மீண்டும்
எனக்குள் பயணம் செய்த போது
அங்கொரு நீதி மன்றம் இருந்தது
பூனையும் எலியும்
வாதி பிரதி வாதிகளாக
விவாதித்துக்கொண்டிருந்தன
ஒரு மலைப்பாம்பு
நீதிபதி
என் கவலையெல்லாம்
நீதிபதியிடமிருந்து
பூனையின் எலியின் நீதியை
எப்படி காப்பாற்றுவது என்பதுதான்.
Tag: கோசின்ரா
கோசின்ரா கவிதைகள்
பாம்பு
உரித்த சட்டை அங்கேயிருந்தது
எந்தப்பாம்பும்
அதை அணிய
எடுத்துக்கொண்டு போனதில்லை
ஒரு பாம்பின் சட்டையை
இன்னொரு பாம்பு அணிவதில்லை
நட்சத்திரங்களுக்கு பரிசு
காட்டி கொடுத்தல்
துரோகம் வஞ்சகம்
பைத்தியக்காரத்தனம்
பொய் மொத்தம் வியாபாரம்
அவதூறு பரப்ப அஞ்சாமை
எல்லாவற்றையும் முதலீடாக்கினான்
அந்த முதலீடு
அவனை பிரபலமாக்கி விட்டது
கோசின்ரா கவிதைகள்
ஒரு சந்திப்பில்
நான் தற்கொலை பற்றி பேசினேன்
நீ காதலைப்பற்றி பேசினாய்
காதல் தூரத்தில் தெரியும்
மலைக்குன்று என்றாய்
இருவரும் ஏறி உச்சியில் நிற்கின்றோம்
கோசின்ரா கவிதை
குடித்த பின்புதான்
அவருக்கு அதிகதிகமான தாகம் எடுக்கிறது
காதலியின் தந்தை கேட்கிறார்
தம்பி நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா
கடவுள் விழுங்கிய படி பதில் சொன்னார்
இல்லையென்றார்
