ஒரு
குட்டி நட்சத்திரம்
அப்படித்தான் என்கிறது
நிமிர்ந்து நிற்கிறதாய்
நினைக்கும்
மலைக்கு.
Tag: கு. அழகர்சாமி
வட்டமும் மையமும்
அந்தப் பறவை
வட்டமிட்டு
வட்டத்தை முடிப்பதற்குள்
வட்டமும் மையமும்
குவியும் ஒரு புள்ளியாய்
மோனத்தில்
மிக உயரத்தில்
சலனமின்றி
சிறகுகள் விரித்தபடி
பறக்கிறது
மொழி பெயர்ப்புக் கவிதைகள்- கு அழகர்சாமி
தொலைந்த உன் நினைவுகளை
கண்டுபிடித்த இரவு
அவற்றைக் கூட்டிச் சேர்க்கிறது உள்ளே-
வறண்ட குறுங்காட்டின் மீது
வசந்தம் கரவாய்க்
கீழிறங்கியது போல்,
பாட்ரிசியா கவாலி கவிதைகள்
இழக்கப்பட்டது திருப்பியளிக்கப்பட்டு விட்டது எனக்கு
தொலைவாயுள்ளது எனக்கருகில் உள்ளது இன்று.
இங்கிருக்கிறாயா நீ, எப்படி இருந்தாலும் நீ,
எனக்கு பொருட்டல்ல இன்று.
இன்று சப்தங்களின் பொங்கும் சுருள்களைத்
தணிவித்துக் கலந்திடும்
இனிமையான கவிகை மாடத்திற்குள்
பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.
டோமஸ் டிரான்ஸ்டிராமரின் ஹைக்கூ கவிதைகள்
கடையிலிருந்து வரும் சப்தமும்
கண்காணிப்புக் கோபுரத்தின் கனத்த காலடிகளும்
காட்டைக் குழப்புகின்றன
திலிப் சித்ரேயின் இரு கவிதைகள்
பாலையின் மீது பனிமூட்டம் போல்
மரங்களின் அமைதியில்லா ஆன்மாக்கள் தொங்குகின்றன.
மரங்களின்மையின் காட்டில்
பறவைகளின்மை கீச்சிடுகிறது.
டொமஸ் ட்ரான்ஸ்ட்ராமர்- கவிதைகள்
நம் ஓவியங்கள் காற்று வெளியையும், பனியுக
ஓவியக் கூடங்களின் செவ் விலங்குகளையும் நோக்கும்.
ஒவ்வொன்றும் சுற்றி கவனிக்க ஆரம்பிக்கும்.
நூற்றுக்கணக்கில் யாம் வெளியேகுகிறோம் வெயிலில்.
சக்தி சட்டோபாத்யாய் கவிதைகள்
தன் முப்பதாண்டு படைப்பு வாழ்க்கையில் இவர் எழுதிக் குவித்த கவிதைகள் ஏராளம். கணக்கு வழக்கில்லை. 45 தொகுப்புகள், சுமார் 2500 கவிதைகள் என்று ஒரு கணிப்பு.(poemhunter.com). 10000 கவிதைகளுக்கு குறையாமல் தேறும் என்று இன்னொரு கணிப்பு….இவரோடு 38 வருடங்களாகப் பழகிய சமீர் சென்குப்தா( Samir Sengupta) தன் நினைவோடையில், சக்தி சட்டோபாத்யாய் தான் எழுதியவை எவ்வளவு, என்னென்ன என்று கூட கவனிக்காதவரென்றும், இவரைப் போல் தன் படைப்புகளின் மேல் பற்றற்றவராக யாரும் இருக்க முடியாதென்றும் பதிவு செய்கிறார்.
பிணி; தீ; விசுவாசம்- கவிதைகள்
நீரில்
நனைந்ததால்
தலை துவட்டும்
என்னைப் பார்த்து
நீரில்
நனையாதாயினும்
வெயிலில்
நனைந்ததாய்த்
தலை துவட்டும்
என்
நிழலின்
விசுவாசத்தில்
