தாகூர் விரிவாகச் சொல்கிறார்: “நம்முடைய ஆன்மாவின் வளர்ச்சி என்பது கச்சிதமான ஒரு கவிதையைப் போன்றது. அது எல்லையற்ற கருத்துருக்களைக் கொண்டிருக்கிறது; இது ஒருமுறை உணரப்படும்போது, அனைத்து இயக்கங்களையும் அர்த்தமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக்குகிறது.”
Category: கவிதை
ஜீபனானந்தா தாஸ் கவிதைகள்
ஒரு பனிக்கால அந்தியில்,
பரிச்சயமானவரின் மரணப்படுக்கைக்கு அருகே
குளிர்ந்த கமலாப்பழத்தின் மிருதுவான சுளையாக
வருவேனா.
கிருஷ்ணா பாஸு கவிதைகள்
அம்மா, நீங்களாவது என்னிடம் சொல்லுங்கள்
என்னுடைய வீடு என்பது எங்கே?
பெண்கள் தங்களுடையது என்று ஒரு வீட்டை
எங்கேனும் கோர முடியுமா?
வ. அதியமான் கவிதைகள்
முன்னமே
பிரிந்து சென்ற ஆடுகள்
குரல் கொடுப்பதும்
இல்லை
சொல் எடுப்பதும்
இல்லை
அவை மீளா பாதைகள்
என்பதறிவேன்
குமார் சேகரன் கவிதைகள்
கூடிக் கொண்டே போகும்
அந்த சத்தத்தில்
உள்ளிருந்து வரும்
ஒரு சத்தத்தை
மெல்ல மெல்ல
கொல்கிறேன் இப்போது
கு. அழகர்சாமி கவிதைகள்
எறும்புகளின் தோள்கள் மேல்
எங்கோ நெரிசலின்றி சவாரிக்கும்
ஒரு பல்லி தவிர
நினைவுக் குறிப்புகள்
மௌனத்தின்
தருணங்களிலும்
வாஞ்சையுடன்
அணைத்துக்கொள்ளும்
வீட்டின் நினைவுகள்…
ஆக்கவோ அழிக்கவோ
அனைவருக்கும்
நாம் யார் யாரோ தான்.
சொல்லி விளங்க வைக்கும்,
செய்து நிரூபிக்கும் சங்கடங்கள் இல்லை.
எப்படி பிரிந்திருப்பது என்ற
பிலாக்கணங்கள் இல்ல…
எப்போதும் பிரிந்தே இருக்கிறோம்.
எப்போது சேர்ந்திருப்பது
என்ற பதட்டமில்லை
இருமுனைகளாய் சேர்ந்தே இருக்கிறோம்.
வெற்று யோசனைக்கெட்டா வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப் பூச்சி தன் கனவில்
என்னைத் தானெனக் கண்டு
மிதக்கிறதா?
மார்கழி
உன் திங்களில் தான்
சூரியனும் கூட
மோகத்தினால் எழுகிறான்
தாமதமாக!
கடலும் காடும்
அலைகளிடமிருந்து
அதுகாறும் காத்துநின்ற
தன் மணல் கோபுரத்தை
பச்சை வண்ண வாளியில்
பெயர்த்தெடுத்து வந்து
தங்கமீன்கள் வளரும்
தொட்டியில் பரப்பி
என் கடல் என்றான்
கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை
ஹெரால்டு பிண்ட்டர் தனது நோபெல் உரையை இப்படித் தொடங்குகிறார்: ”எது நிஜம் எது நிஜமில்லை என்பவற்றுக்கு இடையில் உறுதியான வித்தியாசங்கள் இல்லை. அதேபோல் எது உண்மை எது பொய்மை என்பவற்றுக்கு இடையேயும் இல்லை. உண்மை, பொய்மை என்ற இரண்டில் ஒன்றாகத்தான், ஒன்று இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது உண்மை பொய்மை என்ற இரண்டாகவும் இருக்கலாம்.”
முற்றுப் பெறா புதினம்
மெளனித்துக் கிடந்த
கரையின் மேல்
வந்து மோதுகின்றன
நாளெனும் மோதிரம்
மெலிந்த விரலிடமிருந்துப் பிடுங்கி
நீர் அணிந்த மோதிரம்
அருவி பாயும் ஆழத்தில்
வீடும் சித்தார்த்தரும்
ராகுவின் பூனை
பாற்கடல் நக்கிக்குடிக்கிறது
பரமாத்மாவின் நீலத்தில்
வரவேற்கிறேன்
தாயின் விரல் தீண்டலில்
மொத்தத் துயரும் தீர்ந்துப்போய்
ஆழத்தூக்கத்தின் அமைதியில்
வாழ்வென்பது
வாழ்வென்பது
தள தளவென
திறந்து
ஊரடங்கு
இரயில் பாதை பூவோடு
வண்டுகள் தூங்கும்
இந்த ஊரடங்கில்
“அலர்தலும் உதிர்தலும்” – ஹைக்கூ கவிதைகள்
வண்டு மறைக்கும்
சிறுபூக்களின் பின் – உதிர
சிலிர்க்கும் காடு.
அந்த இயல்வாகை மரத்தடியில் கொஞ்ச நேரம்
குரைத்துக் கொண்டே
துரத்தி வந்து
பின்னர் மீண்டும்
அந்த தெருவோர
இயல்வாகை மரத்தடியில்
சென்று படுத்துக் கொள்ளும்
அந்தப் பழுப்பு நிறத் தெருநாயை
மண்ணுக்கடியில்
சாலைகள் என் மண்மீது
நிரவப்பட்டு விரைவாய்
அதன் மீது வாகனங்கள்
இரையாய் நான்
பிணி; தீ; விசுவாசம்- கவிதைகள்
நீரில்
நனைந்ததால்
தலை துவட்டும்
என்னைப் பார்த்து
நீரில்
நனையாதாயினும்
வெயிலில்
நனைந்ததாய்த்
தலை துவட்டும்
என்
நிழலின்
விசுவாசத்தில்
உரைகல்; கடந்த வழி -கவிதைகள்
பற்றிலேதும் வரவின்றி
உதித்து விரைந்து
உதிரும் நாட்களுக்குள்
கணக்கேதுமின்றி
எதையும் பதியாமல்
தடமெதுவும் இல்லாமல்
மகிழ்வேதும் தாராமல்
துயரதுவும் கொள்ளாமல்
மறைந்து போவது
குறைவென்பதா அன்றி அதுவே
நிறைவென்பதா
கதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்
ஒரு கணமும்
ஓய்வதில்லை
தலைக்கு மேல்
வானத்தை
சூடிக்கொண்ட
அந்த கிளைகளின்
நடனம்
கசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள்
கீழே சிந்திய தேனை
பருக வந்திருக்கும்
எறும்புகளை
பாவம் என்றெண்ணுவதற்குள்
மெல்ல எட்டிப் பார்க்கிறது
பொறாமை.
கவிதைகள் – வ. அதியமான்
யசோதா
தேகமெங்கும்
குரல் முளைத்து
கூவி நிற்கிறாய்
கொள்ளும் செவிகள்
திரும்ப வருமென
இடுப்பில் கையூன்றி
உறுதியாய்
காத்திருக்கிறாய்…
கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார்
எதுவும் அப்படியே இருப்பதில்லை
காலை மாலை இரவென
விரட்டிய போது
அதில் நான்
சிக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்
இப்படியாயின்
ஒரு வயோதிகனின்
அந்தரங்கத்தின் ஆசை
மேலே மிதந்து வந்தது
சிசு, அப்போது, நெடும் பயணி
அதனால் என்ன?
வளையாத வானத்தில்
ஒரு வளைந்த வானவில்லும்
வளைந்த வில்லில்
ஒரு வளையாத அம்பும்
அத்தனை ஆச்சரியம்
ஒன்றுமில்லை காண்!
கூடு, அதிகாலை & (அ)சாத்தியம்
தானே ’புன்னகையாய்’
’புன்னகை’ அதற்கு அதுவே புன்னகைப்பதில்லையாய்ப்
புதிராய்ப் புன்னகைக்கிறார்
இது
போதும்—
ஆசையில் வறண்ட என்
அகங் குளிர
நிறைவாய்ப்
புன்னகைக்கிறார்
இடம், தபால்காரன் & மனதின் பாதை
ஒரு நினைவில் தப்பிய மனிதனாகிய நான்
வீணாய் எனது உடலின் சுமையைச் சுமப்பவன்
வழுவாத சலிக்கும் பாதையில் நடப்பவன்
பேசி தீர்த்துக் கொள்வதற்கு
மொழி இல்லாதவன்
நான் எல்லோரையும்
சமாதானம் செய்து கொள்கிறேன்
ஒளி மனிதன் & காசநோய்க்கு ஒரு பாடல்
(நித்ய சைதன்ய யதியின் “நோயை எதிர்கொள்ளல்” கட்டுரைக்கு)
என் வேர்கள் பலவீனமானவை
சந்தோஷத்தை சரியாக உறிஞ்சக்கூட தெரியாதவை
அறுபது சதவீதம் மாலைநேர உளைச்சல்களாலும்
நாற்பது சதவீதம் கூரையை முட்டும் இருமல் ஒலிகளாலும் ஆன
ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு
மறுபடியும் வந்து நிற்கிறது இந்த உடல்
கற்பனாவாத யுகத்தின் செல்லக் குழந்தையே இவை உன் கைங்கர்யம்தானா
வ. அதியமான் கவிதைகள்
இதோ இன்று
பதமிட்டு குழைத்தெடுத்த
இந்த பச்சைத் தசைகளிலும்
அந்த ஏதோ ஒன்றை
எவனோ
எப்படியோ
அப்படியே
சாத்தியமாக்கி இருக்கிறான்
சிறு மணிச்சுடர்
ஒளிரத்தான்
இருட்பெருங்கடலை
அகலாக்கியவன்
அல்லவா
அவன்?
க. ரகுநாதன் கவிதைகள்
ஈரப் பசும் ஒளிசூடி
சூல்களின் மகரந்தம்
மெல்லிய கால்களில் ஏறிட
பள்ளத்தாக்கின் செவியறியாமல்
அகாலத்தைக் கலைத்து
காலத்துள் பறந்தது பட்டாம்பூச்சி.
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
எத்தனை பேசினாலும்
புரிந்தது போக
மிச்சம் நிறைய இருந்தது
சொல்லில் பொருள்
கொண்ட காலம்
கடந்துபோன நிலையில்
ஆதி மனிதனின்
கவலை இங்கே எடுபடவில்லை
ஒன்றை இருவர் பேசினால் இரண்டாகிறது
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
மீண்டும் உயிர் வாழ்வது
பிணம் பிழைத்த கதை தான்
நாளடைவில் அது அடையாளமாக
தோல்வியுற்ற நான்
ஆடும் ஆட்டத்திலிருந்து
தள்ளி நின்றேன்
இடைவெளி என்பது மரணம்
வ. அதியமான் கவிதைகள்
கனிந்த கரும்பாறை
கரைந்துருகிய விழிநீர்
தரை தொடும் முன்னமே
தன்னில் முளைத்துவிட்ட
சிறகினை
வியப்பில்லாது விரித்து
வானில் எழுகிறது
நூறு நூறு குருவிகளாய்.
ராஜா நடேசன் கவிதைகள்
மண்ணில் இருந்து வந்தது
மண்ணுக்கே செல்கிறது
அன்னமிட்ட மண்
எடுத்துக்கொள்கிறது கொடுத்ததனைத்தையும்
உயிர்ப்பிக்க வரும் தேவன்
எடுத்துச்செல்ல ஒன்றும் இல்லை
இறைஞ்சி நிற்கும் கடவுளிடம்
கையளிக்கிறது மண்
அருணா சுப்ரமணியன் – கவிதைகள்
கூண்டுக்குள்
அடைக்கும் முன்னர்
பிடுங்கப்பட்ட
இறக்கைகளை
பத்திரப்படுத்தி
பாதுகாத்து வந்தது
வனப்பட்சி
நந்தாகுமாரன்-கவிதை
சோதனை ஓட்டத்தின் போலிப் போரில்
தேடிக் கூடிய சௌஜன்யக் களிப்பு
தன் பரவசத்தின் படர்-சுகத்தில்
தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொள்கிறது
இன்பா- கவிதைகள்
உடலெனும் பேராசானை மறக்காமல்
சபித்துவிடுகிறேன் ஒவ்வொரு மாதமும்
ஆதிமனித நிறம்
அற்பமாய்த் தோன்றும் கனம்
கடந்துச்செல்ல குமட்டுகிறது
ச. மோகனப்பிரியா- கவிதைகள்
மந்தகாசமான மதியமொன்றில்
கனவில் நிகழ்ந்ததென
தோற்றப்பிழையாகும்
இன்றைய உன்னுடனான
உரையாடல்
இரா. கவியரசு கவிதைகள்
அகலாத நறுமணத்தைக் கழுவினேன்
தண்ணீருக்குத் தாவியது மணம்
தொடுகின்ற விரல்கள் தோறும்
மலர்கின்ற மலரதனை
இதழ்களாகப் பிய்க்க முடியவில்லை
ஃபுகுதா சியோ-நி: நீல மலர்கள் பூத்த கொடி – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்
ஜப்பானிய எடோ காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹைக்கூ பெண் கவிஞர். அப்போது ஹைக்கூ, ஹொக்கு என்று அழைக்கப்பட்டது… அதன் வடிவமும் சற்று வேறாக இருந்தது. தன் ஏழு வயதிலேயே ஹைக்கூ எழுதத் தொடங்கியவர். பதினேழாவது வயதில் தன் ஹக்கூக்களால் ஜப்பான் முழுக்கப் பிரபலமடைந்தார்.
கடிகாரச் சுவர் – அந்தரத்தில் கணங்கள்
கடிகாரச் சுவர்
படர்ந்த நிழல் முற்றம்
வரும் பறவை.
புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள்
தொடர்ச்சியாக வரும் இவர்கள் யார்
என்றால் அவர்கள் இல்லாமல் வேறு யார்
மனிதர்களுக்குள்ளே மனிதர்கள்
ஓடுவது உறவுகள் என்றால்
படியில் விழும் பந்தை எடுக்கத்
தலைமுறைகள் தேவைப்படுகிறது
கனியன் கவிதைகள்
தனித்த வாழ்வாகவோ
வாழாமல் விட்டுப்போன
வாழ்க்கையையோ
சலிப்போடு தேடிவருபவர்களோடு
மலரில் அமர்ந்து தேனை
உறிஞ்சத்தொடங்குகிறது இரவு
நா.பாலா கவிதைகள்
முற்பகல் முடிவதற்குள்
ஐன்ஸ்ட்டின் ஆக மாற எத்தனிக்கையில்
பசி வந்துவிடுகிறது.
மந்தம் சூழ்ந்த மதியப் பொழுதுகளில்
லாவ்-சு ஆகிக் காற்றையும் இலைகளையும்
பார்த்துக் கிடக்கிறேன்.
உண்மைக்கும் புனைவிற்கும் இடையே ஊடுருவிப்பாயும் கலை – ரொபெர்த்தோ பொலான்யோவின் கவிதைகள்
கவிஞனின் ஒரு சிறு எண்ணத்துளியை, அவன் வாழ்க்கையின் சிறு கணத்தையே ஒரு நவீனக்கவிதை காட்சிப்படுத்துகிறது என்பதால் எல்லா சமயங்களிலும் அது சமநிலை கூடிய சிந்தனையின் புள்ளியிலிருந்து உருவாகி வருவது சாத்தியமில்லை என்பதும், தத்தளிப்புகளும் அலைக்கழிப்புகளும் கொண்ட கவிஞனின் ஒட்டுமொத்த அகத்திற்கு அவனின் ஒரு சிறு எண்ணத்துளி மட்டுமே மாதிரியாக அமையாது என்பதும், எந்த வாசகனும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதே.
கவிதைக்களத்தில் விளையாட்டாக…
அவருடைய சிறந்த படைப்புகள், எழுத்து மற்றும் எழுதும் வாழ்க்கை பற்றியவை. “விதிகள் இல்லை” என்ற ஒரு கவிதையில் அவர் அறிவிக்கிறார்: “சொல்லுங்கள் அந்த மடையன் ஆர்னால்ட் பென்னட்டிடம், சதி குறித்த அவனது விதிகள் அனைத்தும் மற்ற நாவல்களின் நகல்களான நாவல்களுக்கு மட்டுமே பொருந்தும் என.” இந்தக் கவிதை நகைச்சுவையாக, அடைப்புக்குறிக்குள் பின்வரும் வார்த்தையுடன் முடிவடைகிறது: “கைதட்டல்.”
“தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள்
அடர்ந்த மழை
ஊடே சிட்டுக் குருவி
மறைந்த மின்னல்.