தூரத்து வடகிழக்குத் திசையில் இருக்கும் ஷினோபு நகரத்தில் மொஜிஜுரி முறையில் வண்ணமிடப்பட்ட பட்டுத்துணியைப் போல் என் உள்ளம் காதலால் கலங்கிக் கிடக்கிறது. ஆனால் அதன் காரணமாகவெல்லாம் நான் உன் மீது வைத்த காதல் மாறிவிடாது.
Category: கவிதை
அல்லாமா இக்பால்
இக்பாலின் ‘இறைவனுக்கு ஒரு கேள்வி’ (ஷிக்வா, புகார்) கவிதை வெளியானபோது அதில் நாத்திகம் ஒலித்தததைக் கண்டு மார்க்க அறிஞர்கள் குழம்பினர். இக்பாலுக்கு இறைவனை நோக்கிக் கேள்வியெழுப்பும் தைரியத்தைக் கொடுத்து எது? எதனால் இக்பால் இப்படி எழுதினார்? என ஐயத்துடன் ‘ஷிக்வா’வை அணுகினர். இக்பாலை இறை எதிர்ப்பாளராகவும் பேசத் தயங்கவில்லை. அதன் பின்னர் ‘கேள்விக்கு பதில்’ (ஜவாப்-ஏ-ஷிக்வா, புகாருக்கு விளக்கம்) கவிதையில் முன்னம் தான் இறைவனை நோக்கிக் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் பதில் அளிக்கும் வகையில் எழுதினார். அந்தக் கவிதைக்குப் பிறகு, இக்பாலின் ஷிக்வா, ஜவாப்-ஏ-ஷிக்வா இரண்டும் இஸ்லாமிய இலக்கியத்தில் சிறந்த படைப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்பட்டது
டெஸ்லா வீட்டுப்பிள்ளை
இருவரும் பயணிக்க தொடங்கினோம்
அந்த படகில்
சேர்ந்திருப்போம்
காத்திருப்போம் என்றவாறு
காதமும் கடக்கவில்லை
எனக்கு ஓர் அறிமுகம்
நான் அரசியல் அறிந்தவளல்லள்.
ஆனாலும்
அதிகாரத்தில் அமர்ந்தவர்கள்
அத்தனை பேரின்
பெயர் தெரிந்தவள்தான்.
நேருவில் தொடங்கி
எல்லோர் பெயரையும்
கிழமைகள் போல், மாதங்கள் போல்
என்னால் சொல்ல முடியும்.
நான் ஒரு இந்தியன்;பழுப்பு நிறத்தினள்.
மலபாரில் பிறந்த நான்
பேசுவது மூன்று மொழிகளில்;
எழுதுவது இரண்டில்;
கனவு காண்பதோ ஒன்றில்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஏப்ரல் கவிதைகள்
நான் சிறுவனாக இருந்த போது
நகரத்தில் இருக்கும் சாலைகளைப் போல்
எண்ணற்ற வாழ்க்கைப் பாதையிலிருந்து
ஒரு பயணத்தை நானாக
எதுவும் தொடங்கவில்லை
இன்றோ நான் அனாதியாய்
ஒன்றும் இல்லாதவனாய்
அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்
நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத்
ஜமீலா நிஷாத் ஒரு கவிஞர். பல வண்ணங்களிலும் வேறுபட்ட வடிவங்களிலும் கனவுப்படிமங்களாகக் கவிதைகள் தன்னிடம் உருக்கொள்வதாக அவர் கூறுகிறார். அவரது கவிதைகளில் காணப்படும் கனவுத்தன்மை இது சாத்தியம்தான் என்று நமக்கு உணர்த்துகிறது. தன்மீது 1992க்குப் பிறகு திணிக்கப்பட்டதாக அவர் கருதும் முஸ்லிம் அடையாளத்தை பரிசீலனை செய்யும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக அவர் இறங்கியுள்ளார். கோயில்களுக்குச் செல்வது, தர்கா விழாக்களில் கலந்து மகிழ்வது என்ற தோழமையும் பகிர்வுணர்வும் நிறைந்த சூழலில் வளர்ந்த அவரால் ஹைதராபாதில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நிலவிவரும் வெறுப்பையும் பகைமையுணர்வையும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
ஜமீலா நிஷாத்தின் தலைப்பிடாத சில கவிதைகள்
என் ஓவியங்களில் பெண்குதிரையாக
வாலைச் சுழற்றிக்கொண்டு
கம்பீரமாக நான் நடந்தேன்
டக் டக்
டக் டக்
முள்ளம்பன்றி
நீ எதிரணியிலிருக்கிறாய்.
அதிகாரத்தின் கிளியாயிருக்கிறாய். சிலசமயம்
அதன் அம்பாயிருக்கிறாய்.
அதிகாரத்தின் பிறப்பிடம் நீதியின் புதைகுழியென்பது
உனக்குப்புரியும் நாளொன்று வரும்.
மனிதன்
விழிக்க வேண்டி
மாற்றத்தை நோக்கி வெட்கமில்லாமல்
என் விருப்பத்தின்
சாவியைத் தேடுகிறேன்
முழு இருளில்
எனக்குக் கிடைக்கும்
அர்த்தம் தான் வெளிச்சம்
எமக்கென்ன
பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி
மகிமைத் தேர்தல்!
ஆளும் ஆசை அற்றுப் போகுமோ?
நிசப்தத்தின் இரகசிய இசை
வலிமறந்து பனுவல்
பல படித்துச் சிறந்து
ஆட்சியர் பதவியில்
அமர்ந்த பெருமை
பஞ்சுமிட்டாயானதே!
தற்குறிக்கும் தறுதலைக்கும்
தலைவணங்க நேர்ந்த்தே!
துட்டரின் கயமைக்குத்
துணைபோக நேர்ந்ததே!
நித்தியமானவன் – கவிதைகள்
நான் இதுகாறும் பெற்ற அனைத்தையும்
தொலைத்து விட்டு பிச்சைக்காரனாய்
அந்த வானத்தின் கீழ் நின்றேன்
அன்று பூத்த மலரை
என் பழுதடைந்த கண்களால்
நெருக்கமாகப் பார்த்தேன்
கனவுகளை இறைத்த தோட்டத்தில்
நான் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன்
மேலெழும் கோள வடிவ வானம்
எதிர்ப்படும் ஒரு சிறு இடைவெளி
பயண யானைகள்
குழம்பி நிற்கின்றன
காடு
வெறுமனே கட்டாந்தரை மேல் தொட்டி செடியாக
மாறி வெகுகாலம் ஆகிவிட்டதை
அவை அறியாது
பெருந்தொற்றின் பாடுகள்
காலம்
இரவும் பகலுமாய் ஊரும்
குருட்டு நத்தை.
….
குறைந்தபட்சமாய் வாழ்வதில்
உடற் சுமையைத் தவிர
கூடுதல் சுமையில்லை.
பூனை
சாமர்த்தியமாய்ப்
பதுங்குவதிலும்,
சட்டென்று
பாய்வதிலும்
சன்னமாய் உள்
ஒலிப்பதிலும்,
சுற்றி வளைய வளைய
வருவதிலும்
நினைவுகள்
பூனையிடமிருந்து
வித்தியாசமானவையல்ல-
வ. அதியமான் கவிதைகள்
விதையுறையைக் கீறி
வேர் விட்டதிலிருந்து
நாளிது வரை
இந்த கிழட்டு மரம்
எத்தனைக் கோடி காதம் நடந்திருக்குமோ
அத்தனை தூரம்
நானும் நடக்கிறேன்
என் அடிவயிற்றில் இளைப்பாறும்
ஆயிரமாயிரம் பறவைகளும்
என் கூடவே நடந்து வருகிறது
நெகிழிப் பையில் சுற்றிய பூக்கோசு
இந்த வாகன நெரிசலில்
மேம்பாலத்திலிருந்து இறங்குகிறது
அத்தி நிற அந்திச் சூரியன்
குறிஞ்சியின் முல்லைகள்
பாலைவனத்தணல்,
சற்று ஓய்ந்தால் கள்ளிச்செடி,
பசும் பாசமென்று நெருங்கிட
நஞ்சினால் நிரம்பிய ஊற்று,
எஞ்சி அங்கங்கே சொட்டிக்கிடக்கும்
வீ. வைகை சுரேஷ் கவிதைகள்
பக்கத்து தோட்டத்தில் இருந்த
பசும் பயிர்களை நாவால் லாவி கடித்த மாட்டை அடித்த இடங்களில்
தடித்த தழும்புகளை தடவி பார்க்கும்
அண்ணன்…
மடிமுட்டி பால் குடித்த கன்று குட்டியின் வயிறு நெறஞ்சுருச்சானு
பார்க்கிறேன் என்ற படி
கன்றுக்குட்டியின்வயிற்றில் காது வைக்கும் குட்டி தம்பி…
மதியம்: குளம், பறவை, ராதை
வண்ணங்களென அவனைத்
தொட்டுத்தொட்டு கலைப்பது
மதியமேதான்.
தொலைவில் நிறம்மாற்றி
இதழ்விரிக்கும் மதியமே
நவம்பர் கவிதைகள்
பூக்கள் உதிரா சமவெளியில்
வெயில் மேயும் கோடையில்
யாருக்கும் தெரியாமல்
சருகை மென்று
வென்றது புழு
கடவுளுக்கும் புழுவுக்கும் இடையிலான போரில்
புழு கடவுளை கொன்றுவிட்டது.
உன்னதமான மனிதன்
கடவுளாகவே உணர்ந்து கொள்கிறான்.
மணற்காடர் கவிதைகள்
ஒரு கடுகைத் துளைத்து எப்படி
ஏழு கடலைப் புகட்ட முடிந்தது?
ஒரு கடுகைத் துளைக்க முடிந்ததென்றால்
ஏழு கடலைப் புகட்டுவதா பிரமாதம்?
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
எனது நிலையற்ற
நியாயத்தின் உண்மை
நிரூபிக்கப்பட்ட போது
அப்பொழுதுக்கு அப்பொழுதென
சாத்தியத்தில் என் மனம்
வழியை விட
நான் காத்திருக்கும் போது
யாருக்கும் தெரியாமல்
என் மனம் கரைவதை
நான் பார்த்தேன்
வல்லூழின் யந்திரத் துப்பாக்கி
தன் ரகசியங்களை
வாழ்க்கை வெளிப்படுத்துவதில்லை.
ஆச்சரியமோ அதிர்ச்சியோ
காலம் முன்னறிவிப்பு செய்வதில்லை.
அக்டோபர் கவிதைகள்
சிறு அகலின் சுடர் தாங்கும் நேசத்தின் நினைவென
கனவின் தலைகீழ் உலகில்
தலை இல்லா மனிதனாக
இத்தனை பெரிய உலகையும் அணைத்துக் கொண்டு நடந்து போகும்
குருவியின் கால்கள் கொண்ட ஒருவனாக
நெருப்பு & நீர்
யாவரும் அஞ்சுவர் நெருப்பை
ஓ ஆம்! முற்றிலும்!
எதையும் இரையாக்கும்
அடியோடு அழித்துவிடும்
மூன்று கவிதைகள்
அவர்
கடந்து செல்லும் பாதையில்
எட்டுத் திசைகள்
பன்னிரண்டு ராசிகள்
மற்றும் பஞ்ச பூதங்கள்
துவைத்த ஆடைகளாய்
தொங்குகின்றன
கிளைகளில்.
முகநாடகம், மேலெழுந்தபோது
அந்தச் செடியின் ஜீவன்
வானம் பார்க்கும் இளமிலைகளில்
தீரா நடனமாடிக்கொண்டிருந்தது
குருத்தொன்று தலையில்
பொங்கியெழத் தயாராய்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
காடும்..
கூடும்..
பெருந்தேடலானதால்
பறத்தல் மறந்து
போயிருந்தது
நினைவில்
காடுள்ள பறவைக்கு
ஒஹையோ நெடுஞ்சாலையில் அபோலோ
கடல் காக்கும் ரகசியங்கள் முத்தும் பவழமும் அல்ல, அது கொண்ட உயிர்களும், சிலப்பதிகாரம், டெம்பெஸ்ட், மோபி டிக் என்று நம் இலக்கியங்கள் வரையும் பேரிழப்புகள், உடைந்த கனவுகளின் சித்திரங்களும்தான். கடல் ரகசியங்களின் நினைவுகளைக் கண்ணுறும் வகையில் புலப்படுத்தும் தன்மை கொண்ட விடியல் சாதாரண ஒன்றல்ல, அது சாலையின் (freeway) குறுக்கே விழுந்து கிடக்கிறது என்றால் அதன் பொருளும் அவ்வளவு மகிழ்ச்சிக்கு உரியது அல்ல- கடல் கொண்ட கப்பல்களின் கூடுகள் போல் துருவேறிய, வெறிச்சோடிய உலகில் ஒளி பாய்ச்சுகிறது இந்த விடியல்.
பெரும்பாதை
விழிக்கும் போதெல்லாம்
தலைக்கு மேல்
தலைகீழாய் சுழலும்
பழைய முத்தங்களின்
பல்லிச் சத்தம்
லாவண்யா சத்யநாதன் கவிதைகள்
காற்று நெருப்பாகும்
காலமொன்றில்
குட்டையானது குளம்.
முகில்கள் மழைவர மருள
மந்திரம் ஜெபித்தன மீன்கள்.
மலைமேல் பறக்கும் வீடு, பிறந்தநாள் பலூன் & நீரால் நிறைந்தவை
பார்த்திருக்க
நீராய் நிறைந்தெழுந்து
வானம் முழுதும்
நிரம்பிய குளத்திற்க்குள்
அவன்
ஏற்கனவே குதித்திருந்தான்
மூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்
ஆறு கற்கள் : Ao நாகர்கள் வட கிழக்கு இந்தியா நாகலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட பெரும்பான்மை நாகர் இனப் பிரிவு. Ao நாகா தொன்மத்தின் படி அவர்களின் மூதாதையர் (ஆண் -3, பெண் -3) ஆறு கற்களில் இருந்து உதித்தவர்கள். அவர்கள் இயற்கையை வழிபட்டனர்.
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
சாலையில் நடந்த மக்கள்
ஈஷர் ஓவியம் போல்
இங்கும் அங்கும் என
நடந்துகொண்டிருந்தார்கள்
அது எது
எனக்குக் கேட்காத ஒன்று
யாரோ ஒருவர் தனித்து
கேட்டுக்கொண்டிருக்கிறார்
காலம் உறைந்த வீடு & தவறுகளும் ரகசியங்களும்
தவறுகளை
ரகசியங்களாகவே
புதைப்பதற்காக
மறைக்கப்படுகிற உண்மைகள்
பொய்களாகப் பூத்து நிற்க
சொல்லப்படுகிற பொய்களோ
கவிதைகள்
வாழ்நாளில் உங்களுக்கு ஏற்பட்ட துயர சம்பவங்களை மனதில் இருத்தி
ஒரு சொட்டு மாறாமல்
அப்படியே கண்களில் கொண்டு வந்து உட்கார வையுங்களென்றதும்
எல்லாருக்கும் கண்கள் சிவீரென்று ஆனது
என் சிவப்பினை அந்தச் சிவப்புகளோடு ஒப்பு செய்து பார்த்தேன்
சுவை & தொடக்கம்
மலைக்கோயில்
தரிசனம் முடிந்து கீழிறங்கும்
பக்தர்களுக்கென காத்திருக்கின்றன
கொழுத்த கோயில் புறாக்கள்
நானாகிப் போனது
அப்பாவின் துணையோடு
ததும்பி வழியும் நீரமிலத்தின்
கரைமோதும் ஓசையிரவு.
சுகுமாரனின் ‘கோடை காலக் குறிப்புகள்’ வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்
மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் (1995-2000) இலக்கியம் எனக்கு அறிமுகமானது. ஜெயகாந்தனின் சிறுகதைகள் என்னுள் வலுவாக வினையாற்றி ரோடுகளையும் நாய்களையும் பிச்சைக்காரர்களையும் வேசிகளையும் உற்று நோக்கவும் மதிப்புக்கொடுக்கவும் கற்றுக் கொடுத்தன. ஜெயகாந்தனின் நூல்களை வாங்க மீனாட்சி புத்தக நிலையத்தைத் தேடி அலைந்தேன். அதன் பயனாக சர்வோதய “சுகுமாரனின் ‘கோடை காலக் குறிப்புகள்’ வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்”
தெருப் பையன்…
நேற்றைய நாள்
கடந்து,
இன்றும் அதே போல்,
ஏக அவசரத்தில் அவரவர்.
புனலாடுதல்
மலைக்கருவில் உதித்த
நதிப்பெண்கள் மகிழ்வோடு
நடனமாடிக்கொண்டு
புனலாட செல்கின்றன
கடல்நீரில்…
லாவண்யா சத்யநாதன் கவிதைகள்
காகங்களுக்கு
சோறு வைத்தேன்.
புறாக்கள் புசித்தன.
காகங்களுக்கு
சோறு வைத்தேன்
மைனாக்கள் உண்டன.
காகங்களுக்கு
சோறு வைத்தேன்.
அணில்கள் தின்றன.
ப. ஆனந்த் கவிதைகள்
இருபுறமும் புரண்டு ஆடிக்கொண்டு
பால்புட்டியை தானே எடுத்து குடித்தபடியே இருந்தவன்
தூங்கும்வரை கடந்த
அமைதியான சில நிமிடங்கள்
அம்மாவாய் இருந்தான்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
பறந்து வந்த பறவை
அமர்ந்த கிளைக்கு
கணத்தில் உயிர் வந்து போனது
இலைகளுக்கும் முட்களுக்கும்
நடுவில் பூத்த ரோஜா
அதனை சமன் செய்தது
கவிப்ரியா கவிதைகள்
பாகானாய் மாறி ஏறிக் கொள்கிறாள் செல்ல மகள்
கையால் அடித்து யானையை நகர செய்கிறாய்
ஒவ்வொரு அடியிலும் இதம் பெறுகிறான்
பெற்றவன் என்பதற்காக…
செவ்வரத்தை
ஆரம்பத்தில் முற்றத்தில்
எந்தப்பூவும் பூத்திருக்கவில்லை
வெறிச்சோடியிருந்த முற்றத்தில்
நாள் பார்த்து, வளர்பிறை காலமொன்றில்
அவள்தான்
கவி வாழ்வு
மழையில் நடுங்கியபடி நாம் நின்றுகொண்டிருந்த காலத்தில்
தொட்டுக்கொள்ள முடியாத ஜிமிக்கிகள்
அழகாகப் பேசிக் கொண்டிருந்தன
குமார் சேகரன் கவிதைகள்
விருப்பு வெறுப்பு
கலந்த சொற்களை
மெளன பெட்டிக்குள் போட்டு
தாழிட்டு பூட்டொன்றால்
பூட்டி வைத்தேன்