சுஜய் ரகு கவிதைகள்

வறண்ட ஓடைப் பாதையில்
கிடந்து தகிக்கும் ஒரு கூழாங்கல்லைச்
சீண்டுவதுபோல
நடுநிசி இரவைக் கிழித்தபடி
காற்றில் ஓங்கரித்தது
ரயிலோசை
இருள் வெளி அதிரவும்
துளி துளி வண்ணங்களாக
ஒளிர்ந்து உதிர்ந்தன
திரளாய் பற்பல சொற்கள்

சுஜய் ரகு கவிதைகள்

கதவைத் திறந்த போது
அரூபம் நின்று
புரட்டுவதைப்போல
திறந்தும் மூடியுமிருந்தது
மேசை மீதிருந்த
புத்தகத் தாள்கள்