வாழ்க்கைச்சக்கரத்தில் வயோதிகம் எவ்வளவு சீக்கிரம் ஒருவரை ஆக்கிரமிக்கும் என்பதைக் கணிக்கவே முடியாது. அப்படித்தான் அவர்கள் இருவருக்கும் ஆயிற்று. தலை நரைத்தது. கண் முகம் தோல் சுருங்கிப்போனது. முட்டிவலி நெட்டிக்கொண்டு வந்தது. இயலாமை அன்றாடம் அனுபவமானது. சர்க்கரையும் இரத்த அழுத்தமும் கொலஸ்ட்ராலும் உன்னை விட்டேனா பார் என்று ஒன்றன் பின் ஒன்றாகத் துரத்திக்கொண்டு வந்தன.
Tag: நவீன இலக்கியம்
தெய்வநல்லூர் கதைகள் 13
பெரிய கோவில் சந்திப்புக்குப் பிறகு மொத்த வகுப்புமே மாறிப்போனது. அன்றைய மாலை நாங்கள் எவ்வித காரணமுமின்றி சும்மா சிரிப்பதே அம்மா சுகமென சிரித்து பேசினோம். வெள்ளி மாலை கோவில் சந்திப்பு முடிந்து சங்கீதாவும், மெஜூராவும் உடன் வர நாங்கள் மூவரும் என அனைவரும் ஒன்றாக கோவிலிலிருந்து கிளம்பி தெற்கு “தெய்வநல்லூர் கதைகள் 13”