இசைப் பயணம் – சங்கீத யாத்திரை

ஆதிசங்கர பகவத்பாதரின் மாத்ருகா பஞ்சகத்தை அவர் அழகுற விளக்கியபோது உள்ளம் நெகிழ்ந்துபோயிற்று! சகோதரிகள் பாடியதும் மிகமிக அருமை! திரௌபதி – கிருஷ்ணன் இவர்களுக்கிடையேயான நட்பு பற்றிய விளக்கங்களும் வெகு அருமை! ‘பாரோ கிருஷ்ணைய்ய’ எனும் அருமையான கனகதாசரின் பாடல் நட்பின் வெவ்வேறு நிலைகளைச் சுட்டிக்காட்டியது. சகோதரிகள் இதனைப் பாடியவிதமும் கண்களில் ஈரம் கசிய வைத்தது.

பஞ்சமி

திகில் படங்களைக் கூட பார்க்கத் திராணி இல்லாத பரிமளாவால் பேயைப் பார்ப்பது, அதனால் துன்புறுத்தப்பட்டு மாண்டு போவது என்றெல்லாம் யோசிக்கவே பேரச்சமாக இருந்தது. மரணம் நிகழும் நாளென ஓலையில் குறிப்பிட்டிருந்த திதியான பஞ்சமி என்ற பெயரே அவளுக்கு ஏதோ அமானுஷ்யமான வார்த்தையாகத் தோன்றியது. 

யுகமலர் தொடும் மானுட விரல்

“அப்போ அடுத்த கேள்வி, அவரு இத எப்படி சாதிச்சிருப்பாரு? இதுக்கான பதில் நமக்கு நாராயண குரு கிட்ட இருந்து கிடைக்கலாம். நாராயண குருவ ஒரு சீர்திருத்தவாதி, ஆன்மீகவாதினு மட்டும் பாக்காம, அவருக்கு ஒரு தொழில் முனையும் மைன்ட்செட் இருந்திருக்கு, அதை அற வழியில மக்களோட பிரச்சனைகளை தீர்க்க உபயோகப் படுத்தியிருக்கறத நம்மாள தெரிஞ்சிக்க முடியுது”

நுண்பொருள் காண்பது அறிவு

தன்னை அறிதல் எங்ஙனம்? நான் இருக்கிறேன் என்பதை ஒருவர் அறிந்து கொள்வதற்கு புறக்கருவிகளின் உதவி அவசியமே இல்லை. நான் என்ற உணர்வு நம் எல்லோருக்குமே சுயமாக விளங்கி வருகிறது. “ஆத்மா ஸ்வதசித்தம்.” நம் யாருக்குமே நம்முடைய இருப்பு குறித்து எந்த விதமான ஐயமும் இல்லை. இங்கு சிக்கல் என்னவென்றால், நாம் எல்லோரும் நம்மைக் குறித்து ஒவ்வொரு விதமாக அறிந்து வைத்துள்ளோம்.

நாவல்  றெக்கை– அத்தியாயம் 12

This entry is part 12 of 18 in the series றெக்கை

குழுவில் பத்துக்கு ஏழு பேர் இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளராக வலநாடும் மற்றும் ஃபிஜியும், மொரீஷியஸ்ஸும் வந்தவர்களுக்கு அடுத்த தலைமுறை தமிழர்கள். மதறாஸ், மதுரை, நெல்லை, கோவை என்று சுற்றுலாவாகக்கூட மெயின்லாண்ட் போனவர்கள் யாரும் இல்லை. தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் அநேகமாக எல்லோரும் தட்டுத் தடுமாறி தாய்மொழி பேசக்கூடியவர்கள்.

மற்றுமோர் அற்புதமான விஷயம் – பகுதி -2

இரவில் ஜன்னலருகே அவள் அமர்ந்தாள். அவளால் தூங்க முடியவில்லை. தன் வாழ்வில் எதிலிருந்தும் இத்தனை பிரிக்கப்பட்டதாக அவள் இதற்கு முன் உணர்ந்ததே இல்லை. தன் கவனத்தைத் திருப்பிக் கொள்ளும் முயற்சியாக, க்ரே வில்லியமுடைய அறையில் மேல் புற மர வேலைப்பாட்டின் கீழே சுவரில் சில சித்திரப் பாணிகளை அச்சிட்டுக் கொண்டிருந்தார். கோதுமையும், சோளப் பூக்களும் கொண்ட துவக்க கால அமெரிக்க வரைவு ஒன்றை அவர் கண்டு பிடித்திருந்தார்.

நெட்பிலிக்ஸ் (Netflix) பிறந்த கதை

இந்த வழக்கின் க்ளைமாக்ஸ் காட்சி 1983 ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அரங்கேறியது. இந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் வைத்த ஒற்றைக் கேள்வி இதுவே. “மக்கள் தங்கள் விருப்பம் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கும் VCR ஐத் தடை செய்ய வேண்டுமா?”  கேட்பதற்கு எளியதாகத் தோன்றும் இந்தக் கேள்வி, தொழில்நுட்பம், படைப்புரிமை மற்றும் சட்டவரையறை என்ற பல சிக்கல்களைக் கொண்டிருந்தது.

வேலாயுத  முத்துக்குமார்  கவிதைகள்

விடிகாலை கார்த்திகை மழையில்
முற்றத்து கூடம் நிரம்பிவிட்டது.
மனப்பிறழ்வுற்ற அம்மா
வாரியலால் பெருக்கிக் தள்ளுகிறாள்.
பெருக்கப் பெருக்க நிறைகிறது மழை.
ஓர் கணத்தில் மழையோடு
உரையாடத் தொடங்குகிறாள்

யமுனை சீராகப் பாய்கிறது

“ரவி, உங்களுடைய அந்த நேர்மையான கோபத்தைப் பார்த்து உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒரு விமர்சகர், ஒரு கவிஞர். வாழ்க்கையை நீதி ,அநீதி என்று பிரித்துப் பார்ப்பீர்கள். அவசியமற்ற மதிப்புகளை வாழ்க்கையோடு இணைத்துப் பார்ப்பீர்கள். நான் விமர்சகன் இல்லை. வாழ்க்கையை நான் அப்படியே எதிர் கொள்வேன் ; அதனோடு ஒட்டிக் கொள்வேன் ; நான்தான் வாழ்க்கை. ரவி, உங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்”

மரங்களின் அகன்ற வலை

தாவரங்கள் மைக்கோரைசல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி உணவைப் பகிர்ந்து கொள்கின்றன என்ற பரவலான நம்பிக்கை இருந்தபோதிலும், சான்றுகள் முடிவில்லாதவை. ஆய்வக மற்றும் கள சோதனைகளில், தாவரங்களுக்கு இடையில் மாற்றப்படும் கார்பன் மற்றும் பிற வளங்களின் அளவு பொதுவாக குறைவாகவே இருக்கும், பெரும்பாலும் மைக்கோரைசல் வேர்களில் இருக்கும். அதாவது பூஞ்சைகள் ஒரு தாவரத்திலிருந்து கார்பனைப் பெறுகின்றன, ஆனால் அதில் பெரும்பகுதி மற்றொரு தாவரத்திற்கு மாற்றப்படுவதற்குப் பதிலாக பூஞ்சையிலேயே இருக்கும்.

என் நண்பன்

“ஊஹூம். பயமாயில்ல. ஆனா, என்னவோ போல இருக்கு. இத்தனை பெரிய மணற்பாங்கு. தூரத்தில் அவ்வளோ பெரிய சமுத்திரம். இப்படி எல்லையே இல்லாமல் இருக்குதேன்னு பார்த்தா மலைப்பா இருக்கு. இத்தனை பெரிய கடவுளின் படைப்பில் நான் எத்தனை அல்பமான சின்னவள்னு தோணுது. இதையெல்லாம் படைச்ச கடவுள் எத்தனை உயர்ந்தவர்னு தோணுது. அவரை ஒரு தடவையாவது பார்க்கணும்னு தோணுது” என்றாள். அவள் இந்த உலகத்திலேயே இல்லை என்பது போல மெய் மறந்திருந்தாள்.   

தடுப்பூசிகளின் துணைச்சேர்க்கைகளால் பாதிப்பு உண்டா?

This entry is part 16 of 10 in the series பொது நலம்

ஒரு தடுப்பூசியில் அதன் முதன்மைப் பொருளான ஆன்டிஜென் (Antigen) தவிர, அதன் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் ‘துணைச் சேர்க்கைகள்’ (Adjuvants & Excipients) மிக முக்கியமானவை. குறிப்பாக, தொற்றுநோய்களைத் தாண்டி இன்று புற்றுநோய் சிகிச்சையிலும் இவை புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.

நளனும் கார்கோடகனும்

This entry is part 6 of 8 in the series நள சரித்திரம்

நளனும் நடந்தான். ஆனால் பத்தாவது காலடியில் அந்த நாகம் அவனைக் கொட்டியது.  உடனே நளனுடைய உருவம் மெள்ள மெள்ள மாறியது.  அந்த நாகம் தன் இயல்பான உருவை எடுத்துக் கொண்டது, ஆனால் நளன் தன் இயல்பான உருவை இழந்தான்.  கார்கோடகன் சொன்னது: நள மகாராஜா, உன் அழகை தான் இழந்தாய். வருத்தப் படாதே. அந்த கொடியவர்கள் உன்னை அடையாளம் காண முடியாது. உன்னை ஏமாற்றியவர்கள் இன்னமும் உன்னைத் தேடுகிறார்கள்.

காகமும் அழகு

This entry is part 6 of 10 in the series ஹைக்கூ

வீதிகளில், கூரைகளில், நிலத்தில் வெண்பனி போர்த்தப்பட்டிருக்கிறது. கண்ணுக்கு எட்டியவரையில் எங்கும் வெண்மை தெரியும் அந்தப் பனிக்காலத்தின் காலையில், அந்த வெள்ளைப் பரப்பின் மேல் கருமை நிறக்காகம் அமர்ந்திருப்பது பாஷோவுக்கு அழகாகத் தோன்றுகிறது. காகம் வெள்ளை நிறப் பின்னணியில் அமர்ந்திருக்கையில் கருப்பு வெள்ளை நிறபேதம் காட்சியழகைக் கூட்டுகிறது. பொதுவாக விரும்பப்படாத காகமும், அந்தக் காலையில் காட்சியழகுக்காக விரும்பப்படுகிறது.

தெய்வநல்லூர் கதைகள்- 31

This entry is part 31 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

ஆனால் அந்த விடுமுறை ஒரு வதையாக மாறிப்போனது. புதன்கிழமையிலிருந்து பொங்கல் விடுமுறை ஆரம்பம் என்ற மகிழ்வில் விடிந்த  ஒரு திங்கள்கிழமை காலை ஊரின் பொது இடங்கள் சிலவற்றில் கற்கால மனிதர்களின் குகை ஓவியங்களை ஒத்த ஆண்,பெண்  உருவங்கள் உடலுறவின் எல்லா நிலைகளையும் முயற்சிப்பது போன்ற கரிக்கோடு ஓவியங்கள் தென்பட்டன. அதில் ஆணுக்கு நேராக பிரேம், பத்தாம் வகுப்பு, அ பிரிவு, தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி எனவும் பெண் படத்துக்கு நேராக சங்கீதா, பத்தாம் வகுப்பு, அ பிரிவு, தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி எனவும் எழுதப்பட்டிருந்தது. 

வெனிசுவேலா: மோதலின் நடுவில் நிற்கும் நாடு

வெனிசுவேலாவின் மகத்தான எண்ணெய் இருப்பு, சீனா, ரஷ்யா, ஈரான், கியூபா போன்ற நாடுகளுடனான அதன் கூட்டணி, அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களுக்கு முரணாக இருப்பதாலேயே அமெரிக்கா அதிரடி முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச அளவில் விமர்சித்தாலும் அமெரிக்க பாதுகாப்பும் வெனிசுவேலா அரசின் முறையற்ற நிர்வாகத்தையும் கவனத்தில் கொண்டே மதுரோ நாடு கடத்தப்பட்டதாக வெள்ளைமாளிகை கூறி வருகிறது.

கோசின்ரா கவிதைகள்

பாம்பு
உரித்த சட்டை அங்கேயிருந்தது
எந்தப்பாம்பும்
அதை அணிய
எடுத்துக்கொண்டு போனதில்லை
ஒரு பாம்பின் சட்டையை
இன்னொரு பாம்பு அணிவதில்லை

அகவாழி

ஆழமறிய இயலாத ஆழ்கடலென அகவய மனித மனங்களின் கடலாகவும் எங்கும் பரந்து எல்லாவற்றையும் ஏந்தி, எல்லாவற்றையும் எல்லோருக்கும் தரும் புறவய அருட்கடலாகவும் ‘கடல்’ இருமுகங்காட்டி நிற்கிறது. அதன் முதல் முகம் லூசிஃபருக்கும் இரண்டாம் முகம் கிறிஸ்துவுக்கும் உரியது என நாம் கருதலாம். கடலின் முதல் முகம் மானுடத்தையும் அழிக்கவும் இரண்டாம் முகம் மானுடத்தைத் திளைக்கவும் செய்கிறது.

பெல்லா தார் – இரங்கல்

தாரின் முத்திரை என்பது நுட்பமான நீண்ட காட்சிகள், காலத்தை அதன் மூல வடிவில் எதிர்கொள்ள நம்மைப் பணிக்கின்றன. கில்லெஸ் டெலூஸ் முன்வைத்த கால-பிம்பம் எனும் கருத்தாக்கத்தோடு ஆழமாகத் தொடர்புடையது அவரின் திரைமொழி. இங்கே சினிமா என்பது ஒரு செயலைத் துரிதப்படுத்துவது அல்ல, மாறாக காலத்தை அதன் போக்கில் சுதந்திரமாக விட்டுவிடுவது. ஹான்ஸ்-ஜார்ஜ் கடாமர் கூறுவது போல், கலை என்பது வெறும் தகவலல்ல, அது அனுபவத்தின் வழியே கிட்டும் ஒரு தரிசனம்.

ஒரு மிசோஜினிஸ்ட்டின் உளுந்த வடை

அரவிந்தன் என்னைப் பார்த்து கை கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தானா? என்ன திமிர்! அவன் கையைப் பிடித்து முறுக்கி கன்னத்தில் ஓங்கிக் குத்திக் கொண்டிருந்தேன். ஆனால், பெட்டிக் கடை அண்ணாச்சி தடுக்கவேயில்லையே! ஏன் சிரித்துக் கொண்டிருந்தார்? ‘இவன் என்ன பெரிய இவனா? எனக்கு அறிவுரை சொல்ல இவன் யாரு? சின்னப் பய? அவன் கத என்னன்னு வீட்டுல பாத்தாதான தெரியும்.

அசுரகணத்தின் 66வது அத்தியாயம் முதலிய இழப்புகள்

நாட்டுடைமையாக்கம் க.நா.சு.வின் படைப்புகள் மறுமதிப்பு காணவும் அதிக வாசகர்களைச் சென்றடையவும் வழிகோலியது என்றாலும், இவ்வழியில் மீண்டும் புழக்கத்துக்கு வந்த க.நா.சு.வின் படைப்புகளில் சகட்டுமேனிக்குப் பிழைகள் மிகுந்துள்ளன. பதிப்புணர்வு இல்லாத தமிழ் வாசகர் கூட்டம் அந்தப் புத்தகங்களை வாங்கிக் குவித்திருக்கிறது. அந்த நூல்களில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி அறியும் முன்பாக க.நா.சு.வின் காலத்தில் அவரது படைப்புகள் வெளியான வரலாற்றை நெட்டோட்டமாகப் பார்க்கலாம்.

காற்றையும் நீரையும் போல் நித்தியம்

நாவலின் நெடிய நூலிழையாக காந்தி. காந்தியை சாதாரண மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் பிரிக்கிறார்கள் என்று சொல்லும் ரமேஷிலிருந்து நாவல் தொடங்குகிறது.  காந்தியர்களை,  காந்தியவாதத்தைச் சிறு எள்ளலுடன் விவரிக்கிறான். அசாமின் முன்னாள் முதல்வர், ராஜவம்ஷியை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே தன்னை எரிச்சலூட்டும், ஆனாலும் அவர் சிரிப்பில் குறுகுறுக்கும் ரமேஷ், அதே அலட்சியமான, இரக்கமற்ற அதிகார அமைப்பை மிக யதார்த்தத்துடன் கையாளும் ராஜவம்ஷியை இவர் நிஜமானவர்தானா? என வழிபடுகிறான். 

காணுமாறு காணேன்

சுந்தரம் புன்னகைத்தார். அப்புறம், மெல்லக் கையை உயர்த்த முயற்சி செய்து, ராமசாமியையும், தமயந்தியையும் இன்னமும் அருகே வருமாறு அழைத்தார். படுக்கையில் இருந்த அவருடைய விரல்கள், அவர்களது கைகளைத் தொட முயன்றன. இருவரும் முன்னே நின்று, அவர் கரங்களைப் பற்றினர். மிகுந்த சிரமத்துடன், சுந்தரம் சில வார்த்தைகளைக் கோர்த்தார். “சாம்பியன்ஸ்…” ஏதோ நினைவுகள் மனத்தில் ஓடின.

மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்களில் பொதுமுனைவுக் கருத்து

மக்கள் இனக்குழுச் சமுதாயமாக வாழத் தொடங்கியதன் பிறகு அரசு உருவாக்கம் ஏற்பட்டது. இவ்வாறு உருவான அரசுகள் பல்வேறு இனக்குழுச் சமுதாயங்களைத் தமக்குள் உள்வாங்கிக் கொண்டு விரிவடையத் தொடங்கின. தமிழ்ச் சமுதாயம் எவ்வாறு இனக்குழுச் சமுதாயத்தில் இருந்து வேந்தர்களின் ஆட்சியின் கீழ் வந்ததெனச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. இனக்குழுத் தலைவனுக்கும் வேந்தனுக்கும் இடையில் நடந்த  பூசல்களின் பதிவாகவே மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் உள்ளன.

ஜீவநதி

தனிமைக்கூட்டினுள் உடல் ஒடுக்கி வாழும் நோயுற்ற  பட்சியென பின்வந்த நாட்களில் மாறிப்போனாள் சிவகாமி கிழவி. தெருவாசிகளும் அவள் விழிகளைச் சந்திப்பதை ஏனோ தவிர்க்கத் துவங்கினர். ஆனாலும் கிழவி இறப்பது வரை அங்கு நடந்தேறிய அனைத்து சுபநிகழ்வுகளும் அவளது ஆசியுடனே துவங்கியது. அவளும் ஒவ்வொருவரையும் கண்களில் நீர் வழிய மனதார வாழ்த்தி வந்தாள்.

செயற்பாலது ஓரும் அறன்

மோக்ஷம் என்பது சகல துயரங்களிலிருந்தும் விடுதலை என்று வர்ணிக்கப்படுகிறது. அது நிரந்தரமானதும் கூட. ஒரு முறை அடைந்தால் அதை இழக்க முடியாது. ஒரு செயலின் மூலம் அடையப்படும் எல்லாப் பொருட்களும் காலவரையறைக்குட்டப்பட்டவை. ஒரு காலத்தில் அடையப்பட்ட பொருள், இன்னொரு காலத்தில் இழக்கப்பட்டே தீரும். எனில், இழக்கவே முடியாத பொருளை அடைதல் எங்கனம்?

அந்த முக்கிய நபர்

“இந்த விசிட்டிங் கார்டை அவரிடம் காட்டுங்கள்” பையிலிருந்து எடுத்து அவனிடம் தந்தார். பளபளப்பான தாளில் அழகாக இருந்த அந்தக் கார்டை, முக்கிய நபர் ராமன் மிக நுணுக்கமாகப் பார்த்தான். அந்தக் கார்டோடு சேர்த்து என்ன தரவேண்டும் என்பதை அறியாதவர் அந்த மனிதர் என்பது வெளிப்படை.

பாதுகாப்பு, அடையாளம், கட்டுப்பாடு: சீனாவின் இஸ்லாமிய தீவிரவாத அணுகுமுறை

உய்குர் முஸ்லிம்களின் மீதான சீன அரசின் கொள்கைகள் மீது உலகளாவிய தவறான புரிதல் இருந்தாலும் சீனாவைப் பொறுத்தவரை “எந்த விலை கொடுத்தாவது சிரியா போன்ற சரிவைத் தடுப்பது” மட்டுமே நோக்கமாக உள்ளது. குறிப்பாக பல நூற்றாண்டு கால மோதல்களாலும் எல்லை தாண்டிய தாக்கங்களாலும் வடிவமைக்கப்பட்ட பிராந்தியங்களில், பாதுகாப்பு, கலாச்சார அடையாளம், தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது எளிதல்ல. ஆனால் சீனா அதனை நன்கு புரிந்து கொண்டுள்ளது.

மற்றுமோர் அற்புதமான விஷயம்

அவளும் பென்னியும் குழந்தை பிறக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கையில், கடைகளுக்குப் போய் மேலும் வேண்டுவனவற்றை வாங்கிக் கொண்டு வந்தார்கள். கடைசி நிமிடம் வரை இவற்றை ஒத்திப் போடாமலிருந்ததற்கு அவள் சந்தோஷம் கொண்டாள், ஏனெனில் ஏதும் நடக்காது சாதாரணமாக முன்னேறிய கர்ப்பகாலத்தில் ஒன்பதாவது மாதம் துவங்கிய போது அவள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாள். பிறகு அவள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டாள். தான், க்ரே மேலும் பிறக்காத அந்தக் குழந்தை மட்டும் இருக்கும் தனிமையுணர்வை அவள் ரசித்திருந்தாள்,

லியோனார்டோ டா வின்சியின் ஈயக் கலைமூலம் ஒளியின் ரசவாதம்

ஈயத்தையும் எண்ணெயையும் சாதாரணத் தணிந்த சூழலின் வரம்பை விட்டுச் சேர்த்த இடத்துக்குத் தள்ளியதனால், நமது காலத்தில் பெயரிட்டு, ஒரு  பெட்டகத்தில் வைத்துக் காணக்கூடிய ஒரு அரிய தாதுவை அவர் உருவாக்கி விட்டார். அவருக்கு அப்போது எவ்வித சூத்திரஙகளும், கட்ட வரைபடங்களும் இல்லாமல் இருந்தாலும், விரலின் தொடுதல், பரவுதலின் நடத்தை, உலர்தலின் வேகம், வெளிச்சம் பற்றுகிற விதம் – ஆகியவை எல்லாம், அவருக்கு இன்று நாம் தேடுமா அதே அறிவியலை அளித்தன.

எல்லையற்றவன்

வறண்ட நிலத்தை மழை நீர் நனைத்தது போல கிருஷ்ணனின் சொற்கள் ராதையின் மனத்தை பக்தியால் நிறைத்தன. முன்பு பாடிய இனிய கீதத்தை மீண்டும் கேட்டாள். வம்சிமோகன் வேணுகானத்தை மனத்துக்கினிமையாக இசைத்தான். இன்னிசை மழையில் நனைந்து அடித்துச் செல்லப்பட்ட ராதைக்கு நேரம் போனதே தெரியவில்லை. 

றெக்கை– அத்தியாயம் 11

This entry is part 11 of 18 in the series றெக்கை

தங்கவேலு அய்யங்கார் எப்படி வைத்தியரானார்? வளநாடு சிறு நகரில் பள்ளிக்கூடம் இருக்குதே தவிர கல்லூரி எல்லாம் இல்லை. ஆனால் என்ன? க்ருஹ வைத்தியம் மூன்று வோல்யூமும் தலைகீழாக பாடம் சொல்ல முடியும் அவரால். போதுமே. அவர் வைத்தியர் ஆகி விட்டார். மேலும், அலோபதி, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி அறிமுகப் புத்தகங்களை எல்லாம் வாங்கி வந்து வீட்டில் ரெண்டு பெரிய அலமாரிகளில் அடுக்கி வைத்து தினமும் தூசி தட்டிக் கொண்டிருந்தார்.

நியுஃபின்லாண்ட் – ஒரு புவியியல் பாடசாலை

கடந்த 5 ஆண்டுகளில், நியுஃபின்லாண்டின் பொருளாதாரம், மீன்பிடிப்புத் தொழிலைத் தாண்டி ஏராளமாக மாறிவிட்டது. முதலில், எனக்குப் பேய்க்காற்று என்று தோன்றிய விஷயம், நியுஃபின்லாண்ட் மக்களுக்கு சாதரணமான ஒன்று என்றே தோன்றுகிறது. இந்தத் தீவில், ஏராளமான காற்று டர்பைன்கள் (wind turbines and wind farms) நிறுவப்பட்டு வருகிறது. இவற்றின் குறிக்கோள், தீவின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதல்ல. தேவையான மின்சாரம் நீர்சக்தி மின்சாரத்தால் தாராளமாக பயனில் உள்ளது. காற்று டர்பைன்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம், பச்சை ஹைட்ரஜன் (green hydrogen), மற்றும் பச்சை அமோனியாவாக மாற்றி, யுரோப்பிற்கு ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.

தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

This entry is part 15 of 10 in the series பொது நலம்

ஃப்ளூ வைரஸ்கள் தங்களை மிக வேகமாக மாற்றிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிய வடிவில் இவை வருவதால், பழைய தடுப்பூசியால் உருவான ஆன்டிபாடிகளால் புதிய வைரஸை அடையாளம் காண முடியாது.சில தடுப்பூசிகள் வாழ்நாள் முழுதும் பாதுகாக்கும் போது, ஃப்ளூ போன்ற தடுப்பூசிகளை ஆண்டுதோறும் ஏன் போட வேண்டும் என்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.

தஞ்சம் புகுந்த தமயந்தி

This entry is part 5 of 8 in the series நள சரித்திரம்

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து யோசித்து பார்க்கிறேன் – என்ன தவறு, எங்கே யாருக்கு செய்தேன். அருமையாக செல்வச் செழிப்பில் வளர்ந்தேன்.  இந்த அளவு என் வாழ்க்கை பந்தாடப் படும் வகையில் யாருக்கும், மனம், சொல், உடலால் எந்த துன்பமும் இழைத்ததில்லையே. அந்த லோக பாலர்கள் வந்து என் சுயம் வரத்தில் கலந்து கொண்ட சமயம் அவர்களை நிராகரித்தேனே, அது அவ்வளவு பெரிய குற்றமா.?  

நழுவும் பாதரசம்

மேல்சபையின் (Senate) வெளியுறவுக் குழுவின் தலைவர், ஜோ பைடன், 2008ல், சீனாவுடனான அமெரிக்க வர்த்தகம் சம நிலையில் இல்லாததைப் பற்றிய கருத்துக்களை வரவேற்றார். தான் வாங்குவதை விட அதிகமாக பொருட்களை அமெரிக்காவிற்கு விற்ற சீனா, அதிலிருந்து கிடைக்கும் இலாபங்களை, அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் முதலீடும் செய்து, தன் செல்வ நிலையை உயர்த்திக் கொண்டது. சீனாவின் மிகப் பெரிய கடனாளியாகியது அமெரிக்கா.

தெய்வநல்லூர் கதைகள்- 30

This entry is part 30 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

தயாராக இருந்த டிரிப்பிள் எஸ் சார் தனக்கு வந்திருக்கும் புகாரில் மாணவர் தாக்கப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகள் பலர் இருப்பதாக குறிப்பிட்டார். அதன்பிறகும் இதை எம் எஸ் சி சார் மறுப்பாரேயானால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பள்ளியில் விசாரணை செய்யப்படும் என்றார். முதல் சுற்றில் தோல்வி அடைந்ததாக உணர்ந்த எம் எஸ் சி சார்  தான் தாக்கவில்லை எனவும் தண்டித்தது அம்மாணவனின் கல்வித்தரம் உயரவே எனவும் அதனால் அம்மாணவன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனவும் வாதிட்டார்.

புறாவின் அழைப்பு

This entry is part 3 of 10 in the series ஹைக்கூ

வசந்தகாலத்தில் மழை பொழிகிறது. எப்போதும் பொந்துக்குள் இருக்கும் ஆந்தைக்கு மழை பொழிவது பிடிக்கவில்லை, தன்னுடைய முகத்தில் சலிப்பைக்காட்டுகிறது. ஆந்தை இப்படி மழையைப் பார்த்துச் சலிப்பை வெளிப்படுத்துவது புறாவுக்குப் பிடிக்கவில்லை. ஆந்தையை அழைத்துத் தன் பார்வையை வெளிப்படுத்துகிறது.

கண்ணியமான கடைசிக் காலம்

இந்தியா வெகுவேகமாக மூப்படைந்து கொண்டு இருக்கிறது. அடுத்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஐந்து இந்தியர்களில் ஒருவர் அறுபது வயதிற்கு மேலானவராக இருப்பார். தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதாலும், குடும்பங்களில் சிறிதாகிக் கொண்டே போவதாலும் மூப்பின் பாதிப்பு அதிகம் இருக்கப் போகிறது.

வட்டமும் மையமும்

அந்தப் பறவை
வட்டமிட்டு
வட்டத்தை முடிப்பதற்குள்
வட்டமும் மையமும்
குவியும் ஒரு புள்ளியாய்
மோனத்தில்
மிக உயரத்தில்
சலனமின்றி
சிறகுகள் விரித்தபடி
பறக்கிறது

தீசியஸ் (Theseus)

இந்திய ஆயுர்வேத முறை, உடலை ஒரு இயக்கம் இல்லாத இயந்திரமாகவோ, அதற்கான மாற்றுப் பொருட்களை தயாரிப்பதையோ முன்னிறுத்திச் சொல்லவில்லை என்றாலும், உடல் உறுப்பை சரி செய்வதும், மாற்றுவதும் அறுவை சிகிச்சையினால் செய்ய முடியும் என்று சொல்கிறது. 1938ல் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கினார்கள். இப்போது இந்த துறையானது கிரிஸ்பர் (CRISPER) முதலான மரபணு திருத்தங்கள் மூலம் பல அற்புதங்கள் செய்து வருகிறது. எனினும், பயணிக்க வேண்டியது தூரம் அதிகமே.

நிழல்கள், சிதறல்கள் மற்றும் நினைவேக்கங்கள்: ராய், சென் மற்றும் கடக் ஆகியோரின் கலைவெளி

இம்மூவரின் கலை உலகங்களை வெறும் பாணிகளாக (Style) மட்டுமல்லாமல், கோட்பாட்டு நிலைப்பாடுகளாகவும் ஆராய்கிறது. நாம் ராயை யதார்த்தவாத விவாதங்களின் (பஜான், கிராகாவர் மற்றும் தெலூஸ் ஆகியோரை எதிரொலித்து) வழியாகவும்; சென்னை மாண்டாஜின் உடைந்த லென்ஸ் (ஐசன்ஸ்டைன், பிரெக்ட் மற்றும் சோலானாஸ் & கெட்டினோ ஆகியோரின் தீவிரக் குரல்களை நினைவுகூர்ந்து) வழியாகவும்; கடக்கை மெலோடிராமாவின் துயரக் குரல் (புரூக்ஸ், எல்சேசர் மற்றும் துயரத்தின் நிழல்களோடு) வழியாகவும் வாசிக்கிறோம்.

எழுகை

பூஜ்யத்துக்கும் குறைவான பாகை குளிர்காற்று, சாலையில் குவிந்திருந்த பனிப் பரப்பின் தளர்ந்த மேற்பகுதியை அளைந்துகொண்டிருந்தது. பனியின் ஒளிரும் வெண்மையும், அலங்கார விளக்குகளின் வெளிச்சமுமாக நகரமே ஏதோ கனவுக்குள் மூழ்கிக்கிடப்பதைப் போலவும், புரதான காலத்தில் நிகழும் கிறிஸ்துமஸ் சித்திரப் படக் கதைக்குள் வரையப்பட்ட வண்ண ஓவியங்களின் தோற்றத்தையும் ஒத்திருந்தது.

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

வேதாந்தம் என்றால் வேதத்தின் அந்தம் (இறுதி) என்று பொருள். நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் இறுதிப் பகுதியாக வருவன உபநிஷத்துக்கள். இவை மெய்ப்பொருள் குறித்தும், தனிப்பட்ட ஜீவனுக்கும், எல்லாமுமாக இருக்கும் பிரம்மத்துக்கும் உள்ள உறவு குறித்தும் ஆராய்ச்சி செய்கின்றன. இவ்வுபநிஷத்துக்களே வேதாந்தம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. எனவே வேதாந்தம் என்று சொன்னால் அச்சொல் நேரடியாக உபநிஷத்துக்களையே குறிக்கும். 

பிரிந்து சென்ற நளன்

This entry is part 4 of 8 in the series நள சரித்திரம்

நளனின் உடலில் இருந்து அவனை ஆட்டுவித்த கலி அரசனை விடுவானா?    அவளை ஏறிட்டு பார்த்த அரசன் நளன், ஒரு வார்த்தையும் பதில் சொல்லாமல், திரும்ப ஆட்டத்தில் முனைந்தான்.   நாட்டு மக்கள் மிக்க வருத்தத்துடன்  திரும்பினர்.  யுதிஷ்டிரா! அந்த புஷ்கரனும், நளனும் தொடர்ந்து பல மாதங்கள் ஆடிக் கொண்டிருந்தனர்.  பழைய நளனுடைய நற்குணங்கள்  வெறும் பேச்சு பொருளாக ஆயிற்று.  

இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச்

சாதாரண மாவுப்பொருட்களை விட, அதிக செயலாக்கம் செய்யப்பட்ட மற்றும் என்சைம் மூலம் சிதைக்கப்பட்டஇந்த வகை மாவுப்பொருட்களின் வழித்தோன்றல்கள் (Maltodextrins, Dextrose) விரைவான இரத்த சர்க்கரை உயர்வுக்கு வழிவகுக்கும், ஏனெனில் அவை வேகமாக குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் அல்லது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இந்த வடிவங்களை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

மரணப் புன்னகை 

வேகமாக நடந்து அவரிடம் சென்றதும் விஜுவை எடுக்க வேண்டும் உள்ளே வாருங்கள் என்றார். கையில் பிடித்திருந்த பையை பிணவறையின் வெளிப்புற வாசல்படிமேல் வைத்துவிட்டு நேராக ஜஸ் பெட்டிகள் இருந்த அறைக்குள் நடந்தேன். விடியற்காலையில் கொண்டு வைத்த பெட்டி கூட்டத்தில் சில பேருக்கு பிடிக் கிடைக்காமலிருந்தாலும் சுரேஷ் அண்ணன் இது தான் பெட்டி என்று சரியாகப் பார்த்துச் சொன்னான்.

இன்றைய ஆஸ்த்ரியா – ஒரு விரைவுப் பார்வை

வியன்னா மக்கள், அதிகம் தங்களது செல்வத்தை வெளிக்காட்டாதவர்கள் என்றே பட்டது. சுறுசுறுப்பாக, நகரம் எங்கும் பொதுப் போக்குவரத்தில் பயணித்த வண்ணம் இருக்கிறார்கள். ஹோட்டல் இளைஞர், எங்களுக்கு வியன்னாவின் மிக முக்கிய சப்வே ரயில் பாதைகள், ட்ராம் மற்றும் பஸ் பற்றி பயணத்தில் விளக்கிக் கொண்டே வந்தார். ஒரு முக்கிய ரயில் ஸ்டேஷனில் என்னிடம், “இங்கு இறங்கினால், டான்யூப் நதியில் படகுகள் மூலம் பயணிக்கலாம். இங்கிருந்து பக்கத்து நாடான ஸ்லோவாக்கியாவிற்குக் (Slovakia) கூடப் பயணம் செய்யலாம்” என்றார். 

றெக்கை  அத்தியாயம் பத்து

This entry is part 10 of 18 in the series றெக்கை

வேறே ஒண்ணுமில்லே. எனக்கும் ஆல்பீக்கும் டிஸ்பென்சரியிலே ஒரு அசிஸ்டண்ட் இருந்தா  நல்லா இருக்கும்னு தோணறது. இன்னொரு டாக்டர் இல்லை. வென்னீர் போட்டு தினம் உபகரணங்களை சுத்தப்படுத்த, தினம் ரெண்டு வேளை தரை மெழுக, சமையல் பண்ண எனக்கு உதவி செய்ய, காய்கறி, பலசரக்கு வாங்கிவர. மாதக் கடைசியிலே நமக்கு வரவேண்டிய பாக்கி ஃபீஸ் வசூல் பண்ண .. ஒரு ஆண், ஒரு பெண் இருந்தா இதெல்லாம் செய்யச் சொல்லலாம், இந்த கிழவன் கிழவி ஜோடி மாதிரி … முடிந்தவரை சம்பளம் தர ரெடி