இன்னமும் அணையவில்லை
யாழ் நூலகம் எரிந்த பெருநெருப்பு
இன்னமும் கருகிக்கொண்டிருக்கிறது
அறிவின் வேர்களைப் பொசுக்கிய வாடை
பசிபிக் பெருங்கடலிலும் கேட்கிறது
குமுதினிப் படகில் வெட்டிச் சாய்க்கப்பட்டவர்களின்
குடல் சரிந்த மரண ஓலம்
Category: இதழ்
காஞ்சி பூசூடா உமையாள் படலம்
யாருக்கு கற்றுத்தருவது என்று காத்திருந்தாற் போல சொன்னாள். “நிரம்ப செய்யலாம்பா, மொளகா இருக்குல, அது, கொஞ்சூண்டு எண்ணெய், சின்னவெங்காயம் நிறைய, உப்பு, புளித்தண்ணி, பெருங்காயம் இதெல்லாம் போட்டு வதக்குனினா தொட்டு திங்க நாக்கு மெச்சுக்கொட்டும், கீரைய பொரிச்சுவைக்காம பருப்பு கொத்தமல்லி புதினா போட்டு கடஞ்சு வைய், தோசைக்கு மாத்தா ஆப்பஞ்செய்.”
பேட்டை நாவல் காலத்தின் ஆவணம்
1639-இல் ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை நிறுவுவதற்கு முன்பு, சோழமண்டலக் கடற்கரையோரம் மீன்பிடித் தொழிலையும் வேளாண்மையையும் வாழ்வாதாரமாகக் கொண்ட தமிழ் சமூகங்கள் வாழ்ந்து வந்தன. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், நுங்கம்பாக்கம் மற்றும் புரசவாக்கம் போன்ற கிராமங்கள் கடலோர வணிகப் பாதைகள், கோயில் வலைப்பின்னல்கள் மற்றும் விவசாய நிலப்பரப்புகளுடன் இணைக்கப்பட்ட சிறிய குடியிருப்புகளாக இருந்தன. இவர்களின் உலகம் கடல், பருவமழை என்றுதான் பிணைக்கப்பட்டிருந்தது.
மஜ்ரேஹா
என் மனைவி ஊருக்குப் போயிருந்த ஒரு நாளில் நண்பர் ஷியாம் படம் பார்க்க ‘வன்கோல்பேஸ்’ வருமாறு அழைத்திருந்தார். அவர் வரும்வரை அங்கிருந்த கடைகளை நோட்டம் விட்டவாறு நடந்து திரிந்துகொண்டிருந்த போதுதான் பீப்பி என்னைக் கண்டிருக்க வேண்டும். அவளும் அவளது பிள்ளைகளுடன் குடும்பமாக கொழும்புக்கு விடுமுறைக்காக வந்திருந்தார்கள்.
இந்தியக் (காலனிய) ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையும் தொடரும் மனநலப் பிரச்சினைகளும்
வறுமையின் கோரப்பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள இத்தகைய இடப்பெயர்வு நடைபெற்றாலும் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி இடைத்தரகர்களின் மூளைச் சலவையால் இவர்கள் வெகுவாக ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தாங்கள் மிகச் செல்வச் செழிப்பான நாட்டிற்குச் செல்ல இருப்பதாகவும், மிக அதிக சம்பளத்தை வருமானமாக ஈட்டப் போவதாகவும் நம்ப வைக்கப்பட்டார்கள். Girmit.org என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலார்களின் முதல் நிலை தரவுகள் இதனை உறுதிசெய்கின்றன
பிறந்தநாள் பரிசு
காசு, நிலம், வீடு இல்லாதவனுக்கு அம்மாவை கட்டிக்கொடுக்க மாமாக்கள் விரும்பவில்லை. அதனால் அம்மாவுக்காக அப்பாவை எதிர்க்க மாமாக்கள் முற்பட்டார்களாம். அப்பா, அம்மா வீட்டுக்குச் சென்று அம்மாவை அழைத்தார். மாமாக்கள் அதைப் பார்த்து அப்பாவை அடிக்க ஓடி வர, அப்பா சிரித்துக்கொண்டே, ‘சண்டை வேண்டாம். உங்கள் தங்கச்சி வந்து ‘’போ’’ என்று சொன்னால் நான் போய்விடுகிறேன்’ என்று சொன்னாராம்.
உடைந்த காலவரிசைகளும் நம்பகமற்ற சுயமும்
நோலனின் திரைமொழியில் மிகவும் வியக்கத்தக்க அம்சம் அதன் வழக்கத்திற்கு மாறான கட்டமைப்பாகும். ஃபாலோவிங் (1998) தொடங்கி, நோலன் கதையாடல் விவரிப்பைத் துண்டாடும் ஒரு தனித்துவமான நடைமுறையை (Practice of narrative fragmentation) நிறுவினார். இது மரபார்ந்த ஹாலிவுட் கதைசொல்லல் முறைக்கு நேரெதிரானது. கிளாசிக்கல் கதையாடல் என்பது, போர்ட்வெல் விளக்குவது போல, காரண-காரியத் தொடர்புகளால் பிணைக்கப்பட்ட, ஒரு இலக்கை நோக்கி நேர்க்கோட்டில் நகரும் நிகழ்வுகளின் சங்கிலித் தொடர். நோலன் இந்தத் தர்க்கத்தை முறையாகச் சிதைக்கிறார்.
சின்னா தேவி
“உன்னுடைய வேதனையும் கவலையும் எங்களுக்குத் தெரியும் கிருஷ்ணா. இன்னும் கொஞ்ச நாள்தான். நீ துளுவ வம்சத்தில் பிறந்தவனாக இருந்தாலும் ஆந்திர சாம்ராஜியத்தை நிலைநிறுத்தப் போவது நீ ஒருவன்தான். இது உண்மை. வித்யாரண்ய சுவாமி மகா விஷ்ணுவின் அம்சம். அவருடைய வாக்கு பொய்க்காது, மகனே. உன்னைப் பெற்ற தாயார் நன்றாக இருக்கட்டும். நாகமாம்பாவின் ஆசியோடு தென்னாட்டுக்கு ஏக சக்ராதிபதியாக நீ மகுடம் சூடும் நாள் விரைவில் வரப் போகிறது. இந்த பூமித்தாய் அதற்காகக் காத்திருக்கிறாள். அந்த நொடிக்காகவே இந்தக் காத்திருப்பு” என்றார்.
புதைகுழி மேல் நின்ற வாழ்க்கை
போரின் இரு பக்கங்களிலும் சாதாரண மனிதர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் மிக எளிமையாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம் தமிழர்கள் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்; மறுபக்கம் சிங்கள இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமில்லாத ஒரு போரில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து தப்பிச் செல்ல முயல்கிறார்கள். இந்தச் சந்திப்பு போரின் அரசியல் எல்லைகளைத் தாண்டி மனித துயரத்தின் பொதுவான தன்மையை வெளிப்படுத்துகிறது.
தேனம்மை
கல்யாணப்படம் எதிர் சுவற்றில் தொங்கியது. ‘அக்கா மஞ்சள் நிறம்..அத்தான் மாநிறமானாலும் அழகு. கண்கள் ஈர்ப்புடையது. நின்று நேருக்கு நேர் பார்க்கமுடியாது. இவனுடைய அப்பாவின் இறப்பிற்கு பின் அங்குதான் அண்ணனோடு சேர்த்து இவன் ஜாகையும்.பயமும் மரியாதையும் கலந்த உறவு. நேருக்குநேர் பார்த்துப் பேசியதில்லை’.
ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின்- போட்டோ 51
ரோஸலிண்ட் DNA வை வெறும் புகைப்படம் மட்டும் எடுக்கவில்லை, அந்தப் புகைப்படங்களில் உள்ள புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை மிக நுணுக்கமாகக் கணக்கிட்டார். ஒரு சுருளின் நீளம் எவ்வளவு? இரண்டு இழைகளுக்கும் இடைப்பட்ட தூரம் என்ன? பாஸ்பேட் மூலக்கூறுகள் எங்கே அமைந்துள்ளன? இவை அனைத்தையும் அவர் கணித ரீதியாகத் தனது குறிப்பேடுகளில் பதிவு செய்திருந்தார்.
நரனா? நாராயணனா?
அவன் சொன்ன விஷயம், அதைச் சொன்ன விதம், அதுவும் என் கண்களை நேராகப் பார்த்தபடி அவன் சொன்னது, எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. என் இதயம் துடிப்பதைக் கூட ஒரு நொடி மறந்திருந்தது. வெட்கத்தால் என் முகம் சிவந்ததை மறைப்பதற்காகத் தலைகுனிந்தேன். இதை அவனே எழுதினானா, இல்லையென்றால் யாராவது உதவினார்களா என்று யோசித்தேன்.
என் பெயர் பூனா (Buna)!
இன்றைக்குக் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் நான்தான். அராபிகா, ரொபஸ்டா என்று இரண்டு வகையில் என்னைப் பயிரிடுகிறார்கள். இந்த இரண்டு வகைகளையும் கலந்து காபி தயாரிப்பவர்களும் உண்டு. இவை இரண்டுதான் முக்கியமான வகைகள் என்றாலும் நான் நூற்றுக்கணக்கான வகைகளில் பயிரிடப்படுகிறேன்.
வாட்ஸாப்ப் தாத்தா
குழந்தை எங்கே போய் இருப்பாள்? அந்த கோவில் வளாகம் பெரியது. கேட்டு வழியே குழந்தை போகவில்லை என்று செக்யூரிட்டி ஆள் சத்தியமே செய்தான். நுழைவு வாயில் பக்கம் அமர்ந்து இருக்கும் பூக்காரி கூட குழந்தையைப் பார்க்கவில்லை என்றாள். நாகராஜனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தாலும் வயிற்றைக்கலக்கியது. லலிதாவிடமும் ப்ரகாஷிடமும் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு குழந்தை இல்லாமல் நிற்பார்? யாரேனும் குழந்தையைக்கடத்தி இருந்தால்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.
காளான்கள் சித்தரிக்கும் நவீன உலகம்
காளான் (mushroom) உயிரினங்களின் வித்தியாசமான உலகத்தை பிரதிபலிக்கும் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைச்சுழலைக் கொண்டுள்ளது. காளானின் முதன்மையான உயிரியல் அமைப்பு மைசீலியம் என்கிற நுண்ணிய ஊசிகளால் (hyphae) ஆன வலையாகும், தரையிலும், மரச்சரிவிலும், மற்றும் உயிரியல் பொருள்களில் உள்ள வெற்றிடங்களில் பரவுகிறது. காளானின் உணவு உறிஞ்சுதல், வளர்ச்சி ஆகியவை மைசீலியம் மூலம் நடைபெறுகிறது.
றெக்கை – அத்தியாயம் 17
நிறைசூலியான ஒரு பேரிளம்பெண் கம்புக்கூட்டுக்கு கீழே தூவெண் சிறகுகள் பறப்பித்து உந்தி எழ கடுமையான பிரயத்னம் செய்து கொண்டிருந்தாள். அவள் அருகே ஆறு வயது காணும் ஓரு சிறுமி இவள் பறக்க றெக்கை விரிக்க தன்னால் ஆன எல்லாம் செய்து கொண்டிருந்தாள்.
தென்னை மரத்தில்…
மார்ச் 2026ல், இந்தியாவும், ஐக்கிய அமீரகமும் இதன் தொழில் நுட்ப சாத்தியங்களையும், அதற்குத் தேவையான நிதிகளையும் பற்றிய தீவிரமான கட்டுரைகளை விவாதித்து ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தியா பகல் நேரத்தில் சூர்ய சக்தியை ஐக்கிய அமீரகத்திற்கு அனுப்பும்; அந்திப் போதில், சூரியன் இந்தியாவில் மறையும் நேரத்தில், சூரியன் மேற்கிலிருப்பதால் ஐக்கிய அமீரகம் சக்தியை அனுப்பும். 2025ல் சவுதி அரேபியாவும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளது. அது இந்த ‘ஆற்றல் பெட்டகத்தை’ யூரோப் வரை எடுத்துச் செல்ல உதவும்.
படுக்கை வரையில் பனி
அறைக்குள் போர்வையில் பனி பொழிந்திருப்பது கூரையின் வழியாகவும் இருக்கலாம் எனக் காட்சியமைப்பு விரிவதை நுட்பமாக மூன்றாம் அடியின் திருப்பம் தடுக்கிறது. மேலிருந்து கீழே பனி வீழ்வதைச் சொல்லாமல், புனிதபூமியிலிருந்து எனச் சொல்லி பௌத்த மடாலயம் இருக்கும் புனிதபூமியின் திசையிலிருந்து வீசுகின்ற காற்று பனித்துகளை அறைக்குள் நிறைப்பதைச் சொல்கிறது.
எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்
முழு வேத இலக்கியத்தையும் ஆறு அடுக்குகளாக அல்லது தொகுப்புகளாகப் பிரித்து விடலாம். முதலாவதும் மிக முக்கியமானதுமானவை வேதங்கள் ஆகும். வேதம் என்ற சொல்லே அறிவின் மூலத்தைக் குறிக்கிறது. ‘வித்’ என்ற மூலச்சொல்லுக்கு அறிதல் என்று பொருள். வேதங்கள் சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மந்திரங்களைக் கொண்டுள்ள மிக விரிவான இலக்கியம். முழு வேத இலக்கியமும் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரிக் வேதம், செய்யுள் அல்லது கவிதை அல்லது “பத்ய” வடிவில் உள்ள ரிக் மந்திரங்களைக் கொண்டுள்ளது. யஜுர் வேதம், உரைநடை வடிவில், அதாவது “கத்ய” வடிவில் உள்ள யஜுர் மந்திரங்களைக் கொண்டுள்ளது.
கர்ணனும் குந்தியும்
தங்களது குரல் என்னைப் புராதனமான, உலகின் குழந்தைப்பருவத்தைத் தொலைத்த, அந்திக்கருக்கல் போலும் பிரக்ஞைக்குள் நடத்திச் செல்கிறது. எப்படியானாலும், இது கனவாக இருந்தாலும், அல்லது மறந்துபோன நிஜத்தின் துண்டாக இருப்பினும், என்னருகே வந்து உங்கள் வலதுகரத்தை எனது நெற்றிமீது வையுங்கள். என் தாய் என்னை நிராகரித்து விட்டாள் எனும் வதந்திகள் உலவுகின்றன. பல இரவுகளில் அவள் எனது உறக்கத்தில் வந்திருக்கிறாள்; ஆனால் நான், “உனது முக்காட்டை எடுத்து உன் முகத்தைக் காட்டு,” என்று அழுதபோது, அவள் உருவம் மறைந்துவிடும்.
மெக்கானிக் கதைகள்
சிறிய எளிய கதைகள், எளிமை இக்கதைகளில் வலிமை எனலாம். நேரடியாக வாசகருடன் உரையாடும் இக்கதைகளை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தன் கதைகள் மேலிருக்கும் அளவிலாத பற்று ஒவ்வொரு கதைகளிலும் மிளிர்க்கிறது. தன் சொந்த அனுபவத்தின் சாயல்களும் நெருக்கமான ஒன்றின் அமைதியும் கதைகளில் பிரதிபலிக்கின்றன. கூடவே இக்கதைகளை சொல்லியே தீரவேண்டும் என்கிற ஆசிரியரின் வேட்கையும் வெளிப்படுகிறது.
விழுது தேடிய வேர்
எப்போதும் மடிப்பு கலையாத, தங்கப் பொத்தான்கள் மின்னும் அந்த வெள்ளை ஜிப்பா இன்று இல்லை. அதற்குப் பதிலாக மார்பு வரை போர்த்தப்பட்டிருந்த வெண் பட்டு வேஷ்டி , அந்தத் தேகத்தின் கம்பீரத்தை மறைத்திருந்தது. காதுகளில் எப்போதும் மின்னும் அந்தக் கடுக்கன்கள் கழற்றப்பட்டு, வெறும் துவாரங்கள் மட்டுமே எஞ்சி நின்றன.
சாளுக்கிய தேசத்தில்…
கன்னட அரசன் சிக்க தேவராஜன். இவனும் நரசிம்மனைப்போல புதிய நீர்தேக்கங்களை ஏற்படுத்தி தமிழ்நாட்டுக்கு நீர் கிடைக்காமல் செய்தான். அப்போது தஞ்சையை ஆண்டுகொண்டிருந்த சரபோஜியும் மதுரையை ஆண்டுகொண்டிருந்த ராணி மங்கம்மாளும் அந்த நீர்தேக்கங்களை உடைக்க கூட்டாகப் படையை அனுப்பிவைத்தனர். ஆனால் படை அங்கு போய்ச்சேருவதற்கு முன்னாலேயே பெருவெள்ளம் ஏற்பட்டு நீர்த்தேக்கங்கள் தாமாகவே உடைந்துபோயின.
எதிர்மறை சோதனை வழக்கு
ஒரு கிரகத்தால் உருவாக்கப்படும் உயிர், மற்றொரு கிரகத்தால் உருவாக்கப்படும் உயிராவது எதைக் குறிக்கிறது? ஒரு கிரகம், தன் சாத்தியங்களுக்குள் ஒரு உயிரை உருவாக்க எத்தனை காலமெடுத்துக்கொள்கிறது? அந்தத் தயாரிப்பை, அந்த முனைப்பை, அதில் செலுத்தப்படும் உழைப்பை ஒரு தழுவு கருவி ஒரு நொடியில் கடப்பது என்பது எதைக்குறிக்கிறது? இதன் பொருள் என்ன?
காலமும் வெளியும் கடந்து – ஐன்ஸ்டைனைச் சந்திக்கும் பிக்காஸோ
1905-ஆம் ஆண்டு ஐன்ஸ்டைனின் பேரற்புத ஆண்டு (Annus mirabilis) என்று போற்றப்படுகிறது. அந்த வருடத்தில் மார்ச்சு மாதம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு ஒரு ஆய்வுக் கட்டுரையாக நான்கு கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். முதலாவது கட்டுரை ஒளிமின் விளைவை (photoelectric effect) விளக்கியது. இது ஒளியன் (photon) என்ற அடிப்படைக் கருத்துருவாக்கத்திற்கு வித்திட்டது. இது அவருக்கு நோபெல் பரிசைப் பெற்றுத்தந்தது. இரண்டாவது கட்டுரை அணுக்களின் ஓய்வில்லாத அலைச்சலான ப்ரொனியன் இயக்கத்தை (Brownian motion) விளக்கியது. இது அணுக்களின் இருப்பைக் கருத்தியல் ரீதியாக உறுதி செய்தது.
தூண்டில் மீன்கள்
மீன் கிடைக்காத கோபமும் சேர்ந்துகொள்ள அவன் சாப்பிட உட்கார்ந்ததும், “புள்ளைக்கு வயசு ஏறிட்டே போவுதுங்க. இன்னும் எத்தன நாளுக்கு இப்பிடியே மீன் புடிச்சுட்டே வாழ்க்கய ஓட்டிட்டு இரிக்கலாம்னு நெனச்சுட்டு இரிக்கீங்க? கல்யாணம் காச்சினு நாலு பக்கம் பொண்ணக் கூட்டிட்டுப் போவும்போது இப்பிடி மூளியாட்டம் கூட்டிக்கிட்டுப் போனா பாக்குறவங்க என்ன நெனப்பாங்க? யாராச்சும் பொண்ணு கேட்டு வருவங்களக்கும்? கொஞ்சமாச்சும் நகநட்டு பொண்ணு கழுத்துல வேணுமில்ல? செயிக்கிள் கடைலதா வருமானம் இல்லேனு தெரியுதுல்ல வேற ஏதாச்சும் வேலை பாக்கலாமல்ல? எவ்வளவுதா நாஞ்சொல்றது.
ஈழத்தின் தமிழ்த்திரைப்படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றி சார்பான பார்வை
தாண்டி ஒரு படைப்பை தயாரித்து வெளியிட்டால் அதற்காக செலவிடப்பட்ட முதலீட்டில் குறிப்பிட்ட தொகையை த்தானும் பெறமுடியாத இக்கட்டான தோல்வி நிலையை பல படைப்புகள் சந்தித்து விடுகின்றன. இவ்வாறான தோல்விகள் படைப்பாளர்களை மீளவும் தலை தூக்கமுடியாத நிலைக்கும் கொண்டு சேர்த்துவிடுகின்றன். அப்படியான நிலைமையிருந்தும் பலர் துணிவுடன் அடுத்தடுத்த படைப்புகளை உருவாக்கும் முயற்சியில் துணிகரமாக ஈடுபடுவதை நாம் எம் கண்முன்னே காணக்கூடியதாக இருக்கின்றது.
வேண்டத்தக்கது
அலசிப் பிழிந்து, சட்டத்தில் ஒரு பக்கம் புடவையின் முனையில் முடிச்சிட்டு உலர்த்திய மடிசார் புடவை திண்ணையின் சட்டம் போட்ட மறைப்பில் காய்ந்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு காற்று அசைவிற்கும் அழுத்தமான வெந்தய நிறமும், சிவப்புக்கரையும், நடுவில் இடதும் வலதுமான வரிகளும் கொண்ட தேவேந்திரா ஒன்பது கஜம் புடவை கொடியைப்போல படபடத்தது.
ஸ்டேஷனர்ஸ் கம்பெனி
“பாரடைஸ் லாஸ்ட்” என்ற பெரும் காவியத்தைப் பின்னாட்களில் இயற்றிய ஜான் மில்டன் என்ற கவிஞர், 1644 ஆண்டு அவர் கம்பெனியின் அனுமதி பெறாமல், தனது பெயரில், கருத்துச் சுதந்திரம் குறித்த ஒரு பதிப்பை (Areopagitica) வெளியிட்டார். பண்டைய ஏதென்ஸ் நகரில் நிகழ்ந்த பேருரை ஒன்றின் பெயரையே தலைப்பாகப் பயன்படுத்தி இருந்தார். ஒரு உண்மை, பொய் ஒன்றை போட்டியில் வெல்லும். உண்மையை நிலைநாட்ட தணிக்கை தேவையில்லை என்றும், தணிக்கை செய்வது, அதிகாரத்தைக் குவிப்பதைத் தவிர வெறும் ஒரு பலனையும் கொடுக்காது என்று வாதாடினார்.
இலக்கிய ஏஜெண்டுடன் ஒரு சந்திப்பு
கதாநாயகன் யாரு? அனாதயா சென்னைக்கு வந்து, பாத்திரக்கடைல வேலை பாத்து, அடி ஒதயெல்லாம்பட்டு, துபாய் போய் சம்பாரிச்சி, பெரிய ஆளாகி, சிங்கப்பூர்ல போய்ப் பாத்திரக்கடை வைக்கிறாரா? அப்புறம் பெங்களூர்ல கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்கிறாரா? தமிழ் மீடியத்துல படிச்சவங்களுக்கு மட்டுந்தான் வேல குடுக்கிறாரா? தீம் ரொம்ப நல்லாருக்கே! இப்டில்லாம் பாசிட்டிவ்வா எழுதினாத்தான் இளைஞர்க படிக்கிறாங்க.
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
இந்த அரைத்தூக்க நிலை அல்லது தூக்க மயக்கம் பல சுவையான விவாதங்களுக்கும் இட்டுச் சென்றிருக்கிறது; புதிர் நிறைந்த ஒன்று இது, சட்டமும், தத்துவமும் இதை எப்படிப் பார்க்கின்றன? தூக்கத்தில் நடப்பவர்களுக்கு, பகல் நேர ‘தான்’ என்பது விடுபட்டு இரவு நேர ‘தான்’ என்று சுயேச்சையாக மாறுகிறதோ? ஆயினும் பகல் நேர ‘தான்’ முழுவதும் விடுபட்டுப் போய்விடுவதில்லை அல்லவா? தூக்க நடையாளரைப் பற்றி கலைக்களஞ்சியங்கள் பதிவு செய்துள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று திருச்சபையின் இளைய குருவைப் பற்றியது. அவர் தன் இசையையும், பிரசங்கங்களையும் உறக்கத்தில் இருக்கும்போதே உண்டாக்கியுள்ளார்.
றெக்கை அத்தியாயம் 16
ஊட்டுபுரயிலே பிராந்தியா செருப்பாலே அடிப்பேன். ஊட்டுபொரன்னா என்ன தெரியுமா? தினம் நூல்காரங்களை உக்கார வச்சு சோறும் சாம்பாரும் ஊட்டற இடம். அரண்மனைக்குள்ளே இருக்கும் இல்லை கோவில்லே இருக்கும். பஞ்சகாலத்திலே ராஜா, ஜமிந்தார் மூணு வேளை சோறு உண்ண முடியாது இதிலே நூல் காரருக்கு சோறு கொடுக்க எங்கே முடியுது.
எண்களின் மாயக்காரி ஏடா லவ்லேஸ்
படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து ஏடாவின் கையைப்பற்றிக் கொண்டிருந்த வில்லியமின் கண்களை நேராகப் பார்த்து, குதிரைப்பந்தயத்தின் வெற்றியை கணிதவியலின்படி தீர்மானிக்க முடியும் என்று நம்பி தான் செய்த பிழையான கணக்கீடுகளால் உண்டாகிய பெரும் நஷ்டத்தையும், அதை மறைக்க லவ்லேஸ் குடும்பத்தின் பாரம்பரிய வைரங்களை அடகு வைத்ததையும் பதிலுக்கு போலி வைரங்களை அந்த இடத்தில் மாற்றியதையும் ஏடா சொன்னபோது வில்லியம் அதிர்ந்தார்.
நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின்…
மனம் அமைதியாக இருக்கும்போதும், புலன்கள் நமது கட்டுக்குள் இருக்கும்போதும்தான் மனம் தன்னைப் பற்றிய அறிவில் ஆழ்ந்திருக்க இயலும். எல்லாவற்றிலிருந்தும் விட்டு விடுதலையாகியிருக்கிற அந்த உணர்வை அனுபவிக்க இயலும். இந்த நிலையை அடைவதற்குத் திதிக்ஷா என்ற சகிப்புத் தன்மை மிக அவசியம். இந்தப் பண்பு இல்லையெனில் மனம் ஒவ்வொரு சிறு நிகழ்வுக்கும் அசைந்து எதிர்வினை அளிக்கத் துவங்கும்.
உலக நிகழ்வுகளும் ஊகச் சந்தையும்
உதாரணமாக இந்த நேரத்தில் இந்தியா வெல்லும் என்று நூறு டாலர் பந்தயம் கட்டி இந்தியா வென்றால் உங்களுக்கு கட்டிய நூறு டாலரோடு இன்னும் 125 டாலர் சேர்த்து 225 டாலர் கிடைக்கும் என்று சொல்வார்கள். நாம் 100 டாலர் பந்தயம் கட்டலாம். நாளைக்கு இந்தியா வென்றால் 100 டாலருக்கு 150 டாலர் கிடைக்கும் என்று விலை மாறலாம். ஆனால் நாம் கட்டிய பந்தயம் அதனால் பாதிப்புக்குள்ளாகாது. அது போல நாம் ஒரு முறை பந்தயம் கட்டினால் கட்டியதுதான். அதிலிருந்து பின்வாங்க முடியாது. வாங்கி விற்கவும் வழி கிடையாது
பறவைகளும் பாலூட்டிகளும்: நுண்ணறிவின் பரிணாமப் பாதைகள்
பறவைகளின் மூளையில் நரம்பணுக்கள் மிகவும் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் அமைந்துள்ளன. அவை மனித மூளையின் நியோகார்டெக்ஸுக்குச் சமமான பணிகளை மேற்கொள்கின்றன. சில பறவைகளில் நரம்பணு அடர்த்தி குரங்குகளை விட அதிகமாக உள்ளது. உதாரணமாக, ஒரு காகத்தின் நெல்லிக்காய் அளவிலான மூளையில் சுமார் 1.5 பில்லியன் நரம்பணுக்கள் இருக்கின்றன. இந்த சிறிய, திறமையான வடிவமைப்பு நுண்ணறிவுக்கு எடை அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கிறது.
ஆமரில்லிஸ் – 2 (இறுதிப் பாகம்)
அவர் வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவருடைய முதுகுப் பை கனமாக இருக்கும், அதுவும் அவர் அரிசியோ, சோயா பருப்போ வாங்கி இருந்தால் சுமக்க முடியாத அளவு கூட இருக்கலாம் என்று தாரா எச்சரித்திருந்தாள். சில வாரங்களில் அவர் தடுமாறி விழுந்து விடுவார் என்று கூட ஆமரில்லிஸ் அச்சப்பட்டிருந்தாள். அதையும் விடக் கவலை தருவதாக ஒன்று இருந்தது, சமீபத்தில் அவ்வப்போது அவருக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்பது புரிபடாததாக ஆகியிருந்தது. ஒரு வாரம் நிலவறை ரயில் நிலையத்திலிருந்து தன் அடுக்ககத்துக்கு வரும்போது அவர் வழி தவறித் தொலைந்து போயிருந்தார்
புலங்களும் துகள்களும் ஒன்றே
நுண் துளிம நிகழ்வுகளின் தொடர்ச்சியே இவ்வுலகம். இவை உதிரியான, தனித்த, நுண்ணிய நிகழ்வுகள்; பொருள்வய அமைப்புகளுக்கு இடையே நிகழும் தனித்த உள்வினைகள் அவை. எதிர்மின்மமோ, ஒரு புலத்தின் துளிமமோ, ஒளிமமோ வெட்டவெளியில் எந்தவொரு எறிபாதையையும் பின்பற்றுவதில்லை. மாறாக, வேறொன்றுடன் மோதுகையில் , குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தோன்றுகிறது. அது எங்கு எப்போது தோன்றும் என்பதை உறுதியாக அறிவதற்கு வழியே இல்லை. உலகின் மையத்தில் ஒரு அடிப்படை அறுதியின்மையை துளிம இயற்பியல் அறிமுகப்படுத்தியுள்ளது
குழந்தைகளுக்குக் கீதை
பலரும் இதை ஒரு பழைய மத புத்தகம் என்றே நினைக்கிறார்கள். ஏதோ ஒரு தீவிரமான, சிக்கலான பெரியவர்கள் கூட புரிந்துகொள்ளச் சிரமப்படும் விஷயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் கீதை மிகவும் எளிமையான ஒன்றிலிருந்து தொடங்குகிறது: அர்ஜுனன், மிகத்திறமையான எதிரிகள் அஞ்சி ஓடும் ஒரு போர்வீரன். ஒரு போர்க்களத்தில் மிகுந்த குழப்பங்களுடன் நிற்கிறான். அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பயம், குழப்பம், சுய சந்தேகம், தர்மம் என்று பலவித மனச்சிக்கல்களுக்கு ஆளானவனாக தனது உறவுகளே பகையாக நிற்கும் களத்தில் கலங்கி நிற்கும் மாவீரன்.
கிளைக்கு உயரும் மலர்
தமிழில் ‘கறந்த பால் மடி புகாது’ எனப் பழமொழி உள்ளதைப் போல ஜப்பானிய மொழியில் ‘உதிர்ந்த மலர் கிளை திரும்பாது’ எனப் பழமொழி உள்ளது. ‘ஓச்சி ஹனா யெதானி கயேராசு’ என அதனைச் சொல்வர். ஓச்சி – விழுந்த, ஹனா – மலர், யெதா_னி – கிளை_க்கு, கயேராசு – திரும்பாது. இந்தப் பழமொழியின் ஒரு பாதியை முதலடியில் கொண்டது இக்கவிதையின் முதற்சிறப்பு.
கிருதுமால் நன்செய் – மதுரை மக்களின் வாழ்வியல் சித்திரம்
துணைஇல் தொடங்கி சில்லறைக் காசுகள் வரையான 16 கதைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலைச் சொல்கின்றன. தூக்குச் சட்டியில் (துணைஇல்) தொடங்கும் கதை சாப்பாட்டுப் பொட்டலத்துடன்(சில்லறைக் காசுகள்) முடிகிறது. இரண்டும் உணவுதான். தானொரு விவசாயி என்பதால் கூட அவரையறியாமலே இப்படி அமைந்திருக்கலாம்.
புதிய நூல்களுடன் சொல்வனம் எழுத்தாளர்கள்
இவர்களின் படைப்புகளில் தனித்துவமான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு ஆக்கமும் புதிய பல எண்ணங்களை விதைக்கிறது; ஒவ்வொரு கட்டுரையும் பற்பல கோணங்களைத் திறக்கிறது. பெண்களின் உள்ளுணர்வுகளை சூழலோடு பின்னிப் படைக்கும் திறன், அறிவியலையும் இலக்கியத்தையும் இணைக்கும் அதிர்ஷ்டமான சேர்க்கை, வரலாற்றை புனைவில் புதைக்காமல் ஒளிர வைக்கும் கலை — இவை இந்த எழுத்தாளர்களை சொல்வனம் குடும்பத்தில் தனித்துவமாக்குகின்றன.
உடல்நலம் — ஒரு உலகளாவிய கேள்வி
ஒரு நிலையான வேலையில் இருப்பவர்களுக்கு நிறுவனக் காப்பீடு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு அரசு காப்பீடு இருக்கும். ஆனால் கட்டடத் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், விவசாயிகள், வீட்டு வேலை செய்வோர் — இவர்களுக்குப் பெரும்பாலும் எந்தக் காப்பீடும் இல்லை. இவர்களுக்கு நோய் வந்தால் என்னவாகும்? சேமிப்பு காலியாகும். நகைகள் விற்கப்படும். கடன் வாங்கப்படும். அல்லது வலி தாங்கி வேலைக்குச் செல்வார்கள்.
சொல்வனம் சிறப்பிதழ்: இந்திரா பார்த்தசாரதிஅவர்களின் படைப்புலகம்
தில்லி, போலந்து என்று உலகின் பல்வேறு கல்விச் சூழல்களில் ஆய்வாளராகவும் பேராசிரியராவும் பணியாற்றிய இ.பா., கல்விச் சூழலில் வாழ்ந்தாலும் எப்போதும் இலக்கியத்தோடும் வாசகர்களோடும் நேரடி நாடி தொடர்பை வைத்திருந்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில், புதிய குரல்களை அடையாளம் கண்டு களத்தில் நிறுத்துவதில் அவர் காட்டிய தன்னல மறுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவாக வேண்டிய ஒன்று.
ஆமரில்லிஸ் – முதல் பகுதி
மாறாக, தாரா திருமணம் செய்து கொள்வதில் சற்றும் ஈடுபாடு கொள்ளவில்லை. பலரோடு பாலுறவு கொள்வது என்பது வெளிப்படையாகவே மனிதர்களின் இயல்பாக இருக்கையில், திருமணம் செய்வது என்பது தெளிவாக அதற்கு எதிரானது என்பதால் அது ஒரு மரித்துப் போன கருத்து என்று அவள் சொன்னாள். ஆமரில்லிஸின் மரியாதைக்குரிய வயதை எட்டும்போது அவள் வேறுமாதிரி யோசிக்க ஆரம்பிப்பாளோ என்னவோ. ஆனால் இப்போது அவள் இருபத்தி ஐந்து வயதுக்காரி, ஜாம்பியாவுக்குப் பயணம் போய் அங்கு விருந்தினருக்கான விடுதி ஒன்றில் குடியிருப்பதைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். (இதைச் சொன்னபடி) அவள் கண்ணடித்தாள்.
இயற்பியல் எனும் அழகும் மந்தணமும்
ஏழாவது பகுதி மனிதர்களாக நம்மையும் அறிவியல் பாய்ச்சல்களையும் ஒன்று சேர்த்துவிடுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் உலகை முழுமையாக விளக்கிவிட முடியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்த உலகின் மையம் அல்ல எனும் அறிதலுக்கு வந்திருக்கிறோம். ஒரு ஆக்டோபஸ் மூளையை விட மனிதர்களின் சிந்தனைத் திறன் ஒற்றைப்படைத்தன்மையக் கொண்டிருக்கிறது என நாம் உணர்ந்திருக்கிறோம். விண்ணிலிருந்து மழை போல துகள்களும், கதிர்களும், தூரக்கோள்களின் கார்பன் துகள்களும் நம் மண்ணோடும் நீரோடும் கலக்காவிட்டால் இன்று உயிர் எனும் அமைப்பு உருவாகி இருக்காது.
துளிமம்
உப்பு வெண்மையிலும், மிளகு கருப்பிலும், மிளகாய் செந்நிறத்திலும் இருக்கிறது. ஏன்? பொருட்களுக்கு தனித்த நிறங்கள் இருக்கின்றன என்பது அணுக்களின் ஒளி உமிழ்வை ஆராய்கையில் தெரிய வருகிறது. நிறம் என்பது ஒளியின் அதிர்வெண் என்பதால், பொருட்கள் குறிப்பிட்ட சில அதிர்வெண்களிலேயே ஒளியை உமிழ்கின்றன. ஒரு பொருளை அவ்வாறு வகைப்படுத்த உதவும் அந்த சில அதிர்வெண்கள் – அதிர்வெண்களின் தொகை அப்பொருளின் நிறமாலை (Spectrum) எனப்படுகிறது.
ஏழு ஸ்வரங்களுக்குள்..
திரு. அரவிந்த் நீலகண்டன், அவர் சிறு வயதில் படித்த மிர் பதிப்பக கதைகளைப் பற்றி மிக அழகாக எழுதுவார். அதைப் போலவே கிரியும் சொல்கிறார். அறிவியல், அவருக்கு கதைகளின் வழியே சுவையான அனுபவமாக ஆகியிருக்கிறது. அறிவியலும், அறிதல் முறைகளும், அவர், தன் முன்னுரையில் சொல்வதைப் போலவே, இந்தக் கதைகளில் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக விஞ்ஞான ஆய்வுகளுக்காக, தொழில்நுட்பத்துறையும், கச்சிதத்திற்காக விஞ்ஞானமும் ஒன்றை ஒன்று உந்தியபடி வளர்வது சுவாரஸ்யமான போட்டி.
வளர்ப்புப் பிராணி
நான் நாயின் மூச்சை எண்ணிக்கொண்டிருந்தேன். ஒன்று. இரண்டு. மூன்று. ஒரு கட்டத்தில் எண்ணுவதை விட்டுவிட்டேன். எண்ணுவது பயமாக இருந்தது. அடுத்த நாள் காலை நாய் எழவில்லை. அப்பா தூக்கினார். எடை இல்லை. உயிர் போன உடலுக்கு எடை இருக்காது. அப்பா அதைத் தோட்டத்தின் பின்புறம் புதைத்தார். பெரிய குழி இல்லை. நாய்க்கு பெரிய இடம் தேவையில்லை. அம்மா அருகே வரவில்லை.
தான் வாழ்ந்தால் போதாதா?
ஆட்சி எனப்படுவது –
மதம் இனம் காசு பரத்தமை
பாம்பின் விடமாய்ச் சீறும் தேறல்!
தொழில் எனக் கொள்வதோ –
சினிமா அரசியல் கனிமம் கடத்தல்
கஞ்சா அபின் ரசாயன போதைப் பொருள்கள் விற்பனை
மது உற்பத்தி கலப்படம் தரகு!
