சீட்டுக்கட்டு ராஜ்ஜியம்

இதனால், ஹார்ட்ஸ் ராணியின் தவறுகளைச் சரிசெய்ய அனைவரும் முயன்று கொண்டிருக்கையில், அவர்கள் தாமும் தவறுகளைச் செய்யத் தொடங்கினர். ஏஸ்கள் தங்களை ராஜாக்களால் ஒதுக்கப்படுவதை கண்டனர். ராஜாக்கள் நாவ்கள் பற்றிக்  குழப்பமடைந்தனர். ஒன்பதுகளும் பத்துகளும் தங்களை அரசச் சீட்டுக்களாகக் கருதும் போக்கைக் கொண்டனர். இரண்டுகளும் மூன்றுகளும் நான்குகளுக்கும் ஐந்துகளுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை ரகசியமாக பிடித்துக் கொண்டனர். இதுவரை இல்லாத அளவுக்கு குழப்பம் ஏற்பட்டது.

கர்ணனும் குந்தியும்

தங்களது குரல் என்னைப் புராதனமான, உலகின் குழந்தைப்பருவத்தைத் தொலைத்த, அந்திக்கருக்கல் போலும் பிரக்ஞைக்குள் நடத்திச் செல்கிறது. எப்படியானாலும், இது கனவாக இருந்தாலும், அல்லது மறந்துபோன நிஜத்தின் துண்டாக இருப்பினும், என்னருகே வந்து உங்கள் வலதுகரத்தை எனது நெற்றிமீது வையுங்கள். என் தாய் என்னை நிராகரித்து விட்டாள் எனும் வதந்திகள் உலவுகின்றன. பல இரவுகளில் அவள் எனது உறக்கத்தில் வந்திருக்கிறாள்; ஆனால் நான், “உனது முக்காட்டை எடுத்து உன் முகத்தைக் காட்டு,” என்று அழுதபோது, அவள் உருவம் மறைந்துவிடும்.

விளையாட்டுப் பொருள்கள்

குழந்தையின் விளையாட்டும் அதனால் அவன் அடையும் சந்தோஷமும் தகப்பனுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறதோ? ஆகவே ‘இவனாவது கவலைகளில்லாது தனது குழந்தைப் பருவத்தைக் கழிக்கட்டும்,’ எனும் அர்த்தம் நிறைந்த புன்னகைதான் எனக்கூட எண்ணத் தோன்றுகிறது.

ஆவியுனுள்ளும் அறிவினிடையிலும்

This entry is part 7 of 9 in the series எங்கிருந்தோ

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காளி என்பவள் அளப்பரிய ஆற்றல் உள்ளவள்- ஊழிப் பெருந்தீ. அவளை அனைத்துமாக வழிபடுவது காலந்தோறும் பழகிய ஒன்று. அவள் நவீன யுகத்தில், பெண் விடுதலையெனக் கருதப்படும் பேதைப் போதைகளின் ஆதிக்கத்திலில்லை- தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் படைப்பாளி காளியின் வாயில் ‘சிகரெட்டை’ வைத்து சமீபத்தில் காட்சிப்படுத்தினார். இதை ஃபெமினிசம் என அவர் நினைத்திருப்பாரேயானால் அவருக்கு எந்தக் கொள்கையிலும் தெளிவில்லை எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்

“ஆனால் பூஷண் ஸாஹ் புது நாகரிகத்தைச் சேர்ந்தவன் இங்கிலீஷ் படித்து வெகு சுத்தமாகப் பேசுவான், துரைமார் சேரிகளில் செருப்புப் போட்டுக்கொண்டே நுழைவான். அத்துடன் தாடியும் வளர்த்தான். இதனால் துரைமார் இவனைக் கர்வியென்று சொல்லி இவனுக்கு யாதொரு நன்மையும் செய்யமாட்டார்கள். அவனைப் பார்த்தால் உடனே தெரியும், இவன் புது வழியைச் சேர்ந்த வங்காளி யென்று. வீட்டிலேயும் அவனுக்கொரு ஸங்கடம். அவன் பெண்டாட்டி அழகாக இருப்பாள், காலேஜ் படிப்பு ஒரு புறம், அழகுப் பெண்டாட்டி மற்றொரு புறம்; புராதன ஆசார அனுஷ்டானங்கள் அவன் வீட்டிலே நிற்க இடமுண்டா ?”

யசோதராவின் புன்னகை

என்னையறியாமலே அனிச்சையாய் எழுந்த என் முகத்தின் கேள்விக்குறியைக் கண்டுகொண்ட அந்த சுட்டிப்பெண் சொன்னாள்: “ஆன்ட்டி! எனக்கு எட்டு வயசாக இருக்கும்போது எங்கப்பா திடீர்னு வீட்டை விட்டுப்போய் சன்யாசம் வாங்கிண்டுட்டார். என் தங்கைக்கு அப்போ ஆறு வயசு. அவர் இப்போ எங்கே என்று யாருக்கும் தெரியாது.”