ஆழி

ஹிமாலயம் என்பது இந்தியாவின் மேற்கு வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு பகுதி வரை சுமார் 2400 கிமீ பரப்பளவில் விரிந்திருக்கும் அற்புத சாம்ராஜ்ஜியம். வானம் தொட்டு நிற்கும் பனிமலைத் தொடர்களாலும் ஆழமான பள்ளத்தாக்குகளாலும் நிரம்பிய பூலோக சொர்க்கம். சுமார் அறுபத்தைந்து  மில்லியன் ஆண்டுகளுக்கு இந்து மகா சமுத்திரத்தில் அமிழ்ந்திருந்த “ஆழி”

காற்றில் கலக்கும் பேரோசை

கிரெடிட் சூயிஸ் மற்றும் யூ பி எஸ் யின் சங்கமம் சிறிய அளவில், அதுவும் சில அன்னிய வர்த்தகங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனச் செய்திகள் வந்தாலும், இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாக இல்லை. மார்ச் 2021ல் ரூ 9.6 ட்ரிலியனாக இருந்த வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.175.4 ட்ரில்லியனாக வளர்ந்துள்ளது- அதாவது, ஜி டி பியில் (GDP- Gross Domestic Product) 45% ஆக இருந்தது 67.6% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்தியா பொறுப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். வர்த்தகங்கள் குறையும், வாடிக்கையாளர் அல்லது நுகர்வோரின் நம்பிக்கைகள் குறையும்

அன்று செயலழிந்தல மருபொழுது

இன்று இந்தியாவில் தான் உலக அளவில் இளைஞர்கள் அதிகம். மூன்றில் ஒருவர் இளைஞர் என்கிறார்கள்.  ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைப்பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைவாக இருந்துவருகிறது. வளரும் அறிவியல் சூழலில், சராசரி வயது உலகெங்கும் ஏறிக்கொண்டே வருகிறது. நான் வாழும் சிங்கப்பூரில், சராசரியாக முதியவர்கள் தொண்ணூறு வயது “அன்று செயலழிந்தல மருபொழுது”

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

 காதல் காட்சிகளில் கூட ’’அடடே இந்த  மால்வாவிஸ்கஸ் மலர்ச்செடிகள் பின்னால் இன்னும் கொஞ்ச நேரம் அவர்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்திருக்கலாம், செடியை பார்த்தே ரொம்ப நாளாச்சு ’’என்று அங்கலாய்ப்பது,  காதலர்கள் பெயர் பொறித்திருக்கும்  மரப்பட்டைகளை கண்டவுடன் ’’இது முதலை மரப்பட்டை அப்படின்னா இது மருத மரம்தான்’’ என்று கூவுவது, ’’என்னதிது  பாட்டில் தாமரைன்னு வருது,  இவங்க என்னமோ அல்லிக்குளத்தில் நீந்தறாங்களே’’ என்று கொதிப்பது,

தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – 3

குண்டலினி உருவகத்தின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் நேர்ப்பொருள் மட்டுமே கொள்ளப்பட்டதினாலான இந்து மத ஆன்மீகத் தாழ்ச்சியின் துவக்கம் என இதைக் கூறலாம். ப்ரபஞ்ச சக்தியான குண்டலினி சக்தியைக் கையகப்படுத்தி சாமான்ய மனிதர்களும் மேல் நிலையை அடையும் யோக வாய்ப்பு இவ் வகையிலேயே பல்லாயிரத்தாண்டுகளாக இழக்கப்பட்டு வந்திருக்கிறது.

வியாகூலத்திற்கான மரபணுவை (Anxiety Gene) அழிப்பது இனி சாத்தியமே!?

வியாகூலக் குறைபாடைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் தற்போதைய மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளின் செயல்திறன் மிகவும் குறைவு. மேலும் பாதிப்புக்கு ஆளானோரில் பாதிக்கும் மேற்பட்டோர், பல மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை வழிமுறைகளைப் பின்பற்றி, பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்ட பிறகும், போதிய நிவாரணம் கிடைக்கவில்லை என்று ஏராளமான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அந்நியனின் அடிச்சுவட்டில்

என் இலக்கிய அறிமுகம் ஆல்பெர் கம்யு (Albert Camus) மூலமாகவே நடந்தது என்பதின் சாத்தியக் குறைவை (அபத்தத்தை?) நினைத்துக்கொள்கையில் எப்போதுமே சிரித்துக்கொள்கிறேன். சிக்கலில்லாத பதின் பருவத்தை கிரிக்கெட் விளையாடிக்கொண்டும், தமிழ் வாரப் பத்திரிகைகளின் விரசமான பகுதிகளைப் படித்துக்கொண்டும் கழித்திருக்கையில் அப்பாவின் உறவினர் ஒருவர் எங்கள் இல்லத்திற்கு வார இறுதிகளில் “அந்நியனின் அடிச்சுவட்டில்”

நாடும் சுவை,  தேடும் தொல்லியல்

தொல்லியல் என்பது பழங்கால எலும்புகள், மட்டைகள் மற்றும் எறிகணை புள்ளிகள் பற்றியது மட்டுமல்ல, அத்தகைய கலைப்பொருட்கள் காணப்படும் சூழல்களையும் ஆராய்வதாகும். பழைய துண்டுகள், தொலைந்து போன பொருள்களைத் தவிர, அவை படிந்திருக்கும் பூமியின் அடுக்குகள், மண்ணின் கலவை போன்றவற்றையும் உட்கொண்டது.  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு காலத்தில் பானைகளை உருவாக்கியவர்கள், வேட்டையாடுவதற்கான புள்ளிகள் அல்லது விலங்குகளின் மறைவுகளை இந்த இடத்தில் துடைத்தவர்கள் பற்றிய கதையை வடிவமைக்க உதவும் தடயங்கள்.

நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து

ஆனால் மௌனியின் மீது புதுமைப்பித்தனுக்கு பெரிய மரியாதை இருந்தது என்பதை இக்கூற்று இடம்பெற்ற சிறுகதை மறுமலர்ச்சி காலம்  என்ற கட்டுரையை (1946ல் வெளியானது) முழுதாக வாசித்தாலே உணர்ந்து கொண்டு விட முடியும். அக்கட்டுரையில் அதுவரை தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் மௌனியின்  ‘எங்கிருந்தோ வந்தான்’, தன்னுடைய  ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ உள்ளிட்ட நான்கு கதைகளை தமிழின் ஒப்பற்ற கதைகள் என்று  புதுமைப்பித்தன் சொல்கிறார். புதுமைப்பித்தனின் சமகாலத்தவரான கநாசுவுக்கு மௌனியின் கதைகள் மீது பெரும் மயக்கமே இருந்திருக்கிறது. சி.சு.செல்லப்பா எழுதிய விரிவான கட்டுரையிலும் (மௌனியின் மனக்கோலம்) மௌனியின் கதைகள் குறித்த தீவிரமான பற்று வெளிப்படுவதை பார்க்கலாம்.

சர்க்கரை பூஞ்சை

எப்போது, எங்கிருந்து ஈஸ்ட் மனிதனால் நொதித்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என்று துல்லியமாக சொல்ல முடியாவிட்டாலும் அகழ்வாய்வுகள் அவை  பண்டைய எகிப்திலிருந்தே பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என சொல்லுகின்றன. 8000 ஆண்டுகள் பழமையான ஒய்னும் 7000 ஆண்டுகள் பழமையான பியரும் நமக்கு கிடைத்திருக்கிறது எனினும் 1680 வரை அவை ஈஸ்டினால் உருவானவை என்று உலகிற்கு தெரிந்திருக்கவில்லை. 

நவீனப் போர்விமானங்கள்

பனிப்போரில் உளவறிவது மிகவும் தலையான ஒன்றாக இருந்தது.  அப்படி உளவறிவதற்கு விமானங்கள் மிக உயரத்தில் அதிக நேரம் பறக்கவேண்டியிருந்தது.  அப்படிப்பட்ட விமானங்களுக்கு அவை பறக்கும்போதே எரிபொருள் நிரப்பவேண்டும்.  அந்த உயரத்திலிருந்து எதிரிநாட்டின், அதாவது, மாற்றுக்கொள்கை நாட்டின் இராணுவ அசைவுகளையோ, தளவாடக் கிடங்குகள், அணு உலைகள், இன்ன பிறவற்றின் இருப்பிடங்கள் இவற்றைப் படம் பிடிக்கவும் காமிராவின் சக்தியை அதிகப்படுத்தவும், அவற்றைத் தானாக இயக்கவும் நுண்ணறிவு பெறவேண்டிவந்தது.

இன்று நேற்று நாளை 

மகாபாரதக் கதை ஒன்று. அரசுக் கட்டில் யாருக்கு என்பதில் பெண்களிடையே நடக்கும் மௌன யுத்தம். குந்திக்குக் காட்டில் யுதிஷ்டிரன் பிறந்து விடுகிறார். செய்தி கேட்ட காந்தாரி தன் வயிற்றை ஓங்கி அறைந்து கொள்ள நிணமும், இரணமுமாக வெளி வரும் சிசுப் பிண்டங்களை நூறு பானைகளில் பிடித்து கௌரவர்களாக வளர்த்து எடுக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டியது மாயத் தன்மைகளையும், மனிதர்களின் குணங்களையும் மட்டுமே. 

ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்

தேவலோகத்தில் நடைபெற்ற ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் ஊர்வசி ‘லக்ஷ்மி’யின் வேடத்தை ஏற்று நடனமாடுகிறாள். அவளுடைய எண்ணமெல்லாம் புரூரவஸைப் பற்றியே இருந்தது. அதனால் ‘புருஷோத்தமா’ (விஷ்ணு) எனக் கூறுவதற்குப் பதிலாக புரூரவஸ் என அழைக்கிறாள். இதனால் அவளுடைய நாட்டிய குருவான பரதமுனிவர் சினமடைந்து அவளைச் சபிக்கிறார். “நீ யாரை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அவனுடன் வாழக் கடவாய். உனக்கு ஒரு மகன் பிறப்பான். தந்தையும் மகனும் சந்தித்துக் கொள்ளும்போது நீ அவர்களிருவரையும் விட்டு விலகி தேவலோகத்திற்குத் திரும்ப வேண்டும்.”

தெய்யம் — மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம்

முடி என்று அழைக்கப்படும் தலை அணி தலையின் மேல் ஆதிசேஷன் போல விரிந்திருக்க அதன் விளிம்பில் மணிகள் கோர்க்கப்பட்ட சிறு வெள்ளை குஞ்சரங்கள் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தன. கழுத்தை சுற்றி சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட அட்டிகை பாதி மார்பை மறைக்க, மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வெள்ளி கங்கணங்கள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டு இருந்தது.

அதிட்டம்

அதிர்ஷ்டம் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் 1. காண இயலாதது 2. நல் வாய்ப்பு 3. நல்லூழ் 4 ஆகூழ் என்பன. அதிருஷ்ட போக்கியம் என்றால் மறுமை, வினை, துய்த்தல் என்பன பொருளாம். அதிருஷ்ட யத்தினம் என்றால் பயன் – முயற்சி, பயன் தரு முயற்சி. யத்தினம் எனும் சொல்லையே நாமின்று யத்தனம் என்கிறோம். பிரயத்தனம் எனும் சொல்லும் அறிவோம். அதிருஷ்டானுகூலம் என்றால் ஆகூழ், நற்காலப் பயன், அதிருஷ்டத்தால் கிடைக்கும் அனுகூலம் என்பன பொருள்.

மரபுகள், பழக்கங்கள், வழக்கங்கள்

அதிர்ஷ்டம் தரும் என அவர்கள் நம்பும் பொருட்களை வைத்திருந்தவர்கள், தங்கள் விரல்களை, குறிச் சின்னத்தைப் போல வைத்திருந்தவர்கள், திறன் போட்டியிலும், புதிர்களை விடுவிப்பதிலும் மேம்பட்டிருந்தார்கள் என்று ஜெர்மானிய மனவியலாளர்கள் சொல்கிறார்கள். இங்கே நாம் ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்- ஒரு அறிவியலாளர்- பகுத்தறிவுவாதி-அவர் ஒரு வீடு கட்டினார். நிலைப் படி வைக்கும் போது, அந்த ஊரில், அதன் கீழே, குதிரரை லாடத்தைப் புதைத்து வைப்பார்கள்; கட்டிட வல்லுனர் அதை வைக்க வேண்டுமா, நீங்கள் இதையெல்லாம் நம்பாதவர் அன்றோ என்று கேட்ட போது, ‘எதற்கும் இருக்கட்டுமே; வையுங்கள்’ என்று சொன்னாராம்! சடங்குகள் செய்யும் தளகட விளையாட்டு வீரர்கள், ஒப்பு நோக்க சிறப்பாக விளையாடியதாக ஆய்வுகள் சொல்கின்றன.

ஜோ ரோகன் – புதுயுகத்தின் கலாச்சார நிகழ்வு

முன் தயாரித்த கேள்விகள் இல்லாமல், பேட்டி கொடுப்பவரின் பதில்களில் இருந்து அடுத்த கேள்விகள் என மூன்று மணிநேரத்தில் இருந்து அதிகமாக நான்கைந்து மணி நேரம் வரைகூட நீளும் பேட்டிகள் தான் “ஜோ ரோகன் அனுபவம்”. முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கு இல்லாததனால் இப்பேட்டிகள் வானத்தின் கீழ் பூமிக்கு மேலே உள்ள அனைத்து விஷயங்களையும் ரோகனும், பேட்டி கொடுப்பவரும் பேசிக்கொள்ளும் இயல்பான உரையாடலாக அமைகிறது. கச்சிதம் என்பதோ, துறைசார் முழுமை என்பதோ இதன் இலக்கு அல்ல என்பதால் மட்டுறுத்தலோ, தவிர்க்கப்பட வேண்டிய தலைப்புகளோ பெரும்பாலும் இல்லை எனலாம்

மனக் கட்டுப்பாட்டின் மந்திரவாதிகள்

நம் மனதை கட்டுப்படுத்துவதே மிகவும் சிரமம் என்றபோதில்,  வெளிப்புற சக்திகள் உங்கள் மனதை கட்டுப்படுத்தி, உங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு எதிராகச் செயல்படச் செய்தால் என்னவாகும்? இது ஒரு திகிலூட்டும் சாத்தியம். இவ்வாறான கற்பனைகள், நமது புனைகதைகளில் அடிக்கடி படம்பிடித்து காண்பிக்கப்படுகிறது. இது ஹாரி பாட்டரில் மூன்று மன்னிக்க முடியாத சாபங்களில் ஒன்றின் இலக்காகும். ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 இல் புனைகதை மொழியான நியூஸ்பீக்கின் நோக்கம் கூட இதுதான். இது பிரேவ் நியூ வேர்ல்ட் மற்றும் தி மஞ்சூரியன் கேண்டிடேட் போன்ற கிளாசிக்களிலும் ஈர்க்கிறது. 1950 களில், கம்யூனிஸ்டுகள் மனதைக் கட்டுப்படுத்தும் நுட்பங்களை உருவாக்கியுள்ளதாக, சிஐஏ மிகவும் கவலைப்பட்டது. அதற்காக, MK-ULTRA எனப்படும் ஒரு ரகசியத் திட்டத்தைத் தொடங்கவும் செய்தது

தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி

சாதாரண மனித ஆற்றல்களையும், நம் புலன்களுக்குத் தென்படக் கூடிய இயற்கை ஆற்றல்களையும், ஒலி, ஒளி, கதிரியக்கம் போன்ற அறிவியல் ஆற்றல்களையும் மீறிய பல வித ஆற்றல்கள் நிறைந்ததே இப் ப்ரபஞ்சம். இன்னும் சொல்லப் போனால் ப்ரபஞ்சம் முற்றிலுமே இத்தகைய ஆற்றல்கள் நிறைந்ததுதான். ஆற்றல்கள் இன்றி இப் ப்ரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும், உயிரும், துகளும், அணுவும், மன இயக்கங்களும் இல்லை. சாதாரண மனித ஆற்றல்களுக்கும், இயற்கை ஆற்றல்களுக்கும், அறிவியல் ஆற்றல்களுக்கும் அப்பாற்பட்ட அத்தகைய ஆற்றலே அமானுஷ்ய ஆற்றல் (occult power) எனப்படுகிறது.

டைபாய்டு மேரி

அச்சமயத்தில் டைபாய்டு இறப்புக்கள் அதிகமாக இருந்ததால் தொற்று வியாதிகளை உடனே ஆராயும் சிறப்பு அதிகாரிகள் இந்த  ஆயிஸ்டர் பே நோய்த் தொற்று விஷயத்தை  கையிலெடுத்துக்கொண்டு ஆராய்ந்தார்கள். எனினும் என்ன காரணத்தினால் தொடர்ந்து 7 பேருக்கு தீவிர டைபாய்டு தொற்று உருவானது என்று கண்டறிய முடியவில்லை. பல பக்கம் தட்டச்சிடப்பட்ட அறிக்கைகள் இந்த மர்ம நோய்த் தொற்றை குறித்து வெளியிடப்பட்டன எனினும்  காரணமென்று எதையும் அவர்களால் குறிப்பிட்டுச்சொல்லமுடியவில்லை

போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – 1

போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு அரிசோனன் குறிப்பு:  விமானங்களின் பரிணாம வளர்ச்சி என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டு, அதைப்பற்றி எழுதாமல் போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதவேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுவது இயற்கையே. பொதுவாக விமானங்கள் என்று எழுதினால் ரைட் சகோதரர்களிடமிருந்து தொடங்கி இன்றுவரை உள்ள பயணி “போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – 1”

தானியங்கி வாகனங்கள் செயல்படும் முறை

ஒளியை கொண்டு சூழலை உணரும் கருவி. மனித கண்களுக்கு புலப்படாத புறஊதா (Ultraviolet) மற்றும் அகச்சிவப்பு (Infrared) அலைகளை சுற்றிலும் தெறித்து பரப்பி, சூழலில் உள்ள பொருளின் மீது படித்து பிரதிபலித்து (Reflection) திருப்பி பெறுவதே இதன் வேலை. பிரதிபலிக்கும் அலைகளை கொண்டு வாகனத்தை சுற்றி ஒரு முப்பரிமாணம் வரைபடத்தை (3D map) செயற்கை நுண்ணறிவின் செயலாக்க கருவி (Processing Unit) உருவாக்கும்.

உதா – முப்பரிமாணத்தை கொண்டு தொலைவில் இருப்பது மனிதனா, மரமா, வாகனமா என்பதை செயற்கை நுண்ணறிவு முடிவெடுக்க உதவும். இதன் மாபெரும் குறை என்பது மழை, பனி போன்ற சூழலில், காற்றில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை சிதறடிப்பதால் (Scatter) முடிவுகள் துல்லியமாக கிடைக்கப்பெறாது.

புதுமைப்பித்தன் எனும் அறிவன்

புதுமைப்பித்தன் இறந்து சரியாக முக்கால் நூற்றாண்டு ஆகிவிட்டது என்ற அடிப்படையில் புதுமைப்பித்தனும் ஒரு ‘வரலாறு’ (அவர் தன்னைப்பற்றி ‘வாழ்ந்துகெட்ட வரலாறு’ என்று சொல்வாராயிருக்கும்) என்று கொள்ளத்தக்கவரே. புதுமைப்பித்தன் குறித்து இலக்கிய விமர்சகன் அல்லது எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவரை அழகியல் ரீதியாக மதிப்பிடுவதுதான் என் வேலையாக இருக்க முடியும். அவர் எழுதியவற்றில் இன்றும் எஞ்சுவது எது என்பதைப் பார்க்க வேண்டியதே சமகாலத்தவர்களாக நம்முடைய முதன்மையான நோக்கம். ஆனால் இலக்கியம் என்பது சமூகத்துடனும் தொடர்புடைய கலையாக இருக்கிறது. எல்லை கடந்து இலக்கியம் ‘சமூகத்துக்குப் பயன்தர வேண்டும்’ என்றெல்லாம் கூட சொல்லப்பட்டது. ஆனால் இலக்கியம் முதன்மையாக வாசகருக்கு ஒரு அனுபவத்தை வழங்குவதன் வழியாக அவருக்குள் விழுந்திருக்கும் சில முடிச்சுகளை அவிழ்க்கிறது. அவர் போதத்தை இன்னும் சற்று கூர்மைப்படுத்துகிறது.

மேடை உரை அனுபவங்கள்

கடந்த ஜனவரியில் சென்னை இலக்கிய விழாவில்  என்னை உரையாற்ற அழைத்திருந்தார்கள். 1 மணிநேர உரை அதுவும்  ’’இயற்கையை அறிதல்’’ என்னும் மிக முக்கியமான தலைப்பு , இலக்கிய விழாவில் இப்படியான துறை சார்ந்த  தமிழ் உரைகளுக்கான வாய்ப்புக்கள் அரிதினும் அரிதாகவே கிடைக்கும் என்பதால் நான் வழக்கத்தை காட்டிலும் சிறப்பான தயாரிப்புகளோடு எங்கள் கிராமத்திலிருந்து சுமார் 11 மணி நேரம் ரயிலில் பயணித்து சென்னை சென்றிறங்கினேன். மறுநாள்  காலை 10 மணிக்கு எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 9 30க்கு என்னை அழைத்து மிக முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் உரையாற்ற  ஒத்துக்கொண்டிருப்பதால் அரைமணி நேரத்தில் என் உரையை முடித்துக்கொள்ளும்படி  அறிவுறுத்தினார்கள்

சங்க நிதி, பதும நிதி, வங்கி கதி

மே மாதத்திலிருந்து தொடர்ந்து இதை ஏற்றி வந்த இந்திய மத்திய வங்கி இந்த முறை அதை ஏற்றாமல் விட்டிருப்பது திறமையான ஒரு செயற்பாடு. ‘வட்டி விகிதம் மட்டுமே கொண்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது; அதே நேரம் அது கட்டுக்கடங்காமல் செல்லவும் விட்டுவிடக் கூடாது. நிதி நிலைத்தலுடன், வினியோக சங்கிலிகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதும், தேவைகளின் அழுத்தத்தைத் தாங்கும் வழியிலுமே இம்முறை ‘ரிபோ’ வை மாற்றவில்லை, தேவையை உணர்ந்தால் நாங்கள் உடனடியாக வட்டி வீதத்தை மாற்றுவோம்’ என்று பணக் கொள்கையில் அறிவித்திருப்பது என்னைப் பொறுத்த வரை வரவேற்பிற்குரியது. பொதுவாக மேலை நிதிச் சித்தாந்தங்களைப் பின் தொடரும் தன்மையிலிருந்து ஒரு சிறு மாறுதல். 

மௌனமாய் இருந்து உன்னை நீ அறிந்து கொள்

சில ஆண்டுகளுக்கு முன் இதைப் படித்த போது நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன்- என் மனம்/சிந்தனை காலியாக இல்லை; அதற்குக் குறியீடுகள் இல்லை. ஆயினும், ஹெர்ல்பெர்ட் சொல்கிறார், தான் இந்த வகைதான் என்று அறுதிப்படுத்துதல் அவ்வளவாகச் சரியான ஒன்றல்ல. நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பது நமக்குத் தெரிவதில்லை, அந்தச் சோதனை ஒலிக்கு முன்னரும், பின்னருமான பதிவுகள் இதைக் காட்டித் தருகின்றன. நாம் சிந்திப்பதைப் பற்றி, சிலர் கேள்வி கேட்கையில் பொத்தாம்பொதுவாக நாம் பதில் சொல்கிறோம் அல்லவா? நம் எண்ண ஓட்டங்கள் மறைந்துள்ளதாக, மாறுபடுவதாக இருப்பதை ஓரளவிற்கேனும் நாமும் உணர்கிறோம். ஒரு மூளையில் சிந்தையின் பல வடிவங்கள் இருக்கின்றன.

அமெரிக்கக் கால்பந்து: கலாச்சார தனித்துவம்

என்.எப்.எல் அணிகளுக்கிடையே சமநிலையை தொடர்ந்து தக்கவைக்க சம்பள வரம்பு பின்பற்றுகிறது. அதாவது எல்லா அணிகளும் தங்கள் 53 வீரர்களையும் அவ்வருடத்திய அதிகபட்ச சம்பள வரம்பிற்குள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு அணியும் தங்கள் தேவைகள் கருதி பணத்தை அள்ளி எறியமுடியாது. உடனடி தேவைகளும், முக்கிய வீரர்களின் சம்பளமும் வரம்பிற்குள் அமைய ஐவீ பல்கலைக் கழகங்களில் பயின்ற வணிக நிர்வாகப் பட்டதாரிகளையும், சட்ட வல்லுநர்களையும் அணிகள் ஆலோசனையாளர்களாவோ, பணியாளர்களாகவோ வைத்திருக்கின்றன.

அமித் ஷாலினியும் நரேந்திர மோதினியும்

நமது முதல் கேள்வி, புதியதாக இராகம்  கண்டு பிடிப்பது அவசியமா?  ஏற்கனவே நூற்றுக்கணக்கில் ராகங்கள்  உள்ளன. அவற்றை கண்டு பிடிப்பதற்கே  ரசிகர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும் போது  இது எதற்கு என்ற கேள்வி எழலாம்.  இதற்கு கண்ணதாசன் “ஏன்  என்ற கேள்வி ஒன்று  என்றைக்கும் தங்கும்,  வெறும்  இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்” என்று பதில் அளித்து இருக்கிறார்.  இந்த பாடல்,  “ஏழு ஸ்வரங்களுக்குள்  எத்தனை பாடல்”, இடம் பெற்ற  படம் ” அபூர்வ ராகம்”.   அந்த  திரை படத்திலேயே இன்னொரு பாடல் (அதிசய ராகம், ஆனந்த ராகம்) வழியாக  நம்  கேள்விக்கு விடையும் அளித்து இருக்கிறார்கள்  MSV  மற்றும்  Dr  பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்.   அந்த திரைபாடப் பாடலின் துவக்க ராகம் “மஹதி”. 

குஞ்சர நிரை

சமீபத்தில் சென்னையிலிருந்து ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். என் மனைவியிடம் அலைபேசியில் மகன் என்ன செய்கிறான் என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். அவனை நான் செல்லமாக, “யானை” என்று அழைப்பது வழக்கம். “யானை சாப்டுச்சா?”…”நிறைய தண்ணி குடுத்தயா?”… “யானை சேட்டை பண்ணிச்சா?”,…”இருட்டினப்புறம் வாழைமரம் பக்கம் அனுப்பாத”… என்று பேசிக்கொண்டிருந்தேன். பின்னிருக்கையில் இருந்த ஒரு சிறுமி, “அம்மா அந்த அங்கிள் வீட்டுல யானை வச்சுருக்காரும்மா” என்று உரத்த குரலில் சொன்னபிறகுதான் நிமிர்ந்து பார்த்தேன். பலரும் என்னையே பார்த்தபடி இருந்தனர். பேசி முடிக்கும் வரை காத்திருந்தவர் போல் பக்கத்து இருக்கையில் இருந்தவர், “சார் தனி ஆள் யானை வளர்க்கறது இல்லீகல் ஆச்சே” என்றார்.

செயற்கை நுண்ணறிவு – சில கற்பனைகள்!

இதில் மனித செயலாண்மையின் (Human Agency) இடையீடு இல்லாமல் எல்லாவித மனிதத் தேவைகளும், அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ற மிகச்சரியானவற்றை, AI துணைக்கொண்டு மனிதர்கள் செய்யமுடியும் என்பதிலிருந்து, அதிகாரத்திற்காக சமூகத்தை மிக எளிதாக ‘ஹைஜாக்’ செய்யமுடியும் என்றும், எதிர்காலத்தில் தற்போதைய ராணுவங்கள் இருக்காது – எதிரி நாட்டை அடக்குவதை, அந்த நாட்டின் சமூகத்தை AI-ன் துணைக்கொண்டு மூளைச்சலவை செய்து அடையலாம் என்றும், மனித உடல்நலம் சார்ந்த அணுகுமுறையில் உருவாக்க சாத்தியமுள்ள நல்ல/தீய விளைவுகள் என்றும், இன்னும் இதைப்போன்றவையும் இந்த உரையாடலின் களமாக இருந்தது.

அகார் அகார்

அகார் கடற்பாசிகள் கடலின் 20 லிருந்து 25 மீட்டர் ஆழங்களில் , 2 லிருந்து 40 செ மீ உயரம் வரை வளரக்கூடியவை. மையத் தண்டின் இருபுறமும் ஒழுங்கற்றுக் கிளைத்த சிவந்த நிற உடலம்(Thallus) கொண்டவை. அகார் ஜப்பானில் Gelidium pacificum என்னும் கடற்பாசியிலிருந்தும் பிற நாடுகளில் Gelidium sesquipedale, வகையிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றது.  ஜெலிடியம் வகை கடற்பாசிகள் இல்லாத ஐரோப்பிய நாடுகள் பிற கடற்பாசிகளிலிருந்து அகாரை தயாரிக்கின்றனர்.

சொல்லா, காட்சியா, எண்ணங்கள்?

உள் உரையாடல் கொண்டவர்கள், தன்னைப் பற்றி, தன் உணர்வுகளைப் பற்றி, ஆசைகள், ஆவல்கள் பற்றி சிந்தித்த வண்ணமிருப்பார்கள். இந்தத் தன் மையமானது வெளியில் உரத்த குரலில் ஒலிக்கும். 1980ல் மனோதத்துவவாதியான பெர்னார்ட் ரைம், (Bernard Rime) நாம் ஏன் நம் எதிர்மறை எண்ணங்களை பிறரிடம் சொல்கிறோம் என ஆராய்ந்தார். கெட்ட அனுபவங்கள், அசை போடுவதோடு நிற்பதில்லை, அதை வெளிப்படுத்தும் இச்சையையும் கொண்டவை. நாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மற்றவரிடம் சொல்கையில், அவர் நம்மை விட்டு விலகிச் செல்கிறார்.

சொல்லென்றும், மொழியென்றும்…

ஒற்றை மொழி பேசுபவர் இந்த முனையில் இருக்கிறார் என எடுத்துக் கொள்வோம். ஒப்புமை கொண்ட பேச்சொலிகள் இரண்டு மொழிகளிலும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முதல் ஒரு முனை பேச்சின் (மொழியின்) ‘ஆடியோ கோடெக்’ மாதிரியிலிருந்து, ஒலிக்குறி தூண்டுதல்களைப் பெற்று, மறுமுனையில், அந்த மொழியின் ஒலிக்குறிப்பை வால் ஈஎக்ஸ் தந்துவிடுகிறது. (Coding) அந்த இடத்திலே குறி விலக்கி, செயல்படும்; மறுமுனையில் உள்ள மொழியில் இந்தப் பேச்சு பெறப்படும்.(Decoding) ஒரே பேச்சாளர்களின் மாற்று மொழித் தகவல் தரவுகள் இதற்குத் தேவையில்லை. சொல்லும் சூழலைப் பொறுத்து, அதன் தொனியை இது புரிந்து கொண்டு விடுகிறது

பாதாளத்தை வடிவமைத்தல்: பேயோவுல்ஃப், கிரெண்டல்

ஹெர்குலிஸ் அல்லது தீசியஸ் போல நாயகன் ராட்சதர்களைக் கொல்கிறான். ராட்சதன், அதன் அம்மா, டிராகன் இவையெல்லாம் அக்காலத்து மக்கள் இக்கதையில் எதிர்பார்த்த விஷயங்கள். இவை தீமையின் அவதாரங்கள், “பார்வையாளர்களால் உண்மையென ஏற்றுக் கொள்ளப்பட்டவை,” எழுத்தாளன் இவ்வகைமையைத் தேர்ந்தெடுத்த பின்னால் இந்த அவசியக் கூறுகளைச் சேர்ப்பது தவிர்க்க இயலாமல் போகிறது. இரும்பால் பிணைக்கப்பட்ட, விதி சூழ்ந்த வீடு (ஹீராட் ஹால்), கிரெண்டல் மற்றும் அதன் உருவற்ற அன்னை பீடிக்கும் நீருக்கு அடியே அச்சமே உருவான ஓர் இடம், கடைசியாகப் பாறைகளாய் இறுகிய பாதைகளற்ற டிராகனின் குகை என்று அச்சத்தின் அடிப்படை உருவகைகள் மூன்றின் வழியே கதையைக் கொண்டு செல்லும்போது:

அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம்

அறிமுகம் “கடும் போட்டிகள் கொண்ட விளையாட்டுகளுக்கு அழகு என்பது ஒரு குறிக்கோள் அல்ல, ஆனால் உச்சப்பட்ச விளையாட்டுப் போட்டிகள் மனித அழகின் மிகச் சிறந்த ஆடுகளம். இதை தோராயமாக போருக்கும் வீரத்திற்கும் உள்ள தொடர்போடு பொருத்திப் பார்க்கலாம்” டேவிட் பாஸ்டர் வாலஸ் அமெரிக்க விளையாட்டுக்கள் உண்மையில் இன்றைய அமெரிக்காவை “அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம்”

லண்டானா கமாரா

லண்டானா வெர்பினேசி குடும்பத்தை சேர்ந்தது. இந்த பேரினத்தில் கமாரா உள்ளிட்ட சுமார் 150 சிற்றினங்கள் உள்ளன. லண்டானா ஒரு பல்லாண்டு தாவரம் இவை 7 அடி உயுரம் வரை வளரும் புதர் வகைகளாகவும் மரங்களில் படர்ந்து ஏறி வளரும் உறுதியான தண்டுகளையும் கொண்ட கொடி வகை தாவரமாகவும் சிறு செடிகளாகவும் காணப்படுகிறது.லண்டானாவின் அகன்ற முட்டை வடிவ எதிரிலைகள் கடும் நெடி கொண்டவை. இவை பல நிறம் கொண்ட மலர்கள் அடங்கிய மஞ்சரிகளை கொண்டிருக்கும். ஒரு செடியிலிருந்து சுமார் 12000 கருப்பு நிற சிறு கனிகள் உருவாகும்.

மரத்தில் மறைந்தது மாமதயானை

குவாண்டப் பொருட்கள், அலைகளால் அமைந்துள்ளதால் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. காற்றடிக்காத, அமைதியான, கண்ணாடித் தகடு போன்ற கடலை கற்பனை செய்யுங்கள்/ நேரிலும் பாருங்கள்(!). தனிப்பட்ட இரு அலை வகைகள், ஒன்றன் மீது மற்றொன்று மேலிட்டுவரும்போது, இது எப்படி சாத்தியமாயிற்று என்று சிந்தியுங்கள். முழுதும் தட்டையான பரப்புகள் இரண்டு, ஒன்றின் மீது மற்றொன்றாக அடுக்கப்படும்போது சீரான பரப்பு தெரியும்; மற்றொரு சாத்தியம், ஒரே மாதிரியான இரண்டு அலைகள் ஒன்றின் மீது மற்றொன்று  பயணிக்கிறதாக எடுத்துக் கொண்டு, (மாறி மாறியும் இது நடக்கலாம்) ஒன்றின் முகட்டின் மேல் மற்றொன்றின் நீளலைகள் பெயர்வதாலும் நடக்கலாம்.

விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி

பொங்கல் சென்னை டெஸ்களும் தமிழ் வர்ணனையும் வருடம் முழுவதற்குமான எதிர்பார்ப்பை உண்டாக்கும்.  ஆனந்த விகடனில் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னால், வருகைதரும் மற்றும் இந்திய அணி வீரர்களின் போட்டோக்கள் வரும். வீட்டில் வாங்கக் காசு தரமாட்டார்கள். ஆனாலும் அதை அடைவதற்கு வேறு வழிகள் இருந்தன. கிரிக்கெட் ஆர்வமில்லாத, விகடன் தொடர்ந்து வாங்கும் யாரவது ஒரு அக்காவை நச்சரித்து அதைக் கைப்பற்றிவிடுவேன் (அக்கா, சிவசங்கரி,லக்‌ஷ்மி, சுஜாதா, போன்றவர்களின் தொடர்கதைகளைக் கிழித்தெடுத்துக்கொண்டு, ‘ஒழிந்துபோ’ என்று கொடுப்பாள் ).  முழுத் தொடர் (ஐந்து டெஸ்ட் மேட்சுகள்) ஸ்கோர் கார்ட்டை நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைப்பேன்.  அந்தக் காலங்களில் எங்கள் ஊரில் நான்தான் ஸ்கோரர், புள்ளிவிபர நிபுணன், கிரிக்கெட் வரலாற்றாளன், எல்லாம் (விளையாடுவது?? ஓரளவிற்கு ஆஃப் ஸிபின் பௌலிங்கும், சந்தீப் பாட்டிலைப் போன்ற ஸ்கொயர் ட்ரைவும் வரும்).  தமிழ்நாட்டுச் சிற்றூர்களின் எல்லா சிறுவர்களையும் போலவே பந்துவீச்சுக்கு வெங்கட்ராகவனும், மட்டையாளர்களில் விஸ்வநாத்தும் ஆதர்சம்.

வாயுக்கூண்டும் ஊதுபைகளும்

சீனாவின் முன்னாள் அதிபர் தெங்-சியோ-பிங், “நடுவண் கிழக்கு நாடுகளிடம் எண்ணெய், சீனாவிடம் அரிதான கனிமங்கள் – இவை உலக ஆதிக்கத்திற்கு முக்கியம்,” என 1987ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியுள்ளார். மற்ற நாடுகளின் – முக்கியமாக அமெரிக்காவின் பலம் – அதன் பலவீனம் – அது எப்படி தனக்குள் இரகசியத் தகவல் பரிமாற்றம் செய்துவருகிறது என்பதை உளவறியச் சீனா விரும்புகிறது.  “எதிரியின் பலம்-பலவீனத்தை அறிவதே ஒரு படைத்தலைவனின் தலையாய கடமை;  அப்படி அறிபவர்தான் எதிரியை வெற்றிகொள்கிறார்,” என்று ‘போர்க்கலை’ எழுதியுள்ள சீனப் பேரறிஞர் சுன்-சூவின் அறிவுரையை அது பின்பற்றி…

இது வேற லெவல்…!

சமீபகாலங்களில் எனக்கொரு சந்தேகம். உங்களுக்கும் இருக்கலாம். தமிழில் வார்த்தைகளுக்கு அத்தனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா என்பதே அது. சந்தேகம் சும்மா வரவில்லை. பல நாட்களாக, பல பேரிடம் பேசும் பொழுது சட்சட்டென்று இந்த எண்ணம் வந்து போகும். எதனால் என்று கேளுங்கள்… ஒரு நண்பரிடம் அவர் சென்று வந்த பயணம் “இது வேற லெவல்…!”

தானூர்திகள் (எ) தானியங்கி வாகனங்களும் அதன் செயற்கை நுண்ணறிவும்

அன்றாடத்தில் தன்னிச்சை – வாகனங்கள் ஓட்டத் தெரியாதவர்கள் இனி யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். இது சார்ந்து புது பயன்பாடுகள் உருவாகும். உதாரணம் – குழந்தைகளை பள்ளிக்கு இட்டு செல்ல, கூட்டி வர, பெற்றோர், அயலவர், பொது போக்குவரத்துக்கு அவசியப்படாது. இரவு போன்ற நேரங்களில், உரிமையாளருக்கு ஊர்தி பயன்படாத போது, வெறுமனே இருக்காமல், தானே வாடகை ஊர்தியாக செயல்பட்டு பணம் ஈட்டி தருவது போன்ற வருமானத்திற்கான சாத்தியக்கூறுகளும் ஏற்படலாம்.

ஆயிரம் அடி விழுந்தும் ஏன் தொடர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும்?

இந்தத் துறையில் தோல்விகள், என்னை வெவ்வேறு புதிய முறைகளை கறகத் தூண்டுகிறது. உதாரணத்திற்கும் vector images என்ற கணினி மூலம் (படம் முழுவதும் கோண கணக்குதான்) முற்றிலும் உருவாக்கும் புதிய கலையை நான் 2020 முதல் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். முன்னம் சொன்னது போல, அதில் பெரும் வெற்றி இன்னும் எனக்குக் கிட்டவில்லை. ஆனாலும், குளிர்காலத்தில் அதிகம் வெளியே சென்று படம் பிடிக்க முடியாத நிலையில், கணினி மூலம் உருவாக்கப்படும் வண்ணப்படங்கள் என்றோ விற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அத்துடன், இந்தக் கலையில் இன்னும் கற்றுக் கொள்ளவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

காணொளிகளின் கொண்டாட்டம், திண்டாட்டம்

2018 முதல் காணொளிகளைத் திருத்தம் செய்யும் இந்த நிறுவனத்தின் பல செயலிகள், டிக்டாக், வலையொளி, (Youtube) திரைப்படங்கள், தொலைக்காட்சி படைப்புகள் போன்றவற்றிற்கு முக்கிய வரமாக இருந்து வருகின்றன. ‘த லாஸ்ட் ஷோ வித் ஸ்டீபன் கால்பேர்ட்’ (The Last show with Stephen Colbert) படத்தின் வரைகலையில், ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) என்ற படத்தின் அசத்தலான காட்சித்  தாக்கத்தில் இவர்களின் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

கவலைதோய்ந்த காவிரி நினைவுகள்

ஆற்றுக்குச் செல்லும் பாதை நெடுக இருபுறமும் தென்னை மரங்கள், வாழை, கரும்பு. அதிஷ்டானத்தைக் கடந்துதான் சென்றோம். மயிலின் அகவல் திரும்பியபக்கமெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. எதிரே இரண்டு மணல் லாரிகள் கடந்து போயின. எச்சரிக்கைப் பலகை இங்கு ஆற்றில் ஆழம் அதிகம், சுழல் உள்ள பகுதி, பலபேர் பலியான இடம் என்று பயமுறுத்தியது. ஆறு எங்கு ஆரம்பிக்கிறது என்று குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நாணல் மண்டிக்கொண்டு வருகிறது. ஒரு சின்ன மணல் பள்ளம். ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்திருக்க வேண்டும். ஏறினால் மணல் மேடு. ஒரு காலத்தில் பள்ளமாகும். அங்கு ஒரு குடும்பம் திதி கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே நாணல் குச்சங்கள். மணல்மேடு மறுபடியும், மேடுதோறும் திதி முடித்துச் செல்லும் மனிதக்கூட்டம் விட்டுச் செல்லும் கழிவுகள், வாழைப்பழம், இலை, காய்ந்த பூ இத்யாதி…  பக்கத்தில் சின்ன நீர்த்திட்டு.ஆங்காங்கே வெள்ளித் தகடுகளாக சத்தமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது காவிரி.  

கைக் கொண்டு நிற்கின்ற நோய்கள்

வீடுகளிலும், நகராட்சிகளிலும் இந்த பி எஃப் ஏவைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிறுமணிகள் போன்ற துகள் நிரம்பிய கரிப் பொருள் வடிகட்டியும், (Granular Carbon Filters) தலைகீழ் சவ்வூடுபரவல் (Reverse Osmosis) முறையும் பொதுவில் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆயினும் அவை செலவு பிடிப்பவை மட்டுமல்ல, அதைப் பராமரிப்பதும் கடினமே. (நம் ஊரில் மணற்படுகையும், கூழாங்கற்களும் நீர்த்தொட்டிகளில் பயன்படுத்தி, குழாயின் வாயில் துணியில் முடிந்து வைத்துள்ள படிகாரத்தைக் கட்டி குளிப்பதற்கும், தோய்ப்பதற்கும் உபயோகிப்பார்கள்; வெட்டி வேர், நன்னாரி வேர் போன்றவற்றை குடிக்கும் நீரிலும் போடுவார்கள். செப்புப் பாத்திரங்களைப் பயன் படுத்துவார்கள்- எங்கேயோ கேட்ட நினைவு!)

ஒழிக தேசியவாதம்!

தசாப்தங்களாக முன்பிருந்த கருத்தை முற்றிலும் மறந்துவிட்டு ஹிந்து இந்தியன் இவற்றிற்குள்ள பாகுபாட்டை அழித்துக் கொண்டு வருகின்றனர். இந்தியாவில் வசிக்கும் அனைவருமே ஹிந்துக்கள்தான் என்று கூறுமளவிற்கு சென்று விட்டனர். இது முற்றிலும் தவறான நோக்கு என்பதை நான் திருப்பித்திருப்பி சொல்ல வேண்டிய தேவையில்லை. இது நயமானதல்ல என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். முஸ்லிம்களும் கிருத்துவர்களும், தங்களை கேட்காமலேயே ஹிந்துத்துவ பிரிவில் சேர்க்கப்படுவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பதை ஒருவரும் காதில் வாங்குவதாகவே தெரியவில்லை. அரை குறை அரசியல்வாதிகள், இப்பொய் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இன்றியமையாதது என்றால், அவர்கள் வாயிலிருந்து வரும் பொய் அவர்கள் மனதில் பதிந்துள்ள நம்பிக்கைக்கு மாறானது என்பதை உணர்த்த வேண்டும். பொய் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றால் இப்பொய்கள் எதிரிகளை முட்டாள்களாக்குவதற்காக கூறப்படுவது தங்களையே முட்டாள்களாக்கிக் கொள்வதற்காக அல்ல என்பதை உணர வேண்டும். ஹிந்துவும் இந்தியனும் ஒன்றல்ல எனும் உள்ளுணர்வு மிக அத்தியாவசியம்.

கனவு மெய்ப்பட வேண்டும்

கற்பனைகள் கொண்டு வரும் கனவுகள், அதை நனவாக மாற்றும் பெரும் முயற்சி, அவற்றில்  சில வெற்றி பெறும், சில கருத்துக்களாக மட்டுமே நிலவும், சில மனித வாழ்வின் தரத்தை மேம்படுத்தும், சில பாதிப்பதே தெரியாமல் சூழலை சிதைத்துக் கொண்டே வரும். எப்படியிருப்பினும், கற்பனைகள், கனவுகள் உருவம் பெறுகையில் எழும் உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்கி விடாது.

ஊனுண்ணித் தாவரம் – வீனஸ்

சுமார் 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மாபெரும் டைனோசர்கள் காடுகளில் பல்கி பெருகிக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு இலைகளில் நடைபெற்ற ஒளிச்சேர்க்கையில் கிடைக்கும் உணவு போதாமலும், அவை வாழ்ந்த நிலத்தில் சத்துக்கள் குறைவாகவும் இருந்ததால் அவற்றின் இலைகள் பூச்சிகளை பிடிக்கும் பொறிகளாக மெல்ல மெல்ல மாறி பரிணாம வளர்ச்சி அடைந்தது.  அவற்றின் வளர்ச்சிக்கு  நிலத்திலிருந்து கிடைப்பதில் போதாமல் இருக்கும் சத்துக்களை இவ்வாறு பூச்சிகளை, சிறு விலங்குகளை உண்பதன் மூலம்  அவை சரி செய்து கொண்டன.

என் முயற்சிகளில் சிலவும் அவை தந்த அனுபவமும்

சில பங்களிப்பாளர்களின் வெற்றியைப் பார்த்து, நான் உருவாக்கிய வண்ணப்படங்களின் தோல்வி ராஜா இந்த வகை. வீட்டில் இருக்கும் பெரிய ப்ளாஸ்டிக் ப்ரஷ்கள், சிறிய டார்ச் விளக்குகளின் அழகிய ப்ளாஸ்டிக் டிசைன்கள், ஏன் சில பெயிண்ட் அடிக்கும் ப்ரஷ்களின் நுனிகள் என்று இவ்வகை பொருட்களை மிக அருகாமையில் படம் (macro photography) பிடித்தேன். இவற்றுக்கு கணினி மூலம், பல வண்ணங்களை உருவாக்கி, ஒரு அழகிய இணையதள பினணியாகப் பயன்படுத்தலாம் என்பது என் கணிப்பு. கணிப்புடன் நின்ற ஒரு பெரும் தோல்வி இது!

’தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள்’ – புத்தக அறிமுகம்

’ என் நண்பர்களில் தனித்தன்மை கொண்ட நண்பர் தஞ்சை ப்ரகாஷ்’ என்கிறார் வல்லிக்கண்ணன். கரமுண்டார் வூடு நாவலில் ப்ரகாஷ் பாலியல் பிரச்சனைகள்பற்றி மிகையாக விவரித்து இருப்பதாக வல்லிக்கண்ணன் அபிப்ராயப்படுகிறார். அதற்கு விடைஅளிக்கும் முகத்தான் எழுதும் ப்ரகாஷ்’ ’ஒரே ஒரு கீழ் வெண்மணியைத்தெரியும் உங்களுக்கு. ஒவ்வொரு எலக்‌ஷன் நேரத்திலும் முப்பது கீழ் வெண்மணிகள் எரிவது தெரியாது உங்களுக்கு. காமவிவகாரம் அற்ற பரிசுத்தம் நிறைந்த முதலாளித்துவம் உங்கள் நாடக உலகில்தான் இருக்கும். வாழ்வில் அல்ல’ இதுதான் எழுத்தாளர் ப்ரகாஷ் என்கிறார் வல்லிக்கண்ணன்.