புறவயமாக நமக்குத் தென்படும் உலகம் என்று ஒன்று இருக்கிறது அகமுகமாக நம்முள் ஒரு இயக்கம் இருக்கிறது. செயல்படு கருவிகளும், உணர்தல் தன்மை உள்ள கருவிகளும் மனிதனிடத்தே இருக்கின்றன. அக்கருவிகளும் கூட கண்கள் அறியாத ஒரு செயலை அல்லது செயல்களை நம் உள்ளே நடத்துகின்றன. முன்னொரு காலத்தில் அறிதல் என்பது “தானே ஒளிர்வது தன்னில் ஒளிர்வது”
Tag: மெய்யியல்
கல்நின்று முன்நின்றவர்
உணர்வு தன் சிறகுகளை ஒன்றிணைத்து உறங்கும் பட்டாம்பூச்சியென உரைந்து சிறகடிப்புகளில் தன்னை மீட்டு மீண்டும் அடங்கியது. மனம், எதிலோ முட்டிக்கொண்ட விசையுடன் அதை ஊதி நகர்த்திற்று. கணந்தோறும் உணர்வின் சிறகடிப்பு. உணர்வு, எழுந்து பறந்து அதன் வண்ணங்களை உதிர்த்து வெற்றுச் சிறகுகளுடன் வேறொரு புல்லில் அமர்ந்த கணமே உதிர்ந்த வண்ணங்களை மனம் ஊதி உணர்விடம் மீண்டும் சேர்த்தது. அது ஒரு முடிவிலி. சலிப்பின்றி ஆடப்படும் ஆட்டம். அதன் கோடிக்கணக்கான கண்ணிகளின் இடுக்குகளில் சிலவற்றிலே விரல் அகஸ்மாத்தாக சிக்கிக்கொள்கிறது.
