ்தலம் என்ற பிரதேசத்தை  குப்தன் என்பவன் கைப்பற்றி விட்டான்.  தேவி ராஜ்யஸ்ரீயை சிறை பிடித்திருந்தனர்.   அவள் எப்படியோ தப்பி, சில உண்மையான பரிவாரங்களுடன் விந்த்ய மலை சென்று விட்டாள். இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. மக்கள் மத்தியில் உள்ள பேச்சு இது. அவளைத் தேடி பலரை அனுப்பினோம். இன்று வரை எவரும் வந்து சேரவும் இல்லை, என்ன நடந்தது என்று தெரியவும் இல்லை என்றான். 

வயதுக்கேற்ற கல்வி முறை

This entry is part 7 of 12 in the series சமூக உணர்ச்சி

இந்த வயதில் மாணவர்கள் சிக்கலான உணர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். மீராவின் கதையில் வெளிப்படுவது போல, அவர்கள் சவாலான சூழ்நிலைகளில் உதவக்கூடிய தனிப்பட்ட பலங்களையும் வளங்களையும் அடையாளம் காணுகிறார்கள். மன அழுத்தத்தை நிர்வகிக்கும் திறன்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

மதியொன்றில்லை..

எப்போதோ  தான் சொன்னதை மதித்து  அதனாலேயே உத்தியோகம் தேடி வெளியூரெல்லாம் போகாமல்  ஊரோடு கிடக்கும் ஜகுவின் அந்த மெலிந்த குள்ள உருவம் தன் முன் விஸ்வரூம் எடுக்கவும் தேசிகன்  வாயடைத்துத்தான் போனான். அவனிடம் இப்படிச் சொன்னதையே மறந்து மேற்படிப்பு உயர்ந்த உத்தியோகம் அமெரிக்கா டாலரில் பணம் என்றிருந்த  தன்னை அவனுடன் ஒப்பிட்டபோது தனது ஆறடி உயரத்திற்குமுன்  வாமனனாய் வந்து ஓங்கி உலகளந்தவனாய், உத்தமனாய்  ஜகு தென்பட்டான்!’

அகாவே

மிக ஆக்ரோஷமாகக் கடிக்கும் எறும்புகளிடமிருந்து தப்பிக்க உடலெங்கும் பன்றிக்கொழுப்பை பூசியபின்னர் தங்கள் பாதங்களைப் பிளாஸ்டிக் காகிதத்தால் சுற்றி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளும் இவர்கள் கற்றாழையின் வேருக்கடியில் செல்லும் எறும்பு வரிசையைப் பின்தொடர்ந்து கூட்டை கண்டுபிடிப்பார்கள். கரண்டி போன்ற ஒரு கம்பியால் மண்ணைத் தோண்டி கூட்டைப் பார்த்ததும் எறும்புக்கூட்டின் மேல்மண்ணை மண்வெட்டியால் மெல்லத்தட்டி உதிர்ப்பார்கள்.

‘யூ அஸ் ஹோட்டல்’ செக்விபோ நகர்

This entry is part 2 of 5 in the series தென்கொரியப் பயணம்

000 வருடங்களுக்கு முன் கடலில் வெடித்த எரிமலை உருவாக்கிய ‘Tuff Cone’ என்ற அரிய பாறை வகை தான் இந்த Ilchulbong கிரேட்டர். 600 மீட்டர் அகலம் கொண்ட பாறை கடல் மட்டத்திலிருந்து 182 மீட்டர் உயரத்தில் பச்சைப்பசேல் என்றிருக்கிறது! கண்ணுக்கு குளிர்ச்சியாக சுற்றிலும் நீல வண்ண கடலும், சிலுசிலு கடற்காற்றும், பசுமைத்தோட்டமுமாய் ரம்மியமாக இருந்தது! இங்கு 240-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

பாறைகள் பகிரும் பழங்கால கதைகள்

தக்காண பீடபூமியில் பாறைகளின் உருவாக்கம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடிப்புகளினால் உருவான பசால்ட் (basalt) பாறை அடுக்குகளில் உள்ளது. இந்த நிகழ்வு ‘டக்கன் டிராப்ஸ்’ (deccan traps) என்று அழைக்கப்படுகிறது. அடுக்கடுக்காக படிந்துள்ள  பசால்ட் பாறைகள் பல லட்சம் சதுர கிலோமீட்டருக்கு மேல் பரப்பில்  காணப்படுகின்றன. தக்காண   பீடபூமி ஆழமான உணர்வும் ஆயுட்காலமும் கொண்டது. இதில் கிடைக்கும் கறுப்பு (Black) மண் வகை  பயிரிட மிகவும் உகந்தது.

வளரிளம் பருவத்தினர் எதிர்நோக்கும் சவால்கள்

இந்தப் பிரிவினரில் எவருடனாவது தாங்கள் சார்ந்திருக்கவில்லை என வளரிளம்பருவத்தினர் உணரும்போது குறிப்பிட்ட அந்தப் பிரிவினரின் கவனத்தைத் தங்கள்மீது ஈர்ப்பதற்கு அவர்கள் மிகுந்த பிரயத்தனப்படுவார்கள். அந்தக் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவர்கள் விரும்பும்வகையில் எதிர்வினைகள் கிடைக்காதபோது, தங்களிடமும் அதிகாரம் இருக்கிறது எனக் காட்டுவதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். அது பெற்றோருடனும் ஆசிரியர்களுடனுமான அதிகார மோதலாக விஸ்வரூபம் எடுக்கிறது.

றெக்கை – அத்தியாயம் 1

This entry is part 1 of 20 in the series றெக்கை

அவர்களில் ஒரு இளைஞன் அவர்களின் குழுக்குறியில் சொன்னான் – ‘இந்த ராட்சச வாகனம் வெள்ளைக்காரர்கள் எப்படியோ அடக்கிய புரியாத ஒரு விஷயம். பிசாசு வண்டி. அதன் உள்ளே மனுஷர்கள் இருக்க, மூடி போட்டு இப்படி நீராவியை வேறே உள்ளே சேர்த்து வைத்திருக்கிறது இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.  போதாக்குறைக்கு உலகில் எங்குமே இல்லாததாக, ஏழெட்டு அடி உயரத்தில் இரண்டு சிறுவர்கள். பத்து வயதுக்குள்தான் இருப்பார்கள்’.

பாரம்பரியப் படிக்கிணறுகளின் ஆய்வில் அறிவியல் சிந்தனை

மேற்கு இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் போன்ற வறண்ட பகுதிகளில் காணப்படும்  பல படிக்கிணறுகள், இப்பகுதியைச் சேர்ந்த ராணிகள் மற்றும் இதர பெண் புரவலர்கள் அங்கிருந்தவர்களின்  குடிநீர்  தேவைகளை மனதில் கொண்டு, உருவாக்கிய காதல் சின்னங்கள்.

தங்கப்பல்- புன்னகையின் இடைவெளி

“மனுஷன் சாப்பிடுற சோறா இது?” என்று வார்த்தை நழுவியது. பின்னர்  – தட்டையும் வீசப்பட்டது.  நேராக அவளது முகத்தில். அவளது முன்பல் உடைந்தது. அவளது சிரிப்பின் ஒளி, அந்த நொடியிலே மெலிந்து போனது. அந்த நாள் முதல்…அவர் சிரிக்கும்போது,அவளது புன்னகையின் பிழைதிருத்தம் அவர் நெஞ்சில் ஒரு குற்ற

நீளமான கவிதை வடிவத்திலும் கலை ஒருமையைச் சாதிக்குமா

அக இலக்கியத்தில் தோழியும் செவிலியும் உயிர்ப்புள்ள பாத்திரங்கள். தலைவியின் மனத்தின் குரல் என்றே தோழியை      அடையாளப்படுத்திவிடலாம். ஒரு புள்ளியில் இருவரும் ஒன்றாகவே இணைந்து தோன்றுகிறார்கள். தலைவியின் காதலைச் செவிலிக்கு உணர்த்த ஒரு விரிவான உரையாடலைத் தோழி தொடங்குகிறாள். தெய்வத்தின் மீது சூள் வைத்து, அன்று நடந்தது இது தான் என்று நாடகியமாகத் தெரிவிக்கிறாள். சில தகவல்களை நடப்பியல் பாணியில் இணைக்கவும் செய்கிறாள்.

ஆகுதி

நான் ஒரு மோசமான மகன். நான் தவறான முடிவுகள் எடுத்தேன். நான் அவரை காயப்படுத்தினேன். அவர் தினம் தோறும் என்ன செய்ய வேண்டுமென பட்டியல் கொடுத்தேன். அவரை சிறை கைதியாக்கினேன். இப்போது அவர் எங்கேயோ, குளிரில், பயத்தில், என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு என் முகம் கூட நினைவில் இல்லாமல் போயிருக்கலாம்.

திறப்பதற்குப் புதிய வாசல்கள்

‘புலிநகக் கொன்றை’ என்ற ஒரு சொற்றொடர் அல்லது சொல் ஓர் அற்புதம் எனில் ‘ஞாழல்’ –  அதன் மூதாதையான செஞ்சொல் – இனிமையில், செழுமையில் அதை விஞ்சுகிறது. ‘ஞாழல் பிறந்த கதை’ கட்டுரை விடுதலைப் போராட்டம், சாதாரண மனிதர்களான சுதந்திரப் போராட்ட வீரர்கள், தென்கலை வைணவர்கள், பொதுவுடைமை இயக்கம், நாவலில் வரும் பாத்திரங்களின் வாழ்க்கை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்நாவல் எப்படிப் பிறந்தது என்று விவரிக்கிறது.