இன்னமும் அணையவில்லை
யாழ் நூலகம் எரிந்த பெருநெருப்பு
இன்னமும் கருகிக்கொண்டிருக்கிறது
அறிவின் வேர்களைப் பொசுக்கிய வாடை
பசிபிக் பெருங்கடலிலும் கேட்கிறது
குமுதினிப் படகில் வெட்டிச் சாய்க்கப்பட்டவர்களின்
குடல் சரிந்த மரண ஓலம்
Category: கவிதை
தான் வாழ்ந்தால் போதாதா?
ஆட்சி எனப்படுவது –
மதம் இனம் காசு பரத்தமை
பாம்பின் விடமாய்ச் சீறும் தேறல்!
தொழில் எனக் கொள்வதோ –
சினிமா அரசியல் கனிமம் கடத்தல்
கஞ்சா அபின் ரசாயன போதைப் பொருள்கள் விற்பனை
மது உற்பத்தி கலப்படம் தரகு!
போலியுடல்கள்
ஓம் வடிவ பட்டமரத்தில்
கந்தப்பிரகாசமுடைய
வேல் முகமாக
தளிர் விட்டிருந்தது ஒற்றை இலை
உடலெல்லாம் பச்சை வேலால்
அலகு குத்திய ஆயிரம் மரங்களுக்கு இல்லாத அழகு அதற்கு
பறவை பார்த்தல்
ஆடி காற்று அவள் உவகைக்கு இதமாய்
தென்னையின் மூச்சினை அவள் மேல் இறக்குகிறது;
அச்சமயம் அவள் தென்னைகளையும், அதனொன்றில் இருக்கும் என்னையும் பார்ப்பதுண்டு; நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது..
அவள் என்னை பார்த்து கொண்டே இருப்பாள்
நான் யார் என்று தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியாது..
கு.அழகர்சாமி கவிதைகள்
ஒரு
குட்டி நட்சத்திரம்
அப்படித்தான் என்கிறது
நிமிர்ந்து நிற்கிறதாய்
நினைக்கும்
மலைக்கு.
குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள்
இரவில் ஊறும் நத்தைகள்
தொடர் சாரலில்
குளிர்ந்து கிடக்கும்
நிலத்தை விட்டு
வெளிவருகின்றன.
செல்லும் பாதைகளில்
அடுத்தப் பாதத்தை வைப்பதற்கு
இடமின்றி ஊறும் நத்தைகள்
காணக் கிடைக்கையில்
உணர்க்கொம்பின்
அலைவரிசையில்
சிக்கிக் கொள்கிறது உலகு.
வேலாயுத முத்துக்குமார் கவிதைகள்
விடிகாலை கார்த்திகை மழையில்
முற்றத்து கூடம் நிரம்பிவிட்டது.
மனப்பிறழ்வுற்ற அம்மா
வாரியலால் பெருக்கிக் தள்ளுகிறாள்.
பெருக்கப் பெருக்க நிறைகிறது மழை.
ஓர் கணத்தில் மழையோடு
உரையாடத் தொடங்குகிறாள்
கோசின்ரா கவிதைகள்
பாம்பு
உரித்த சட்டை அங்கேயிருந்தது
எந்தப்பாம்பும்
அதை அணிய
எடுத்துக்கொண்டு போனதில்லை
ஒரு பாம்பின் சட்டையை
இன்னொரு பாம்பு அணிவதில்லை
உரையாடும் பொருட்கள்
நனைவதில் அத்தனை அலாதி
வரவேண்டுமென
மனதுக்குள் விரும்புகிறார்கள்
மேலே படாதவரை
இதமாயிருக்கிறது அவர்களுக்கு
வட்டமும் மையமும்
அந்தப் பறவை
வட்டமிட்டு
வட்டத்தை முடிப்பதற்குள்
வட்டமும் மையமும்
குவியும் ஒரு புள்ளியாய்
மோனத்தில்
மிக உயரத்தில்
சலனமின்றி
சிறகுகள் விரித்தபடி
பறக்கிறது
மறு ஒருமுறை, காலம்
பெருந் தோல்விகளோ சிறு வெற்றியோ கூடக் கண்டு உணர்ச்சிகள் இனி எழாதபடி மரத்துப் போகட்டுமே!
என் அஞ்சாமை அதனால் என்னை விட்டுப் போய்விடுமா?
மறு ஒருமுறை எழுந்து விடமாட்டேனோ?
ஆழ் இருளையும் போராடி வென்றுவிடமாட்டேனோ?
மூன்றாவது கண் – பரிமாணம்
கண்ணீரை வர்ணமாக மாற்றும் வரைபடங்கள்
எழுதப்பட்டன,
காலத்தின் அரைக்கதவுகளின் மீது —
நாங்கள் திறக்காத அறைகளில்
மறைந்திருந்த ஒவ்வொரு பருவமும்
ஒரு ஞாபகமல்ல,
ஒரு சாஹித்ய சித்தரிப்பு.
ஓர் வார்த்தை & அன்பின் அளபெடைகள்
அத்தனை நியாயங்களையும்
அசாதாரணமாய் ஓர் வார்த்தை
எதிர்க்கும் ….
விரலிலிருந்தும் இதழிலிருந்தும்
விழும் முன் வார்த்தைகள்
விழுந்த பின் வெறும் எச்சங்கள்…
தணிகா கவிதைகள்
தூவானத்தில்
அகல்இலை குடைபிடிக்கிறாய்
வடிகிறது
வானம்.
ஒற்றைக் குதிரை
கற்றை சடை முடி மாதேவன்,
கடற்பா லரவத் தறிதுயிலோன்
மற்றை தெய்வங்கள் யாவையுமே
மனதால் விளைந்த தோற்றங்களே.
மகிழ்ச்சி
பாத வடிவ உடல்
எல்லா உறுப்புகளும் சேர்ந்து தான்
இந்த உடலை கீழே வைக்கின்றன
பாத வடிவில் மட்டுமே இந்த உடல்
ஆனால் மண்ணில் பதிகின்றது
பாதம் மாதிரி உடல் இல்லை
பாதம் மாதிரி உடல் உறுப்புகள் இல்லை
வாக்தேவி துதி
கடினமான கற்களும்
நோகக் கூடாதெனக் கருதி
புல்லும் நலுங்கிடாத மெல்லடி
வைத்து நடந்த நாமகளே
மோப்பக் குழைந்திடும்
என் மனதைப் பற்றி எண்ணாமல்
விரைவடி வைத்து மறைந்ததேன் தேவி
இப்படித்தான் இப்பாடலை நான் கேட்டேன்
மொத்தத்தில் இந்தப் பாடலின் ரிதம், கடந்த காலத்தை இடத்தை உணர்த்தும் காட்சிப் படிமங்கள், ஒரு கவிதை மெட்டாய் மலரும்போது நிகழும் அற்புதம், இது உருவாக்கும் ஆதரவற்ற தனிமை, கையறு நிலை, சரணடைதல், சொல்லும் பொருளும் இயைந்து முயங்கியதில் கிறங்கிய இடங்கள், பாடிக்கொண்டே வரும்போது இசைக்கலைஞர் ஏற்படுத்தும் மெளனவெளி, ஏற்ற இறக்கங்கள், சிறியது பெரியதாகப் பாடுதல், சில இடங்களில் துரிதகதி மற்றும் குறுங்கமகங்கள் போன்றவை எல்லாமே ஒரு சரியான கலைச் சேர்மானத்தில் புதிய ஒன்றாக மாறியுள்ளது கவிதை.
லாவண்யா சத்தியநாதன் கவிதைகள்
நான் மகிழும்படி
என் வாழ்க்கையில்லை.
நான் உவக்கும்படி
நான் வாழும் உலகமில்லை.
குறை யார் மீது?
என் மீதா? உலகின் மீதா?
விடை தெரியாத கேள்வி ஒன்றை
தலைகனக்க சுமந்துகொண்டிருந்தேன்.
கு. அழகர்சாமி கவிதைகள்
கைகள்
என் முகங் காட்டுவது போல்
கண்ணாடி
என் முகங் காட்டுவதில்லை-
ஏனென்றால்
முகங் காட்ட,
வருடிக் கைகள்
என் முகத்தை ஸ்பரிசிப்பது போல்
கண்ணாடி ஸ்பரிசப்பதில்லை.
வ ஸ்ரீ கவிதைகள்
இது எழுதும்நேரம்.
கபாலம் பிளந்து
கவிதை கொப்புளிக்கும்.
அமைதியின் வளைந்த வழி அரித்து
கடல் ஆர்பரிக்கும்.
சந்திரன் குளிர்ச்சியாய்க் காய்வான்.
மேகங்களின் வெள்ளையை
அலைகள் விழுங்கும்.
புஷ்பால ஜெயக்குமார் நான்கு கவிதைகள்
நானும் அவளும் அங்கு
அமர்வதற்காக அது காத்திருந்தது
நிழலின் அமைதி ரகசியத்தைப் பேணியது
எத்தனை ஆண்டுக் காலம் அது நீடிக்கிறது
என்பதை துல்லியமாகச் சொல்ல
அவன் இருக்கும் மட்டும்
மற்றும் இப்பிரதியை முன்னிட்டு
நானும் அவளும்
அவள் வீட்டில் எங்கும் இருந்தோம்
வ ஸ்ரீ கவிதைகள்
கடலைப் பார்த்தே பல காலமாச்சு.
மணலில் படுத்தது அதற்கும் எப்பவோ.
இப்போதும் கடல் உண்டு,
மணல் உண்டு.
காட்சிப் பொருளாய் எல்லா
மனிதருமுண்டு.
ஒன்றாய்க் கிளம்பி
ஒரு சேர ஒரே பயணம் செய்து
சிலரைப் பார்த்து, சிலரைத் தழுவி
சிலரை மிதித்து, சிலரைப் பயந்து
பல கோடியைப் பற்றிக்
கூடப் பறப்பவர் என்ற நினைப்பு
கொஞ்சமும் இன்றி
இரவு
உள்ளே
எங்கேயோ
இந்தப் பிரபஞ்சத்துக்குள்
ஒரு பேனா மூடி அளவேயான
குப்பி உள்ளது.
உள்ளதா?
கடல் கொண்டும் அதை
நிரப்ப முடிவதில்லை.
நியூயார்க் ஓணம்
ஒன்றும் இணங்காமலிருந்தாலும் இடையில்
சமரசம் செய்பவன் கொழுத்திடுவான்
சொந்தமாய் ஒருவரைக் கொண்டு சேர்த்தே
ஒருவன் இரண்டாமவனைப் புறந் தள்ளுவான்
உயிர்க்குளிர்
அலை அடித்துக்கொண்டே இருக்கிறது
துமிகள் பறந்துகொண்டே இருக்கின்றன
காற்று ஏந்திக்கொண்டே இருக்கிறது
அத்தனை அத்தனை மௌனமாய்
துமிகள் அலைமீதே விழுகின்றன
கவிதையில் உறைந்திருக்கும் சிந்தாத கண்ணீர்
இணையை இழந்த பெண் கிரவுஞ்சப் பறவையின் ஓலம் எழுப்பிய சோகம், சுலோகமாய்ப் பரிணமித்ததை ஆதி கவியைப் பற்றிய புனைவு சொல்கிறது. துயரம் வழிந்து விடாமல் கலை உருவம் பெறுகிற போது, துயரமும் காப்பாற்றப் படுகிறது; கவிதையும் காப்பாற்றப்படுகிறது என்று தோன்றுகிறது. பிரக்ஞை பூர்வமாக இல்லாத, இயல்பான சொல் கவனம் “கவிதையில் உறைந்திருக்கும் சிந்தாத கண்ணீர்”
செல்வசங்கரன் கவிதைகள்
நீரைக் கையால்
அள்ளும் போது
நீர் என்ன செய்கிறது
ஏற ஒத்துழைத்தது
ஏறியதை இழுத்தது
ஏறியதே இறங்கியது
எல்லாவற்றையும் செய்தது
இரயில் பயணத்தில்
நான் இறங்கிய இரயிலடியில்
இறங்கியது அதுவும்.
தங்குவதற்கு நான்
நுழைந்த அறைக்குள்
அதுவும் நுழைய
எனக்கு அது
தேவையோ
அல்லது
அதற்கு நான்
தேவையோ என்று
முடிவு செய்ய
முடியாதது போல் தோன்றிற்று.
அகாலம்
யாருடைய நடுக்கமோ
யாருடைய பிறழ்வோ
யாருடைய பயமோ
யாருடைய வாழ்வோ
ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டிக்குள்
உறைந்து
போய் கிடக்கிறது
கடைசியாய் வந்தமர்ந்த
ஈயோடு
அந்தியின் ஆன்மா
ஒரு துளியும் மீதமின்றி
உறிஞ்சப்படும் நீலத்துக்காக
காத்திருக்கும் வௌவால்கள்
பெரிய மேகங்களுக்கு அடியில்
அரற்றி விரிக்கின்றன இறக்கைகளை
வேதிப் போராயுதம்
துணி காயப்போடும் கயிறுகளின் முடிச்சிலும்
துரு பிடித்த அதன் வளையங்களிலும்
மெல்லிய சட்டையைக் கிழிக்கும்
கோரமான முனைகளாலான
இரும்பு கிளிப்களிலும்
இவற்றையெல்லாம்
ஆட்டுவித்து நகர்த்த
எண்ணிக்கொண்டே இருக்கும்
ஏழு கவிதைகள்
இரவு வானத்தில்
தனித்துப் பறக்கிறது பறவை.
வானம் தனித்திருக்கும்
பறவை தனித்திருக்கும்
தனித்திருக்கும்
இரண்டின் சந்திப்பிலும்
தனிமையிருக்கும்
தனிமையின் கரங்களில்
வானம் புகும்
பறவை புகும்
இங்கு யாவுமே உட்புகும்
சுஜய் ரகு கவிதைகள்
வறண்ட ஓடைப் பாதையில்
கிடந்து தகிக்கும் ஒரு கூழாங்கல்லைச்
சீண்டுவதுபோல
நடுநிசி இரவைக் கிழித்தபடி
காற்றில் ஓங்கரித்தது
ரயிலோசை
இருள் வெளி அதிரவும்
துளி துளி வண்ணங்களாக
ஒளிர்ந்து உதிர்ந்தன
திரளாய் பற்பல சொற்கள்
மூன்று கவிதைகள்
மிகப்பெரிய அநீதி
நிகழ்ந்தது போல்
தலையில் கொத்திவிட்டு
இருளிலே அபாயத்தைத்
தோற்றுவித்துச் சென்றது ஒரு காகம்
அது இங்கும் அங்கும் பறந்து
மரணத்தின் அருகாமையை காட்டி
மீண்டும் இன்னொன்றாகப்
பறந்து போகிறது
நாவித யுகம்!
உதறிடும்
கையறு நிலையில்
அகாலமாய்
வீடுவரை
அயல் முகம்!
காதலெனும் திசைமானி
சிவதனுசு
உடைபட்டது.
மழையில் கண்ணீர்த்துளியாய்
நின்று இசைத்துக்கொண்டிருந்தான்.
ஆம்
கேள்விகளை நோக்கி
பாடலாகப் பெருகுகிறான் அவன்
பழி பாவங்களை நோக்கி
சிறு புன்னகையாய் பெருகுகிறான் அவன்
கண்ணீரை நோக்கி
கண்ணீராகவே பெருகுகிறான் அவன்.
பேதையாய் ஆகி நிற்பவளே
காதலின் அழைப்புகள்
ஆழங்களில் பிறக்கிறது
மதார் கவிதைகள்
கடந்த பஸ்ஸின்
சன்னல் வழி
நீராட்டு விழாவைப் பார்த்த
ஏராளம் பேரில்
JK வும் ஒருவர்
ரவிசுப்பிரமணியன் கவிதைகள், இசை வடிவம்
மலரின் இருப்பு மணத்தை சொல்லுகையில்
மரத்தின் அசைவு காற்றை சொல்லுகையில்
பறவையின் பாடல் இசையை சொல்லுகையில்
வாலின் அசைவு வாஞ்சையை சொல்லுகையில்
வ. அதியமான் கவிதைகள்
உன்னிடம்
இரண்டு உள்ளங்கைகள் இருக்கின்றன
என்னிடமும்
இரண்டு உள்ளங்கைகள் இருக்கின்றன
குறுக்கும் நெடுக்குமாய் கோர்த்து
உயர தூக்கிப் பிடித்திருக்கும்
நான்கு உள்ளங்கைகள்
போதாதா?
குறிச்சொற்களின்* கவிதைகள்
ஒரு அனுப்பப்படாத செய்தியில்
வரப் போகும் அந்தப் புதுப் பிரபஞ்சம்
நிலவுகள் அதன் வரைவு நகல்கள்
கருந்துளைகள் ரத்து செய்யும்
மாற்றங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
ஒளியும் விழியும்
ஆழ்ந்த உறக்கத்தில்
சங்கினுள் அடங்கும்
கடலைப் போல
நிலவினுள் சுருண்டு
விழிக்கிறேன்.
உடைந்த கண்ணாடிச்
சில்லென, நிலவை
மனதில் அளக்கிறேன்.
செ.புனிதஜோதி கவிதைகள்
வழிநெடுங்கிலும்
காயங்கள் ..,.
காயங்கள் மீது
மின்மினியென
பறந்து கொண்டிருக்கின்றன…
நிறைவேறிய
நிறைவேறா
பல கனவுகள்….
செல்வசங்கரன் கவிதைகள்
ஒரு மலைப் பயணம் மேற்கொள்ளலாம் எனக்
கிளம்பிக் கொண்டிருக்க
மலையே இறங்கி வந்து கைகளில் என்னை
ஏந்திக் கொள்ளுகிற அதிசயம் நிகழ்ந்தால் கூட
எதுவும் மாறாதென்று தோன்றியது
ந.சிவநேசன் கவிதைகள்
நல்லவனாக மாறும் கெட்டவனின் சாகசம்
நல்லவனாக இருந்து
நல்லவனாக மடிபவனின்
வாளை விடவும்
கூர்மையாயிருக்கிறது
இரைகளின் பிரார்த்தனைக் குறிப்பு
திசை காட்டும் நட்சத்திரங்கள் வழி தவறச் செய்துவிட்டதால்
வதைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் அந்நிய நாட்டு ஜீவன்களின்
குருதியாலும் கண்ணீராலும் நிரம்பி
அலையடிக்கும் இச் செங்கடலுக்குள்
எப்போதும் போல இக் கணத்திலும்
மிகச் சாதுவாகவே நகர்கின்றன பெருந்திமிங்கிலங்கள்
மா. காளிதாஸ் கவிதைகள்
கேமராவை பார்க்காமல்
இன்னொரு பக்கம்
பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அந்தக் காட்சி
தெளிவாகப் புலனாகிவிட்டதா எனத் தெரியவில்லை.
செந்தி கவிதைகள்
ஓர் அதிகாலையில் ஆறுகண் பாலத்தில்
அவ்வழி வந்த உலகாணி பால்க்காரன்
முன்பு நிர்வாணமாக நின்று இரண்டு
கைகளால் வழி மறிக்க
மூன்று வாரங்கள் காய்ச்சலில் படுத்து
எழுந்திருக்காரன் என்பதை அறிந்ததால்
இம்முறையும் அவளிடம் பேசாது வந்துவிட்டேன்.
செயற்கை நுண்ணறிவு : இயற்றறிவு கவிதைகள்
நீ சொன்னாய்: “உன் தாய்நாட்டைப் பற்றிச் சொல்”
நான் என் நாக்கை கடித்தேன்.
எப்படி விவரிப்பது தீயில் மூழ்கும் வீட்டை?
எப்படி விவரிப்பது கடலில் மிதக்கும் பெயர்களை?
எனது தாத்தா கவிதை போல வாழ்ந்தார்,
வார்த்தைகள் அவரது உடலில் வடுக்களாக.
இங்கே, வெளிச்சத்தில், நான் நிழல் மட்டுமே,
அவரது கதையின் ஒரு துண்டு.
இந்தப் பழைய புகைப்படத்தில், அம்மா சிரிக்கிறாள்,
அவளது கண்களில் இன்னும் கனவுகள் இருக்கின்றன.
அப்போது அவள் தெரியவில்லை
காலம் பற்றிய ஐந்து கவிதைகள்
ஆதியும் இறுதியுமான ஒற்றைவினா மறைந்த மாத்திரத்தில், கேளிக்கைகள் பொருளற்றதாகும். யார் கண்டது, பசியும் ஓய்வும் உறக்கமும்கூட இல்லாமல் போகலாம். இருளும் ஒளியும் இரண்டற்று ஆகலாம். ஆந்தைகளும் மின்மினிகளும் பகலை ஆள, பகல்பொழுதின் உயிரிகள் இரவுக்கு இடம் பெயரலாம்.
