மஜ்ரேஹா

என் மனைவி ஊருக்குப் போயிருந்த ஒரு நாளில் நண்பர் ஷியாம் படம் பார்க்க ‘வன்கோல்பேஸ்’ வருமாறு அழைத்திருந்தார். அவர் வரும்வரை அங்கிருந்த கடைகளை நோட்டம் விட்டவாறு நடந்து திரிந்துகொண்டிருந்த போதுதான் பீப்பி என்னைக் கண்டிருக்க வேண்டும். அவளும் அவளது பிள்ளைகளுடன் குடும்பமாக கொழும்புக்கு விடுமுறைக்காக வந்திருந்தார்கள்.