பெண் தெய்வங்களும் மண் பாண்டங்களும்

ஆதிச்சநல்லூரில் இருந்த சிறு அருங்காட்சியகம் இரண்டாம் வகை. நிலத்திற்கு அடியே உள்ள பாறைகளை குடைந்து, மண்ணை அகழ்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண்பானைகளை சுற்றி வந்து பார்வையிட மர சட்டங்களால் ஆன பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. விட்டத்தில் பொருத்தப்பட்ட குவி விளக்குகளின் வெளிச்சத்தில் நாம் நடக்கும் பாதைக்கு அடியே இருந்த இந்தப் பானைகள் வெண்மை, நீலம், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மெளனமாக மிளிர்ந்தன. இவை யாவும் முதுமக்கள் தாழி என்றழைக்கப்படும் ஈமத்தாழிகள் (Burial urns). அதாவது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் மண் கலன்கள்.

ஓ ரசிக சீமானே…

இளவட்டங்கள் துண்டை ஹாண்டில்பாரில் கட்டிக்கிட்டு குளிர எண்ணெய் தேய்ச்சுகிட்டு ஒரே சைக்கிளில் மூன்று பேர் கூட செல்வதுண்டு. படிப்படியாக ஆத்துக்கு செல்வது குறைந்தது. யாராவது இறந்தால் கருப்பந்துறைக்கு(சுடுகாடு) போய் பின் ஆத்தில் குளித்து வருவது என்பதும் போய் இப்ப நேரே வீட்டுக்கு வந்து வெந்நீர் குளியல் (மாப்ள, உடம்புக்கு ஒத்துக்கிடமாட்டேங்குலா) என்றாகி போனது.