எறும்புகளின் தோள்கள் மேல்
எங்கோ நெரிசலின்றி சவாரிக்கும்
ஒரு பல்லி தவிர
ஆசிரியர்: கு.அழகர்சாமி
வெற்று யோசனைக்கெட்டா வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப் பூச்சி தன் கனவில்
என்னைத் தானெனக் கண்டு
மிதக்கிறதா?
கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை
ஹெரால்டு பிண்ட்டர் தனது நோபெல் உரையை இப்படித் தொடங்குகிறார்: ”எது நிஜம் எது நிஜமில்லை என்பவற்றுக்கு இடையில் உறுதியான வித்தியாசங்கள் இல்லை. அதேபோல் எது உண்மை எது பொய்மை என்பவற்றுக்கு இடையேயும் இல்லை. உண்மை, பொய்மை என்ற இரண்டில் ஒன்றாகத்தான், ஒன்று இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது உண்மை பொய்மை என்ற இரண்டாகவும் இருக்கலாம்.”
பிணி; தீ; விசுவாசம்- கவிதைகள்
நீரில்
நனைந்ததால்
தலை துவட்டும்
என்னைப் பார்த்து
நீரில்
நனையாதாயினும்
வெயிலில்
நனைந்ததாய்த்
தலை துவட்டும்
என்
நிழலின்
விசுவாசத்தில்
இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு
மற்ற படுக்கைகளில் மூச்சு விடும் அந்த மனிதர்கள்
அரிதாகவே புரிந்து கொள்ள முடியும்.
திரையினூடே இரா வானில்
நிலவு தேய்வதையும் வளர்வதையும் கவனித்தேன்.
ஒரு புனிதப் பணிக்கு நான் பிறப்பெடுத்தேன்:
மகத்தான மர்மங்களுக்கு
சாட்சியாய் இருக்க.
இப்போது நான்
பிறப்பு இறப்பு, இரண்டையும் கண்டிருக்கிறேன்.
இருண்ட இயல்புக்கு
இவை ஆதாரங்கள்
மர்மங்களல்ல என்றறிகிறேன்.
கூடு, அதிகாலை & (அ)சாத்தியம்
தானே ’புன்னகையாய்’
’புன்னகை’ அதற்கு அதுவே புன்னகைப்பதில்லையாய்ப்
புதிராய்ப் புன்னகைக்கிறார்
இது
போதும்—
ஆசையில் வறண்ட என்
அகங் குளிர
நிறைவாய்ப்
புன்னகைக்கிறார்
கேதார்நாத் சிங் கவிதைகள்
தரை மேல் என் காலை அப்போது தான் தூக்கியிருந்தேன்
குறுஞ்சிறு வார்த்தையொன்று
குருதியில் குளித்து
எங்குமில்லாததிலிருந்து
என்னை நோக்கி மூச்சிரைக்க
ஓடி வந்து உரைத்தது-
”வா, உன்னை நான் அழைத்துச் செல்கிறேன் வீட்டுக்கு ”
கவிதைகள்- கு.அழகர்சாமி
ஒன்று பலவாய், பல ஒன்றாய், உருவருவாய்
ஒன்றில்லா ஒன்றாய், ஓயா இயக்கமாய்
ஆணிப்பொன் அம்பலத்தாடு ஆனந்தக்கூத்தா!
மலையின் நினைவுகளில்
எதையும் தேடாதிருக்க, தவம்
தேடி வந்த காற் தடங்கள் புதைந்திருக்கின்றன
கற்பாறைகளுக்குள்.
அவர்கள் விட்டுப் போன மூச்சு
விட்டுப் போகாமல் கலந்து வீசும் மென்காற்றில்
பேரமைதியின் சுகந்தம் மணக்கிறது.
காட்டு முல்லைகளும் கசக்கிய எலுமிச்சைப் புற்களும் மணக்கின்றன.
கவிதைகள்
பாதங்களைத் தவிர வீட்டுடன் அதிகமாகப் பேச
வேறு யார் இருக்கிறார்கள்.
வெகுநாளைக்குப் பிறகு
தூசியைத் துடைக்க வருகிறவன்
கதவுகளைத் திறக்கும் போது
பாதங்களை மட்டுமே பார்க்கிறது வீடு.
மழையில் மறைந்து பெய்யும் மழை
வீடு
மூழ்கும்
வெள்ளத்தில் மூழ்கிய இருளில்.
தனிமை – கு.அழகர்சாமி கவிதை
வெயிலில்
தனிப் பனையின்
சொற்ப நிழல்.
அது
போதும்;
ஆடு சுகம் காணும்.
என்ன நடக்கிறது ஹெராக்ளிட்டஸ் நதியில்?
ஓடும் நதியோடு கூடப் போகாது கரையில் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு என்ன செய்கிறது இந்த மரம்?
எதை அறியக்
கடுந்தவம் நோற்கிறது?
தன்னை அறியவா?
தான் இருக்கும் விதம் ஓடும் நதியில் தேடித் தேடி இன்னும் தெளிவாகவில்லையா?
மூன்று கவிதைகள்
பாதை என
தனியாக ஒன்று
எங்குமில்லை..
என் ஒவ்வொரு காலடிக்கும்
முன்பு கைப்பிடி கருங்கற்களை
நானே நிரப்பியப்படி செல்கிறேன்
சிரியாவே தன் துயரத்தைச் சொல்லும் கவிதை
புதுச்சேரியில் பிப்ரவரி 2016-ல் நடைபெற்ற பன்னாட்டு ஆவணக் குறும்பட விழாவில் திரையிடப்பட்ட அலெப்போவை அலைக்கழிக்கும் கொலைப் போரையும் பேரழிவையும் பேசும் Young Syrian Lenses என்ற ஆவணப்படத்தைப் பார்த்த யாரும் அதிர்ந்து போகாமல் இல்லை. மக்கள் வாழும் பகுதிகளில் வீழும் குண்டுகளின் பொழிவு, தரைமட்டமாகும் கட்டிடங்கள், அழிவின் அச்சுறுத்தலிலும் மரணத்தோடு விளையாடுவது போல் விளையாடும் சிறார்கள், அமர்ந்து மரணத்தை ஒரு மிடக்கு அருந்துவது போல் தேநீர் அருந்தும் மனிதர்களரென்று அலெப்போவின் போர்த் துயரத்தைப் பதிவு செய்கிறது இந்த ஆவணப் படம்.
குழந்தைகளோடு ஒரு புகைப்படம், நீர்ம உருண்டை
ஒரு குழந்தை ஒரு திசையை நோக்கியிருக்கும்.
அதைச் சரி செய்வதற்குள் இன்னொரு குழந்தை இன்னொரு திசையை நோக்கிய படி இருக்கும்.
சிநேகிதம்
ஒன்றும் சொல்வதற்கில்லை ஊரில் நிலவரம்.
நிலவும்
சங்கடமான அமைதியைக் குலைக்க ஓர் அலறல் போதும்.
பிணம் தூக்கிப் போன பின்
நான்கு கவிதைகள்
பறவை மூழ்க
பரந்த வானம் மூழ்கும்.
வானம் மூழ்க
மூழ்காமல் முழுநிலா மட்டும் தத்தளிக்கும் ஒளிப் பந்தாய்
இருள் சூழ் உலகைக் காப்பாற்ற.
மெலிதான மர்மம் & மழை – சில குறிப்புகள்
இந்த அடை மழையிலும் துயிலும் அவன் கனவில்
மழை பெய்கிறதா?
எந்த மழை நிஜம் அவனுக்கு?
கவிதைகள்
அந்த வளையம் ,
அழுத்தமாகத் தாழிடத்
தோதாக -தன்னை
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காகவே
காற்றில் அசைந்து அசைந்து
முனகுகிறது.
கவிதைகள்
கூர் கொண்டு
காத்திருப்பவை
பாறை விளிம்புகளா?
புலியின் நகங்களா?