ஜூலை பாடல்கள்

இமைகளைக்
காவல் வைத்தேன்.
ஆனாலும்
என் விழிகளுக்கு தெரியாத
என் விழிகள்
எனக்குத் தெரியாது
என்னைக் கண்காணிப்பது

உங்க வீட்ல தங்க விளைய..

போதும், கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா,   அழுகை. மேல படிக்கணும்னு. எட்டாவது  முடிச்சோன்னயே, படிப்பை நிறுத்திட்டு   கல்யாணம் பண்ணிடலாம் சொன்னேன். வேணாம்னு சொல்லிடாக. இப்ப பாருங்க. மாப்பிள தேடினா கிடைக்க மாட்டேங்குது. மளிகை கடை வச்சிருக்க நம்ம சொந்தகார பையனை முடிச்சிடலாம்னு பாத்தா, படிச்ச புள்ள மளிகை கடையில உக்காராதுனு என்கிட்டயே சொல்றான்.”

காதல்

அப்படி இல்லை. திமிர்த்தனம் மீதான என் பார்வை வேறு. அறிவு இருக்கும் இடத்தில் செருக்கு இருக்கும். ஆனால், இந்த செருக்கு தான் ஒரு கடிவாளம் போல செயல்படும். உன் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. நீ இத்தனை காலமும் கைபடாத ரோஜாவாக இருக்கிறாயெனில் அதற்குக் காரணம் அந்தக் கடிவாளம் தான். எனக்கு விர்ஜின் பயல்களைப் பிடிக்கும். தவிரவும், உன் போன்ற அதிபுத்திசாலிகளைக் கண்டால் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் அளவிற்குப் பிடிக்கும். விளைவுகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. தவிரவும், இன்னும் முப்பது வருடம் நாம் ஒன்றாக பயணிக்க இருக்கிறோம். உனக்கும் என்னை விட்டால் வேறு மார்க்கமில்லை. பேசாமல் காதலிக்கலாமே?” என்றாள் காமினி தொடர்ந்து