கட்டித் தங்கம் வெட்டி எடுத்து

ஒவ்வொரு நாட்டின் அரசும், தங்கள் நாணயத்தின் மதிப்பு என்று ஒன்றைச் சொல்ல, அதை அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளும் ஏற்க, ஒரு பொருண்மையான பொருளின்றி, அதாவது, தங்கம் போன்ற ஒரு அடிதாங்கியின்றி, நாணய மாற்று விகிதம் உருப்பெற்றது. நாணயக் கொள்கையின் மூலம் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய வங்கிகளுக்குத் தேவையான நீர்மையை இது வழங்கினாலும், தங்கம் முன்பு விதித்திருந்த கட்டுப்பாடான ‘நாணய வழங்கல்’ (Money Supply) இல்லாமல் போய், நாடுகள் அதிக நாணயங்களை அச்சிடத் தொடங்கின.

புதிய நாணயம்

நேர்மைத் திறனின்றி, அமெரிக்க அரசு பல நாடுகளின் கைகளைக் கட்டிப் போட்டது. மக்களாட்சி கொண்டு வருகிறோம் என்ற பெயரில், பெட்ரோ டாலர்களில் வர்த்தகம் நடத்தாத ஈராக், லிபியா, வெனிஸ்சுவேலா பல இடர்களைச் சந்தித்தன/ சந்தித்தும் வருகின்றன.