சூரியக்கிண்ணம்

கைகளில் வளைந்தோடும்
என் விதியின் விரிசலில் –
சூரியக்கதிரின் கசிவு…!
அவ்வகையில் என் வீதியெல்லாம்
பிரகாசித்துக் கிடக்க,
தினமொருமுறை என்னை நானே
என் இருளுக்கு இரையாக்கி
இறந்திருக்கிறேன்…!!