அர்த்தநாரீஸ்வரராகவும், பார்வதி தேவியாகவும், தாருகனாகவும், பத்ரகாளியாகவும், கன்னியாகவும் நடந்து வரும் அவர்களை பக்தர்கள் அனைவரும் வியப்போடு நோக்கினர். ஒரு சிலர் பயபக்தியோடு அவர்களை வணங்கவும் செய்தனர். செண்டை மேளம் வாசிக்கும் இடத்திற்கு வந்ததும் தாங்கள் ஆடுவதற்கு தயார் என்பதை தன் கண்களால் அம்மேளக் கலைஞர்களுக்கு உணர்த்தினார் சிசுபாலன். அம்மேளக்கலைஞர்களும் சிவ பார்வதி நடனம் ஆடுவதற்கு ஏற்றாற்போல் தங்களுடைய மேளத்தை அடிப்பதற்கு தயாராகிக் கொண்டனர். சிசுபாலன் உள்பட அனைவரும் ஒவ்வொரு நபராக அந்த மேளக்கலைஞர்களின் வாத்தியங்களைத் தொட்டு வணங்கி விட்டு தங்களுடைய முதல் ஆட்டத்தை அங்கு அரங்கேற்றத் தொடங்கினர்.
Author: சஜு
தலைப்பாறை
ஒரு பெரும் மரம் வழியில் முறிந்து கிடந்தது. அம்மரத்திற்கு கிட்டத்தட்ட நூறு வயதிருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் சொன்னான் நிஷாந்து. அம்மரத்தை மொத்தமாக முறிக்காமல் பாதையில் இடையூறாக இருக்கும் பாகத்தை மட்டும் அருகில் முறித்து போட்டிருந்தனர். அதைக் கண்ட திலீப் அண்ணன் “பாத்திய இந்த மரத்த மொத்தமா வெட்டக்கூட நம்மாளுங்களால முடியல, அவ்ளோ பெரிய மரம்” என்று சொல்லிக் கொண்டே முழு மரத்தின் நீளத்தையும் தன் கண்ணால் ஒருமுறை அளந்தான். அவ்வளவு பெரிய மரத்தை அப்பெரும் காட்டிலிருந்து முழுவதுமாக அகற்றுவதென்பது பெரும் சிரமத்திற்குரிய வேலை என்பதால் அந்த மரம் வாழ்ந்த காட்டிலேயே அதை அப்படியே விட்டுவிட்டு பாதைக்கு இடையூறான அதன் பாகத்தை மட்டும் வெட்டி அப்புறப்படுத்தியிருந்தனர். அது மட்டுமல்லாமல் அது பாதுகாக்கப்பட்ட வனமானதால் சீசன் காலகட்டத்தில் மட்டுமே அதற்குள் செல்ல அனுமதியுண்டு.
மரணப் புன்னகை
வேகமாக நடந்து அவரிடம் சென்றதும் விஜுவை எடுக்க வேண்டும் உள்ளே வாருங்கள் என்றார். கையில் பிடித்திருந்த பையை பிணவறையின் வெளிப்புற வாசல்படிமேல் வைத்துவிட்டு நேராக ஜஸ் பெட்டிகள் இருந்த அறைக்குள் நடந்தேன். விடியற்காலையில் கொண்டு வைத்த பெட்டி கூட்டத்தில் சில பேருக்கு பிடிக் கிடைக்காமலிருந்தாலும் சுரேஷ் அண்ணன் இது தான் பெட்டி என்று சரியாகப் பார்த்துச் சொன்னான்.
