ராம்கரூவின் வாரிசுகள்

துன்புறுவது மடமை என்று
களித்திருக்கும் மக்களே!
துக்கித்திருப்பது
ராம்கரூசியர்களின் உரிமை.
அதை மறுக்காதீர்.

மின்னல் சங்கேதம் – 4

This entry is part 04 of 12 in the series மின்னல் சங்கேதம்

அந்த விஷயத்தைச் சொன்னவன் ஒன்றும் விஷயம் தெரியாதவன் இல்லை. அவனுக்கு அரிசி வியாபரத்தில் ஏற்கனவே அனுபவம் உண்டு. அவன் உறுதியாகச் சொன்னான், “உங்களுக்கு இந்த விஷயம் புரிய மாட்டேங்குது. நான் சொல்றேன் கேளுங்க, அரிசி விலை எக்கச்சக்கமாகப் போகுது. எனக்கு இந்த விஷயமெல்லாம் அத்துபடி. இந்த வியாபாரத்துல நான் ரொம்ப நாள் இருந்திருக்கேன்.”

சிறப்பிதழ் வரிசை: இந்திய மொழிகள்

இந்த இதழை வங்கமொழிச் சிறப்பிதழின் இரண்டாம் பாகமாகக் கொணர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்….இந்த இதழில் பல சிறுகதைகளைக் கொடுக்கிறோம். பனபூல், ராம்நாத் ராய், சமரேஷ் மஜும்தார், ஸீர்ஷோ பந்த்யோபாத்யாய், மஹாஸ்வேதா தேவி, ஆஷாபூர்ணா தேவி, சுபிமல் மிஸ்ரா, மோதி நந்தி, ரபீந்த்ரநாத் தாகுர்ஆகியோரின் கதைகள் உள்ளன. பிபூதி பூஷண் பந்த்யோபாத்யாயின் நாவல் ஒன்றின் அடுத்த பாகம் மொழிபெயர்க்கப்பட்டுக் கிட்டுகிறது. ஜாய் கோஸ்வாமி, ஸாங்க்யா கோஷ், புத்ததேவ் போஸ், சக்தி சட்டோபாத்யாயா ஆகியோரின் கவிதைகள் உள்ளன. தவிர நாடக உலகில் உத்வேகத்தைக் கொணர்ந்த பாதல் சர்க்கார் பற்றிய ஓர் அனுபவக் கட்டுரையையும், க்ளைவ் பெல் என்ற ஒரு குழல் இசைக்கலைஞரின் பேட்டியையும் கொடுத்திருக்கிறோம்.

பாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்

1980இல் நடத்தப்பட்ட பட்டறைக்குப் பிறகு இரண்டு முறை தமிழகத்தில் நாடகப் பட்டறைகள் நடத்துவதற்காகப் பாதல் சர்க்கார் வந்தார். ஒன்று லயோலா கல்லூரியிலும், இன்னொன்று மதுரையில் ஐடியாஸ்- ஐக்கப் என்ற கிறித்தவத் தன்னார்வக் குழுக்களின் ஏற்பாட்டிலும் நடந்தது. அந்தப் பட்டறைகளில் பங்கெடுத்தவர்கள் பின்னாளில் நாடகக்காரர்களாக மாறவில்லை. மதுரையில் நடந்த பட்டறையின்போதுதான் நான் நேரடியாக அவரைப் பார்த்தேன். நாடகக்காரர்களை உருவாக்கும் நோக்கமில்லாமல் விழிப்புணர்வுப் பிரசாரகர்களை உருவாக்கும் நோக்கம்கொண்ட அப்பட்டறைகளின் பின்விளைவுகள் பற்றிக் குறிப்புகள் எவையும் இல்லை.

மரணமின்மை எனும் மானுடக் கனவு

“ஒருவனுக்கு நீண்ட ஆயுள் என்றால் அவனுக்கு ஆரோக்கிய வாழ்வென்பதன்று. அப்படிக் குறைந்த ஆயுள் உள்ளவன் என்றால், அவன் ஆரோக்கியமாக இருக்கமாட்டான் என்று அர்த்தமன்று. வாழ்வில் தூய்மையுடன் காலங்கழிப்பவனே ஆரோக்கியம் நிரம்பியவனாவான்” என நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பையும் முரண்பாடையும் சுட்டிக்காட்டுகிறார்.

கிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்

மேற்கு வங்கத்தின் சந்தன்நகரில் பிறந்த கிருஷ்ண பாசு, தன்னுடைய பதினொரு வயதிலேயே முன்னணி வங்க மொழி இதழ்களான ஏக்‌ஷாத், தேஷ், கீர்திபாஷ், அம்ருதோ ஆகியவற்றில் படைப்புகளை வெளியிட்டதன் மூலம் தன் கவி வாழ்வைத் தொடங்கினார். அவரது தனிக் கவிதைகளின் முதல் தொகுப்பு 1976-இல் வெளியானது. அன்று தொடங்கி, அதிசயிக்கச் செய்யும்விதமாக, மேலும் 18 தொகுப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

வைரஸ்

உத்ரன், கைகளை ஆட்டி கத்தினான், “ இந்த ஆள் ஒரு கூலிக்காரன். நேத்துதான் தெலுங்கானாவல இருந்து ஊர் திரும்பியிருக்கான். 18 நாட்கள் தனிமையில் இருந்திருக்கணும். அரசாங்கம் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியிருக்கு. ஆனா, இவன் ரயிலிருந்து குதிச்சி தப்பியோடியிருக்கான். வீட்டுக்கு போற அவசரத்துல… வேற எதுக்கு? “ ஏளனமாக உறுமினான்.

சுல்தானாவின் கனவு

டார்ஜீலிங்கில் இருந்தபோது சிஸ்டர் சாராவுடன்தான் நான் நடைப்பயிற்சி செய்வேன். தாவரவியல் தோட்டங்களில் கைகோத்துக்கொண்டு சிரித்துப் பேசியபடியே நடந்து செல்வோம். இப்போதுகூட அப்படிப்பட்ட தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத் தான் வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அவரது அழைப்பை ஏற்று அவருடன் வெளியே சென்றேன்.

டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது

இரண்டு போலீஸ்காரர்கள் தம் இடுப்பிலிருந்த துப்பாக்கிகளை வெளியே எடுத்து காளைகளின் அருகே மெதுவாகச் சென்றனர். பாதுகாப்பான தூரத்தில் தெருவில் முட்டியிட்டுக் குனிந்து உட்கார்ந்தனர். பொதுமக்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தனர். கூட்டத்தில் யாரோ கத்தினார்கள்: ஏய், அது மஹாதேவக் கடவுளின் காளை – அவற்றைக் கொல்வதில் என்ன பலன்? இன்னொருவன் பதில் சொன்னான்: ஆனால் அவை கம்யூனிஸ்ட் காளைகள் – அவற்றைக் கொல்வது பாவமில்லை!

தீப்பெட்டி

அவள் இதைப் பற்றிய பேச்சை எடுத்தால், அவன் முதலில் சிரிப்புடன் அதைப் புறந்தள்ள முயற்சி செய்வான். சிரிப்பு அவனுக்குக் கை கொடுத்துக் காப்பாற்றவில்லையென்றால் அவளைத் திட்டத் தொடங்குவான்.

குரல் கொடுப்பதிலிருந்து இடம் கோருவது வரை

சத்திரிய இளவரசி அம்பிகா, இனப்பெருக்கம் செய்வதற்கான ஒரு கருவியாக மட்டும் தான் பயன்படுத்தப்படுவதை விரும்பவில்லை. எதிர்க்கிறாள். ஓர் இளவரசியாய்த் தனக்கு பண்பட்ட வகையான இன்பத்தின் எதிர்பார்ப்புகள் உள்ளன என அவள் சுட்டிக் காட்டுகிறாள்.

துருவன் மகன்

This entry is part 8 of 72 in the series நூறு நூல்கள்

அவர் மனதிலும் துருவன் மகன் ஞானவானாக, சத்திய வடிவாக, ஜாதிகளைப் பாராதவனாக, அறிவோடு எதையும் ஆராய்பவனாகத் தானிருக்கிறான். வணிகர் விரிக்கும் வஞ்சகச் செல்வ வலையில் அவர் தலைமை புரோகிதரைப் போல மயங்கவில்லை. வறட்சியால் பஞ்சம் பிழைக்க ஊரை விட்டுக் கிளம்பும் தன் கூட்டத்தினரை தடுத்து நிறுத்த அவர் ரத்னாகர ஏரியைத் தோண்டச் செய்கிறார். அவர்கள் நிராசையுற்று அந்தப் பணியை நிறுத்த நினைக்கையில் தங்கக் கலசம் ஏரியின் அடியில் இருப்பதாகக் கனவு கண்டதாகச் சொல்கிறார். ஊரெங்கும் நதிகள் இளைத்து ஏரிகள் வற்றிவிட இவர்கள் குடியிருப்பின் ஏரியில் நீர் வருகிறது;

ஒரு கடிதம்

ஆனால் உன் அப்பா எனக்கு எந்த வழியையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவரது வார்த்தையாலும் நடத்தையாலும் கொடுமையாலும் என்னைச் சித்திரவதை செய்கிறார்.

மூன்று கவிதைகள்

ஒரு கிராமம் நதிக்குள்ளாக ஒரு கல்லைப்போல விழுகிறது
மேலும் நதி தனது திசையை மாற்றிக்கொள்கிறது
அந்நேரத்திலிருந்து அங்கே குன்றிலிருந்து வழியும் நீரினால் உருவான நீரோடை ஒன்று என் வீடிருந்த இடத்தை பிடித்துக்கொண்டது
நான் மூழ்கவில்லை

ஊர்மி

ரிசீவரைக் கீழே வைத்தேன். யார் இந்த ஆள்? ஊர்மிக்கும் இவனுக்கும் என்ன உறவு? நான் தெரிந்து கொண்டது, ஷியாமல் என்பவரை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைத்தான். ஆனால் ஊர்மி ஏன் ஷியாமலைச் சந்திக்கச் சென்றாள்?

கற்பனையின் சொகுசு

“தெரியல. ஏதோ போராட்டத்துல கலந்துக்கறானாம். நாம கூலிக்கு ஏத்த சம்பளம் தரதில்லையாம்” என்று சற்றே ஓருக்களித்தவாறு பதிலளித்தாள்.

கவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்

இவர் வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டச் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாலும் பின்னர் அதிலிருந்து தன்னை முற்றாக விடுவித்து ஆன்மீகம் மற்றும் மெய்யியல் சார் விடயங்களுக்குள் அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியா மற்றும் வங்கம் ஆகிய இரு நாடுகளினதும் தேசிய கீதங்களைப் படைத்தை பெருமையும் இவரையே சாரும்.

லஜ்ஜா: அவமானம்

This entry is part 7 of 72 in the series நூறு நூல்கள்

எதிரொலியாக, இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கிறார்கள். பங்களாதேசத்தில் வாழும் சிறுபான்மை இந்துக்-களோ பெரும்பான்மை முஸ்லிம்களால் அடித்துக் கொல்லப்படு-கிறார்கள். இந்தியாவில் நடப்பது ஹிந்து முஸ்லிம் கலவரம். ஆனால் பங்களாதேசத்தில் நடப்பதோ ஹிந்து ஒழிப்பு. இதுவே இந்தியாவுக்கும் பங்களாதேசத்துக்கும் உள்ள வேறுபாடு. அதுவே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான வேறுபாடும்கூட என்ற உண்மையை இந்நாவலில் விவரிக்கிறார், பிறப்பால் முஸ்லிமான நாவலாசிரியர் தஸ்லிமா நஸ்ரின்.

யசோதராவின் புன்னகை

என்னையறியாமலே அனிச்சையாய் எழுந்த என் முகத்தின் கேள்விக்குறியைக் கண்டுகொண்ட அந்த சுட்டிப்பெண் சொன்னாள்: “ஆன்ட்டி! எனக்கு எட்டு வயசாக இருக்கும்போது எங்கப்பா திடீர்னு வீட்டை விட்டுப்போய் சன்யாசம் வாங்கிண்டுட்டார். என் தங்கைக்கு அப்போ ஆறு வயசு. அவர் இப்போ எங்கே என்று யாருக்கும் தெரியாது.”

வங்கச் சிறுகதைகள்: அறிமுகம்

அங்கிருக்கும் வேலையாட்களிடம் தனக்கு ஒரு வேலை வேண்டும் எனக் கேட்கிறான். அவர்கள் அந்தப் படகின் சாரங்கியிடம் அவனை அழைத்துக் கொண்டு போகின்றனர். சாரங்கியோ மிகவும் கறாறான, கண்டிப்பான பேர்வழி. அவன் நசீமிற்கு வேலை போட்டு கொடுப்பதாகச் சொல்கிறான். ஆனால் சம்பளம் இல்லை. வெறும் உணவு மட்டும்தான். உடுத்த துணி கூட கிடையாது. அங்கிருக்கும் வேலையாட்கள் எல்லோரும் சாரங்கியால் அடிமைகள் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். நசீமின் நிலையும் அதுவே.

வங்க இலக்கியங்கள்

This entry is part 9 of 13 in the series வங்கம்

வங்க மொழி நூல்களில் அவசியம் வாசிக்கப்படவேண்டியவை பற்றிய சுருக்கமான அறிமுகம் இங்கே தரப்பட்டுள்ளது. முக்கியமான எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் இங்கே கிடைக்கும். உஷா வை. தாராசங்கர் பந்தோபாத்யாய் (1898 – 1971) தாராசங்கர் பந்தோபாத்யாய் (1898-1971) எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளர். அவர் இந்திய சுதந்திர இயக்கத்திலும் அதற்குப் பிற்பட்ட “வங்க இலக்கியங்கள்”

வங்காள வரலாறு

This entry is part 11 of 13 in the series வங்கம்

750-1144 பாலா (Pala) வம்சத்து அரசினர் பல காலம் வங்காளத்தை ஆண்டனர். தர்மபாலா (770-810), தேவபாலா (810-850) ஆண்ட கால கட்டத்தில் அவர்களின் ஆட்சிப்பகுதி மேற்கில் மைய கங்கை பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கில் அஸ்ஸாம் வரை விரிந்தது. மஹாயான பௌத்தம், தாந்திரிகத்தை நோக்கி நகர்ந்தது. தர்மபாலா, பகர்பூரில் (Paharpur) சோமபுரா மஹாவிஹாரைக் கட்டினார். வங்காள தேசத்தில், ராஜ்ஷாஹி (Rajshahi) என்ற இடத்திலும் இந்த மஹாவிஹாரைக் கட்டியவர்

அனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை

This entry is part 10 of 13 in the series வங்கம்

நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தார் இந்திய வாசகர்களுக்காக, இந்திய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடவும் மற்ற இந்திய மொழிகளில் அவற்றின் மொழி பெயர்ப்புகளைப் பிரசுரிக்கவும் “ஆதான்-பிரதான்” என்ற பெயரில் ஒரு திட்டம் வகுத்தனர். அந்தத் திட்டத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்டது இந்தச் சிறுகதைத் தொகுப்பு. “அனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை”

படைப்பின் தருணம்

அண்டை விலங்குகளின் மெல்லிய உரையாடல் முயற்சிகள்
பூந்தொட்டியிலிருக்கும் பூவின் அர்த்தமற்ற இளிப்பு—
மெல்ல மீண்டு, வடிவம் கொண்டு, வாழ்வை மீட்டெடுப்பது போல்;
அனைத்தும் ஒன்றாக — கருஞ்சிவப்பு மலர்களும், ரகசிய புழுக்களும்
சாத்தியமற்ற அனைத்தும்.

அந்தக் காலப் பாடல்களும் இக்கால கலைகளும்

அஜய் கர் – திரைப்பட பாடல்கள் தொகுப்பு, சத்யஜித் ரேவின் பின்னணி இசை, கொல்கத்தாவின் இக்காலக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம்,

வங்கச் சிறப்பிதழ்: அறிமுகம்

கலைச் செல்வங்கள் எங்கிருப்பினும் அவற்றைக் கொணர்ந்திங்கு சேர்ப்பது என்ற பணியில் சொல்வனம் எடுத்திருக்கும் முக்கிய அடுத்த படி இந்த வங்கமொழிச் சிறப்பிதழ். ….அம்மொழியின் உலகத்தரம் வாய்ந்த இலக்கியம், இசை, கலை சார்ந்த படைப்புகள் இத்தேர்வின் பொருத்தத்தை உறுதிப்படுத்தி உள்ளன.

சிற்றடி: ஏன் இந்த முயற்சி?

பல மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களைப் பெற்று வாசித்துப் பார்த்தபோது அவற்றின் சுகந்தம், நேரடித் தாக்கம், ஸ்பரிசானுபவமே போன்ற வாசிப்பனுபவம், எனக்கு இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குச் சென்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை, அதேபோல இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குப் போய் அங்கிருந்து தமிழாக்கம் பெற்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை.

தாகூரின் கூப்பிய கரங்கள்

இந்த ஆவணப்படப் பணியைக் கண்காணிக்க அரசு ஒரு குழுவை ஏற்படுத்தியது. அவர்களின் வழிகாட்டுதலின் படியேதான் படம் உருவாக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காதம்பரி தேவியின் தற்கொலை குறித்தோ, காந்தியோடு ஏற்பட்ட பிணக்குகள் பற்றியோ, முசோலினியைப் பாராட்டியதைப் பற்றியோ, எந்தத் தகவலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறக்கூடாது. சர்ச்சைக்குரிய விஷயங்களைப் படத்தில் அனுமதிக்கமுடியாது என்று கண்காணிப்புக் குழு உறுதியாகச் சொன்னது.

இலக்கியமும் ரசகுல்லாக்களும்

ஆரோக்கியநிகேதனம் நவீனத்தின் தாக்கத்தை ஒப்புநோக்கில் மருத்துவம் என்ற குறுகிய வட்டத்தின் உள்நின்று ஆராய்கிறது. ஹன்சுலி வளைவின் கதை அதை மேலும் விரிவாக ஒரு ஓரங்கட்டப்பட்ட குழுவின் உருமாற்றத்தை, காலனியம், போர், தொழில்மயமாக்கல் போன்ற விசைகளைக் கொண்டு ஆராய்கிறது. ஹன்சுலி என்பது நேபாள் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் குடிகள் அணியும் வளைந்திருக்கும் ஒரு திருகல்-கழுத்தணி.

பொன்னுலகின் வேடிக்கைகள்

ஆங்கிலேய காலனியாதிக்கத்திற்குப் பிறகான சுதந்திர இந்தியாவிலும் ஹிப்பி இயக்கத்தின் மிதமான தாக்கம் எதிரொலித்தது. மிக எளிய வடிவில் அது நம்மை வந்தடைந்தது எனலாம். அதன் தீர்க்கமான தர்க்கங்களும் ஏட்டளவில் தேங்கிவிட்ட வாழ்க்கைக் கோட்பாடுகளும் நமது சூழலுக்கேற்ப வேறு முகமூடிகளை அணிந்துகொண்டன.

நீலகண்டப் பறவையைத் தேடியவர்

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை மொழிபெயர்த்த விஷ்ணுபத பட்டாசார்யாவுக்குப் பிறகு தமிழிலிருந்து வங்காளத்துக்கு நேரிடையாக மொழிபெயர்ப்பவர்கள் யாரும் இருக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தி தேஷ் பத்திரிகையை இது பற்றி அணுகியபோது அதற்கு வாசகர் வரவேற்பு இல்லை என்ற பதிலே கிடைத்தது.

கனன்றெரியும் நீர்வெளி

இந்திய இலக்கியத்தின் முதன்மை வரிசையில் வைக்கத்தகுந்த படைப்பாக அதீன் பந்தோபாத்யாய இந்நாவலைக் கொடையளித்திருக்கிறார். பாத்திரங்களின் மீதேறித் தாவித் தாவிச் சென்று கதை சொல்லும் முறைமையைக் கையாண்டிருக்கிறார். ஒரு நிகழ்வின் உச்சத்தில் வாசகனை நிறுத்தி அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நடக்கும் ஒரு காட்சிக்குத் தாவிவிடுகிறார்.

நான்கு சுவர்களுக்குள் விரியும் அகாலம்

கல்கத்தாவின் மக்கட் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தெருக்களில் வாழ்ந்தனர். இவர்களைவிட ஓரளவு மேம்பட்ட நிலையிலிருந்த நடுத்தர மக்கள் வங்காளத்தின் மரபார்ந்த குடும்ப அமைப்பைப் பற்றிக்கொண்டு கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்தனர். ஒரே வீட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்றாக வாழ்வது மிகச் சாதாரணமாக இருந்த காலகட்டம். ஆஷாபூர்ணா தேவியின் கதைகள் பெரும்பாலும் இம்மத்திய வர்க்கத்துக் குடும்பங்களிலிருந்து முளைப்பவை.

சத்யஜித் ரேயின் ரவிஷங்கர் – இரு கலைஞர்கள்

ஓர் இசை மேதைக்கு ஒரு திரை மேதை செலுத்திய உச்சகட்ட மரியாதை இது. திரைப்படமாக வெளிவந்திருந்தால் ஒருவேளை ரவிஷங்கரின் மேதைமைக்கு நிகர் செய்ய இயலாமல் போயிருக்கலாம். ஒரு சாதாரண ரசிகராக நமக்குத் தோன்றியது ரேவுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா?

மரணத்தின் பல வண்ணம்

பிறப்பு என்பதே மரணத்தோடுதான் பிறக்கிறது என்பதை அறிந்தாலும் அந்த எண்ணத்தை மனதிற்குள் அழுத்தியபடி இல்லையில்லை தன் வாழ்வு நித்யமானது என்று வீறிட்டபடியே ஓடுகிறார்கள் மனிதர்கள். மரணம் என்பது பயப்பட வேண்டியதல்ல, இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டியது என்பதை பல்வேறு மரணங்களின் மூலமாக காட்டுகிறது இந்நாவல்.

மகாஸ்வேதா தேவியின் படைப்புலகம்

இந்தியாவில் கொத்தடிமை முறையைக் கொண்டுவந்தது ஆங்கிலேயர்கள். 1986ல் மகாஸ்வேதா பழங்குடிகளுக்கான இயக்கத்தைத் தொடங்குகிறார். பெங்காலின் பல தினசரிகளில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார்.

காளியின் குழந்தை ராம்பிரசாத்

சிறுவயதில் கல்வி, கேள்விகளில் தேர்ச்சிபெற்ற ராம்பிரசாத் ஆயுர்வேதத்தில் ஆர்வம் காட்டவில்லை. 22 வயதில் சர்வாணி என்ற பெண்ணை அவருக்கு மணம் முடித்தார்கள், நான்கு குழந்தைகளும் பிறந்தன. ஆயினும் ராம்பிரசாத் வழக்கமான லௌகீக குடும்பஸ்தர்போல “பொறுப்பாக” இல்லாமல், நதிக்கரைகளில் திரிதல், குலகுருவிடம் பெற்ற மந்திர தீட்சையின்படி, தனிமையில் அமர்ந்து தியானித்தல் என்று விட்டேற்றியாக இருந்தார்.

பக்கிம் + பாரதி = பரவசம்

“பக்கிம் சந்திர பாபுவின் சொற்களைத் தமிழ்ப்படுத்த எனக்குப் போதிய வன்மை இல்லாவிடினும், தமிழ் நாட்டாருக்கு அச்செய்யுளின் பொருளுணர்த்த வேண்டுமென்ற ஆசைப் பெருக்காலேயே யான் இதனைத் துணிந்திருக்கிறேன்” என்கிறார். இது மட்டுமா? “தெய்வப் புலவர்” என்றால் நாம் அனைவரும் திருவள்ளுவர் என்போம். ஆனால் பாரதி தனது கட்டுரையில் “தெய்வப் புலவராகிய பக்கிம் பாபு” என்று அழைக்கிறார்.

அபத்த நாடகத்தின் கதை

சசியின் தந்தை கோபால்தாஸ் ஒரு தரகர். அந்த வேலைகளுக்கே உரிய சூட்சுமங்கள் நிறைந்தவர். அந்த யுக்தியைப் பயன்படுத்தித் தன் வீட்டில் தங்கவரும் நந்தலால் என்ற பெரிய வியாபாரியை மகளுக்குத் திருமணம் செய்விக்கிறார்.

மின்னல் சங்கேதம் – 1

This entry is part 1 of 12 in the series மின்னல் சங்கேதம்

டினு டியோர் ஏழெட்டு மீனைப் பிடிச்சான். பிராமண தானமா எனக்கும் ஒண்ணு கொடுத்தான். நல்ல பெரிசு இல்ல? ஓய் பொட்லா, நீ என்ன செஞ்சிக்கிட்டு இருக்க? காலங்காத்தால வீட்டுப்பாடம், படிப்பு எதுவும் இல்லையா?”

ஆத்மஜன்

சிற்றுண்டி நேரத்தில் நான் கேரம் ஆடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் ஆபீஸ் நேரத்துக்குப்பின் பொழுதுபோக்கு அறைக்குள் நுழைவது சாத்தியமில்லாமல் போயிருந்தது. சற்றே தாமதமாய் வீடு சென்றாலும் சுப்தி நச்சரிப்பாள்- நான் இந்த வீட்டில் ஒரு கைதி போலிருக்கிறேன், நீங்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்…

பத்து ரூபாய் மட்டும்

எப்போதும்போல நாள்கள் ஒடின. ஒரு வாரம் கழிந்தது. பிதுபாபு ஒருநாள் காலை மீண்டும் நிகில்பாபுவின் வரவேற்பறையில் தலைகாட்டினார். மூன்று மாதங்களுக்குமுன், பிதுபாபு பத்து ரூபாய் அவனுக்குக் கடன் கொடுத்தார், “நாளை பணத்தை திருப்பி தருகிறேன்” என்று அவன் வாக்குக் கொடுத்திருந்தார்.

ஹீங்க் கொச்சூரி

குஸும் தினம் மாலையில் அழகாக உடுத்து, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு, முகத்தில் மாவு போன்ற ஏதோ பொடியையும் பூசிக் கொள்வாள். சிகையலங்காரமும் அவளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் என்னை அறையில் இருக்க அனுமதிக்கமாட்டாள். ’வீட்டுக்குப் போ.. என் பாபு வர நேரம் இது’ என்பாள்.

தொலைந்துபோன புயல்

மனிதனின் ஆவி அவனைவிட்டுப் பிரிந்ததும் புவியீர்ப்பு அவன் நகர்வைக் கட்டுப்படுத்தவதில்லை. சிலரின் கூற்றுப்படி, மரணம்கூட மனிதனை இப்புவியிலிருந்து விடுவிக்க முடியாது, ஏனெனில் ஆவிகள்கூட பிரம்மஞான சபையின் கட்டளைகளுக்குட்பட்டுத்தான் அலைய முடியும்.

ரூபா

உங்களுக்கு என்மீது எரிச்சலாக இருக்கும். ஒரு மனிதன் உங்கள் அனுதியைப் பெறாமலே தனது கதையைக் கொட்ட ஆரம்பித்தால் அப்படி இருப்பது இயல்புதான். ஆனால் என்ன பிரச்சினை என்பது உங்களுக்குத் தெரியுமா?

தன்னிரங்கல்

அபினாஷ் வழக்கமாக ரொட்டியையும் உருளைக்கிழங்கு கறியையும் தன் காலையுணவாக எடுத்துக் கொள்வார்; அவருடைய மகன்கள் பூரியும் இனிப்பும் உண்பார்கள்; அவருடைய பேத்திகளால் பெரிய பூரியை வேகமாகச் சாப்பிட முடியாது, அதனால் அவர்களுக்கு விழுங்குவதற்குச் சுலபமானவை எதையாவது கொடுக்க வேண்டியிருக்கும்.

படகோட்டி தரிணி

தரிணி சொன்னது சரிதான். மயூராக்ஷி தனது வேகமான நீரோட்டத்திற்குப் பெயர் போனவள். ஓர் ஆண்டில் ஏழு ,எட்டு மாதங்கள் அந்த ஆறு ஒரு பாலைவனம்தான்— ஒன்று ஒன்றரை மைல் வரை கரைக்குக் கரை மண் பரவிக் கிடக்கும். ஆனால் மழை வந்துவிட்டால் அவள் அசுர பலம் பெற்று நான்கு, ஐந்து மைல் வரை விரிந்து, ஆழமான சாம்பல் நிற நீரால் எல்லாவற்றையும் மூழ்கடித்து விடுவாள்.

நான் கிருஷ்ணாவின் காதலன்

கீழ்மாடியில் இருந்த என் வீட்டில் முன்பு குடியிருந்தவன். நான்கு மாத வாடகையைப் பாக்கி வைத்ததோடு, என் மனைவியையும் அவனுடன் இழுத்துக்கொண்டு போய்விட்டான். அதுவும் சகல நகை நட்டுகளுடன். போதாக்குறைக்கு, அலமாரியில் இருந்த நாற்பதாயிரம் ரொக்கத்தையும் வழிச் செலவுக்காக எடுத்துக்கொண்டான்.

காதலும் அந்த பைத்தியக்காரனும்

அந்தப் பெண் மல்லி சித்தப்பாவிடம் அவர் அனைத்துப் பறவைகளையும் விடுவித்தால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்வேன் எனச் சொல்லியிருந்தாள். அவரிடம் நான்கு காதற்கிளிகள் மட்டுமே எஞ்சி இருந்தன. மூன்று மஞ்சள் ஒரு நீலம். ஆனால் இதைப் படத்திலிருந்து உங்களால் சொல்ல முடியாது. அவை எல்லாம் கருப்பு வெள்ளை.

ரத்தப் பாசம்

அவர்களோடு வந்த மூத்தவரான ஷிவ்ஷங்கர் “நீங்களே டாக்டர்ங்கறதாலே உங்க மகனை இங்கே கொண்டுவரச் சொன்னேன். ரொம்ப மோசமாக அடிப்பட்டிருக்கான். மற்ற ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியில் போலீஸ் பார்த்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்…” என்றார்.