இந்து மதத்தின் வேதங்கள், உபனிஷத்துகள், புராணங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகிய பிரதிகள் மும்மைப் பொருள்கோள்கள் (interpretation) கொண்டவையாகும். அவையாவன: 1. நேர்ப் பொருள். இது சாமான்யர்களான பக்தர்களாலும், பாமரர்களாலும் கொள்ளப்படுவது. 2. குறியீட்டுப் பொருள். இது பண்டிதர்களால் கொள்ளப்படுவது. 3. தந்த்ரா பொருள்.
ஆசிரியர்: ஷாராஜ்
தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி
சாதாரண மனித ஆற்றல்களையும், நம் புலன்களுக்குத் தென்படக் கூடிய இயற்கை ஆற்றல்களையும், ஒலி, ஒளி, கதிரியக்கம் போன்ற அறிவியல் ஆற்றல்களையும் மீறிய பல வித ஆற்றல்கள் நிறைந்ததே இப் ப்ரபஞ்சம். இன்னும் சொல்லப் போனால் ப்ரபஞ்சம் முற்றிலுமே இத்தகைய ஆற்றல்கள் நிறைந்ததுதான். ஆற்றல்கள் இன்றி இப் ப்ரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும், உயிரும், துகளும், அணுவும், மன இயக்கங்களும் இல்லை. சாதாரண மனித ஆற்றல்களுக்கும், இயற்கை ஆற்றல்களுக்கும், அறிவியல் ஆற்றல்களுக்கும் அப்பாற்பட்ட அத்தகைய ஆற்றலே அமானுஷ்ய ஆற்றல் (occult power) எனப்படுகிறது.
மூன்று கவிதைகள்
குறியீடு, படிமம், கவித்துவம், கேள்விகள், தார்மீகம்
யாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு
கண் மூடிப் பார்த்து ரசி
அவலங்களின் தெருக்களில்
வானவில் குடை பிடித்து
துள்ளிச் செல்லும் அந்தத் தவளைகளை
ஓநாய் பிரியாணி – குறுங்காவியம்
இறந்த பின்னும் நடமாடிக்கொண்டிருக்கும் ஓநாய் மனிதர்கள்
ஆயிரத்தாண்டுகளாக ஆண்டுகொண்டிருக்கிறார்கள்
வாழும் பிணங்களான
ஆட்டு மனிதர்களின் உலகத்தை
கடவுளின் அங்கீகாரமும் சர்வாதிகாரமும் பெற்ற
உலக ரட்சகன் நான் (மட்டுமே)
என்பதை வெவ்வேறு விதமாகச் சொல்கிற
ஒவ்வொரு ஓநாய் மனிதனுக்கும் பின்னால்
அவனை நம்பும் ஆட்டு மனித மந்தைகள்
கவிதை பற்றி மூன்று கவிதைகள்
அன்பு, பிரியம், பாசம், நேசம்,
கருணை, நேயம், மனிதம்
ஆகிய சொற்களைக்
கவிதைகள் தோறும்
வாரி வாரி இறைத்துச் செல்கிறான் கவிஞன்