–ல், ஒரு மில்லியன் மாணவர்கள் ஒரே நாளில், பருவநிலை மாற்றம் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிளர்ச்சி செய்தனர். இவர்களது கிளர்ச்சி, அரசியல் தலைமையை நடவடிக்கை எடுக்கத் தூண்டுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். ..2019 –ல், ஒரு மில்லியன் மாணவர்கள் ஒரே நாளில், பருவநிலை மாற்றம் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிளர்ச்சி செய்தனர். இவர்களது கிளர்ச்சி, அரசியல் தலைமையை நடவடிக்கை எடுக்கத் தூண்டுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். சில நாட்களுக்கு சமூகத்தில் வயதானவர்கள் சற்று தர்மசங்கடப்பட்டுவிட்டு, பிறகு அவரவர் தொல்லெச்ச எரிபொருள் காரில் ஏறி, வேலையைப் பார்க்கச் சென்று விடுவது நம் சமூகத்தின் சாபக்கேடு. இவர்களது கோரிக்கைகள் என்ன?..தொல்லெச்ச எரிபொருள்கள் 100% குறைக்க வேண்டும்
தொல்லெச்ச எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கான மானியம் நிறுத்தப்பட வேண்டும்
எல்லா சக்தியும் புதுப்பிக்கக்கூடிய சக்தியாக மாற வேண்டும்.
Category: சூழலியல்
புவி சூடேற்றம் பாகம்-13
50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள் இந்த பூமியில் இல்லை. உயிர்கள் தழைத்தன என்பதை எதை வைத்துக் கொண்டு சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்றைய தொல்லெச்ச எரிபொருள்கள் உருவாவதற்குக் காரணமே, அந்த காலங்களில் மறைந்த உயிர்களே!
பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?
ஆர்க்டிக் பகுதிகளில் ஜூன் மாதத்தில் கடல், பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கும். செப்டம்பர் மாதம்தான் இங்கு அதிகமாகப் பனி உருகும். மீண்டும் அக்டோபர் கடைசியிலிருந்து உறையத் தொடங்கும். 1967 முதல் 2018 வரை, ஜூன் மாதப் பனியுறைப் பகுதி குறைந்துகொண்டே வந்துள்ளது. 1967–ல் இருந்த உறைந்த பகுதியிலிருந்து, 2018–ல் நாம் இழந்த பனியுறைப் பகுதி 2.5 மில்லியன் சதுர கி.மீ. இது சாதாரண இழப்பன்று. இது இந்தியாவின் நிலப்பரப்பில் 76%-திற்குச் சம்மானது!இந்த இழப்பைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை. ஆனால் ஏன் கவலைப்படுவதில்லை?
புவிச் சூடேற்றம்: ஒரு விஞ்ஞான அறிமுகம்
இதில் விந்தையான விஷயம் என்னவென்றால், ஏழை நாடுகள், இது என்னவோ பணக்கார நாடுகளின் சதி மற்றும் பிரச்சனை என்று நினைக்கின்றன. உண்மையோ முற்றிலும் வேறு. இது பூமி சம்பந்தப்பட்டது. இதில் மனிதனால் உருவாக்கப்பட்ட பணம், நாடு, எல்லைகள் இவற்றுக்குப் பங்கே கிடையாது. பணக்கார ஸ்வீடன் நாட்டையும் ஏழை பங்களாதேஷையும் வேறுபடுத்திப் பார்க்காத பிரச்சினை இது. சொல்லப் போனால், ஏழை நாடுகளை அதிகமாகப் பாதிக்கவல்ல ஒரு பிரச்சனை இது.
புலம்பெயரும் பவளப்பாறைகள்
பவளப்பாறைகள் பாறை வகைகளில் ஒன்றல்ல. சில வகைக் கடலினங்களின் வாழ்ந்து முடிந்த எச்சங்களும் வாழ்ந்துகொண்டிருக்கும் சில உயிரினங்களின் தொகுப்புகளுமே பவளப்பாறைத் திட்டுகளாகின்றன. இவை வெறும் சுண்ணாம்புத் திட்டுகள் மட்டுமே.
ராட்சச எண்ணெய்க் கசிவுகள்
எண்ணெய்த் தொழில் வழக்கப்படி Premex நிறுவனம், பாதி எண்ணெய் வெளிவந்தவுடன் எரித்துவிட்டோம், கொஞ்சம் ஆவியாகிவிட்டது, மற்றதைக் கவனத்துடன் அப்புறப்படுத்தி விட்டோம் என்று மார் தட்டிக்கொண்டது. இந்த எதையும் தனிப்பட்ட பாரபட்சமில்லாத எந்த ஓர் அமைப்பும் உறுதி செய்யவில்லை.
குளக்கரை
ஃப்ளோரிடா வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர்கால காய்கறி சாகுபடியில் முதலிடம் பிடித்தது. மார்ச் – 2020 கொரோனா தாக்குதலைத் தொடர்ந்த லாக்-டவுனின் முதல் பலியும் அதுவே. உணவு விடுதிகள், உல்லாசக் கப்பல் பயணம், பள்ளிக்கூட சிற்றுண்டிச்சாலைகள், விமான நிறுவனங்கள், தீம் பார்க்குகள் அனைத்தும் மூடப்பட்டதால் உற்பத்தியாளர்கள், “கடை விரித்தேன்; கொள்வாரில்லை” என்ற ராமலிங்க வள்ளலாரின் நிலைக்கு வந்துவிட்டார்கள்.
புத்தக விமர்சனம்: வாஸ்லாவ் ஸ்மீல் Energy and Civilization -A History
ஆசிரியர் உண்மையிலேயே ஒரு பெரிய நிபுணர்தான். எடுத்துக்காட்டாக, நிலத்தில் ஓடும் மனிதர்களைப் பற்றி பேசும்போது, தரவை அவர் இவ்வாறு பகுப்பாய்வு செய்கிறார்: ஓடுவதற்கு பெரும்பாலும் 700 முதல் 1,400 வாட் வரை ஆற்றல் தேவைப்படுகிறது, இது அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதத்தைப்போல் 10-20 மடங்கு அதிகம். மனிதர்களுக்கான இயங்கும் ஆற்றல் செலவு நிறைய. ஆனால் இந்த செலவை வேகத்திலிருந்து விலக்குவதற்கான தனித்துவமான திறனை மக்கள் கொண்டுள்ளனர். இயங்கும் மொத்த செலவில் 80% உடல் எடை ஆதரவு மற்றும் முன்னோக்கி நம்மைச் செலுத்தும் உந்துவிசைக்கே ஆகிறது. கால்களை முன்னும் பின்னுமாக இயக்குவதற்கு 7% செலவு. பக்கவாட்டு சமநிலையை பராமரித்தலுக்கு 2%. ஆனால் கைகளை ஆட்டி பேலன்ஸ் செய்வது ஒட்டுமொத்த செலவை சுமார் 3% குறைக்கிறது.
பருவநிலை மாற்றத்துக்கு இந்தியா அளிக்கக்கூடிய விலை
இந்த ஆய்வு குறித்த விவாத பகுதியில் (‘Discussion’) கட்டுரையாளர்கள் அளிக்கும் பரிந்துரைகள் சிக்கலானவை- ஒவ்வொரு தேசமும் தன் கார்பன் உமிழ்வுகளின் மீது தன் கார்பன் சமூகவிலையைச் சுமத்தினால் (கார்பன் வரி என்று சொல்லலாம்), பயன் ஓரிடம் பாதிப்பு ஓரிடம் என்ற நிலையில் 5% மாற்றம்தான் ஏற்படும் என்கிறார்கள் (இந்தியாவின் கார்பன் சமூகவிலை 22% என்பதற்காக அது 22% கார்பன் வரி போட்டு பயனில்லை, அதன் உமிழ்வு கிட்டத்தட்ட 5% மட்டுமே. ஆனால் அதே சமயம் 30%க்கு மேல் கார்பன் உமிழும் சீனா 7% மட்டுமே கார்பன் சமூகவிலையும் கார்பன் வரியும் போட வேண்டியிருக்கும், இதனால் பயனில்லை.)
மஹாராஷ்டிராவின் சின்னம்
இந்த அணில் மஹாராஷ்டிர மாநிலத்தின் அடையாளமாக சொல்லப்படும் உயிரினம். சாதாரண அணிலின் முதுகில் இராமர் போட்ட மூன்று கோடுகள் என்றால், இந்த அணில் உடலெங்கும் பழுப்பு, செம்மஞ்சள், அரக்கு, கருப்பு என்று பல்வேறு வண்ணங்கள் கலந்து காணப்படுகின்றன. மலபாரின் ஜாம்பவான் அணில் குறித்த குறிப்பை இங்கே பார்க்கலாம்; படிக்கலாம்.
இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி!
இயற்கையின் மீதான ஆர்வம், இந்திராகாந்தியின் இளமைப்பருவத்திலேயே துவங்குகிறது. அடிப்படைப் பாடங்கள் தந்தை நேரு தன் மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு எழுதும் கடிதங்களில் இருந்து துவங்குகின்றன. 1930 ஆம் ஆண்டு, மௌரிஸ் என்பவர் எழுதிய “தேனியின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தைப் பரிசாக அனுப்புகிறார். இது போலப் பல புத்தகங்களை அவர் மகளுக்காக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். கமலா நேருவின் தம்பியும், இந்திராவின் தாய்மாமனுமான கைலாஸ் நாத் கௌல், ஒரு உயிரியல் ஆய்வாளர்.
காடு – சூழியல் சிற்றிதழ் அறிமுகம்
ஏ.சண்முகானந்தம் ஆசிரியராக அமைந்திருக்கும் இந்த சிற்றிதழில் சூழலியல் பற்றி தொடர்ந்து தமிழில் கவனத்தை ஏற்படுத்தும் சு.தியடோர் பாஸ்கரன், ச.முகமது அலி, முனைவர் வே.தட்சிணாமூர்த்தி, முனைவர் ஆ.குமரகுரு, சு.பாரதிதாசன் போன்றோர் ஆலோசகர்களாக உள்ளனர். இதழின் ஒவ்வொரு வார்த்தையையும் சூழலியலின் முக்கியத்துவம் உணர்ந்த ஆர்வலர்கள் மட்டுமே எழுதுவது ஆத்மார்த்தமான வெளியீட்டுக்கு உறுதியாக அமைகிறது.
சஹாராவில் இருந்து அமெரிக்காவிற்கு
ஆப்ரிக்கப் புழுதிக்கும் அமெரிக்கச் செழிப்புக்கும் என்ன சம்பந்தம். நிறைய இருக்கிறது. வடக்கு ஆப்ரிக்காவின் மூன்றில் ஒரு பகுதியை அடைத்திருக்கும் சகாரா பாலைவனம் முழுக்கக் கொட்டிக் கிடப்பது மண். அந்தப் பாலைவனம் ஒரு காலத்தில் மழை தொடர்ச்சியாகப் பொழியும் பகுதியாக இருந்தது. ஒரு காலம் என்றால் உடனே மில்லியன் கணக்கில் எல்லாம் எண்ணாதீர்கள். ஆராய்ச்சிகள் 6000 வருடத்திற்கு முன்னர்தான் சகாரா முழு பாலைவனமாக ஆனதாகச் சொல்கிறார்கள். ஆனால் செத்தும் கொடுத்த சீதக்காதி கதையாய் அது அட்லாண்டிக் தாண்டி அமெரிக்காவிற்கு கொட்டிக் கொடுக்கிறது.
புது தில்லியின் மைனா
ஒரு கோணத்தில் உலகம் சுருங்கித்தான் போயிருக்கிறது. மொத்த உலகிலும் வெப்ப தட்ப நிலை காலச் சுழற்சியோடு நம்பத்தக்க விதங்களில் மாறி வருவது என்பது கேள்விக்குரியதாகி இருக்கிறது. இது மனிதரின் பற்பல செயல்களின் கூட்டுத் தாக்கத்தால் மாறியது என்று ஒரு சாராரும், இல்லை இதுவும் தற்செயல்/ இயற்கையான மாறுதல்தான் என்றும் “புது தில்லியின் மைனா”
நீரின் பாதை
அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாநிலம் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது. அங்கிருக்கும் மியாமி நகரை நீர் கபளீகரம் செய்யுமா என்பதை நேஷனல் ஜியாகிரபிக் இங்கே படம் பிடிக்கிறது. எவர்கிளேட்ஸ் சதுப்பு நிலத்தின் உபரி நீரை பொங்கி வழியாமல் பாதுகாக்க 3,400 கிலோமீட்டருக்கு கால்வாய் வெட்டியிருக்கிறார்கள். இருந்தாலும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் உப்புநீர், “நீரின் பாதை”
பருவகாலப் பரவலியலும் தொழில்நுட்பவியலும்
லட்சகணக்கான ‘ஸ்டொமாடா’ (க்ரேக்க மொழியில் ‘ஸ்டோமா’என்றால் ‘வாய்’) என கூறப்படும் இலைத்துளைகள் மூலம் மரங்கள் கூட, மாறும் சுற்றுசூழலின் விளைவுகளைப்பற்றி பல உண்மைகளைக் கூறுகின்றன. நீர் ஆவி, கரியமில வாயு, மேலும் பிராணவாயு ஆகிய எல்லாமே இந்தத் துளைகள் வழியே இலைகளுக்குள்ளும் வெளியேயும் செல்கின்றன, அதன் மூலம் பிழைத்திருப்பதை ஒரு சவாலாக ஆக்குகின்றன….ஆனால் ஆன்ட்ரூவும் ட்ரெவரும், …மற்றொரு கட்டுரையில், கரியமிலவாயு அதிகரித்துள்ள போது, ஹார்வர்ட் காட்டின் மரங்கள், சிகப்பு ஓக் உள்பட, கூடுதலான செயல் திறனுயுடன் செயல்படுகின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். வேண்டிய கரியமிலவாயுவை உட்கொள்ள தங்களது இலைத்துளைகளை அவ்வளவு விரிவாகவோ அல்லது அவ்வளவு அடிக்கடியோ அவை திறப்பதில்லை. அப்படியென்றால் மரங்களால் குறைந்த அளவு நீர் உபயோகித்து வேண்டிய அளவு அல்லது தேவைக்கு மேலான அளவு உணவு தயாரிக்கமுடிகிறது என்றாகிறது.
சாட்சி மரம்: ஓர் ‘ஓக்’ மரம் தட்பவெப்பநிலை மாற்றத்தைப் பற்றி என்ன தெரிவிக்கிறது?
மரத்தவளைகளின் முதல் கரகரப்பொலி, நிலத்திலிருந்த பனி உருகும் தருணத்தில் மண்ணிலிருந்து எழும் தாதுப்பொருட்களின் வாசனை. முதல் இலைகள் துளிர் விடும் காட்சி, குட்டைகளில் நீர் வடிவதும் மறுபடியும் நிரம்புவதும், ஓடைகளின் பாய்வு மற்றும் காட்டுப்பூக்களின் முதல் மலர்தல். இலையுதிர் காலத்தில் நிறம் மாறும் இலைகள், கருவாலிக்கொட்டை கீழே விழும் போது கேட்கும் ‘மொத்’ என்ற சத்தம், பூக்கள் போலத் தோன்றும் உறைபனி மற்றும் குட்டைகளில் மிதக்கும் பனிக்கட்டிகள், பூர்ச்ச மரப்பட்டையின் அலாதியான கோலக்காய் போன்ற ருசி. இதோ இந்த நிலம்,சேற்றிலிருந்து அங்குள்ள கருப்பு ஈக்கள் வரை விவரச் செழுமையோடும், உன்னிப்பாகவும் கவனிக்கப்பட்டிருக்கிறது.
ஜான், காட்டினில் விடாமல் மறுபடி மறுபடி நடந்து திரிந்து பருவகாலங்களால் ஆன ஆண்டுகளைப் பற்றி விரிவான நாட்குறிப்பைச் சேகரித்து, எண். 2.5 பென்ஸிலால் தன்னுடைய சிறு கையெழுத்தில் நம் கிரகத்திற்கே தாக்கமுள்ள உள்ளூர் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார். பல பத்தாண்டு காலமாக அவர் சேகரித்த அவதானிப்புகளில் தெளிவாகத் தெரிகிறது – சராசரியாக, வசந்த காலம் சீக்கிரமாக வருகிறது, இலையுதிர் காலம் தாமதமாக வருகிறது. மற்றும் பனிக்காலம் இரண்டு பக்கத்திலிருந்தும் குறுக்கப்பட்டிருக்கிறது.
மகரந்தம்
மிஹிர் சென்னைப் போல யோசிப்பவர்கள் ஸ்வீடனிலும் சிலர் உண்டு. ஸ்வீடனில் கொஞ்சம் இடது சாரித்தனமும், கொஞ்சம் ஃபாசிசமும், கொஞ்சம் பழமை வாதமும், கொஞ்சம் அடாவடி/ தத்தாரி நாகரீகம். அங்கு வ்யூவர்டோன்யோ (Övertorneå) என்ற ஒரு சிறு நகரில், பொழுது போகாதவர்கள் நிறைய இருந்திருப்பார்கள் போல இருக்கிறது. ஆனால் சும்மா இருப்பதை விரும்பாத மிஹிர்சென் கோஷ்டி போலவும் இருக்கிறது. அதனால் ஒரு போட்டி வைக்கலாம் என்று யோசித்து அதன்படி, உலக சாம்பியன்ஷிப் விருது வழங்கும் போட்டி ஒன்றை நிறுவி இருக்கிறார்கள். அந்த ஊரில் கோடையில் கொஞ்சம் கொசுக்கள் மண்டுமாம். அந்தக் கொசுக்களை யார் அதிகமான எண்ணிக்கையில் பிடித்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இந்த விருது கிட்டும்.
கடலிற்கான உரம், இரும்பு
நாம் சின்னப்பிள்ளையாக இருக்கையில் எதையேனும் போட்டு உடைத்துவிட்டு, பின்னர் யாரும் பார்த்து திட்டப் போகிறார்களே என்று அதை மீண்டும் பழையபடி ஆக்க முயன்று, முடியாமற்போய் கையைப் பிசைந்தபடி நின்றிருப்போம் அல்லவா? அப்படித்தான் பூமியை செய்து வைத்திருக்கிறோம். ஆரம்பித்த ஜோரில் ஜே ஜே என்று எல்லாவற்றையும் அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்து, “கடலிற்கான உரம், இரும்பு”
போதிமரம்
மரங்களில் இருந்து என்ன கற்றுக் கொள்ளலாம் என்று நேஷனல் ஜியாகிரபிக் இங்கே புகைப்படக் கட்டுரையொன்றை வெளியிட்டு இருக்கிறது. மிகப் பழமையான மரம், நம் நினைவில் நீங்கா இடம் பிடித்த மரம், சாமியான மரம், விளையாட்டு ஸ்டம்ப் ஆன மரம் என பலவிதங்களை இங்கே பார்க்கலாம்.
புதிருக்கு விடை தெரியுமா?
பூமியின் தாவரங்களும் விலங்குகளும் மெள்ள மெள்ள அழிந்துகொண்டிருக்கின்றன அல்லது நசிந்துகொண்டிருக்கின்றன என அறிவோம். ஆனால், நம் காடுகள் எந்தப் பகுதியில் அழிக்கப்படுகின்றன என்றும் எந்த நாடுகள் அவற்றை பாதுகாக்கப் போராடுகின்றன என்றும் உங்களுக்குத் தெரியுமா? உங்களின் அறிவை பரிசோதித்துப் பார்க்க ஸ்பீகல் அழைக்கிறது. எடுத்துக்காட்டுக்கு முதல் கேள்வி: கானழிப்பு: “புதிருக்கு விடை தெரியுமா?”
ஸெரெங்க்கெட்டி – நாள் ஐந்து
தான்ஸானியா உலகின் மிக அதிகமான யானைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. தந்த வேட்டைக்காக, உலகில் அதிக யானைகளை இழந்த நாடு என்றும் சொல்லலாம். 2009 ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 1 லட்சம் யானைகள் இருந்தன. இன்று வெறும் 40000 யானைகளே மிஞ்சியுள்ளன என்கின்றன அரசுப் புள்ளி விவரங்கள். இவை பெரும்பாலும் தான்ஸானியாவின் மற்ற 15 தேசியப் பூங்காக்களிலும், வனங்களிலும் அதிக வசிக்கின்றன. சராசரியாக, ஒரு நாளைக்கு 30 யானைகள் தான்ஸானியாவில் தந்தத்துக்காகக் கொல்லப்பட்டிருகின்றன.
ஸெரங்க்கெட்டி நான்காம் நாள்
வண்டி, மீண்டும் சாலையேறி, தட தட தட தட.. பத்து நிமிடங்கள் கழித்து, தூரத்தில் ஒரு ஸஃபாரி வாகனம் நின்று கொண்டிருந்தது.. அதன் மேற்கூரையைத் திறந்து ஒரு சுற்றுலாப்பயணி, தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்தார்.. நாங்களும் நிறுத்தி, அண்ணல் நோக்கிய திசையை நோக்கினோம். தொலைவில், அக்கேசியா மரங்களின் குடுமியைக் கொய்து கொண்டிருந்தன சில ஒட்டகச்சிவிங்கிகள்.. முதல் முறை பார்க்கும் போது, ஒரு காட்சிப் பிழையெனத் தோன்றும்.. மரத்தை விட உயரமான விலங்கு
பிளவுப் பள்ளத்தாக்கு
மெல்ல மெல்ல வாகனம் மேடேறியது. வெறும் செம்மண் பூமி, மெல்ல அடர்ந்த வனமாகத் துவங்கியது. ஒரு 9:30 மணி வாக்கில் ங்கொரொங்கோரோ க்ரேட்டர் வாயில் தென்பட்டது. அங்கே வாகனத்தை நிறுத்தி, மேலே செல்ல அனுமதிச் சீட்டு வாங்கி வந்தார் ஜெர்ரி. இறங்கி, அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டோம். மலையேற்றம் துவங்கியது. இடது புறத்தில் ஆழமான பள்ளத் தாக்கு, அதை மூடிய பெரும் மரங்கள் என காட்சி அற்புதம் நம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை நினைவுபடுத்தியது. பனிமனிதனில், ஜெயமோகன் உருவாக்கிய, பனிமனிதர்கள் வசிக்கும் காடு போல என நினைத்துக் கொண்டேன்.
காற்று சுத்திகரிக்கும் கோபுரம்
அந்தக் கோபுரம் ஏதோ கோயில்களில் கர்மாக்கள் தொலைகிற கதையாய் உள்ளே வரும் காற்றை மாயத்தால் புனிதப்படுத்துவதில்லை. சிறுவயதில் சீப்பை பரபரவென்று துணியில் தேய்த்து சிறு காகிதத் துகள்களை ஈர்ப்பதை வைத்து விளையாடியிருப்போம் அல்லவா. முன்பு வந்துகொண்டிருந்த பிக்சர் ட்யூப் கொண்ட தொலைக்காட்சி அணைக்கப்பட்டதும் அதனருகில் போய் கைகளைக் காட்டி கையில் இருக்கும் முடிகள் குத்திட்டு நிற்பதை அனுபவித்திருப்போம். அந்தத் திரையை கூர்ந்து கவனித்தால் அதன்மேல் ஒரு மெல்லிய தூசுப் படலம் இருக்கும். இதெல்லாம் static electricity என்னும் நிலைமின்னியலின் விளையாட்டு. நேர் மற்றும் எதிர் மின்னேற்றம் செய்கிற விளையாட்டு. அதே நிலைமின்னியல்தான் இங்கு காற்றை சுத்திகரிக்கப் பயன்படுகிறது.
குளக்கரை
அறிவியல் பூர்வ முறைகளை கையாளாமல், விலங்குகளைக் கொன்று குவிக்க இந்திய அரசாங்கம் அனுமதி தந்துவிட்டது என்கிறது இந்தக் கட்டுரை. குறிப்பிட்ட வனவிலங்கானது என் பயிரை பாதிக்கிறது என விவசாயிகள் சொன்னதாகச் சொல்லி, அந்த வனவிலங்கை “பயிர் அழிப்பான்” என்று மாநில அரசு பட்டியல் இட்டு விடுகிறதாம். இந்த பட்டியலுக்குள் வந்த வனவிலங்குகளைக் கொல்வது சட்டப்படி தவறு இல்லையாம். இப்படிப் பட்டியலிடப்பட்ட வனவிலங்குகள் இந்தியாவில் மட்டுமே காணப்படும் நீல்கை மான், காட்டுப் பன்றி, மற்றும் ரூஸஸ் குரங்கு வகைகள். இந்த பிராணிகளின் எண்ணிக்கையையோ, இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் ஏற்பாடும் சூழல் பாதிப்புகளையோ அரசு கண்டுகொள்ளவில்லை என்கின்றனர் பிராணிகள் நல அமைப்பினர்.
ஆடி அடங்கும் எல் நீன்யோ
கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக உலக வானிலையையும், அதன் மூலம் பல நாடுகளின் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்த எல்-நீன்யோவின் தாக்கம் ஒருவழியாகக் குறைந்து கொண்டு வருகிறது. பெரும்பாலான வானிலையாளர்களின் கருத்துப்படி, இவ் வருட மத்தியில், அதாவது இந்திய வருடக்கணக்கில் ஆடி மாதம், அது சமநிலைக்குத் திரும்பக்கூடும் என்று தெரிகிறது.
இதற்குச் சான்றாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டுவது பின்வரும் காரணிகளைத்தான்…
ந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போனது, வடகிழக்குப் பருவமழை சக்கைப்போடு போட்டு, சென்னை வரலாறு காணாத வெள்ளத்தைச் சந்தித்தது. இதுபோல உலகத்தில் பல பகுதிகளில் அதீத மழைப்பொழிவு, மற்ற சில பகுதிகளில் வறட்சி என்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது எல்-நீன்யோ. இந்தோனேசியா, தாய்லாந்து, வியாட்னாம், பிலிப்பைன்ஸ், அமெரிக்க பசிபிக் தீவுகள் ஆகிய இடங்களில் வறண்ட வானிலையை உருவாக்கியது…
ஏற்கனவே உயர்ந்து வரும் உலக வெப்பநிலையோடு எல் நீன்யோவின் விளைவுகளும் சேர்ந்துகொண்டதால், கடந்த ஒரு வருடங்களாக பல மாதங்கள் சராசரியை விட அதிக…
மரமும் இசையும்
மரக்கட்டையின் ஒரு பகுதியை டிரௌபெக் (Traubeck) எடுத்துக் கொள்கிறார். அந்த மரத்துண்டின் பல்வேறு வண்ண மாறுபாடுகளையும் அடர்த்தி மாற்றங்களையும் ஒளிச்சிதறல்களாக மாற்றிக் கொள்கிறார். அடர் பழுப்புக்கு ஒரு தரவு. சாம்பல் நிறத்திற்கு இன்னொரு தரவு. வெளியில் காணப்படும் மெல்லிய பட்டைக்கு ஒரு ஒலித்துண்டு. நடுவே கல்லாகிக் கிடக்கும் வடப்பகுதிக்கு “மரமும் இசையும்”
மனிதமையக் கருத்தாக்கமும் சுற்றுச்சூழல் கேடும்
கடற்படை ராணுவத்தினர்களின் ( குறிப்பாக நீர்மூழ்கி கப்பல்களில் ) ரோந்து கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஒலி அடிப்படையில் இயங்கும் சோனார் எதிரொலிக்கருவிகளின் அதிர்வெண் அலைவரிசை திமிலங்களின் மூளையில் பல குழப்பங்களையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என்பது ஒரு முக்கிய காரணம். … எல்லாவற்றும் மேலாக, மனிதர்களைப்போல் விலங்குகளூக்கும் குறிப்பாக கடல்வாழ் உயிரினங்களூக்கும் தற்கொலை எண்ணம் வருவதுண்டு. கூட்டுத்தற்கொலையாகவும் இருக்கலாம். தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. ஆனால் ஒன்று சொல்லமுடியும், கடல்வாழ் உயிரினங்களின் இருப்பிடத்தை மாசுப்படுத்தி, நாசம் பண்ணினால், உயிரினங்களும் வேறு வழியின்றி கவுரமாக தன் முடிவை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
நீர் மேலாண்மையில் நாம் விழிப்புணர்வுடன் இருக்கிறோமா?
ஒரு லிட்டர் நீரில் செய்ய வேண்டிய வேலையை மூன்று லிட்டர் நீரை வாஷ்பேசின் குழாய் மூலம் செலவழிக்கிறோம். உதாரணமாகப் பல் துலக்கி வாய் கொப்பளிப்பது. இந்தச் செயலுக்கு இவ்வளவு நீரைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில்லை. முதலில் பெற்றோர்களிடம் அந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பெறுவதற்கு எவ்வளவு மின்சாரம் செலவானாலும், மின் கட்டணம் செலுத்துவதற்குத் தயாராகவே இருக்கிறார்கள். தொலை தூரங்களிலிருந்து ஐநூறு லிட்டர், ஆயிரம் லிட்டர் கேன்களில் கொண்டு வரப்படும் நீருக்குப் பணம் செலவழிக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.
காலத்தினால்….
இணையப் போராளிகள்!,வெட்டி அரட்டை கும்பல், முதிர்ச்சியற்ற இளைஞர்கள் என்றெல்லாம் பிறரால் அலட்சியமாக எண்ணப்பட்ட இளையஞர்களின் ஆற்றலை இப்பேரழிவு நாம் உணர்ந்து கொள்ள வைத்தது. ட்விட்டர் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் உலவுகையில் நான் எண்ணுவதுண்டு சினிமா கதாநாயகர்களுக்காக இவர்கள் இப்படி அடித்துக் கொள்கிறார்களே, திரையிசையைத் தவிர இளைய சமுதாயத்திற்கு வேறு இசைஞானமே இல்லையே என்றெல்லாம்… ஆனால் சென்னை மழையில் இவர்களின் பெரும் பங்கு என்னைப் போன்றவர்களின் எண்ணங்களை அடித்து நொறுக்கியது. ட்விட்டர் பேஸ்புக் மூலம் இவர்கள் மிகத் திறமையாக உதவிகளை ஒருங்கிணைத்தார்கள். இரவும் பகலும் விழித்திருந்து…
Le Rainbow Warrior – COP 21
பிரான்சு நாட்டின் அதிபர் பிரான்சுவா ஹொலாந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து உலகத் தலைவர்களுக்கு வரிசையாகக் கைலுக்க நேர்ந்ததில் தோள் சுளுக்குடன் இருப்பதாக் கேள்வி. இத்தனைக்கும் அவர் எல்லோருடனும் கைகுலுக்கவில்லை. செட்டியார் முடுக்கா சரக்கு முடுக்கா எனப்பார்த்தே வரவேற்றார். அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐரோப்பியநாடுகளின் சில தலைவர்களுக்குத்தான் அவருடைய கை குலுக்கல் கிடைத்தது. அடுத்தக் கட்டத் தலைவர்களை வரவேற்றவர் பிரான்சு நாட்டின் பிரதமர் மனுவெல் வால்ஸ். அதற்கடுத்த நிலை உலகத்தலைவர்களை வரவேற்றவர்கள் நாட்டின் வெளிவிவகார அமைச்சர்
சூழல் விழிப்புணர்வில் இரு மைல்கற்கள்
இருபதாம் நூற்றாண்டை விடவும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சூழல்விழிப்புணர்வு தொடர்பான பேச்சுக்கள் அதிகம். சூழல் விழிப்புணர்வு ஊர்வலம், மராத்தான் ஓட்டம், பள்ளிச் சிறுவர்கள் பங்கேற்பு என்று எவ்வளவோ சொல்லலாம். கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், எம் எல் ஏ, எம்.பி க்கள், சூழல் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். பற்றாக்குறைக்கு பாரத பிரதமரின் “தூயபாரதம்” கோஷமும் நல்ல பக்கபலம். இவ்வளவு இருந்தும் கூட தூய்மையான குடிநீருக்கு வழியில்லை.
கடலில் எண்ணெய்க் கசிவு
கடலில் எண்ணெய்க் கசிவினால் ஏற்படும் விளைவுகள் என்ன? எண்ணெயில் இருக்கும் எடையில இலேசான பொருட்கள் ஆவியாகி காற்றில் கலந்துவிடும். அல்லது இயற்கையான உருமாற்றம் மற்றும் உயிரியல் தரவீழ்ச்சி (bio degradation) ஏற்பட்டு மறைந்துவிடும். ஆனால் அதிலுள்ள கனமான பொருட்கள் கடலிலேயே தங்கி, கடல் வாழ் உயிரினங்களின் உடலில் எண்ணெய்ப் பூச்சாகப் படிந்து விடுவதால், சுலபமாக நகர முடியாமலும், உணவு தேட முடியாமலும், மூச்சு முட்டியும் பல உயிரினங்கள் மடியும். அதுவும் பெட்ரோலியத்தில் பலவித நச்சுப் பொருட்கள் (toxic components) இருப்பதால் அவற்றை உட்கொள்ளும் உயிரினங்கள் இறந்து போவதொடல்லாமல் புதிய உயிர்கள் பிறப்பதையும் அவை தடுத்துவிடும். இதனால் பல உயிரினங்கள் நாளடைவில் மறைந்து போகும் அபாயம் இருக்கிறது.
வளம் – வாழ்வு – வளர்ச்சி
தற்சார்பு விவசாயம் வளர வேண்டும். ரசாயன உரப்பயன்பாட்டை நிறுத்திவிட்டு இயற்கை இடுபொருட்களை விவசாயிகள் அவரவர் தோட்டங்களில் இயற்கை இடுபொருள் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். உபரி உரங்களை முழுக்க முழுக்க அரசுத்துறை உற்பத்தி செய்து யூரியா, பாஸ்பேட், பொட்டாசியம் என்று தனியார் வழங்கலுக்கு மாற்றாக பாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற பாக்டீரியா காளான் உரங்களை திரவ வடிவிலோ கரிப்பொடி கலந்தோ விநியோகிக்கலாம்.
நட்சத்திரங்கள்
கடைசியாகக் கண் குளிர நட்சத்திரங்களை நான் பார்த்தது, சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால். தொழில் நிமித்தமாகச் சவுதி அரேபியா கடற்பரப்பில், வேலை தளத்திலிருந்து கரையை நோக்கி இரவு தொடங்கும் நேரத்தில் கிளம்பி, ‘போட்’-ல் வந்த 3 மணி நேர பிரயாணத்தில்தான். சற்று குளிர் அதிகமான இரவு. எனவே என்னுடன் பிரயாணித்த அனைவரும் போட் கேபினுக்குள் ஏதோ சினிமாபார்த்துக்கொண்டிருக்க அடுத்தவர்களைப் பற்றிய அக்கப்போர் பேசிக்கொண்டிருக்க, நான் மட்டும் எப்போதும் போலத் தனியனாகப் போட் டெக்-ல் அமர்ந்து இருட்டை வெறித்துக்கொண்டிருந்தேன். பயணம் தொடங்கியதிலிருந்து, சுமார் ஒருமணிநேரம் வரையும் காணும் திசையெல்லாம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவுக்காக, பூமியை டிரில்லிங் இயந்திரங்களைக் கொண்டு வன்புணர்வின்மூலம் உருவாக்கிய துளைகள் புடைப்புகளாக எழுந்து நின்றிருந்தன. சுகப்பிரசவமாகவும் (Natural Flow) சிசேரியனாகவும் (Forced Flow – Gas Injection/Water Injection) …
முத்து – ஆழ் கடலில் ஓர் அமைதியான அழகு
இன்று இயற்கை முத்தெடுக்க முத்து குளிப்பது அறவே நின்றுவிட்டது. தமிழ் நாட்டில் தூத்துக்குடியில்தான் கடல் முத்து எடுக்க முத்துக்குளிப்பது வழக்கமாக இருந்தது. இன்று அங்கும் இந்தத் தொழில் அடியோடு காணாமல் போய்விட்டது. முத்து நகரம் என்ற பெயர் மட்டும் எஞ்சியுள்ளது.
மிஸ். குஷ்பு தக்காளி, ஜி.எம்.
நம் முன்னோர்கள் விளைநிலங்களில் மரபணு மாற்றம் செய்து தங்கள் விவசாய நிலங்களிலும் பயிர்களை உருவாக்கி இருக்கிறார்கள். பத்துப் பதினைந்து இல்லை. ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் இந்தியாவில் இருந்தன. தற்போது உலகம் முழுமையும் சில நூறு வகைகள் இருந்தாலே அதிகம். இந்தியாவில் அரிசி விதைகளுக்காகக் கூடும் சந்தை ஒன்றில், அடுத்த தலைமுறை விதையைத் தராத செடியைக்கூட நீங்கள் பார்க்கலாம்.
வயிற்றின் குரல்
அழிக்கப்பட்ட ஆற்றையோ, நிலத்தடி நீர்ச்சூழலையோ மீண்டும் உண்டாக்க எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பது மனதில் பெரும் கேள்விகளை எழுப்பும். அவற்றை மீட்டெடுக்க இயலாத சூழலில் வெவ்வேறு வழிகளில் பணத்தைச் செலவு செய்து தீர்வுகளைத் தேடும் மனிதன் தன் இனத்திற்கே துரோகம் செய்வதை மெதுவாகவே உணர்ந்து கொள்வான்.
பூத்துக் குலுங்கும் கொன்றை, மருதம், மனோரஞ்சிதம்
சூழல் பற்றியும், இயற்கைசார்ந்த உயிரினங்கள் பற்றியும் எழுதும் நல்லாரைச் சொல்வனம் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும் ஒரு பத்திரிகை. இந்தத் தேடலில் நமக்குச் சமீபத்தில் கிட்டிய ஒரு அறிஞர் ஜெகநாதன். இவர் ஒரு வன உயிரியலாளர். இந்த இதழில் இவரது கட்டுரைகள் பூக்கள் பற்றி அமைந்திருக்கின்றன.
மண்புழு – சிற்றிதழ் அறிமுகம்
உயிர் வாழ்வின் ஆதாரங்களில் ஒன்றானது நீர். அது மாசுறும்போது விளையும் கேடுகள் நாமறிந்தவையே. இவை, நம்முடைய தகவல் தளம் எனும் பொதுத்தளத்துக்குள் இதுவரை வந்தவை. அதை ஊடகங்களின் துணையுடனும் நாமறிவோம். ஆனால், பரவலாக பெரும்பான்மையினர் மத்தியில் பேசப்படாத அறிந்துகொள்ளப்படாத தற்போதைய சூழலில் அத்தியாவசியப்படுகின்ற ஒரு தகவலை கட்டுரையின் மையப்புள்ளியாகக் கொண்டு எழுதியமைக்காக நன்றிகூற விரும்புகிறேன்
தூக்கி எறியப்படும் தூக்குக்கயிறுகள்
பலவித மின்னணு உபகரணங்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. கைபேசியின் வசீகரம் மக்களை அடைந்த அளவிற்கு அதன் பயன்பாட்டு முறைகள் மக்களை அடையவில்லை. இன்னும் சொல்லப் போனால் எப்படி அதன் கழிவுகளைக் கையாளுவது என்று தெரியாமலேயே இந்தியச் சந்தைக்குள் இவை வந்துவிட்டன. ஒரு கைபேசியோ, மின்கலமோ அல்லது மின்னணு உதிரிபாகங்களோ உபயோகமற்றுப் போகும்போது அதனை சாதாரணக் குப்பையுடன் போடக்கூடாது. இவைகள் குறிப்பிட்ட ஈரப்பதத்திலோ, வெப்பத்திலோ எளிதில் விடத்தைக் கக்கும் அபாயம் கொண்டவை.
தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்
காலங்காலமாக வேளாண் உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக விளங்குபவை தீங்குயிரிகளே. இவற்றை அழிப்பதற்கெனப் பூச்சி கொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை சம்பந்தப்பட்ட தீங்குயிரிகளை அழிப்பதோடு மட்டும் நின்றுவிடாது சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தி விடுகின்றன. மேலும், பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தும் மனிதர்கள், அண்மையில் வாழும் ஏனைய உயிரினங்கள் முதலியனனவற்றுக்கும் இவை தீமை விளைவிக்கின்றன.
சர்ச்சை மூட்டும் பச்சை நிறமே – இறுதி பாகம்
பல்வேறு துறைகள் சக்தியை பலவாறும் உபயோகிக்கப்படுகின்றன. அதே போல, இயற்கை வளங்களும் பல வகைகளில் உபயோகிக்கப் படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு காகிதத் தொழிற்சாலை என்று வைத்துக் கொண்டால், அதன் நீர், மின்சாரம், மரம் மற்றும் வெப்ப உபயோகம் ஒரு வகையில் இருக்கும். ஆனால், ஒரு அலுமினியத் தொழிலில், மரம் தயாரிப்பில் உபயோகிக்க மாட்டார்கள். ஏராளமான கனி வளம் மற்றும் மின்சாரம் உபயோகிக்கப் படும். எப்படி, அலுமினியத் தொழிலையும், காகிதத் தொழிலையும் ஒரே முறையில் அளவிடுவது? அத்துடன், இந்திய காகிதத் துறைக்கும், ஸ்வீடன் நாட்டு காகிதத் தொழிலையும் எப்படி அளவிடுவது?
உணவின்றி வாடுமா உலகு?
உணவு உற்பத்தியில் வளர்ச்சி காணும்போது தூய நீரின் பயன்பாடும் அதிகரிக்கிறது. ஆறுகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் நீரில் 70 விழுக்காடு விவசாயத்திற்கு உபயோகிக்கப்படுகிறது. உற்பத்தியினைப் பெருக்குவதாயின் அதற்குத் தேவையான நீரின் அளவும் அதிகரிக்கவே செய்யும். எனவே நீரின் தேவை சுமார் 80 முதல் 90 விழுக்காடுவரை உயரலாம் என எதிர்பார்க்கிறார்கள். இதனால் இன்று உயிர்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளில் பல வற்றிச் செயலற்றுப் போகும்.
சர்ச்சை மூட்டும் பச்சை நிறமே
முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி, அல் கோர், (Al Gore) புவி சூடேற்றம் மற்றும் அதனால் உண்டாகும் தீய விளைவுகளைப் பற்றி எல்லோருக்கும் புரியும்படி பவர்பாயிண்ட் காட்சியளிப்பு செய்து நோபல் பரிசையும் தட்டிச் சென்று விட்டார். அவர் தலைவலியைப் பற்றி சொல்லப் போய், உலகிற்கு திருகு வலி வந்த கதைதான் போங்கள்! ஒரு புறம் தீய விளைவுகளை விஞ்ஞானிகள் விளக்கோ விளக்கென்று விளக்குகிறார்கள். யாராவது, ஏதாவது, செய்வார்கள் என்று யாரும், எதையும், செய்யாமல் ஒரு 6 வருடம் போயே போய்விட்டது! அட, பிரச்சனையை அழகாக சாட்சியங்களுடன் சொன்ன விஞ்ஞானிகள் ஏன் அதற்கான தீர்வுகளைச் சொல்லவில்லை?
ஜிப் லாக்கில் அரை நாள்
மண்புழுவை தெய்வம் போல மதிக்கவேண்டும் என்பது தெரியவில்லை. அதை உபாதை செய்யக் கூடாது என்று பெரியவர்கள் அடித்துச் சொல்லிக் கொடுப்பார்கள். எந்தப் பூச்சியையும் கொல்லக் கூடாது என்பதும் வீட்டில் சொல்லித் தருவார்கள். பல்லிகள் வீடெங்கும் உலா வரும். சமையல் உள்ளில் மட்டும் அவற்றை உலாவ விடுவதில்லை. சாமி உள் எனப்படும் பூஜை உள்ளில் பல்லிகளுக்கு பூரண சுதந்திரம். அங்கு கரப்புகள் அவ்வப்போது நடமாடும் என்பதால் இருக்கலாம். நம் ஊர் சாமிகளுக்கும் கரப்புகளுக்கும் ஏதோ கரிசனம் கலந்த உறவு.
குருவி பிடித்த காலம்
ஒரு வயதுக்குப் பிறகு குருவி பிடிக்கும் பழக்கம் நின்று விட்டது. சொல்லப் போனால் நாங்கள் எல்லோருமே குருவிகளின் பாதுகாவலனாக மாறத் தொடங்கினோம். அடுத்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குருவி பிடிக்க முனைந்த போது, பறவையிலாளர் சலீம் அலி ரேஞ்சுக்கு அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம். சிறுவயதில் சலீம் அலியும் குருவிகளைப் பிடித்து வறுத்துத் தின்றதாக தன்னுடைய சுயசரிதையில் (The fall of a Sparrow) எழுதியிருக்கிறார்.
ஆழ்கடலின் விந்தைகளும், அச்சங்களும்
ஹார்ப் திட்டத்தின் ஒரு குறிக்கோள்- மிகத் தாழ் அதிர்வலைகளை உருவாக்குவதுதான்(ELF அலைகள்). இந்த ஈஎல் எஃப் அலைகள் திரட்சியான பூமியையும், கடல்களையும் ஊடுருவிச் செல்லக் கூடிய ஆற்றல் உள்ளவை. நீரில் ஆழத்தில் மூழ்கி இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களோடு தொடர்பு வைக்க இந்த அதிர்வலைகளை பாதுகாப்புப் படைகள் பயன்படுத்துகின்றனர். இதைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இலக்குகளை அழிக்க முடியும்.
ஆயிரம் தெய்வங்கள் – பகுதி 2
சொர்க்க லோகத்தைக் கண்டுபிடித்த எகிப்திய மதமாகட்டும், கிரேக்க மதமாகட்டும் மன்னர்களுக்கு மட்டுமே சொர்க்கவாசல் தருகிறது. கடவுள் மன்னனை தண்டிப்பதில்லை. மன்னனே கடவுள். இப்படிப்பட்ட அகங்காரத்தைத் தட்டிக்கேட்டதால் தகராறு வந்தது. தவறு செய்தால் மன்னனுக்கும் தண்டனை உண்டு. ஆண்டவனின் ராஜ்ஜியத்தில் ஏழை பணக்காரன் இல்லை. இப்படியெல்லாம் பேசியதால் ஏசுவுக்கு தண்டனை கிடைத்தது.