கர்ணனும் குந்தியும்

தங்களது குரல் என்னைப் புராதனமான, உலகின் குழந்தைப்பருவத்தைத் தொலைத்த, அந்திக்கருக்கல் போலும் பிரக்ஞைக்குள் நடத்திச் செல்கிறது. எப்படியானாலும், இது கனவாக இருந்தாலும், அல்லது மறந்துபோன நிஜத்தின் துண்டாக இருப்பினும், என்னருகே வந்து உங்கள் வலதுகரத்தை எனது நெற்றிமீது வையுங்கள். என் தாய் என்னை நிராகரித்து விட்டாள் எனும் வதந்திகள் உலவுகின்றன. பல இரவுகளில் அவள் எனது உறக்கத்தில் வந்திருக்கிறாள்; ஆனால் நான், “உனது முக்காட்டை எடுத்து உன் முகத்தைக் காட்டு,” என்று அழுதபோது, அவள் உருவம் மறைந்துவிடும்.

விளையாட்டுப் பொருள்கள்

குழந்தையின் விளையாட்டும் அதனால் அவன் அடையும் சந்தோஷமும் தகப்பனுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறதோ? ஆகவே ‘இவனாவது கவலைகளில்லாது தனது குழந்தைப் பருவத்தைக் கழிக்கட்டும்,’ எனும் அர்த்தம் நிறைந்த புன்னகைதான் எனக்கூட எண்ணத் தோன்றுகிறது.

முதல் மல்லிகைப்பூக்கள் (தாகூர் – பிறைநிலா)

மேகங்கள் மிதந்து செல்லும் ஆகாயத்தில் அவற்றிற்கு வடிவங்கள் (யானை, சர்க்கஸ் கோமாளி, கரடி) அமைத்துக் கொடுத்து அவற்றைப் பெயர்சொல்லி ஊகிக்கக் கூறி விளையாடும் குழந்தைகள் விளையாட்டு! பிற்காலத்தில் திறந்தவெளிக் கச்சேரிகளில் ஆகாயத்தை நோக்கியவாறே கேட்ட ‘சௌந்தரராஜம் ஆச்ரயே’வில் பாடகர் ‘நந்த நந்தன ராஜம்’ எனப்பாடும்போது குட்டிக் கிருஷ்ணனின் லீலைகளை அந்த மேகங்களில் கண்டு களிக்கத் தோன்றியது.

“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்

“ஆனால் பூஷண் ஸாஹ் புது நாகரிகத்தைச் சேர்ந்தவன் இங்கிலீஷ் படித்து வெகு சுத்தமாகப் பேசுவான், துரைமார் சேரிகளில் செருப்புப் போட்டுக்கொண்டே நுழைவான். அத்துடன் தாடியும் வளர்த்தான். இதனால் துரைமார் இவனைக் கர்வியென்று சொல்லி இவனுக்கு யாதொரு நன்மையும் செய்யமாட்டார்கள். அவனைப் பார்த்தால் உடனே தெரியும், இவன் புது வழியைச் சேர்ந்த வங்காளி யென்று. வீட்டிலேயும் அவனுக்கொரு ஸங்கடம். அவன் பெண்டாட்டி அழகாக இருப்பாள், காலேஜ் படிப்பு ஒரு புறம், அழகுப் பெண்டாட்டி மற்றொரு புறம்; புராதன ஆசார அனுஷ்டானங்கள் அவன் வீட்டிலே நிற்க இடமுண்டா ?”