கு. அழகர்சாமி கவிதைகள்

இலக்கை
நெருங்குவது குறுக
தனிமை சூழ்வதும் அதிகரிக்கிறது.
தொடக்கத்தில்
இவ்வளவு தொலைவுக்கா
தயாரானோம் என்று
தெரியவில்லை.
தொலைவின் இது வரை
கடந்து வந்தது
இவ்வளவு தொலைவா
என்று ஆச்சரியமாயுள்ளது.

வருணன் கவிதைகள்

சமரசங்கள் மீதமின்றி
தீர்ந்து போய்விட்டதொரு பொழுதில்
உன் மீதான
அதுவரையிலான அன்பை
சட்டகமிட்ட நினைவுச்சின்னமாய்
மாற்றிக் கொண்டேன்.

அய்யனார் ஈடாடி கவிதைகள்

நூலாம்படைகள்
அறுந்து தொங்கும்
இலையுதிர்ந்த புங்கை மரத்தில்
முட்டி மோதும்
மீன்கொத்திகளின்
கூட்டுச்சண்டையிலிருந்து
வெகுண்டெழுப்பும் பெருத்தொலிகள்
தெறிக்கும் உச்சி வெயிலில்
கதவுதிறந்த வரவேற்பரையில்
வகுடெடுத்த கொடிப்பிச்சியின்
நெடு நிழலில்

முதுமை

ஒற்றைத் தென்னை:
என் மீது அமர்ந்து செல்லும் பறவைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறேன் பகலில்.
என் மீது மினுங்கும் நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருக்கிறேன் இரவில்.

அய்யனார் ஈடாடி கவிதைகள்

கதிர் அறுத்த
தரிசு நிலங்களில்
காற்சுழற்றி விளையாடும்
குழந்தையின் கொலுசுமணிகள்.
வெறிச்சோடிய வீதிகளில்
கருக்கா நெல்மணிகளோடு
சண்டு புடைக்கும்
தண்டட்டி கெழவிகள்.

கோடைத் தெருக்களில்

இன்னும் மெழுகு பூசை
நடைபெறாத
மாம்பழங்களும்
கோடை ஆரஞ்சும்
முழுதாகவோ
சட்டையுரித்த
துண்டங்களாகவோ
கோசாப் பழங்கள்

அய்யனார் ஈடாடி கவிதைகள்

சாயத்துவங்கின
தாழப்பறந்த
பசுந்தோகை விரித்த
செங்கரும்புகள்.
கதிர்அறுத்த
தரிசு நிலங்களில்
இதமான வெப்பத்தில்
குளிர்வடங்கிய
ஆலங்கட்டிகளை
கக்கிச் சென்ற
நிறைசூல் மேகங்கள்
கிடத்தி இளைப்பாறுகின்றன

மீச்சிறுவெளி

வெற்றிப் பெற்றவனுக்கு
வலி சிறந்த எடுகோள்
தோல்வியை தோளில் வைத்து
செல்பவனின் கையில் அளவுகோல்

காலத்துள் உறைதல்

தந்தையை இறுகப் பிடித்தபடி
அவன் முதுகில் முகத்தையும், உடலையும்
ஒட்ட வைத்திருக்கிறாள் அச் சிறுமி
காற்று அவள் சிறுமுடியைக் கலைக்கிறது
குட்டை முடியில் சிறகடிக்கும் மயிர்ப்பிசிறுகள்
மென்சாமரமாய் அவன் முதுகை வருடுகிறது
வீதிக்கு அருகில் நீர்நிலையில்
மீனுக்குத் தவமிருக்கும் கொக்கு
ஒரு கணம் திரும்புகிறது

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

சற்றென்று பெய்யும் கோடை மழையென
நொறுங்கிப் பொலபொலத்துப் போனது
நான் என்னும் வாழ்க்கைஉயிரை மறந்த உடலென என்னால் அவளோடு பொய்யாகச் சிரிக்க முடியவில்லை

அய்யனார் ஈடாடி கவிதைகள்

கனல் எழும்பும்
மணல்புதைந்த
பனிமோதிடும்
ஆற்றுப்படுகையில்
சிதறிய வடுக்களாக
சிப்பிகள் அப்பிய
குழிமேட்டில்
முண்டியெழும்புகிறது
நிர்வாண புழுக்கள்
ஒருபக்கம்.

மாயம் & இயலாச் சொல்

என் குரல் நாண்களின்
இடை வெளியில் இன்னமும்
நீங்கள் கேட்காத சொற்கள்
சிற்சிறு தூளிகளில் தொங்குகின்றன
எண்ணிக்கை ஓங்குகையில்
உடல் குறுக்கி அமர்ந்திருக்கும் சில
பாதம் நீட்டி படுத்திருக்கும் சில
முகம் காட்டி கண் மூடியிருக்கும் சில
கைகள் வெளிப்போந்திருக்கும் சில
திமிறி வரத் தெரியாதவை
உள்ளேயும் புதைக்க இடமில்லை

மேழி வான்மதி கவிதைகள்

வீதியில்
பவனி வருகிறாள் காளி.
வரவேற்கும் பொருட்டு
தெருப் பொடிசுகள்
தங்கள் கால்களின் கட்டுதிர்க்கத் துவங்கியிருந்தனர்.
தரை பாவிய கால்கள்
பறையின் உச்சம் தொட
தெருவை நனைக்கிறது ஆட்டம்.

இது வேற லெவல்…!

சமீபகாலங்களில் எனக்கொரு சந்தேகம். உங்களுக்கும் இருக்கலாம். தமிழில் வார்த்தைகளுக்கு அத்தனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா என்பதே அது. சந்தேகம் சும்மா வரவில்லை. பல நாட்களாக, பல பேரிடம் பேசும் பொழுது சட்சட்டென்று இந்த எண்ணம் வந்து போகும். எதனால் என்று கேளுங்கள்… ஒரு நண்பரிடம் அவர் சென்று வந்த பயணம் “இது வேற லெவல்…!”

அல்லல் என் செயும் அருவினை என் செயும்?

ஊடகத்தார் படும் இன்னல்
உரைக்க ஒண்ணாது
அல்லில்லை பகலில்லை அலுப்பொன்றில்லை
பெற்றோர் மனையாள் தம்மக்கள்
தறுகண் நினைப்பில்லை
அவனன்றி ஓரணுவும் அசையாது
என்பது போல் எவ்விடத்தும்
நீக்கமற நிறைந்திருக்கும் பணி

புல்வெளி, காடு, இடை.. வெளி &பீலித்தனிமை

கண்கள் முழுதும் முதலில்
பசுமையைப்
பருகவேண்டும்..ஆயிற்று
அடுத்து புல்மணம் நிறைந்த
காற்று..
ஆம் நன்றாகவே இருக்கிறது..
கிச்சுக்கிச்சு மூட்டுகிறது..
சிலஅடி நடந்தவுடன் காலில்
கண்களறியா முட்கள்
குத்தத் தொடங்குகின்றன

கு.அழகர்சாமியின் குறுங்கவிதைகள்

உற்று நோக்குமென்னை
உற்று நோக்கி
கடுகு விழிகளை
உருட்டி
வளைத்த கம்பியாய்
வாலை நிமிர்த்தி
ஓடாது நிலைக்கும்
ஓணானின் எதிர்ப்பில்
தெரிந்தது

ஆறு கவிதைகள்

சட்டெனக் குதிக்கிறது
சிறுகுருவி
சிறுநொடியின் மீது- ஒரு
சிறுகிளை மீதமர்ந்து
சிறிது குலுங்குவது போல்
தெரிகிறது அது
எனக்கு.

ஆமிரா கவிதை

அதை அள்ளி திண்ணும் கொற்றவையின் செங்கழுத்து
ஆகாசத்திற்கும்
பூமிக்குமாக
ஏறி இறங்குகிறது
அங்கே
கொற்றவை
காலம் அழித்து
நின்று சுடர்ந்து
ஆடத் துவங்குகிறாள்

புஷ்பால ஜயக்குமார் கவிதைகள்

ஒரு குழந்தை அறிந்ததை
நான் அறியவில்லை
ஒரு பித்தன் அறிந்ததை
நான் அறியவில்லை
ஒரு மூடன் அறிந்ததை
நான் அறியவில்லை
அறிந்தவை எல்லாம்
அற்ப ஆயுளில் அழிந்துபோக
எனக்கு முன்னும் பின்னுமாய்
இருக்கும் வாழ்க்கையில்
நான் எங்கு இருக்கிறேன்

முதல் தனிமை

பூச்சரத்தின்
அடுத்தடுத்து முடிச்சுகளில்
பூக்களை
வரிசைப்படுத்தி
தூக்கிலிடுகிறேன்
அதன் செடிகளுக்கு
நீருற்றுகிறேன்
பூக்களுக்கு அது
இரக்கமற்ற கொலை

விஜி ராஜ்குமார் கவிதைகள்

இப்படித்தான் இருக்கிறேன்
மிகவும் மிகவும்
பேசிக்கொண்டு
சிரித்துக்கொண்டு
படபடத்துக்கொண்டு
ஏன் இப்படி என்று கேட்டுக்கொண்டு
ஆனாலும் இப்படித்தான் இருக்கிறேன்

வெண்பனியா வெண்மலரா?

இத்தொடரில் வெண்தோகை, வெண்மையான ஃபுஜி மலை, வெண்பனி ஆகியவற்றின் வரிசையில் இப்போது வெண்சாமந்திப்பூ. இரவெல்லாம் வெண்பனி பொழிந்துள்ளது. காலையில் கண்விழித்துச் சாளரத்தின்வழி பார்த்தால் வெண்கம்பளத்தை விரித்து வைத்தாற்போல் பனி எங்கும் படர்ந்திருந்தது. வெண்சாமந்திப்பூச் செடியின் மீதும் படர்ந்திருந்ததால் எது பூவின் இதழ், எது உறைபனி எனப் பிரித்தறிய முடியவில்லை. ஒருவேளை இதழ்களை மடித்துப் பார்த்தால் வேண்டுமானால் கண்டறியலாம்.

ஆறு கவிதைகள்

இந்த நிமிடங்களை
அற்புதமாக்க
இப்பொழுதே எதும் நடக்கத் தேவையில்லை
அன்றொரு நாள்
எலியாட்ஸ் கரையில்
புறா எச்சமிட்டுத் துவைக்காத சட்டை

வீடு, அலை, மதுரம் & கருப்பை காய்தல்

சிறிது கன்னியாகிறாள்
கனவுக்கண்களோடு
அலைகிறாள்..
கொஞ்சம் உன்னித்துப்
பார்த்தால்
கண்ணின் ஓரத்தில்
சிறிது காதல் கசிவுகூட
உண்டு..

கனவின் நீரோடை

கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி
கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி

இரு கவிதைகள்

ஓர் இசைக் குறிப்பின்
இடைவெளியில் ஜனித்த
மௌனத்துடன் பெயரற்ற நதியில்
தனக்காகக் காத்திருக்கும் படகில் பயணிக்கத்
துவங்குகிறான் சித்தார்த்தன்
படகின்
ஒரு புறம் குவித்து வைக்கப்பட்டுள்ள பூக்களை
அதிகாலைப் பனியின்
உதடுகள் உரசி துய்க்கின்றன

உயரவாகு

அழுக்குப்பாசியடைந்த
மொட்டைமாடி
நீர்த்தொட்டியினுள்
வெளுப்புக் காரமிட்டு
தேய்த்துக் கழுவிவிடவும்
தேடப்படுகிறேன்
உதவிக்கு நேர்ந்துவிட்டதுபோல்
என் உயரவாகு
எத்தனை தோதாயிருக்கிறது
பிறருக்கு.

ஆமிரா கவிதைகள்

எட்டுக்கால் பூச்சிகளாக
சுவற்றில் ஊரத் துவங்குகின்றன பகல் பொழுதுகள்
பயம்
கருகிய சர்க்கரைப் பாகின் நெடியாக
அறையெங்கும் விரவுகிறது

அழலேர் வாளின் ஒப்ப

ஆற்றங்கரைக்கு வந்தவர்கள் கண்டு விட்டனர்.இதனால் பற்றிக்கொண்ட அந்த ஊர்ப்பழி எனும் அலர் மெல்லிய சிறு சிறு பூக்கள் காற்றில் இறைவது போல் பரவிவிட்டது.

சுரணை குறைந்த பகலிரவுகள்

ஒரு வனத்தை உருவாக்க நினைப்பவன்
மிகுதியான கற்பனை உடையவன்
அவன்
இது வரை தொட்டிச் செடிகளை மட்டுமே வளர்த்தவனாக
இருக்கக்கூடும்
அல்லது
மாடித் தோட்டத்தில் சில செடிகளையும்

நான்கு கவிதைகள்

வியப்பில் உச்சியை அண்ணாந்து நோக்கி
முதலடி எடுத்து வைத்ததுமென்னைச்
சிறுகுழந்தையைத் தூக்குவது போல்
தூக்கிக் கொண்ட மலை, மேல்
செல்லச் செல்ல, மெல்ல மெல்லத் தூக்கி,
கடைசி அடி எடுத்து வைத்ததும்
தன் தோள் மீது உயர்த்தியென்னை இருத்தி
வைத்துக் கொள்வதற்குள் நேரமாகிக் களைத்துப்
போதும் போதுமென்றாகி விட்டது எனக்கு.

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

அவன் ஒன்றை 
எழுத எத்தனித்தான் .
தனிமையிலிருந்தான், 
தேவை இருந்தது. 
அவனை அடைய அதுவே வழி. 
இப்பொழுது மொழி மட்டுமே அவன். 
அவன் சொல்தான் அவனது காலம். 
முன்பு இருந்ததும் 
தற்போது எழுதப்போவதும் 
ஒன்றல்ல என்று 
நிரூபணம் செய்ய முற்பட்டான். 

ஜாவீத் அக்தர்

This entry is part 12 of 12 in the series கவிதை காண்பது

‘யுகாந்தர்’, மிதுன் சக்ரபோர்த்தி – சங்கீதா பிஜ்லானி நடித்து, என். சந்த்ரா எழுதி இயக்கிய திரைப்படத்துக்குப் பாடல் எழுத ஜாவீத் அக்தர் அழைக்கப்படுகிறார். இசையமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் தயக்கத்துடன் ஒரு பாடலில் கண்ணபிரானின் ‘ஆரத்தி’ படமாக்கப்படும், பாடல் வரிகளும் அதற்கு ஏற்றாற்போல் அமையவேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். இதை ஏன் தயங்கித் தயங்கிச் சொல்கிறீர்கள் எனக் கேட்டுப் பாடலின் மெட்டை வாசிக்கச் சொல்லியிருக்கிறார்.

உபநிடத சாரம்

அனைத்து உயிர்களையும்
தன் ஆன்மாவுக்குள்ளே காண்பதுவும்
அனைத்து உயிர்களிலும்
தன் ஆன்மாவைக் காண்பதுவும்
ஆத்ம அனுபவம்

ஷகீல் பதாயுனி

This entry is part 11 of 12 in the series கவிதை காண்பது

இஸ்லாமியர் ஒருவர் திரைப்படத்தில் இந்து சமய பக்திப் பாடல்களை எழுதியது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ‘திருவிளையாடல்’ திரைப்படக் காலத்தில் தமிழ்த் திரையில் இருந்ததைப் போல, வடக்கிலும் பைஜு பாவ்ரா (1952) திரைப்படக் காலத்தில் இருந்துள்ளது.பைஜு பாவ்ராவில் பக்திப் பாடல்கள் நிறைய எழுதப்படவேண்டியதால் இயக்குநர் விஜய் பட் கவிஞர் கவி ப்ரதீப்பைப் பரிந்துரைத்துள்ளார். ஒருமுறை ஷகீலின் பாடல்களைப் பார்த்துவிடும்படி இசையமைப்பாளர் நௌஷாத் விஜய் பட்டிடம் விண்ணப்பம் வைக்க, ஷகீலின் பாடலைப் பார்த்த விஜய் அவருக்கு பைஜு பாவ்ராவில் பக்திப்பாடல்களை எழுத வாய்ப்பு அளிக்கிறார்.

கந்திகோட்டா – பேரமைதியின் பள்ளத்தாக்கு

ஏறும் போது
கனத்த தோற்றத்தில்
இறுக்கமாகவும்
அழுத்தமாகவும் இருக்கும் மலை
இறங்கும்போது
குழந்தையாகி விடுகிறது
அதையும்
தூக்கிக் கொண்டு போகச் சொல்லி அடம்பிடிக்கிறது

துயர் கூட்டும் நிலவு

இந்த இலையுதிர்காலம் எனக்கு மட்டுமானது இல்லை என்றாலும்கூட இன்றைய நிலவு ஆயிரக்கணக்கான துயரங்களை என் இதயத்துள் கிளறுகிறது. இந்த எளிய பாடல் சீனமொழிப் பாடல் ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது என்றொரு கருத்து நிலவுகிறது. இவரது 25 பாடல்களில் பல சீனக் கவிதைகளின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாக இருக்கின்றன. 

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

அடர்ந்த காட்டில்
எங்கோ ஒரு மூலையில்
அவன் தென்படுகிறான்
இப்பொழுது நகரத்தின்
ஒரு வீட்டிலிருக்கும்
அறையில் அவன் இருக்கிறான்

 ரஹ்பர் ஜவ்ன்பூரி

This entry is part 9 of 12 in the series கவிதை காண்பது

ரஹ்பர் ஜவ்ன்பூரியின் ‘என் நாடு’ (மேரா வதன்) என்னும் நாட்டுப்பற்றுப் பாடலில் மதநல்லிணக்கம்
முதன்மையாக ஒலிக்கும். ஜான்சி ராணி, ரஸியா சுல்தான், அவாதி, இராஜபுத்திரர், வங்காளம், பனாரஸ்
என இந்தியாவின் பெருமைகளைப் பாடும் பாடலில் மதநல்லிணக்கத்தை முன்னிறுத்திப் பாடியது சிறப்பு.
ஷேக் மின்ஹாஜ் அன்சாரி (எ) ரஹ்பர் ஜவ்ன்பூரி உத்தரப்பிரதேசத்திலுள்ள ஜவ்னபூரில் பிறந்தவர். ஆரம்பக்
கல்வியையும் பயிற்சியையும் அங்கு பெற்றார். புகழ்பெற்ற உருது ஆசிரியர் ஷஃபா குவாலியரின்
மாணவர்களுள் முக்கியமானவராக அவர் அறியப்பட்டார்.

மலைவளி வீழ்த்து தருக்கள்!

இவ்வாறு காற்றுக்கான சித்திர எழுத்தை வைத்து அது தொடர்பான மென்காற்று, வன்காற்று, புயல், சூறாவளி என வெவ்வேறு பெயரடைகளைப் பயன்படுத்திப் பல சொற்கள் உருவாக்கப்பட்டன. கசே(風) என்றால் பொதுவாகக் காற்று என்று அழைக்கப்படுவது. மலை மீதிருந்து தவழ்ந்து வரும் தென்றலை யமாகசே(山風-மலைக்காற்று) என்பார்கள். யமா(山) என்றால் மலை. தவழாமல் வேகமாக வீசும் காற்றை அராஷி(嵐) என்பார்கள். மலையையும் காற்றையும் அடுத்தடுத்து இரு எழுத்துக்களாக எழுதாமல் ஒரே எழுத்தாக மேல்பாதியாகவும் கீழ்ப்பாதியாகவும் எழுதினால் அது சூறாவளிக்காற்று எனப்படும்.

பலகை முழுக்க நினைவுகள்

பண்டிகை முடிந்தபின்
கடலோ குளமோ போகமாட்டார்
எங்கள் பிள்ளையார்..
பரணில் சரணடைவார்..
ஏதோவொரு பொங்கலில்
மொத்தமாக மாமரத்தடியில்
மண்ணில் கரைவார்
மழை வந்ததும்..

காடு

நனைந்தபோது தான்,
நனைந்ததையே மழை
திருப்பித் திருப்பி நனைப்பதில்
நனைந்தது நனையவில்லையாய்
நனையாதாகிறதென்று
காட்டுக்குப் புரிந்தது
எனக்குப் புரிந்தது.

வலி மொஹம்மத் வலி

This entry is part 8 of 12 in the series கவிதை காண்பது

வலி தக்கனி குறித்து எழுத்தாளர் இரா. முருகன் ‘கஜல்’ புத்தகத்தின் முன்னுரையில், //கஜலில் மகாகவியாக விளங்கிய மீர்ஸா காலிப்கூட்த் தன் முக்கியமான இருபது வருடங்களில் உருதுவில் எழுதுவதைத் தவிர்த்து, பாரசீக மொழியிலேயே படைப்பதில் ஈடுபட்டிருந்தார் என்றும், வட இந்தியாவில் உருது கஜல் செழிக்க தென்னிந்தியக் கவிஞர் வலி தக்கனியின் முயற்சிகளும் காரணம் என்று அறியும்போது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்படுகின்றன// எனக் குறிப்பிடுகின்றார்.

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

அன்றிரவு அச்சிறுவயதில் 
வானத்திலே மகிழ்ச்சியுடன் 
குதிரை வண்டியிலே 
பயணம் செய்தேன்  
எனக்கு இருக்கும் 
பாதுகாப்பு அதற்கில்லாமல் 
குதிரை வண்டி 
பெரியதாக இருந்தது 
எல்லோரும் மாடியின் 
உச்சிக்குப் போவதுபோல் 

அழகர்சாமி கவிதைகள்

காலி செய்து சாமான்களை
வாகனத்தில் ஏற்றினேன்.
தமக்குள் அனுசரித்து
உட்கார்ந்து கொண்டன
சாமான்கள்.
விடுவதாயில்லை
’வசித்த வீடு’.
கூட்டிப் போகச் சொல்லும்.
சித்தத்திருத்தி
சூதானமாய்க் கூட்டிப் போனேன்

இன்ஷா அல்லாஹ் கான் இன்ஷா

This entry is part 7 of 12 in the series கவிதை காண்பது

இன்ஷா அல்லாஹ் கான் (1752 – 1817) வங்காளத்தின் நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் ஆட்சிக்காலத்தில் பிறந்தவர். இரண்டாம் ஷா ஆலம் காலத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவிய காலகட்டத்தில் டில்லிக்கு இன்ஷாவின் குடும்பம் குடிபெயர்ந்த்து.முதலில் ராணுவத்தில் பணிபுரிந்து, பின்னர் தன்னுடைய மொழித் திறனாலும், கவிதை எழுதும் ஆற்றலாலும், யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி நகைச்சுவையாக்க் கவிதையில் சொல்லும் திறனாலும் அரசவையில் இடம் பெற்றார்.

ஓநாய் பிரியாணி – குறுங்காவியம்

இறந்த பின்னும் நடமாடிக்கொண்டிருக்கும் ஓநாய் மனிதர்கள்
ஆயிரத்தாண்டுகளாக ஆண்டுகொண்டிருக்கிறார்கள்
வாழும் பிணங்களான
ஆட்டு மனிதர்களின் உலகத்தை
கடவுளின் அங்கீகாரமும் சர்வாதிகாரமும் பெற்ற
உலக ரட்சகன் நான் (மட்டுமே)
என்பதை வெவ்வேறு விதமாகச் சொல்கிற
ஒவ்வொரு ஓநாய் மனிதனுக்கும் பின்னால்
அவனை நம்பும் ஆட்டு மனித மந்தைகள்

அகர்ஷனா கவிதைகள்

பாதம் அழுத்தாமல் அடியெடுத்து
பாம்பு வால் ஆட்டி
நிமிர்ந்த காதுகளை கூர் சீவி
கெண்டைக் காலில் வந்துரசுகிறது
செங்காவி வண்ணம் என்னுள்
பாய்ச்ச முயற்சிக்கும் முனைப்பில்.