இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம்

ரயிலோடு பின்னிப்பிணைந்து அமையும் கதைகளில் அவர் ரயிலை ஒரு கதாபாத்திரமாகவே கருதி இசை அமைக்கிறார். இதை ‘ஆலாபனா’ என்ற தெலுங்கு படத்தின் பின்னணி இசையிலிருந்து எளிதாக அறியலாம். இந்தியத் திரையுலகில் ரயிலை மையமாக வைத்து இசையமைக்கப்பட்ட பாடல்கள், பின்னணியிசைக் கோப்புகளைக் கணக்கில் கொள்ளும்போது இளையராஜாவின் இடம் அதில் நிச்சயம் முதன்மையானதாக இருக்கும்.

பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்

காய்கள் பழுக்கத் தொடங்கினால் பக்கத்து வீடுகளிலிருந்து பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் அவளை ஏமாற்றிவிட்டு பழங்களைக் கொண்டுபோய் விடுவார்கள். கோபத்தில் கிழவிக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கும்.

மனிதன்+

பரிணாம இட்லிப் பானையில் மெல்ல மூளை வெந்து பக்குவப்படும் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஃபாஸ்ட் ட்ராக்கில் நாமே நம் பரிணாமத்தை அமைத்துக்கொள்ளலாம். இந்தப் போக்கு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இண்டர்நெட்டில் புகுந்தவுடன் ஒரு தேன்கூட்டின் அறிவு போல் ஒத்து யோசித்து ஒரே மாதிரி செயல்படுகிறோம். ஒரே எம்.பி-3 பாட்டை லட்சம் பேர் பதிவிறக்கம் செய்கிறோம். அதிக நேரம் தூங்காமல் விழித்திருக்க, கவனத்தைக் கூர்தீட்டிக்கொள்ள, மருந்துகள் இருக்கின்றன. (சாப்பிடாதீர்கள்.)

சிதலும் எறும்பும் மூவறிவினவே

இந்தப் பரிசோதனைகள் அனல் பறக்கும் விவாதங்களைக் கிளப்பின: எறும்புகளால் காற்றில் வரும் ஓசைகளைக் கேட்க முடியுமா? அல்லது பியானோவைப் போன்ற திடப் பொருள்களின் வழியாக உருவாக்கப்படும் அதிர்வுகளை மட்டுமே அவற்றால் உணரமுடியுமா? அவை தங்களுக்குள் ‘பேச’, ஒலிகளை மேற்கண்ட எந்த வழியிலேனும் எந்த அளவுக்கு உபயோகிக்கின்றன? இவை பற்றிய உண்மைகளை நாம் இன்னமும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம்.

வாசகர் எதிர்வினை

பொதுவாக இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளை தாண்டிச் செல்லவே நான் விரும்புவேன். அதையே முதல் இரண்டு இதழ்கள் வெளியான போதும் செய்தேன். ஆனால் மூன்றாம் இதழில் அப்படி என்னதான் இருக்கிறது எனப் படிக்க முற்பட்டபோது எவ்வளவு அருமையான கட்டுரைத் தொடரை இழக்க இருந்தேன் எனத்தெரிந்தது.

சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி?

பிரிவினை மற்றும் உரிமை கோரலுக்கான பொறி எந்தப் பகுதியிலாவது தோன்றினால், அதைச் சமாளிப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் வழிமுறை ஒன்றே தான் – கோரிக்கையாளர்களைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்குவது, தொடர்ந்து தாக்கி ஒடுக்குவது. உறுதியுடன் தாக்கி ஒடுக்குவது. திபெத்தில் அவர்கள் செய்வதைப் போல.

ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 2

‘நான் அன்று பார்த்த பறவைகள் என் நினைப்பில் தங்கிவிட்டன. என் வாழ்வின் ஜீவாதாரமே அவர்கள் தான். இந்த உலகத்தில் இசை, கலை, இலக்கியம் போன்ற எதுவுமே எனக்கு முக்கியமில்லை. இந்த பறவைகள் காண்பித்த காட்சி, அதன் சத்தம் மட்டுமே போதும்’

அமெரிக்காவில் ஜெயமோகன்

அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.

மூதாதையர்களின் தாகம்

ஹம்பியைக் குறித்ததொரு புகைப்படக் கட்டுரையை அதன் வரலாற்றோடு சேர்த்து எழுதினேன். அதை ஒரு பிரபலமான புகைப்படப் பத்திரிகைக்கும் அனுப்பி வைத்தேன். அவர்கள் அந்த வரலாற்றையெல்லாம் நீக்கி விட்டு, புகைப்படத் தொழில்நுட்பத்தைக் குறித்து எழுதித் தருமாறு கேட்டார்கள். ஹம்பியின் வரலாற்றை நீக்கிவிட்டு அந்தக் கட்டுரையைப் பிரசுரிக்கவே தேவையில்லை என்று நிர்தாட்சயண்மாக மறுத்து விட்டேன்.

மகரந்தம்

சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி. இந்த இதழில் இடம்பெறும் பகுதிகள்: மனம் பிறழ்ந்த கலைமனம், கணிணித் தகவலில் ஒரு துளி “சிவம்” – இன்னும் பல.

மைசூர்ப் பட்டணத்து மல்லர்கள்

குஸ்திக் கலை மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு காலத்தில் தாம் மல்லராக இருந்ததாகப் பிறரிடம் சொல்லிக்கொள்வது அவருக்கு அவமானமாக இருந்தது. தன்னுடைய கம்பீரமான கலைவடிவம் ஒன்றை மறந்துவிட்டு, தளுக்கு நிறைந்த நகரமாக இன்று தன்னைக் காட்டிக்கொள்ளும் மைசூரில், நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் ஒருவரிடம் நான் பேசிய சந்தர்ப்பம் அது.

அலை

பெரியம்மையிடம் கேட்டேன். ஏன் சொல்லாம கொள்ளாம போயிட்டீங்க? இருபது வருஷம் இருக்குமா என்றாள். நான் ரொம்ப யோசித்து இருக்கும் என்றேன். இப்ப வந்து ஏம் போனீங்கயேங்கேல. நினைப்பு தட்டமாட்டேங்கே என்றாள்.

கனவுகளின் நிதர்சனங்கள்

வள விநியோகம், அதிகாரப் பகிர்வு போன்றவை இந்த புதிய முயற்சிகளின் அடிநாதமாக அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலானவை, அந்நோக்கங்களின் எதிர்மறைப் புள்ளியை சென்றடைவது வரலாற்றின் ஆகப்பெரும் முரண்நகை.

வீகுர் இனப்பிரச்சனையின் ஒரு வேர்

இயல்பிலேயே தங்களுக்கென தனி அடையாளத்தையும், கலாச்சார ரீதியாக தனித்துவம் பெற்றிருந்த உய்குர்கள், எக்காலத்திலும் தங்கள் மீதான சீன அரசின் அடக்குமுறையை சிறிதும் விரும்பவில்லை. வரலாற்றில் உய்குர் மக்கள் அவர்களின் கலைதிறனுக்காக பெரிதும் புகழப்படுபவர்கள்.

அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – ஓர் அறிமுகம் – பகுதி 1

மனிதர்களை ஒரு பொதுவான தளத்தில் வைத்து எடை போடும் போது இரண்டு நிலையினராக பிரிக்க முடியும். அறிவு சார்ந்து இயங்குபவர்கள், உணர்வு சார்ந்து இயங்குபவர்கள். பெரும்பாலும் நாம் அனைவருமே இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் பல்வேறு விகிதாசாரங்களில் இயங்குகிறோம்.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

கண்ணுக்குத் தெரியாத ஏஜெண்டுகளால் நாம் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்ற நம்பிக்கை நம்மை ஆவிகளின் உலகுக்கு அப்பாலும் இட்டுச் செல்கிறது. உயிர்களை மேலிருந்து கீழாக (ஒரு படியமைப்பில்) படைத்த ஒரு ’புத்திசாலித்தனமான வடிவமைப்பாளன்’கூட நம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஏஜெண்டே.

வன்முறையின் வித்து – இறுதிப்பகுதி

மாஓவின் அடுத்த சுய-விளம்பரம் 1960-களில், சீனாவில் கொடிய பஞ்சம் நிலவிய காலகட்டங்களில், பெரிய அளவில் நடைபெற்றது. அந்த வருடத்தில்(1960) மட்டும் 20 மில்லியன் மக்கள் பசியால் மடிந்தனர். அதே காலகட்டத்தில், மாஓ பிறநாடுகளில் இருந்த இடது-சாரி அமைப்புகளுக்கு பணத்தை வாரி வழங்கி, வேற்று நாட்டு மக்களிடமும் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்த முயன்றார். இந்த காலகட்டம் தான் ஆராய்ச்சியாளர்களால் மிகுந்த கவனத்திற்கு உட்படுத்தப் பட வேண்டியதாக கருதுகிறேன்.

ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 1

1914 ஆம் ஆண்டு சிபேலியஸ் தன் இரண்டாம் ஒத்திசைவை அமெரிக்காவின் மேடைகளின் ஒலிக்கவிட்டார். தனக்கு முன்னாலேயே தன் புகழ் அமெரிக்க மண்ணை மிதித்திருந்ததைக் கண்டு சந்தோஷம் அடைந்தார். ஆனால் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மக்களும், இசை விமர்சனங்களும் தன்னை மறந்துவிடுமென அவர் நினைத்து பார்த்திருக்கமாட்டார்.

எமன்

எங்கள் வீட்டின் நான்கு குடித்தனங்களுக்கும் சொர்க்கம் நிச்சயம் மேலேதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீட்டின் மொட்டை மாடிதான் எங்கள் சொர்க்கம். பெரிய திடல் மாதிரி அது இருக்கும். நாலு பக்கமும் மூன்றடி உயர கைப்பிடிச் சுவர் மொட்டை மாடியை ஒரு குளம் மாதிரி காட்டும். சிறுவர்கள் விளையாட்டு மைதானம் அதுதான்.

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – இறுதிப் பகுதி

குளோபல் வார்மிங் என்ற அறிவியல் கருதுகோள் இன்றைய உலக அரசியலின் ஒரு பகுதியாக வெற்றிகரமாக நிறுவனப்படுத்தப்பட்டு விட்டது. குளோபல் வார்மிங் என்ற பெயரில் வெளியிலிருந்து வரும் அத்தனை அழுத்தங்களையும் பாரதம் நிராகரிக்க வேண்டும்.

சில்வர் டோன்ஸ்

பாடகர்கள்,வாத்தியக் கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் அந்தக் குழுவில் இருந்தாலும் அந்த வயதுக்கேயுரிய ரசனையோடு எனக்கு டிரம் வாசிப்பவரின் மீதுதான் காதல். அகலக் காலர் வைத்த சட்டை பித்தான்களை திறந்து விட்டு கழுத்துச் சங்கிலி தெரிய ஸ்டைலாக குச்சிகளை சுழற்றியபடியே
அவர் டிரம் வாசிக்கும் போது டிரம்முடன் சேர்ந்து என் மனமும்
அதிரும்.

மகரந்தம்

எயிட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? தென்-கொரிய இளைஞர்களை பொருளாதாரத் தேக்கம் எந்த அளவில் பாதித்திருக்கிறது? அமெரிக்கர்கள் தொலைத்த முக்கியமான ரகசிய ஆவணங்கள் என்னவானது?

வெட்டவெளியில் மோதும் உடுக்கையொலி

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிவராம காரந்த் கன்னடத்தில் எழுதிய நாவல் இது. காலம் கடந்து வந்திருந்தபோதிலும் இன்றைய சமூகத்தின் கரிய நிழல் நாவலில் படிந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். தீர்வில்லாத அக்கேள்விக்குச் சமூக விடுதலை மட்டுமே சரியான தீர்வை வழங்கமுடியும். ஒடுக்கப்பட்ட தலித்துகளை முதன்முதலாகப் பிரதானமான கதைப் பாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு என்று இந்த நாவலைச் சொல்லலாம்.

வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை

இருவரும் மிகச்சிறந்த பாடகிகள். இருவருக்கும் இதயக்கோளாறு இருக்கிறது. ஒருவர் இதயக்கோளாறுடனே தொடர்ந்து பாட முயற்சிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார். இன்னொருவர் அதே சமயத்தில் இதயநோயின் காரணமாகப் பாடுவதைக் கைவிட்டு ஒரு இசைப்பள்ளியின் ஆசிரியராகப் போகிறார்.

பேரரசின் தொலைந்த தொடுவானங்கள்

மத்திய அரசுடைய நிதிப்பற்றாக்குறை நாட்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைச் சமாளிக்க வேகம் வேகமாக அரசுடைய கடன் பத்திரங்களையும், பண நோட்டுகளையும் அச்சடித்துத் தள்ளுவார்கள். இதனால் ஏற்படும் பணவீக்கம் சமூகத்தைக் குதறி எடுத்து விடும். கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக விற்ற பொருள் என்ன தெரியுமா? கைத்துப்பாக்கிகளும், ரைஃபிள்களும்தான்.

கல்லா நீள்மொழிக் கதநாய்

ஒருவர் செய்வதைப் பார்த்து அதேபோலச் செய்யமுயலும் திறனுள்ள சில மிருகங்களுக்குப் பேசும் சக்தி உண்டு என்று தாங்கள் நிரூபித்திருப்பதாக விஞ்ஞானிகளிலேயே ஒரு பிரிவினர் அறிவிக்கக்கூடும். அப்படி நடந்தால், அது பற்றி நாம் வியப்படையக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – பகுதி 2

அரசியல் கலப்பற்ற அறிவியலாக இந்த விவாதம் இருந்திருந்தால் டாக்டர். மான் குழுவினரின் MBH98 வரைபடம் அடுத்த சில ஆண்டுகளிலேயே தவறான வழிமுறைகளை அடிப்படையாக்கியது என்று தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்தான். ஆனால் குளோபல் வார்மிங் 1970லிருந்தே படிப்படியாக அரசியலாக்கப்பட்டு, 1988இல் IPCC மூலம் நிறுவனப்படுத்தப்பட்டு இருந்தது.

ஏக்கத்திலாழ்த்தும் சிவரஞ்சனியும், இளையராஜாவின் வால்ட்ஸும்

இந்த கார்ட் ப்ராக்ரஷனை அதன் ட்யூனோடு சேர்த்து கீபோர்டில் வாசிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் ஒரு மேற்கத்திய செவ்வியல் வடிவமைப்பைப் போலவே இப்பாடலின் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் முழுமையான ஹார்மோனி துணையை (Harmonic Accompaniment) உருவாக்கியிருக்கிறார் இளையராஜா.

முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்

ராஜ மார்த்தாண்டனுக்கு பிடித்தமான உலகம், அவருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தரும் உலகம், மரங்களின், பறவைகளின், பூக்களின், குழந்தைகளின் உலகம் தான். அவரது சிறந்த கவிதைகள் இவற்றைப் பற்றியன தான். இந்த உலகில் அவர் ஆழ்ந்து விடும் போது அவரிடமிருந்து பிறக்கும் கவிதைகள் ஒரு ஜென் ஞானியின் உலகிற்கு நம்மை இட்டுச் செல்லும்.

வன்முறையின் வித்து – ஓர் உரையாடல் – பகுதி 2

தன் மூத்த மகன், கொரிய போரில் இறந்தபோது கூட மாஓ எந்த வருத்தமும் கொள்ளவில்லை. தன்னுடன் வார இறுதிகளையும், விடுமுறைகளையும் கழித்த தன் மகனின் விதைவையிடம் கூட இந்த செய்தியை இரண்டரை வருடங்களுக்கு பிறகுதான் தெரிவித்தார். கம்யூனிஸ ரகசிய நடவடிக்கைகளுக்கு பழகிபோயிருந்த அவரது மருமகளும், தன் கணவனிடமிருந்து தனக்கு எந்த கடிதமும் வராததை குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை.

மகரந்தம்

சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி. இந்த இதழில் இடம்பெறும் பகுதிகள்: சீனாவின் மன நோயாளிகள், ஈரான் தேர்தல், சந்திரயான் புகைப்படங்கள், மரபணு வித்தியாசங்கள் – இன்னும் பல.

பெயரிலென்ன இருக்கிறது?

‘புதுமைப் பித்தன்’, ‘மௌனி’ போன்றவர்களது கதைகளைப் படிக்காமல் அந்தப் பெயர்களைக் கேட்கையில் கொஞ்சம் கூச்சம் ஏற்படுகிற மாதிரி இருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் பெயராக அவை இருந்ததனால் அவை சாதாரணமாக ஏன் பொருத்தமாகக் கூட ஒலிக்கின்றன. ‘ஜெயகாந்தன்’ வெற்றியை ஈர்ப்பவர் என்றும் ‘ஜெயமொகன்’ வெற்றியை நேசிப்பவர் என்றும் பொருள் ஆகின்றன. ‘

‘ஒளி வரும் வரை’ – கவிதைகள்

….கோயில் தூண்களில் சேரும் உடல்கள்
காலத்தின் வாசனை கோயிலுக்குள் மணக்கிறது
கற்பூரம்போல…..

அக்ரகாரத்தில் பூனை

தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குப் பின்புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வர் அக்ரஹாரம் ‘ப’ வடிவில் இருந்தது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்கசாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது…

திசை

அம்மன்புரத்தில் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதிக்கத் தொடங்கினோம். எனக்கு லேசாக தலை சுற்றியது. அதற்குப் பிறகு சைக்கிள்தான் எங்களைக் கூட்டிக் கொண்டு போனது. அடுத்த ஊரான திருச்செந்தூர் வர ரொம்ப நாளானது. ஒருமாதிரியாக செந்திலாண்டவன் சன்னிதியை அடைந்தோம். சட்டையைக் கிழற்றிவிட்டு சன்னிதானம் முன் நின்றோம். எனக்கு இரண்டு முருகர்கள் தெரிந்தனர். ஷண்முகர் சன்னிதியில் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை தரிசிக்கப் போன போது அங்கு அவர்கள் ஒரு கூட்டமாக ஒரு பெரிய கூட்டுக்குடும்பமாகக் காட்சியளித்தனர். கோயிலை விட்டு வெளியே வந்து கடற்கரையில் விழுந்தோம்.

வன்முறையின் வித்து – ஓர் உரையாடல் – பகுதி 1

ஸ்டாலினின் இளமைக்காலம் குறித்தான Young Stalin எனும் புத்தகத்தை எழுதத் துவங்கியபோது, புத்தகத்தில் அவர் செய்த எந்த வித கொலைக்குற்றத்தையும் பதிவு செய்ய நேராது என்றே நினைத்தேன். ஆனால், தனது 22 வயதிலேயே, தனக்கு துரோகம் புரிந்ததாகக் கருதியோரை எல்லாம் அவர் “அகற்றினார்”.

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – பகுதி 1

பூமிப்பந்து சூடடைவது என்பது ஏதோ 20-30 வருட காலக்கணக்கில் முடிவு செய்யக்கூடியது அல்ல. ஏனெனில் பூமியின் வயது பல பில்லியன் வருடங்கள். பூமிப்பந்து எரிகுழம்பு வழிந்தோடும் பரப்பாக இருந்திருக்கிறது. பனியுகத்தில் பனிப்பாளங்களால் நிரப்பப்பட்டு இருந்திருக்கிறது. பிறகு மீண்டும் சூடாகியிருக்கிறது. பனிப்பாளமாய் இன்று இருக்கும் ஐஸ்லாந்தில் ஒருகாலத்தில் வைக்கிங்குகள் விவசாயம் செய்திருக்கிறார்கள்.

மகரந்தம்

சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி. இந்த இதழில் இடம்பெறும் பகுதிகள்: லெபனான் தேர்தல், அணு ஆயுதங்களின் வரலாறு, கிழக்குஜெர்மனி குறித்த ரகசிய ஆவணப்படம், கண்ணீரின் தேவை என்ன? கூகுள் Vs மைக்ரோசாஃப்ட் தொடரும் யுத்தம்.

அறிவியல் கல்விக்கான சமுதாயத்தேவை

பிராந்திய இயற்கை வளங்களையும் அதனுடன் தன் வாழ்வு பின்னிப்பிணைந்து கிடப்பதையும் சிறிதும் உணராமல் நம் மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளிவந்து பட்டமும் பெற்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு அறிவியல் என்பது முற்றிலும் மேற்கத்திய விஷயம்; வெள்ளைக் கோட்டுடன் வெள்ளைத் தோலுடன் இணைந்த ஒரு பண்பாட்டு அன்னியம்.

இந்திய இசையின் மார்க்கதரிசிகள்

ஒரு இசைக்கலைஞர் இசைப் பாரம்பரியமே இல்லாத ஒரு குடும்பத்தில் பிறக்கும் முதல் தலைமுறை இசைக்கலைஞராக இருக்கலாம். அப்படிப்பட்டவர் சிறு வயதிலேயே மேதையாக விளங்கி, ஒரு புதிய இசைக்கருவியிலோ அல்லது இசை வடிவத்திலோ சிறந்து விளங்கவும் நேரிட்டால், அந்த இசைக்கலைஞரில் நாம் இசையுலகின் ஒரு மார்க்கதரிசியைக் காண்கிறோம். இப்படிப்பட்ட மூன்று மார்க்கதரிசிகளால் நம் இசைக்கு மாண்டலின், சாக்ஸஃபோன், ஸ்லைட் கிடார் என்ற மூன்று புதிய இசைக்கருவிகள் கிடைத்திருக்கின்றன.

ஒலிக்காத குரல்கள்

கோபிகிருஷ்ணனின் இந்த நூலை வாசிக்கும் எவர் ஒருவரும் நிச்சயம் ஒரு கட்டத்தில் நாமும் மனநோயாளிதானோ என்று யோசித்தே தீரவேண்டும் என்று நினைக்கிறேன். மிகச்சாதாரண விஷயங்கள் முதல், அதிர வைக்கும் விஷயங்கள் வரை இந்நூலில் மனநோயாக நடமாடுகின்றன.

திலீப்குமாரின் இலக்கிய உலகம்

தனது வாழ்வில் நிகழ்ந்த பலவிதமான அனுபவங்களையும் மிக நுட்பமான நகைச்சுவை உணர்வுடன் தீலீப்குமார் சித்தரிக்கும் பொழுது நம் மனதில் அந்தச் சிறுகதைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவரது ஒவ்வொரு சிறுகதையும் மனிதாபிமானத்தையும் சிக்கலான மனித உறவுகளையும் தொட்டுச் செல்பவை.