பறவை பார்த்தல்

ஆடி காற்று அவள் உவகைக்கு இதமாய்
தென்னையின் மூச்சினை அவள் மேல் இறக்குகிறது;
அச்சமயம் அவள் தென்னைகளையும், அதனொன்றில் இருக்கும் என்னையும் பார்ப்பதுண்டு; நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது..
அவள் என்னை பார்த்து கொண்டே இருப்பாள்
நான் யார் என்று தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியாது..

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

எனது நிலையற்ற
நியாயத்தின் உண்மை
நிரூபிக்கப்பட்ட போது
அப்பொழுதுக்கு அப்பொழுதென
சாத்தியத்தில் என் மனம்
வழியை விட
நான் காத்திருக்கும் போது
யாருக்கும் தெரியாமல்
என் மனம் கரைவதை
நான் பார்த்தேன்