தேர்தல் பணிக்கு வந்த நான் உள்ளிட்ட பல பெண்கள் அலைபேசியில் வீட்டை நிர்வகித்துக் கொண்டு இருந்தோம். ’’அரைமணிநேரம் மோட்டாரை போடு, அப்பாவுக்கு பரிமாறிடு, வாசற்கதவை நல்லா பூட்டிக்கோ, சாமி விளக்கேற்று,’’ என்றெல்லாம்.
ஒரு இளம் தாய் தன் கணவரிடம்’’ ஏங்க, பாப்பா உந்தி உந்தி கட்டிலிலிருந்து நகர்ந்து ஃபேனுக்குள்ள கையை விட்டுருவா,கொஞ்சம் பாத்துக்கங்க ’’என்ற பின்னர் தாழ்ந்த குரலில்’ “ இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துடாதீங்க. பாப்பா பாவம்,’’ என்றார்.
Category: கட்டுரை
மருந்தில்லா மருத்துவத்தின் மயக்கும் கதை
மயக்கம் தெளியும் சமயம் இரு தரப்பினரின் காதிலும் கேட்கும்படி உண்மையான அறுவை சிகிச்சையில் என்ன செய்யப்பட்டதோ அதை மருத்துவர்களும் உதவி செய்த செவிலியர்களும் கூறுவர். போலி அறுவை சிகிச்சையும் நிஜ அறுவை சிகிச்சையும் ஒரே அளவு குணத்தை உண்டு பண்ணியது என்ற ஆச்சரியமான முடிவு இந்த ஆய்வின் மூலமாகத் தெரியவந்தது.
கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’
அயோத்யா சர்ச்சை பலமுறை எழுப்பப்பட்டாலும் முடிவான விவரத்தைச் சொல்ல மறுக்கிறது இப்புத்தகம். ஒருகாலத்தில் இது இந்துக்களின் கோவில் என்ற பாத்தியதைக்குச் சட்டபூர்வமான ஆதாரங்கள் உள்ளன என்ற புதிய விவரம் எங்குமே தலைகாட்டவில்லை.
பய வியாபாரியா ஹிட்ச்காக்?
ஆனால் நியாயமாகப் பார்த்தால், கேலிக்கு உள்ளாக்கும் சம்பவங்களை நோக்கினால் அவற்றிலிருந்து ஹிட்ச்காக் தன்னையும் விட்டு வைக்கவில்லை. ஹிட்ச்காக்கின் கோமாளித்தனம் பற்றி விளக்கம் தேடுவதானால், அது உலகம் அவரைக் கேலி செய்வதற்கு எதிரான ஒரு தற்காப்பு உத்தி என்று சொல்லலாம் என்கிறார் பான்வில். அவருக்குத் தன் பெரும் இடுப்பின் அளவு, உருண்டைத் தலை, மூன்று மடிப்புடன் தொங்கும் தாடை ஆகியன குறித்துச் சுயக் கூச்சம் நிறைய இருந்தது.
குங்குமப்பூவே!
கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் சிறு நகர்களில், மகப்பேறு மருத்துவமனைகளுக்கும் கிளினிக்குகள் அருகிலிருக்கும் சின்னச் சின்ன மருந்தகங்களில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமச்சிமிழ் போன்ற சிறு பெட்டிகளில் 700 லிருந்து 1000 ரூபாய்கள் வரை கொடுத்து சில கிராம் குங்குமப்பூ வாங்கி செல்லுவதை சாதாரணமாகக் காணலாம். உண்மையில் இந்த ஏழை எளியவர்கள் வாங்கிச் “குங்குமப்பூவே!”
மொபைல் தொடர்பாடல் வரலாறு-2G
2G இலக்க முறை செல்லுலார் தர நிலைகளைப் பொருத்தவரை, ஒவ்வொரு பெரிய பொருளாதாரமும் தனித்தனி தர நிலைகளை உருவாக்கிக் கொண்டன. உலகின் பெரும்பாலான மொபைல் செல்லுலார் இலக்கமுறை 2G அமைப்புகள் கீழ்க்கண்ட தரநிலைகளில் ஒன்றைப் பயன்படுத்துகின்றன:
ஐரோப்பாவின் GSM 900, GSM1800; TDMA தொழில்நுட்பம்
வட அமெரிக்காவின் IS-95A CDMA சிஸ்டம் ; CDMA தொழில் நுட்பம்
வட அமெரிக்காவின் IS-136(D-AMPS) சிஸ்டம் ;TDMA தொழில் நுட்பம்
ஜப்பானின் PDC (Personal Digital Cellular) சிஸ்டம்
வாழ்க்கை, காக்கை, ஹிட்ச்காக்
நகுல சகதேவர்களுக்கும், ஆக்டேவியா பட்லருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
இவரும் ஓரளவு நாடுகடத்தப்பட்டு, அகதி போல வாழ்வில் பெரும்பகுதியைக் கழித்த ஆஃப்ரிக்க இனப் பெண்மணி என்பது ஒரு ஒற்றுமைக் குணமாக இருக்குமோ?
ஆனால் தான் பட்ட துன்பங்களின் சாரத்தை யோசிக்கும் ஆக்டேவியா பட்லருக்கு, மனிதரில் ஒரு சாராருக்குப் பிறரின் துன்பத்தைச் சிறிதும் உணர்ந்து பார்க்கும் திறன் இல்லை என்பது நன்கு புரிந்திருக்க வேண்டும். அதற்கு எதிராக சிலருக்கு சுற்றிலும் இருப்பவர்களின் எல்லா மனத் துயரங்களும் (சந்தோஷங்களும்தான்) உடனே புரிவதோடு அவற்றைத் தம்முடைய உணர்வுகளே போலப் புரிந்து கொள்ளும், உணரும் திறன் கிட்டினால் என்ன ஆகும் என்பதுதான் அவர் கற்பனை.
ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?
வாட்சன் ஹெல்த் நிறுவனத்தை ஐபிஎம் விற்கப்போகிறது. ஏன் இது தோற்றுப் போனது? மக்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ்) கனவுகளிலிருந்து எழுந்திருக்க வேண்டுமா? இந்தத் தோல்வியிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்? ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய சிகிச்சை (ஹெல்கேர்) பிரிவைக் கைவிட்டுவிட்டது. இவர்கள் இரு முக்கிய சந்தைகளில் “ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?”
பரோபகாரம் – நாட்டுக்கு நாடு
தனி குடிமக்கள், நிறுவனங்கள், மஹா கோடீஸ்வரர்கள் போன்றவர்களை எல்லாம் தாண்டி, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு உதவுவது உருப்படியான செயல்முறையா? அந்த உதவிகளால் நாடுகள் பெரிதாக முன்னேறுகின்றனவா அல்லது அந்த உதவும் கரங்களையே நம்பி உருப்படாமல் போகின்றனவா என்றொரு பூதாகாரமான கேள்வி பரோபகார திட்டங்களை அலசும் வட்டங்களில் உலாவிக்கொண்டே இருக்கும்.
கோவிட்-19 கால மனநலமும் இனநலமும்
தீநுண்மித் தொற்று காலத்தைப் பொருத்தவரை, அதுவரை என்ன மன நலனில் மூத்தோர் இருந்தார்களோ, அதைக் காப்பாற்றிக்கொள்ளவே அரும்பாடுபட வேண்டியதாக இருக்கிறது.
புவிக்கோளின் நான்கு வடமுனைகள்
நிலவியல் பதிவுகளின்படி, புவிக்கோளின் நெடு வரலாற்றில் இதுவரை 183 முறை புவியின் காந்தப்புலம் தலைகீழாக மாறியிருக்கிறது; வெகு அண்மைய மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டது. சூரியனின் காந்தப் புலத்திலும் இதைப்போன்ற தலைகீழ் மாற்றங்கள் நேர்வதுண்டு.
பொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்
காலப்போக்கில் பொடுவா இனத்தினர் பாடுவதைக் குறைத்துக்கொண்டு ஓவியங்கள் வழியே மட்டும் கதை சொல்பவர்களாக மாறினார்கள். காலிகட் பொடுவா ஓவியர்கள் மெதினிபூர் தாலுகாவிலிருந்து வரும் இந்துக்கள். இன்று பல முஸ்லிம் மதத்தினரும் ஓவியர்களாக இருக்கிறார்கள். ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைளை வரைந்தாலும், முன்னதே பிரதானமாகக் காட்சிக்குக் கிடைக்கிறது. பாம்புகளின் அரசியான மானசா தேவி, யமன், காளி, சீதா, ஜடாயு, சூர்பனகை போன்றவை அதிகம் வரையப்படுகின்றன.
பிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்
மரபையும் நவீனத்துவத்தையும் இணைக்கும் புள்ளிகளையும் செயல்முறையையும் கண்டறிந்து விளக்கிய பாதல் சர்க்கார் தனது செயல்பாட்டுத் தளங்களிலும் பயிற்சி முறைகளிலும் அதனைச் சோதனைசெய்து காட்டியதோடு, நாடகப்பனுவலாக்கத்திலும் செயல்படுத்திக் காட்டியவர். அதன் ஆகச் சிறந்த பனுவலாக இருப்பது ஏவம் இந்திரஜித்.
சக்தி சட்டோபாத்யாய் கவிதைகள்
தன் முப்பதாண்டு படைப்பு வாழ்க்கையில் இவர் எழுதிக் குவித்த கவிதைகள் ஏராளம். கணக்கு வழக்கில்லை. 45 தொகுப்புகள், சுமார் 2500 கவிதைகள் என்று ஒரு கணிப்பு.(poemhunter.com). 10000 கவிதைகளுக்கு குறையாமல் தேறும் என்று இன்னொரு கணிப்பு….இவரோடு 38 வருடங்களாகப் பழகிய சமீர் சென்குப்தா( Samir Sengupta) தன் நினைவோடையில், சக்தி சட்டோபாத்யாய் தான் எழுதியவை எவ்வளவு, என்னென்ன என்று கூட கவனிக்காதவரென்றும், இவரைப் போல் தன் படைப்புகளின் மேல் பற்றற்றவராக யாரும் இருக்க முடியாதென்றும் பதிவு செய்கிறார்.
பாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது
தோல்வியுறாத மனத்திடத்துடன் தனக்காக அமைத்துக் கொண்ட வாழ்வுப்பாதையில் அசையா நம்பிக்கையுடன் முன்னே செல்லும் ஒரு மனிதரையே எதிர்கொண்டேன். வீட்டிற்குச் செல்லும் வழியை வரைபடமாக அனுப்பிவைத்து, தெர்மோஸ் ஃபிளாஸ்கில் டீயை எனக்காகச் சூடாக வைத்திருந்த கனிவான ஒரு முதியவரையும். லாவோசில் சமீபத்தில் நிகழ்த்திய பட்டறையை நினைவுகூர்ந்து, எவ்வளாவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு துரிதமாக மீண்டும் களத்திலிறங்குவதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அபாரமான நாடகத்துறையாளரையும். நகரவாழ்வைப் பற்றிய சர்காரின் விமர்சனங்களின் கூர்மை காலத்தால் இன்னமும் மழுங்கடிக்கப் படவில்லை.
குரல் கொடுப்பதிலிருந்து இடம் கோருவது வரை
சத்திரிய இளவரசி அம்பிகா, இனப்பெருக்கம் செய்வதற்கான ஒரு கருவியாக மட்டும் தான் பயன்படுத்தப்படுவதை விரும்பவில்லை. எதிர்க்கிறாள். ஓர் இளவரசியாய்த் தனக்கு பண்பட்ட வகையான இன்பத்தின் எதிர்பார்ப்புகள் உள்ளன என அவள் சுட்டிக் காட்டுகிறாள்.
கவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்
இவர் வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டச் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாலும் பின்னர் அதிலிருந்து தன்னை முற்றாக விடுவித்து ஆன்மீகம் மற்றும் மெய்யியல் சார் விடயங்களுக்குள் அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியா மற்றும் வங்கம் ஆகிய இரு நாடுகளினதும் தேசிய கீதங்களைப் படைத்தை பெருமையும் இவரையே சாரும்.
நாட்டிற்கு உழைத்த நமது நல்லவர்கள்: பங்கிம் சந்திர சாட்டர்ஜி
‘வந்தே மாதரம்’ ஒரு சொல் – ஆம், ஒரே ஒரு சொல் – ஒரு தேசத்தின் விடுதலைப் போரில் முக்கிய இடம் பிடிக்க முடியுமா? ஒரு சொல் அந்நியர்களை விரட்டும் போர்க் கருவியாக இருக்க முடியுமா? ஒரு சொல் அது கேட்பவர்களின் மனத்தில் சுதந்திரத் தாகத்தையும் வீரத்தையும் உண்டாக்குமா “நாட்டிற்கு உழைத்த நமது நல்லவர்கள்: பங்கிம் சந்திர சாட்டர்ஜி”
நீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை
மதவெறியாலும் சுயநலத்தாலும் இயக்கப்பட்டு இந்த விரோதம் பகிரங்க யுத்தமாக ஆக நேரமாகவில்லை. ‘முஸ்லீம் குடியானவர்கள் ஆனந்தமயீ கோயிலுக்கடுத்த நிலத்தில் தொழுகை நடத்தப் போகிறார்களாம்.’ அது மசூதியல்ல. அது ஒரு பண்டைய கால இடிந்த கோட்டை – அது ஈசாகானுடையதாக இருக்கலாம் அல்லது சாந்தராயோ கேதார்ராயோ கட்டியதாகவுமிருக்கலாம். அந்த இடததில் தொழுகை நடத்தும்படி முஸ்லீம்கள் தூண்டப் படுகிறார்கள்.
…. நாவல் முன்னேற முன்னேற இன்னும் பல அழகிய காட்சிகள் தம் கண் முன்னே விரிகின்றன. தர்முஜ் வயல், பாக்குப்பழம், சீதலக்ஷா நதியின் நீர், அந்த நீருடன் உவமிக்கத் தக்க வானத்தின் பிரவாகம், பறவைகளின் கூட்டிசை, மிருகங்கள்… அது ஒரு தனி உலகம்.
தன் வெளிப்பாடு – முன்னுரை
நாவலின் கருப்பொருள் நமக்கு நாலா பக்கத்திலும் இருக்கிறது என்பதை முதன் முதலில் உணர்த்தியது. … அவருடைய உறுதியற்ற, தயக்கம் நிறைந்த கண்ணியமான ஆண்பாத்திரங்களுக்கு மாறாக அவர் படைத்த, உயிர்த் துடிப்பு மிக்க பெண்பாத்திரங்கள் விதிக்கு சவால் விடுபவர்களாக இருக்கிறார்கள் … இந்தியத் தன்மை என்பது இந்துத் தன்மை அல்லது பிராமணியம் அல்ல; அது மனிதத்துவத்தின் சுயநிறைவு பெற்ற இந்தியப் பகுதி.
வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்
வங்காளி என்ற சொல்லுக்கு, ஒரு மொழிக்குழுவின் அடையாளம் என்ற நிலையைத் தாண்டி, ஒரு வசீகரத் தொனியைக் கொண்டு வந்ததற்குக் காரணமாக, 1890-1910 கால இடைவெளியில் வங்காளத்தில் கிளைத்தெழுந்த காலனிய எதிர்ப்பு நோக்கம் கொண்ட, புத்தெழுச்சிக் கற்பனையுடன் உருவான தேசியம் என்ற பெரு நிகழ்வுதான். அதன் உச்சகட்டம், ஸ்வதேஷி இயக்கம் (1905-08) என்று அழைக்கப்பட்ட திரட்சி.
சத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு
இந்தப் படத்தில் ஒப்பு மின்சாரத்தை முதல் முறையாக எதிர்கொள்கிறான். (கல்கத்தாவில் அவனுடைய அறையில் ஒரு மின்சார பல்பு பொருத்தப்பட்டிருக்கிறது, அதை அவன் தன் அம்மாவுக்கு மகிழ்ச்சியோடு எழுதுகிறான்.) முதல் படத்தில் எதிர்காலத்திலிருந்து வந்த மாயாஜாலப் போக்குவரத்து சாதனங்களாகத் தெரிந்த ரயில் வண்டிகள் இப்போது ஒப்புவின் அன்றாட வாழ்வில் பகுதியாகி விட்டிருக்கின்றன.
சர்ச்சில் இந்தியாவை எப்படிப் பட்டினிபோட்டார்!
கடும் பஞ்சம் ஏற்பட்டதற்கு, யுத்த அரங்குகளில் பயன்படுத்தவும் பிரிட்டனின் நுகர்வுக்காகவும் இந்தியாவிலிருந்து மிகப் பெரும் அளவிலான உணவு ஏற்றுமதி செய்யப்பட்டதே காரணம் என்று முகர்ஜி குறிப்பிடுகிறார். பஞ்சம் ஏற்பட்டிருந்தும் இந்தியா 1943 வருடம் ஜனவரியிலிருந்து ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 70,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. அந்த உணவு கிட்டத்தட்ட 4 லட்சம் மக்களை ஒரு முழு ஆண்டுக்கு உயிருடன் வைத்திருக்கும்.
பரோபகாரம் – தன்னார்வுலா
பிறருக்கு உதவுவது என்றால், பணத்தை நன்கொடையாகக் கொடுப்பது மட்டும்தான் என்பதில்லை. சிரமதானம் என்று சொல்லப்படும் உழைப்பை நன்கொடையாகக் கொடுக்கும் வழக்கு, நாலு பேருக்கு இலவசமாகச் சாப்பாடு போடுவது, கிட்னி / ரத்தம் / கண் தானம், அறிவுரை / புத்திமதி போன்றவை வழியாகப் பிறருக்கு வாழ்வில் முன்னேறச் சரியான “பரோபகாரம் – தன்னார்வுலா”
நார்டிக் மர்ம இலக்கியத்தைக் கொன்றது யார்?
விற்பனை என்று பார்த்தால் லார்ஷொன் விதிவிலக்கான ஆனால் பிரும்மாண்டமான ஓர் அளவை அடைந்திருந்தார், அவருடைய (லிஸ்பெத்) ஸாலாண்டெர் வரிசைப் புத்தகங்கள் உலகெங்கும் 10 கோடி (1000 லட்சம்) பிரதிகள் போல விற்றிருக்கின்றன. ஒப்பீட்டில் யோ நெஸ்போ, இந்த வகை இலக்கியத்தின் எழுத்தாளர்களில் உயிரோடிருப்பவர்களில், மிக்க வெற்றி பெற்ற ஒருவர், அவர் தன் ஒரு டஜன் நாவல்களின் மூலம் 400 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறார்- மாங்கெல்லோடு ஒப்பிடத் தக்க அளவு விற்பனை இவருடையது…
பரோபகாரம் – நம்பகத்தன்மை
உலகின் பல நாடுகளில் ஒரு நாளைக்கு $2க்கும் குறைவான பணத்தில் வாழும் ஏழை மக்கள், மாத அல்லது வார சம்பளம் பெறுபவர்கள் இல்லை. அவர்கள் வருமானம் நாளுக்கு நாள் நிறைய வேறுபடுகிறது. நுண்கடன் அமைப்புகளால் அவர்கள் வருவாயை சீராக்க முடிந்தால் அதுவே அவர்களுக்கு பெரிய உபகாரமாக இருக்கும். அவர்களுக்கு நூறு ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, கட்டணங்களுடன் நூற்றி நாற்பது ரூபாயை திருப்பி கொடுத்தே ஆக வேண்டும் என்று அவர்கள் கழுத்தில் கை வைப்பதை விட, அத்தகைய சீரான வருவாய் நிலையை அடைய சேமிக்க உதவுதல், காப்புறுதி வழங்குதல் போன்ற உதவிகள் பன்மடங்கு பலனைத் தரும் என்கிறார் ரூட்மேன்.
பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?
பேச்சுரிமை அது சடாரென்றுதான் எனக்கு நிகழ்ந்தது. ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருப்பார்கள். சொல்வனம் இயங்கும் வோர்ட்பிரெஸ் தளத்தில் என் வலைப்பதிவை வைத்திருந்தேன். அந்த வலைப்பதிவில், ஆங்கிலத்தில் பல இடங்களில் வரும் விஷயங்களைச் சுட்டு, மறுபதிப்பாக என் தனி வலையாகச் சேமிப்பது வழக்கம். ஹார்வார்டு பிஸினெஸ் ரிவ்யூ போன்ற “பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?”
நன்றி இந்தியா, நல்லிரவு (ப்ரிஸ்பேனிலிருந்து)
அஜிங்க்ய ரஹாணேயின் புன்னகைக்கு நன்றி. இந்த தொடரின் ஆன்மாவுடன் ஒன்றிணைந்த புன்னகை அது. ஆட்ட வர்ணணையாளர்கள் இடத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷத்தையும் முரட்டுத்தனத்தையும் குறித்து உரக்க குரல்கள் எழுந்துகொண்டிருந்த போது ரஹாணே புன்னகைக்க மட்டுமே செய்தார். பின் வென்றார்.
அமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா?
இந்தியர்கள் என்றால் மருத்துவம், கணிணி சார்ந்த துறைகளில் மட்டுமே கோலோச்சுகிறவர்கள் என்கிற பொதுக்கருத்து இந்த நியமனங்களின் மூலமாக உடைபட்டிருக்கிறது. பைடனின் ஆட்சி அதிகாரத்தில், துணை அதிபரில் துவங்கி நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவலாக இந்திய முகங்கள் தென்பட ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தரும் நல்ல மாற்றம்.
இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?
50, 20-ஓவர்களென ஒரு நாளைக்குள் கதை முடிந்துவிடும் வகையான வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் உலகில் பிரபலமாகிவிட்ட காலமிது. லட்சோபலட்சம் ரசிகர்களின் கவனம் பெரிதும் இந்தப்பக்கம் இருப்பதால், கிரிக்கெட்டின் மூலமும் பணம்பார்க்க ஆசைப்படும் கார்ப்பரேட் ஸ்பான்சர்களின் பார்வையும் இங்கேதான். வருமானமின்றி கடை ஓட்ட முடியுமா என்ன? கிரிக்கெட்டின் சர்வதேசத் தலைமை “இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?”
சூரிய ஒளியால் தோலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் மருந்துகள்
சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள், குறிப்பாக (320-400) நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்கள்-A (UVA) தோல் செல்களில் உள்ள மூலக்கூறுகளால் உறிஞ்சப்படும்போது நச்சு வினைகளைத் தோல் செல்களில் உண்டாக்குகின்றன.
இணையவழி: கற்றலும் கற்பித்தலும்
பல வண்ண உடைகளில் கிளர்ந்து ஒளிரும் இளமையுடன் இருக்கும் மாணவர்களைக் கண்ணுக்கு கண் சந்தித்துப் பாடமெடுத்ததற்கும் மாற்றாக, நான் யாரை நோக்கிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே தெரியாமல், நான் பேசிக்கொண்டிருப்பதை யாரேனும் கவனிக்கிறார்களா இல்லையா என்றும் தெரியாமல் 40 / 50 நிமிடங்கள் பேசுவதென்பது பெரிய கொடுமையாக இருந்தது.
கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை
ஹெரால்டு பிண்ட்டர் தனது நோபெல் உரையை இப்படித் தொடங்குகிறார்: ”எது நிஜம் எது நிஜமில்லை என்பவற்றுக்கு இடையில் உறுதியான வித்தியாசங்கள் இல்லை. அதேபோல் எது உண்மை எது பொய்மை என்பவற்றுக்கு இடையேயும் இல்லை. உண்மை, பொய்மை என்ற இரண்டில் ஒன்றாகத்தான், ஒன்று இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது உண்மை பொய்மை என்ற இரண்டாகவும் இருக்கலாம்.”
முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள்
வெண்முரசின் தொடக்கமான முதற்கனல் யுகசந்தி எனும் சொல்லுக்கு ஏற்ப குல தர்மத்தை மீறி எழும் அறத்தைப் பேசுகிறது. மஹாபாரதம் எனும் விதைநிலம் வேதத்துக்கும், மேலான மானுட அறத்துக்கும், அசுர வேதத்திலிருந்து கிருஷ்ண வேதத்துக்கு ஏறிச்செல்லும் வழியாக அமைகிறது. அதற்கு மானுட இச்சையே ஒரு காரணம் எனவும் அதற்கான சமானமான சக்திகளின் உருவாக்கமும் அழிவுமே மஹாபாரதத்தின் விளைநிலம் என்பதை முன்வைக்கும் நாவலாக முதற்கனல் உருவாகியுள்ளது.
அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம்
இத்தனை கடுமையான எதிர் கொள்ளவேண்டியிருக்கும் சவால்களுக்கு, சோதனைகளுக்கு மத்தியில் காந்தி போன்ற ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு உண்டு, முக்கியமாகச் சுய எள்ளல் உண்டு என்பதே முதலில் ஆச்சரியமான விஷயம். ஆனால் சற்று யோசித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பது புரியும்.
உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை
விஞ்ஞானக் கோட்பாடுகள், பொதுவெளிப் பத்திரிகைகளில் வரும் செய்திகள் போன்றவை அல்ல. கோட்பாடுகள், திறமை பெற்ற சக விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்படவேண்டும், அத்துடன், கோட்பாடுகள் ஊர்ஜிதப்படுத்தத் தகுந்த சோதனை முடிவுகளுடன் வெளிவரவேண்டும். அத்துடன், சில விஞ்ஞான அளவுகளை ஒரு நல்ல கோட்பாடு, கறாரான கணக்கீடுகள்கொண்டு ஊகிக்கவும் வேண்டும்.
ஃபிலிப் லார்கின்: சாதாரண உன்னதம்
லார்கின் படைப்புகளில் இரு நிலையான சரடுகளைக் காண முடிகிறது, அவற்றுக்கு இடையிலான முரணியக்கம், அவரது கவிதைகளுக்கு ஒரு தனிச்சுவை அளிக்கிறது: ஹார்டிய “இங்கேயே இப்போதே” என்ற இருப்பும், யேட்ஸ்சிய காலாதீதத்தன்மை என்ற இரண்டும் அவரது முதிர்ந்த கவிதைகளிலும்கூட தொடர்ந்து தென்படுகின்றன.
ஒரு போராட்டத்தின் கதை
தமிழக முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 21, 2015 அன்று வீட்டில் இல்லை. அன்று சனிக்கிழமை – அலுவலகமும் கிடையாது. எங்கே போயிருந்தாரோ – ஆனால் அவர் இல்லாதது நல்லதாகப் போயிற்று. கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவர் வீட்டு வாசலில் இரண்டு, மூன்று போலீசார் மட்டுமே. போயஸ் கார்டனின் கெடுபிடிக்கு “ஒரு போராட்டத்தின் கதை”
ஓஸோன் அடுக்கில் ஓட்டை
வெளியேறிய குளோரின் அணு ஓஸோன் மூலக்கூறுடன் வினைபுரிந்து, ஓஸோன் மூலக்கூறை மீண்டும் ஆக்ஸிஜன் மற்றும் குளோரின் மோனாக்ஸைடாக மாற்றிவிடும். வெளியேறிய ஆக்ஸிஜனுடன் குளோரின் மோனாக்ஸைடு மீண்டும் வினைபுரிந்து, இன்னோர் ஆக்ஸிஜன் மூலக்கூறு மற்றும் குளோரின் அணு உருவாகும். ஒரு குளோரின் அணு ஒரு லட்சம் ஓஸோன் மூலக்கூறுகளை அழிக்கும் சக்தி வாய்ந்தது.
பைடனின் மந்திரி சபை
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இன்று வரை அதிபர் ட்ரம்ப் தான் தேர்தலில் தோற்றுவிட்டதை ஒப்புக்கொள்ளவும் இல்லை, தேர்தலில் வெற்றிபெற்ற பைடனை புதிய அதிபராக அவர் அங்கீகரிக்கவும் இல்லை. நடந்து முடிந்த தேர்தலில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், பைடன் தரப்பினர் மோசடி செய்து “பைடனின் மந்திரி சபை”
நீலச்சிறுமலர்-ஸ்வேதை
தாவரவியல் சுவாரஸ்யமானதும், அதன் அடிப்படைகளையாவது அனைவரும் அறிந்து கொண்டிருக்க வேண்டியதுமான இன்றியமையாத ஒரு துறை. அதிலும் தாவர அறிவியல் பெயர்களும் அவற்றின் பொருளை அறிந்து கொள்ளுவதென்பதும் மிகமிக சுவாரஸ்யம். ஒரு தாவரத்தின் வட்டார வழக்குப்பெயரானாலும், ஆங்கிலப் பொதுப்பெயரானாலும், லத்தீன் மொழியிலான தாவர அறிவியல் பெயரானாலும் சரி ஒவ்வொன்றும் மிகச்சுவாரஸ்யமான “நீலச்சிறுமலர்-ஸ்வேதை”
வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020
கடந்த இருபது ஆண்டுகளாக, முன்னுதாரணங்கள் சொல்ல இயலாத வகையில், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், கணினியில், செயற்கை நுண்ணறிவியலில், உயிரியல் சார்ந்த துறைகளில் காட்டும் வேகம் அளப்பரியது. உலகளாவிய சவால்களை எதிர் கொண்டு ஏற்புடைய தீர்வுகளை அளிக்கும் சாத்தியங்கள் உள்ள இந்த நுட்பங்கள், தவறாகப் பயன்படுத்தப்படுமாயின் என்ன கேட்டினைக் கொண்டு வருமென்றும் சிந்திக்க வேண்டும்.
ராட்சச எண்ணெய்க் கசிவுகள்
எண்ணெய்த் தொழில் வழக்கப்படி Premex நிறுவனம், பாதி எண்ணெய் வெளிவந்தவுடன் எரித்துவிட்டோம், கொஞ்சம் ஆவியாகிவிட்டது, மற்றதைக் கவனத்துடன் அப்புறப்படுத்தி விட்டோம் என்று மார் தட்டிக்கொண்டது. இந்த எதையும் தனிப்பட்ட பாரபட்சமில்லாத எந்த ஓர் அமைப்பும் உறுதி செய்யவில்லை.
P.O.T.S – ஒரு மீள் பார்வை
சில ஆண்டுகளாக POTS (Plain Old Telephone System – வெற்று வயோதிகத் தொலைபேசி அமைப்பு) என்ற பெயரால் பரிகசிக்கப்பட்டுவரும் தரைவழித் தொலைபேசி அமைப்பு, அடிப்படையில் முறுக்கு இணை (twisted pair) தாமிரக் கம்பிகள்மூலம் இடையறாது குரல் குறிகைகளை அனுப்புதலாகும். இது 1876-ல் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக நிலைத்திருக்கும் தொழில் நுட்பம் .
இராஜேந்திரனின் காதலி
பனங்காடுகள் நிறைந்த அந்த இடத்தின் ஒரு பகுதியில் சம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற பனங்காட்டேஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் கோவில் கொண்டிருந்தார். ஒரு காலத்தில் பாடல் பெற்று புகழ் கொண்டு விளங்கிய அந்தத் தலத்தின் தற்போதைய நிலை கண்டு ராஜேந்திரன் இதயம் கலங்கியது. கோவிலைப் புனர்நிர்மாணம் செய்ய உத்தரவிட்டான். தவிர அந்தப் பணியை தன்னுடைய அணுக்கியான பரவையே முன்னின்று நடத்தவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தான். பனங்காட்டேஸ்வரரான ஈசன் ‘பரவை ஈஸ்வரமுடையார் மகாதேவர்’ என்ற பெயராலும் அந்த ஊர் பரவை புரம் என்ற பெயராலும் அழைக்கப்படட்டும் என்று ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்
ஆட்டோ வான் பிஸ்மார்க்தான் ஜெர்மனியில் கிறிஸ்துவ தேவாலயத்திடமிருந்து கல்வியாதிக்கத்தைக் கலாசாரப் போர் (kulturkampf) என்ற பெயரிட்டுப் பறிக்க முயன்று தோல்வியடைந்தார். அதுமுதல், பொருளாதாரத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து சச்சரவுகளுமே கலாசார யுத்தமாகவே எல்லா நாடுகளிலும் கருதப்படுகிறது. சச்சரவுகள் சிலசமயம் ஒரேவிதமாக இருந்தாலும் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு விதமாக அவற்றை அணுகுகின்றன.
அந்தக்காலத்து தீபாவளி
Any sufficiently advanced technology is indistinguishable from magic. – Arthur C. Clarke தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு வருடமும் அந்தக்காலத்தில் இந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவோம் என்று விவரித்து ஒரு சிறுகதையோ கட்டுரையோ வந்து சேரும். அந்தக்காலம் என்று கருதப்படுவது ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு “அந்தக்காலத்து தீபாவளி”
ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள்
பழமை விரும்பும் நீதிமன்றத்தை அமைத்துச் சென்ற டிரம்ப் பரபரப்புக்கு பஞ்சமில்லாத அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சில தினங்களே இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் ட்ரம்ப் அரசு காட்டிய ஆர்வமும் அவசரமும் ஜனநாயக கட்சியினரிடையே பல கேள்விகளை எழுப்பியது. மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் கின்ஸ்பெர்க்கின் “ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள்”
விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன
6. கடந்த 100 ஆண்டுகளாக நடந்துவரும் இதுபோன்ற நடவடிக்கைகளை, ஒரு எண்ணெய்த் தொழில் தில்லாலங்கடி என்றே சொல்லவேண்டும். விஞ்ஞான முறைப்படி அணுகினாலும் இவர்களுடைய அணுகுமுறையில் எந்தவிதமான பயனும் இல்லை. ஆயினும், இவர்கள் நடத்தும் நாடகம் ஒவ்வொரு முறையும் சற்று வேறுபட்டு இருந்தாலும் கடைசியில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள்.
தத்துவப் பூனை
மூட நம்பிக்கையைச் சாடி தன் ‘கீதப் பூங்கொத்து’ பாடல் நூலில் பிரும்ம ராயர் இப்படிச் சொல்கிறார்:
‘போகும் வழியிலோர் பூனைதான்
எந்தப் புறம் சென்றால் உனக்கென்ன?
அந்தந்த ஜீவன் இயற்கையாம்-இதில்
அச்சங் கொண்டேகுதல் ஏனடா?’