ஆசிரியரின் முதல் கதையும் அவரது சொந்த அனுபவத்தை வைத்து எழுதியதும் என்று சொல்லப்பட்ட ‘விடிவு’, தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நண்பர்கள் பைக்கில் செல்லும்பொழுது, ராஜா என்பவன் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான். அவன் சடலத்தை இறந்தவன் வீட்டில் ஒப்படைக்கும்பொழுது எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து, கதை நகர்கிறது. ஏமாற்றுபவன், திருடன், காமக்கண்ணோடு பார்ப்பவன், சொல்வதொன்று செய்வதொன்று என்று நடமாடுபவர்கள், அப்பாவிகள் இருக்கும் கதைகள் உள்ள தொகுப்பில், மானுடத்தில் அன்பு மிச்சமிருக்கிறது என சொல்ல ஒரு எளிமையான கதை.
Tag: காளி பிரசாத்
கரி
தூங்கறப்போ அவ பின்னாடி நின்னதும் பின் அவளைப் பார்த்து பயந்ததும் அவனை சீண்டிருச்சின்னு நினைக்கிறேன். ஒண்ணை மறைக்க இன்ணொண்ணு.. அதை மறைக்க வேறொண்ணுன்னு போயிட்டே இருக்கான். நாம என்னைக்கும் ஒரு கோடுபோட்டு அதுக்குள்ளதான் வாழறோம். அதுக்கு மேலயோ கீழயோ போறதில்ல. ஆனா இவனைப்பாரு.. அஞ்சு வருஷத்துக்கு ஒரு கெட்டப்புன்னு இப்ப இந்த இடத்துல வந்து நிக்கிறான்..”
திருவண்ணாமலை
“கண்ணன், நீங்க இப்படி திருவண்ணாமலைன்னு சொல்றீங்க பாருங்க.. அது ஒரு நல்ல பழக்கம்.. அதன்மூலம் கோபத்தை அடக்கலாம்.. ஆயிரத்தியெட்டு முறை சொன்னால் ஒரு கிரிவலம் சென்ற பலன் கிடைக்கும்… தெரியுமா,” என்றார் லேத்து மிஷின் இன்சார்ஜ்.
