சத்தியத்தின் தாமரை பூத்துவருவதை திஸ்ஸ கண்டாரா?

உண்மையைக் கொண்டுபோய் அடகுவைத்து
உரிமையை இரும்புச் சங்கிலி கொண்டு
சிறையிலிட்ட அந் நாளில்
திஸ்ஸ கண்டாரா
அதிகாரத்தால் உன்மத்தம் பிடித்தவோர் அரசனை

கதைசொல்ல வரும் குழந்தை

நீ இப்போது கதை கேட்பவன்
உன் சேமிப்பிலிருக்கும்
ஆச்சரியங்களையும்
வைப்புக்கணக்கில்
இருக்கும்
புன்னகைகளை
கொஞ்சம் கொஞ்சமாக
செலவழிக்கத் துவங்கு

உத்தண்டி

உத்தண்டிக்கு ஆருயிர் நண்பர்கள்
நால்வர் பேருந்தில் சென்றிருந்தோம்,
ஒரு முன்காலைப் பொழுதில்.
பேருந்து நடத்துனரிடம்
கடைசி வண்டியை எடுக்குமுன்னர்
குரல் கொடுக்கச் சொல்லிவிட்டு,
கடற்கரை மேட்டில் ஒரு பனைமரம் கீழே
அமர்ந்தோம் அளவளாவ.

வீட்டுக்கு வடக்காய் பனிக்குவியல்கள்

இரவெல்லாம் கடல் எழுந்து விழுகிறது, நிலவு
இணைவற்ற சுவர்க்கங்களின் ஊடாய் தனியாக செல்லும்.
ஷூவின் பெருவிரல் பகுதி தூசில்
மையங்கொண்டு சுழலும் …

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை

விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு
ஒன்பது மணிக்கு குழு வகுப்பு
இரவில் விடைதிருத்தும் வேலை
சிவப்புப் பேனையிலிருந்து வழிவது
மனைவியின் முறைப்பு

இறந்த குழந்தைகள்

நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
ஆனால் நீ பனிக்கட்டி பூக்களை விட அதிகம் ஜொலிக்கிறாய்
எனக்கு நாய்களின் குரைப்பு உன் அமைதியை விட
ஒன்றும் சத்தமாயில்லை.

பேரன்பின் தேவதை வருகை

யாவர்க்கும் மகிழ்வைத் தரும்
மந்திரங்களை உதிர்த்தது
பின்னர்
தவறவிட்ட விலைமதிக்கமுடியாதவொன்றை
தேடிச் செல்வது போல
மிகத் துரிதமாகத் தன் நிலம் நாடி
தொன்ம பயிர்நிலங்கள் தாண்டி
மீண்டும் பறந்தது

பனிச்சறுக்குப் பயணம்

எல்லா ஆரம்பங்களும் ஒன்றுதாம். அனைத்தும் மறக்கப்படுகின்றன.
நீங்கள் செய்துள்ளது மறத்தல். அதை மீட்க முடியாது.
இப்போது அல்லது எப்போதுமாய். உள்ளுக்குள் நீங்கள்
போட்டுள்ள வார்ப்பு அது.

யூரோப்பியக் கவிதைகள்

சுவர்க்கத்தில் இருந்து கீழ்வரும் முதல் கை அவள் கை
அவள் உனக்கு மேல் வட்டமிடுகிறாள். அது வரப்போகும் வாழ்வின்
முன்னுணர்வு, தரை இறங்க தயாராகும் ஒரு பறவை.

பின்தொடருதல் – 1

இரவுடை தரித்த குண்டு பெண்ணொருத்தி
குப்பையைக் கொட்ட தெருவிற்குள் இறங்கினாள்
வலது காது, முதுகு கால்கள் வால் என கருமை
அடர்ந்த வெள்ளைக் கொழுகொழு நாயொன்று
பின்னாலேயே குடுகுடுவென நிற்காமல் ஓடி வந்தது

கிரகர் சோம்சா எனும் கரப்பான்பூச்சி

கவை நிறைய அம்பிருந்தும்
ஏதொன்றையும் பிரயோகிக்க மனம் கூசும் வேடனொருவன்
அம்பினும் கூரிய பசி பாய்ந்து உழன்ற போது…

‘ஒளி வரும் வரை’ – கவிதைகள்

….கோயில் தூண்களில் சேரும் உடல்கள்
காலத்தின் வாசனை கோயிலுக்குள் மணக்கிறது
கற்பூரம்போல…..