செந்தி கவிதைகள்

ஓர் அதிகாலையில் ஆறுகண் பாலத்தில்
அவ்வழி வந்த உலகாணி பால்க்காரன்
முன்பு நிர்வாணமாக நின்று இரண்டு
கைகளால் வழி மறிக்க
மூன்று வாரங்கள் காய்ச்சலில் படுத்து
எழுந்திருக்காரன் என்பதை அறிந்ததால்
இம்முறையும் அவளிடம் பேசாது வந்துவிட்டேன்.

செயற்கை நுண்ணறிவு : இயற்றறிவு கவிதைகள்

நீ சொன்னாய்: “உன் தாய்நாட்டைப் பற்றிச் சொல்”
நான் என் நாக்கை கடித்தேன்.
எப்படி விவரிப்பது தீயில் மூழ்கும் வீட்டை?
எப்படி விவரிப்பது கடலில் மிதக்கும் பெயர்களை?
எனது தாத்தா கவிதை போல வாழ்ந்தார்,
வார்த்தைகள் அவரது உடலில் வடுக்களாக.
இங்கே, வெளிச்சத்தில், நான் நிழல் மட்டுமே,
அவரது கதையின் ஒரு துண்டு.
இந்தப் பழைய புகைப்படத்தில், அம்மா சிரிக்கிறாள்,
அவளது கண்களில் இன்னும் கனவுகள் இருக்கின்றன.
அப்போது அவள் தெரியவில்லை

காலம் பற்றிய ஐந்து கவிதைகள்

ஆதியும் இறுதியுமான ஒற்றைவினா  மறைந்த மாத்திரத்தில், கேளிக்கைகள் பொருளற்றதாகும். யார் கண்டது, பசியும் ஓய்வும் உறக்கமும்கூட இல்லாமல் போகலாம். இருளும் ஒளியும் இரண்டற்று ஆகலாம். ஆந்தைகளும் மின்மினிகளும் பகலை ஆள, பகல்பொழுதின் உயிரிகள் இரவுக்கு இடம் பெயரலாம். 

ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

சிகையடர்ந்த நெஞ்சில்
மார்புக் கதுப்புகள் அழுந்த முகம் புதைத்து
அரை உறக்கம் கொள்ளும் என் தங்கமே
நின் பின்னழகில் விரல்கொண்டு எழுதுகிறேன்
இனி இந் நதியின் கரையெலாம்
நின் பொன்னொளியால் சுடரட்டும்

சேரன் கவிதைகள்

என் கையெழுத்தில் எஞ்சியிருந்த கவிதைகள்,
முத்தம் பதிந்திருந்த சில நூல்கள்
சில கடிதங்கள்
சில மாவிலைகள்
அம்மாவின் படம்,
எப்போதோ கைக்கெட்டிய ஒரு சயனைட் குப்பி
காய்ந்து போன மூன்று

மின்மினிப் பூச்சிகள் வெறுமனே பறந்து செல்கின்றன

வெள்ளைத் தங்கம்
சாயங்காலத்தின் மேல் விழும் மழைத் தூறல்
புத்தாண்டுக் கொண்டாட்டம்

வேனிற்காலம்

அருகிலிருக்கும் போதுதான்
நாம்
அநேகரை
பார்க்க இயலாமல் போகிறது
கை விட்டவர்களையெல்லாம்
காலத்துக்கும் நினைத்துக் கொண்டு
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறோம்
இந்த வேனிற் காலத்தில்

அடர்க்கருமை இருள் போர்த்தியபடி

ராத்திரி விளக்கின் ஊதா நிறம் குடித்து
அது அந்த அறையெங்கும்
மின்மினியாய் மினுக்கி அலைந்தது
அவனோ அந்தக் கொடும் இருட்டைப் போர்த்தியபடியே
பஞ்சு பறக்கும் படுக்கையில்
நாளான எண்ணெய்ச் சிடுக்கின் நாற்றம் பழக்கியவனாய்
அவன் உயிரை வளர்த்தியபடி
அறைக்குள் கிடந்தான்

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

பறவைகள் பறந்துவிட்டன
மீன்கள் ஆழங்களுக்கு
அந்த ஒருத்தியை காணவில்லை

அவள் நின்ற இடத்தில்
இப்போது வெயில்

கு.அழகர்சாமி கவிதைகள்

அவசரப்படுத்தும் இரவுக்கு
அந்தி வழி விட-
பறவைகள் வீடு திரும்ப
அதைக் கண்டு நான்
வீடு திரும்ப-
எதற்கோ ஓர் இரட்டைவால் குருவி
என்னைக் கூப்பிடுவதாய்த்
திரும்பிப் பார்க்க
திரும்பிய கணத்தில்
மின்னலடித்து
உள்ளுணர்ந்தேன்

இலட்சுமணப் பிரகாசம் கவிதைகள்

என் மனம் முழுவதையும்
கரிச்சான் ஆக்கிரமித்திருந்தது
மரத்தில் எங்கோ
அப்போது ஒரு பறவை இட்ட முட்டையின்
கதகதப்பின் நெடி காந்தலாக வீசிற்று.

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

அதன் கோரைப் பற்களும் கண்களும்
அதன் காதுகளும் கொம்புகளும்
அதன் பிடரியும் கால்களும்
அதன் வாலும் வயிறும் மழையால் செய்யப்பட்டவை
மழை ஒரு திரை போல
யாரும் தான் இல்லையே
இனி நான் அழலாம்

சைத்ரீகன் கவிதைகள்

சிறு இலை தான் விழுந்தது
அசைவின் அத்தனையுமாக நீரானது
விண்மீன்கள் ஒன்றையொன்று மோதிக்கொள்ள
நிலவு வேறு சற்று நின்றிருந்தது

வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லா

திரு வினோத்குமார் சுக்லா ராஜ் நந்த் காவ் (சத்தீஸ்கர்) இன்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து 1981 இல் இவரது இரண்டாம் கவிதை தொகுப்பு வெளியானது. வேளாண்மையில் முதுகலை பட்டம் பெற்ற இவர் ராய்ப்பூர் வேளாண்மைக் கல்லூரியில் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். இவருடைய கவிதை தொகுப்புகள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

வினோத்குமார் சுக்லா கவிதைகள்

ஞானபீட விருதைப் பெறவிருக்கும், வினோத்குமார் சுக்லா 2024_ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதினை தனது 88_ஆவது வயதில் பெறவிருக்கிறார் இந்தி எழுத்தாளரும், கவிஞரும், நாவலாசிரியருமான வினோத்குமார் சுக்லா (1 ஜனவரி 1937). யதார்த்தத்தில் இருந்து மாயத்தை வெளிக் கொண்டு வரும் நவீன பாணி எழுத்துக்காகப் “வினோத்குமார் சுக்லா கவிதைகள்”

கு.அழகர்சாமி கவிதைகள்

சாய்த்துத் தான்
வைக்கப்பட்டிருந்தது அது.
ஆனால் வேறெதுவும்
சாய்த்து வைக்கப்பட்டிருப்பது
போலில்லை அது.
சுட்டு விடுவது போல்
ஓர விழியில் என்னைப் பார்க்கிறது.

சைக்கிள் கவிதைகள்

இப்பொழுதோ
நேராக நிற்கும்
முப்பத்து சொச்சம் சைக்கிள்களையும்
துல்லியமாக
அதே நான்கு மணி கோணத்துக்கு
திருப்பிக்கொண்டிருக்கிறேன்.

ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகள்

அன்னையே
மீண்டும் உன்னிடம் கையேந்தி நிற்கிறேன்
ஓவியமாய் விரிந்துள்ள இரவும் பகலும்தான்
எத்தனை எத்தனை அழகு
கபாலத்தில் படிந்த தடித்த கசடுகள்
அகமெல்லாம் நிரம்பிவிட்டுள்ளது
சுடரேற்றும் வளைக்கரங்கள்
விரித்தெடுக்கிறது கடலெங்கும் பெருவானமொன்றை
ஏனோ கட்டங்கள் சதுரங்கள் வரைவதில்
என் இசையின் காலங்கள் கழிகிறது.

பார்த்து போ

எப்பொழுதும் போல
இப்பொழுது
போயிட்டு வரேனென்று
சொல்லுவதற்கு வாயெடுத்து
வார்த்தைகள்
வாய்க்குள் சிக்கிக்கொண்டது

இடமும் வலமும்

எருக்கும் நெருஞ்சியும்
பூத்த நிலத்தை
பூந்தோட்டமென்று
ஒருவன் சொன்னால்
அவனிடம் வாதிடுவதைப்போல்
அறிவீனம் வேறொன்றுமில்லை.

8. கிருஷ்ணா

அவள் அவரிடம் “நீர் இலக்கியம், இலக்கணம் அனைத்திலும் மிகத் தேர்ச்சி பெற்றவர். ஆனால் என்னிடம் வைத்துள்ள பிரேமையில் ஆயிரத்திலொரு பங்கு அந்தக் கிருஷ்ணனிடம் வைத்தால் கூடப் போதுமே! உம் வாழ்க்கையின் பொருளை உணர்ந்து பலனை அடைய,’ என்கிறாள்

அகவிதழ்

பக்கத்து
தண்டவாளத்தின் மீது
தலை சாய்த்தும்
தலை வைத்தும்
சிவப்பு மலர் சூடிய
சிறிய செடி
தனது சிவப்பால்
ரயிலை நிறுத்தும்
முயற்சியை தொடர

நட்சத்திரங்களுக்கு பரிசு

காட்டி கொடுத்தல்
துரோகம் வஞ்சகம்
பைத்தியக்காரத்தனம்
பொய் மொத்தம் வியாபாரம்
அவதூறு பரப்ப அஞ்சாமை
எல்லாவற்றையும் முதலீடாக்கினான்
அந்த முதலீடு
அவனை பிரபலமாக்கி விட்டது

சோர்வு & இரவின் இருள்

தேன்மதுரத் தேநீரின் மணம்
என்னை தூக்கிக் கொண்டு
நடந்தது
கண் மூடி சுவைத்த போது
நாவினுள் பட்டு எல்லையிலா
பிரபஞ்ச வெளியில் நின்றிருந்தேன்

முனுசாமி தாத்தா

முனுசாமி பாட்டன்
பீடிய விட்டொழிஞ்சு
வெகு நாட்களாயிடுச்சு
நினைச்சத சாதிச்சிட்டோம்ன்னும்
ராவெல்லாம் இருமல்
சத்தம் இல்லேன்னும்
நிம்மதியா தூங்குறா
பொய்சொல்லி சாமியாடிய
கங்கம்மாப் பாட்டி

சன்ன வருடல்

வெளியூரில் இருக்கும்
பிள்ளைகள்
விடுமுறைக்கு வீட்டிற்கு
வந்து பார்க்கும்பொழுது
கெஞ்சும் பாவனையில்
முகம் இருக்க வேண்டும்.

போதி மரம் முறைக்கிறது

காதின் ஓட்டை வளர்த்தவனே
மோதும் ஆசை வெறுத்தவனே
நாறும் நறுமலர் ஓவியத்தை
சாரும் உன்னுயிர்க் காவியத்தை
நாற்றச் சகதியில் விடுவதற்கா?
நங்கை அவளைத் துறந்து சென்றாய்
இராகுலன் முகத்தையும் மறந்து சென்றாய்
இரவின் நடுவில் பிரிந்தவனே
எழுப்பி அவளிடம் சொன்னதுண்டா?
எழுகென என்னுடன் என்றதுண்டா?

புரத்தல்

தொழுவத்தின் கூரையில்
முட்டையிட்டு அடைகாத்த
கோழியின்
பக் பக் ஒலி
இரவைக் கூட்டிக்கழித்து
எல்லாம் சரியாக
இருப்பதாய்ச் சொன்னது

காண்பதில்லா குழந்தைகளின் உலகில் காட்சியாகி

குனிந்தவுடன்
தன் தோளின் மீது
கழுத்தைக் கட்டிக் கொண்ட
குழந்தையைத் தூக்கி
குழந்தையைத் தூக்காமல்
இலேசாய் நடப்பதை விட
இலேசாய் நடப்பதாய்
நடந்து செல்கிறான்
நெகிழ்ச்சியில்
தந்தை!

உள்ளம் தாங்கா வெள்ளம்

This entry is part 19 of 19 in the series கவிதாயினி

உவமைகள் அந்த தீவிரத்தை உணர்த்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மலர்களும் பருவகாலங்களும் மனதை உணர்த்த கையாளப்படுகின்றன.இந்தப்பாடல்களில் ஒருசில பாடல்களைத் தவிர பெரும்பான்மை பாடல்கள் தலைவி தோழி கூற்றாக வருபவை. இல்லத்திற்குள் இருந்து பாடும் பாடல்கள். சங்கப்பாடல்கள் நிகழ்த்து கலைக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்ற கருத்தும் உண்டு. எப்படியெனினும் வாழ்வின் சாரத்தை கைக்கொண்ட பாடல்கள்.

5. இரவுநேர யாத்திரிகன்

இறப்பைத் தன் காதலியாகக் கண்டு, அவளுடனான சந்திப்பிற்குத் தயாராவதனை வியக்கத்தக்க நுட்பங்களுடன் எழுத்தில் வடித்துள்ளார். இரவு என அவர் கூறுவது வாழ்க்கையின் இறுதியில் நாம் செல்லும் இடம். அதனை எவ்வாறு தைரியமாக எதிர்கொள்வது என அழகாக உண்மையான விளக்கங்களை அளிப்பது இக்கவிதை.

இருத்தலும் ஆணையும்

அழல்
மோகம்
காமம்
இன்னும்
இன்னும்
கீழ்மைகள்
இருக்கும்
திசைக்கூட திரும்பப்போவதில்லை

குளக்கரையில்- சில குறிப்புகள்

குளத்தில் மிதக்கிறது
முன்பு எப்போதோ
கடைசியாய்ப் பார்த்து
மலங்கலாய் நினைவுபடுத்திக் கொள்கிற
ஒரு பால்ய சிநேகிதியின்
முகம் போல்
முழுநிலவு.

3. சரணடைதல்

எது மனிதனை அசக்தனாக்கி, எதுவோ ஒன்றில் சரணடைய வைக்கிறது? இயலாமையா? நம்பிக்கையா? இல்லை வேறு ஏதோவா? ஒன்று மட்டும் நன்கு விளங்குகிறது. நன்மையிலும் தீமையிலும் நாம் நக்குத் துணையாக வேறு ஒன்றில் இணைந்திருக்க விரும்புகிறோம்; அது நம்மை மீறிய ஒரு சக்தியாக இருக்க வேண்டும்; நம்மை அரவணைக்க வேண்டும்; நமக்குத் துணையாக, பலமாக இருக்க வேண்டும்.

கோசின்ரா கவிதைகள்

ஒரு சந்திப்பில்
நான் தற்கொலை பற்றி பேசினேன்
நீ காதலைப்பற்றி பேசினாய்
காதல் தூரத்தில் தெரியும்
மலைக்குன்று என்றாய்
இருவரும் ஏறி உச்சியில் நிற்கின்றோம்

ரவி அல்லது கவிதைகள்

தோராயமாக சொல்லிவிடும்
கற்பிதங்கள்
யாவிலும்
உண்மை இருக்க வேண்டிய
அவசியமில்லை.
வசீகரித்துவிட்டாலே போதும்
இந்த
அடிமை மனம்
புரிதலை
மழுங்க வைத்து
தோரணங்களையே
எப்பொழுதும்
தொங்கிக் கிடக்கும்.

இரு முனைக் கத்தி  – அருண் கோலட்கர்

இருள்-ஒளி, அறியாமை-பகுத்தறிவு இருமையை அருணின் எளிய நடை வெளிக் கொண்டுவருகிறது. மேலோட்டத்தில் நாத்திகம் போல அமைந்திருப்பினும் உள்நோக்கத்தில் அருணின் சமுதாய அர்த்தத்  தேடலைப் பிரதிபலிக்கிறது. அறிவு எனும் ஒளியை கையில் கொடுத்தும் அறியாமையில் துயிலும் பூசாரியை உதாசீனப்படுத்தும் விதம் கடைசி இரு வரிகள் அமைகின்றன.

அன்பு

அன்பின் ஊற்றைப்போலவே
அவ்வளவு இயல்பாய்
பெருக்கின் சுழிவுகள்கூட
அச்சசலாய்
இருந்தது
அன்பின்மையின் ஊற்று

கவிதைக்குள் அலையும் மனசு ….

உழைத்துக் கொடுத்து
அறிவு புகட்டி
உதிரம் கடத்தி
உணர்வுகளால் தன்னை
உறுவாக்கி பசியால்
வயிறு சுருங்கி
இறந்து போன அப்பா
மீண்டும் வாசலில் வந்து அமர்கிறார்

சூர்யமித்திரன் கவிதை

மணித்துளிகளில்
காட்சி மாறி
பனிப்போர்வைக்குள்
பதுங்கும்
கனவுத்தொடர்ச்சி

துயர்சூழ் உலகில் தனிமை

சில நேரங்களில் மனிதர்களை நேசிக்கிறேன். சிலநேரங்களில் வெறுக்கிறேன். என் ஆசைகள் நிறைவேறுவது என் கையில் இல்லை என்று தெரிந்தாலும் அவை பகல் கனவாகப் போவது என்னை வருத்துகிறது.

நீ இவ்வாறு இருப்பதனால் / ஏனெனில் நீவிர்

நம்மில் உயிர்க்கும் இறைமையை நாமே நமது உடலைவிட்டுத் தள்ளிநின்று பார்ப்பது போன்ற உணர்வு. உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும் பொருள் செறிந்த சொல்நயம்!

குறுங்கவிதைகள்- கு. அழகர்சாமி

அடுத்தடுத்த
இரு கணங்களுக்கிடையேயுள்ள
இடைவெளியில்
எப்படியாவது நுழைந்து
நிலைபெற்று விடப் பார்க்கிறேனே
என் சாசுவதத்திற்கு
நான் !

மழைக்காலக் கவிதைகள்

மழைக் காலத்தின் குறிப்பாக
எதைச் சொல்வாய்
தாத்தாவின் தோளில்
வீடெல்லாம் வெள்ளம் நுழைய
தர்ம சத்திரம் நோக்கி ஓடிக் கொண்டிருந்தோம்

எரிதழல் உள்ளம்

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30ம் தேதியும் டிசம்பர் 31ம் தேதியும் மிசோகி எனப்படும் குளியலை ஜப்பானியர்கள் மேற்கொள்வார்கள். ஆற்றில் மூழ்கிக் குளிப்பதாகவோ அல்லது சிறிதளவு நீரைத் தலையில் தெளித்துக் கொள்வதாகவோ அமையும் இது உடலை மட்டுமின்றிக் கடந்த ஆறு மாதங்களாக மனதில் சேர்ந்த அழுக்கையும் தூய்மைப் படுத்துவதாக நம்புகிறார்கள். 

கோடையை கொண்டாடும் மனம்

பருவத்தின் அனைத்து நெடிகளையும் வரவேற்கும்.
ஆண்டின் இந்த தருணத்தில்
நாளின் ஒரே நல்ல நேரமாம் அந்தியில்
நாய்களை நடத்தி செல்லும்
அண்டை வீட்டாரின் அரவமும்
வீட்டில் நுழையும்.
அந்தக் காலம்
எவ்வளவு ஒழுங்கமைதியாய் இருந்தது?

வேனில் – கானல்

புகையென
கசிந்து
வெளியேரும்
பறவைகள் ஒவ்வொன்றின் பின்னும்
கீச்சென அலறி
பின்தொடர்கிறது
புதரின் கனல்

மழைக்காலம்

நெடுஞ்சாலை வாகனங்கள் மோதி
உயிர் விடும்
வழிதவறிய
பட்டாம்பூச்சிகளின்
மரணங்களில்
ஒரு மிடறு அருந்தி
உயிர்க்கிறது
நெருப்பு சிகரெட்டின்
நுனியை தொடும் கணம் போல
யாரும் பறிக்காத
அரளிச்செடியின் வேர்கள்