தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை

ஒவ்வொரு ஆண்டும் இவர் நடத்தும் விருது நிகழ்ச்சியைக் கண்டு களிக்க ஆயிரம் கண்களோடு பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இரு தெலுங்கு மாநிலங்களிலும் இந்த விருதுக்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது. டாக்டர் அமிர்தலதா, ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினத்தன்று மூன்று பெண்மணிகளுக்கு ‘அமிர்தலதா வாழ்நாள் சாதனையாளர் விருதும், பன்னிரண்டு பெண்மணிகளுக்கு ‘அபுரூப விருதும்’ பெருமையோடு வழங்குகிறார். பல்வேறு துறைகளில் தம் திறமையை வெளிப்படுத்தும் பெண்மணிகளைத் தேடி அடையாளம் கண்டு நேரில் சென்று அழைத்து கௌரவிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

டாங்கோ : ஓர் அறிமுகம்

நினைவு தெரியும் முன்பே தாயையும்,  தந்தையையும் இழந்த,  மாமாவால் வெறுமென வளர்க்கப்பட்டு,  ஆசிரம இல்லத்தில் தங்கி தன்னை தகவமைத்துக் கொண்ட  ஆனந்த் என்கிற ஒரு தனியனின் கதை மட்டுமல்ல. அவனின் மனசஞ்சலங்கள்,  ஆர்வங்கள்,  ஆர்வமின்மைகள்,  லாகிரி,  காதல்,  காமம் என அனைத்தையும் மிக அழகாக நேர்த்தியாக blend செய்து கவனமாக நெய்யப்பட்ட ஓர் அழகிய தூய்மையான கம்பளம் என்று சொல்லலாம்.

கறை

ஒரு கணம் அப்பாவின் ஞாபகம் அவனைத் தாக்கியது. பத்து அரிசி மூட்டைகளை அவன் நெஞ்சில் தூக்கி வைத்தது போல விஜயனின் நெஞ்சைச் சுமையாக அழுத்தியது.  தொலைப்பேசியில் கடைசியாகப் பேசிய சமயம், “தம்பி, யேங் இல்லேன்னா என்ன ஆகியிருப்போம்? ஒழுங்கா வேலை பாரு” என்று அப்பா சொன்னார். அப்பா இப்பொழுதெல்லாம் அழுவதில்லை, புலம்புவதில்லை என்பதைக் கவனித்தான்.

மொழிபெயர்ப்பு- சில ஒப்புமைகள்

சாகாது சாகும் வினை கெட்டுப் போகிட முழங்குக
பண்டை கட்சிசார் கலகங்கள் போகிட;
உத்தம வாழ்வு முறைகளும் இனிய நடத்தையும்
தூய சட்டங்களும் ஆகுக ஆகுகவென முழங்குக

பெல்லடோனா

நத்தைகள்,முயல்கள் மற்றும் பறவைகள் அட்ரோபாவின் கனிகள்  மற்றும் இலைகளை உண்கின்றன. எனினும் பறவைகளுக்கு மட்டும் அட்ரோபா நஞ்சினால் பாதிப்பு உண்டாவதில்லை.   அட்ரோபா பெல்லடோனாவின் இலைகள் கனிகளை உண்ட முயல் போன்ற சிறு விலங்குகளின் இறைச்சியை உண்பதாலும்  பெல்லடோனா ஆல்கலாய்டுகளின் பாதிப்பு உண்டாகிறது. அரிதாக பெல்லடோனா ஆல்கலாய்டுகள் போதை உண்டாக்கவும், தற்கொலைக்கும், கொலை செய்யவும் பயன்படுகின்றன. 

மயக்கமும் பித்தமும் கொண்டார்

வீரயுகப் பாடங்களின் தொகுதியான புறநானூற்றில், அதன் அடிப்படை தொனியை மீறிய சில கவிதைகள் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. மாற்பித்தி என்ற பெண் கவிஞர் பாடியதாகப் புறநானூற்றில் அடுத்தடுத்து வைக்கப் பட்டிருக்கும் இரண்டு கவிதைகளும் (251,252) வழக்கமான புறப்பாடல்களிலிருந்து தொனியால் வேறுபடுபவை. வாகைத் திணையில் தாபத வாகைத் துறையில் அடக்கப்பட்டுள்ளவை.

ஆராதனை- புத்தக அறிமுகம்

சரஸ்வதி பாயின் ஹரிகதா அனுபவங்கள், சமுதாயத்தில் நிலவிய/நிலவுகின்ற ஆண் பெண் இருவரின் திறமையைப் பற்றி அந்தந்த துறையைச் சேர்ந்தவர்களே, பெண்ணை தவறாக எடை போட்டு ஒதுக்கி இருக்கிறார்கள்/இன்றும் ஒதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள் எனபதைக் காட்டுகிறது. எல்லாவற்றையும் மீறி அவர் சாதித்துக் காட்டியதும், அவரது திறமையை அடையாளம் கண்டு கொண்ட பிரம்மஸ்ரீ திருவாதி கிருஷ்ணாசார் அவர்களும் நம் போற்றுதலுக்கு உரியவர்கள்.

குகே வா தியாங்கோ

தன்னுடைய எளிமையான கேள்விகளால் குகே உங்களை உடைத்து விடுவார். மிக மென்மையான வழிகளில் தூண்டி, ஆப்பிரிக்க இலக்கியம் மொழி, உண்மையின் நம்பகத்தன்மை குறித்த தன்னுடைய கூர்மையான கருத்துக்களுக்கு நம்முடைய தெளிவான பதிலை கொண்டு வர முயல்வார். அவரருகில் இருக்கையில் நம்மால் மந்தமாக இருக்க முடியாது. 

அகாலம்

யாருடைய நடுக்கமோ
யாருடைய பிறழ்வோ
யாருடைய பயமோ
யாருடைய வாழ்வோ
ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டிக்குள்
உறைந்து
போய் கிடக்கிறது
கடைசியாய் வந்தமர்ந்த
ஈயோடு

7. மூன்றே பொருளாய் முடிந்தது

சித்த மருத்துவம் என்று குறிப்பாகவோ, இல்லை காலத்தை தெளிவாக குறிக்கக்கூடிய அகழ்வாராய்ச்சி முடிவுகளோ, இலக்கிய குறிப்புகளோ கிடைப்பதில்லை. மாறாக, சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூர் விடுத்த காதையில், “ஆயுர்வேதரும் காலக்கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்” என்ற குறிப்பு காணப்படுகிறது. காவிரிபூம்பட்டினத்தில் காலத்தைக் கணிப்பவருக்கும், ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் தனித்தனி தெருக்கள் இருந்ததாக தெரியவருகிறது.

அந்தியின் ஆன்மா

ஒரு துளியும் மீதமின்றி
உறிஞ்சப்படும் நீலத்துக்காக
காத்திருக்கும் வௌவால்கள்
பெரிய மேகங்களுக்கு அடியில்
அரற்றி விரிக்கின்றன இறக்கைகளை

நீர் துளியில் நிகழும் புதுமைகள்

பைட்டோபிளாங்க்டன் (அல்லது பாசி பிளாங்க்டன்) என்ற ஒற்றை செல் உயிரினங்கள்தான் மிகவும் முக்கியமானவை. நிலத் தாவரங்களைப் போலவே, இவை கார்பன் டைஆக்சைடு எடுத்துக்கொண்டு, ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி கார்போஹைட்ரேட்டுகளை உருவாக்குவதுடன், ஆக்ஸிஜனையும் வெளியிடுகின்றன. கடலின் முதன்மை உற்பத்தியாளர்களான இவைகள், உணவுச் சங்கிலியின் அடித்தளத்தை உருவாக்கும் உயிரினங்கள் ஆகும்

வேதிப் போராயுதம்

துணி காயப்போடும் கயிறுகளின் முடிச்சிலும்
துரு பிடித்த அதன் வளையங்களிலும்
மெல்லிய சட்டையைக் கிழிக்கும்
கோரமான முனைகளாலான
இரும்பு கிளிப்களிலும்
இவற்றையெல்லாம்
ஆட்டுவித்து நகர்த்த
எண்ணிக்கொண்டே இருக்கும்

இன்க்ளூசிவ் – உள்ளடக்கிய நிலை

This entry is part 4 of 12 in the series சமூக உணர்ச்சி

ஆனால், அறிமுகம் செய்து பல கலாசார வேறுபாடுகளை உணர்ந்துகொண்டால் மட்டும் போதாது. மாறுபட்ட கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை அந்தக் குடும்பத்தில், சமூகத்தில், வகுப்பில் சேர்ந்தவர்களாக உணர்வதும் முக்கியம். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘பிலாங்கிங்’ என்கிறார்கள். இதன் பொருள் “நான் இங்கே சொந்தமானவன், என் தேவை இங்கே அவசியம், என் கருத்துகளுக்கு மதிப்பு இருக்கிறது” என்ற உணர்வு.

ஹர்ஷனின் சபதம்

இந்த துக்கமும், அதனுடன் எழுந்த என் ஆத்திரமும்  என்னை செயலற்றவனாக்கி விட்டன.  இந்த அதமன், சண்டாளன்,, துஷ்டன், பாபி, உலகில் நிந்திக்கப் படும் செயலைச் செய்தவன், உயிருடன் இருக்கும் வரையில், என் சோகம் தணிய வழியில்லை.  இவர்களை அடியோடு அழிக்கும் வரையில், என் உடன் பிறந்தானை ஏமாற்றி கொல்ல துணிந்தவனை அதே போல அழிக்கும் வரையில் என் கையால் விடும் ஜலாஞ்சலி- நீர்க் கடனை அவர் ஏற்பாரா? 

ஈர்ப்பு அலைகள் – பகுதி 10

This entry is part 10 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

எப்படி மின்காந்தத் தொலைநோக்கியில், Spectroscopy  ஒரு அருமையான நுட்பமாகியதோ, அதே போல, ஈர்ப்பு அலைகளின் அதிர்வெண், நீடிப்பு, polarization போன்ற அம்சங்கள் தூரத்துப் பொருட்களின் கையெழுத்துக்கள். அத்துடன், ஒரு கருந்துளையின் மோதல், மற்றும் நியூட்ரான் நட்சத்திரத்தின் சேர்க்கை போன்ற நிகழ்வுகள், அவற்றின் ring down waves என்று அழைக்கப்படும் கடைசி அலைகள் நமக்கு பல புதிய புரிதல்களை உருவாக்குகிறது.

இருக்கும் இடத்தில் விடுபடு

ஓரிடத்தில் இருந்து கொண்டோ அல்லது ஒரு செயலை செய்துகொண்டோ மற்றொன்றை நினைத்துக் கொண்டால் கவனம் பிசகும் என்பதைப் பெரியவர்கள் வலியுறுத்தி இருந்தாலும் இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் நிர்ப்பந்தமும் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. முடிவில், எதையும் நேர்த்தியாகச் செய்யாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாகி நிம்மதியின்றி மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்.