“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்

“ஆனால் பூஷண் ஸாஹ் புது நாகரிகத்தைச் சேர்ந்தவன் இங்கிலீஷ் படித்து வெகு சுத்தமாகப் பேசுவான், துரைமார் சேரிகளில் செருப்புப் போட்டுக்கொண்டே நுழைவான். அத்துடன் தாடியும் வளர்த்தான். இதனால் துரைமார் இவனைக் கர்வியென்று சொல்லி இவனுக்கு யாதொரு நன்மையும் செய்யமாட்டார்கள். அவனைப் பார்த்தால் உடனே தெரியும், இவன் புது வழியைச் சேர்ந்த வங்காளி யென்று. வீட்டிலேயும் அவனுக்கொரு ஸங்கடம். அவன் பெண்டாட்டி அழகாக இருப்பாள், காலேஜ் படிப்பு ஒரு புறம், அழகுப் பெண்டாட்டி மற்றொரு புறம்; புராதன ஆசார அனுஷ்டானங்கள் அவன் வீட்டிலே நிற்க இடமுண்டா ?”