திதர்கஞ்ச் சாமரம் சுமக்கும் பெண் சிலை

“அந்த நாளையப் பெண்சிற்பம் அமைக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தச்சிலையின் அமைப்பும் உள்ளது. ‘யட்சி’ அல்லது ‘யட்சினி’ என்று குறிப்பிடப்படும் இச்சிலையின் எழில் காண்போர் கிளர்ச்சியுறும் விதமாக உள்ளது. பெருத்த மார்பகங்களும், குறுகிச் சிறுத்த இடையும், அகன்ற இடைப் பகுதியும் தொடைகளும் கொண்ட சிலையின் கழுத்தில் சாமுத்திரிகா இலக்கணம் என்று பெண் உடல் அமைப்பை அந்நாட்களில் கூறிய விததிற்கேற்ப நீள வாட்டமாக மூன்று கோடுகளும், (griva trivali) வயிற்றில் மூன்று சதை மடிப்புகளும் (Katyavali) அமைந்துள்ளன. சிலை நிமிர்ந்து நிற்காமல் சிறிது முன்புறம் சாய்ந்த விதமாக இருப்பது பணிவைக்காட்டுவதாக உள்ளது. உதட்டுச் சுழிப்பில் மெல்லிய புன்னகையின் சாயல் உற்று நோக்கினால் மட்டுமே புலப்படுகிறது. சிலையின் வலதுகால் சற்றே முன்னால் மடங்கியுள்ளது. சாமரத்தை உறுதியாகப் பற்றியிருக்கும் கைவிரல்கள் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன…

கம்போடிய அங்கோர் வாட்டில் இந்தியத் தொல்பொருள் ஆய்வகம்

1992 ம் வருடம் கம்போடிய நாட்டின் புகழ்பெற்ற புராதன கோவிலான அங்கோர் வாட்டில் பழுது பார்த்து சரி செய்யும் பணியை இந்திய தொல்லியல் ஆய்வகம் மேற்கொண்டிருந்தது. ஆனால் அந்த பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது. அதைப் பற்றி விசாரித்து எழுதும்படி ஒரு தினசரி என்னிடம் கேட்டிருந்தது.

திருமெய்யம் கல்வெட்டு: பரிவாதிநி

புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டம் மலையக்கோயில் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிற்குடைவரையின் கிழக்கு நோக்கிய நுழைவாயிலையொட்டி, தென்புறச் சுவரில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மேலே செவ்வக வடிவில் கட்டம் கட்டி, பல்லவ கிரந்த எழுத்துகளில் “பரிவாதிநிதா” எனப் பெரிய வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது. கீழே, சிறிய வடிவில் பல்லவ கிரந்தத்திலும், தமிழிலும்

” என்னே ப்ரமாணம்
செய்த வித்யா பரிவாதினி கற் [க] “

என்றும், அதனையடுத்துத் தமிழில் சற்றே பெரிய வடிவில்…

தவளைகளின் பாடல்

பிராம்மணர்கள் உச்சாடனம் செய்யும் வேத ஒலிகள். வேத சமுதாயத்தின் முதன்மையான சடங்குகள். இருந்தாலும் தவளைகளின் ஒலிகளுடன் இணைத்து சிலேடையாக காட்டுகின்றன இப்பாடல்கள். ஏன்? இதை இயற்றியவர்களின் நோக்கம்தான் என்ன?