ஆமரில்லிஸ் – 2 (இறுதிப் பாகம்)

அவர் வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவருடைய முதுகுப் பை கனமாக இருக்கும், அதுவும் அவர் அரிசியோ, சோயா பருப்போ வாங்கி இருந்தால் சுமக்க முடியாத அளவு கூட இருக்கலாம் என்று தாரா எச்சரித்திருந்தாள். சில வாரங்களில் அவர் தடுமாறி விழுந்து விடுவார் என்று கூட ஆமரில்லிஸ் அச்சப்பட்டிருந்தாள். அதையும் விடக் கவலை தருவதாக ஒன்று இருந்தது, சமீபத்தில் அவ்வப்போது அவருக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்பது புரிபடாததாக ஆகியிருந்தது. ஒரு வாரம் நிலவறை ரயில் நிலையத்திலிருந்து தன் அடுக்ககத்துக்கு வரும்போது அவர் வழி தவறித் தொலைந்து போயிருந்தார்

ஆமரில்லிஸ் – முதல் பகுதி

மாறாக, தாரா திருமணம் செய்து கொள்வதில் சற்றும் ஈடுபாடு கொள்ளவில்லை. பலரோடு பாலுறவு கொள்வது என்பது வெளிப்படையாகவே மனிதர்களின் இயல்பாக இருக்கையில், திருமணம் செய்வது என்பது தெளிவாக அதற்கு எதிரானது என்பதால் அது ஒரு மரித்துப் போன கருத்து என்று அவள் சொன்னாள். ஆமரில்லிஸின் மரியாதைக்குரிய வயதை எட்டும்போது அவள் வேறுமாதிரி யோசிக்க ஆரம்பிப்பாளோ என்னவோ. ஆனால் இப்போது அவள் இருபத்தி ஐந்து வயதுக்காரி, ஜாம்பியாவுக்குப் பயணம் போய் அங்கு விருந்தினருக்கான விடுதி ஒன்றில் குடியிருப்பதைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். (இதைச் சொன்னபடி) அவள் கண்ணடித்தாள். 

மற்றுமோர் அற்புதமான விஷயம் – பகுதி -2

இரவில் ஜன்னலருகே அவள் அமர்ந்தாள். அவளால் தூங்க முடியவில்லை. தன் வாழ்வில் எதிலிருந்தும் இத்தனை பிரிக்கப்பட்டதாக அவள் இதற்கு முன் உணர்ந்ததே இல்லை. தன் கவனத்தைத் திருப்பிக் கொள்ளும் முயற்சியாக, க்ரே வில்லியமுடைய அறையில் மேல் புற மர வேலைப்பாட்டின் கீழே சுவரில் சில சித்திரப் பாணிகளை அச்சிட்டுக் கொண்டிருந்தார். கோதுமையும், சோளப் பூக்களும் கொண்ட துவக்க கால அமெரிக்க வரைவு ஒன்றை அவர் கண்டு பிடித்திருந்தார்.

மற்றுமோர் அற்புதமான விஷயம்

அவளும் பென்னியும் குழந்தை பிறக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கையில், கடைகளுக்குப் போய் மேலும் வேண்டுவனவற்றை வாங்கிக் கொண்டு வந்தார்கள். கடைசி நிமிடம் வரை இவற்றை ஒத்திப் போடாமலிருந்ததற்கு அவள் சந்தோஷம் கொண்டாள், ஏனெனில் ஏதும் நடக்காது சாதாரணமாக முன்னேறிய கர்ப்பகாலத்தில் ஒன்பதாவது மாதம் துவங்கிய போது அவள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாள். பிறகு அவள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டாள். தான், க்ரே மேலும் பிறக்காத அந்தக் குழந்தை மட்டும் இருக்கும் தனிமையுணர்வை அவள் ரசித்திருந்தாள்,

உண்மை கஃபே

அப்போது நான் மறுபடி என்னுள் வந்து விட்டேன், பந்தைச் சரியான நேரத்தில் பிடித்தேன், அவனை ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்தேன், சில எட்டுகள் எடுத்துப் பின்னே போய், ஒரு துடைப்பத்தை எடுத்து வந்து, நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேன், அவனுடைய உருவத்தின் விளிம்புகள் உறுதியாகத் தெளிவாக இருக்கின்றன, அவன் பூமியிலிருந்து விழுந்து விடமாட்டான் என்று சொன்னேன். 

ஒற்றைத் தலைவலி

இனிமேல் தொலைக்காட்சியே கூடாது. டீனாவை அமைதியாக இருக்கச் செய்யத்தான் ஜாய்ஸ் அதை வாங்கினாள், ஆனால் அது இனிமேல் தேவைப்படாது. அவள் தொலைவியக்கியை எடுத்தாள், பிக் அப் ட்ரக்குகளுக்கான விளம்பரத்தில் மீதிப் பகுதியைப் பார்த்தாள், பிறகு தொலைக்காட்சியை அணைத்தாள். வெற்றுத் திரை அவளுக்கு அசௌகரியமாக இருந்தது. ஏதோ அந்தத் திரை அவளைக் கண்காணிக்கிறது என்பதைப் போல இருந்து அவளை நிதானமிழக்கச் செய்தது. தொலைவியக்கியை தாழ் மேஜையில் வைத்தவள், மற்றப் பெட்டியைப் பிரிக்க ஆரம்பித்தாள். 

ஸ்கின்ஷிப் – பகுதி 3

This entry is part 3 of 3 in the series ஸ்கின்ஷிப்

என் தம்பி சி-ஓ இத்தனை வருடங்களாக மடக்கி வைத்திருந்த தன் பார்வையை முழுதுமாக என் அப்பாவை நோக்கித் திருப்பியதைப் பார்த்தேன். அது அவனுடைய அறையின் அந்தரங்கத்தில், அவனுடைய தன்னிறைவினுள் இருந்த வெற்றிடங்களில், கடினமான போராட்டத்தால் வெல்லப்பட்ட, ஒளிக்கப்பட்டிருந்த, இப்போது வெளிச்சத்துக்குள் இழுத்து வரப்பட்டு விட்ட ஒவ்வொரு சிறு பொருளையும் சேகரிக்க அவன் காட்டிய கட்டுப்பாட்டிலும் பொதிந்து இருந்து வெளியில் தெரியாமல் இருந்தது. எங்கள் அப்பா மீது முழு உணர்ச்சி வேகமும், குற்றச்சாட்டும், பழிசுமத்தும் நோக்கமும் கொண்ட ஒரு பார்வையை, முழுதுமாக அவன் திருப்பியதை நான் பார்த்தேன்

ஸ்கின்ஷிப் – பகுதி 2

This entry is part 1 of 3 in the series ஸ்கின்ஷிப்

ஆரவாரமாக வந்து நுழைந்தவர், நிலவறையில் மறைந்து போனார் எங்கள் அப்பா. சுமார் ஒரு வாரம் நாங்கள் அவரை அனேகமாகக் காணவில்லை. பகல் பூராவும் உறங்கினார், இரவில் அலைந்து திரிந்தார். என் அம்மா அவருக்குச் சாப்பாட்டை வெளியில் வைத்துப் போகத் துவங்கினார், அதை ப்ளாஸ்டிக் விரிப்பில் மூடி வைத்திருந்தார். எங்கள் அப்பா எப்படி இருக்கிறார் என்று பார்க்க அவள் நிலவறைக்குள் போவதை நான் பார்க்கவில்லை

ஸ்கின்ஷிப் – பகுதி 1

This entry is part 2 of 3 in the series ஸ்கின்ஷிப்

ஒரு தடவை எங்கள் அப்பா, அம்மாவுக்கென்று எதையோ தன் கைகளில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்தார். ஒரு கருப்பு வெல்வெட் நகைப் பெட்டி. சி-ஓவும் நானும் அதை அவர் தட்டித் திறந்த போது பார்ப்பதற்கு அழைக்கப்பட்டோம், அதில் தங்கத்தில் பதிக்கப்பட்ட சிறிய வைரக்கற்கள் இருந்த காதுக் கம்மல்கள் இருந்தன

கணப்பின் ஒளி 

விலைச் சீட்டைக் குறி வைத்து நேராகப் போய்ப் பார்த்து,  விலையை எப்படி ஏற்றி விட்டிருக்கிறார்கள் என்று சுற்றி இருப்பவர்கள் எல்லாருக்கும் கேட்கும்படி குறை சொல்லிக் கொண்டு தம் தலையை ஆட்டிக் கண்டனம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்களும்  விலைகளை ஒப்பீட்டில் சோதித்து வாங்குபவருமான  சிலரைப் போன்றவர் இல்லை என் அம்மா.  விலையைப் பற்றி அவருக்கு அப்படி ஒன்றும் அக்கறை இல்லை. அவரிடம் பணமும் இல்லை, ஆனால் அதை விட ஆழமானது ஒன்று இருந்தது அங்கு. அவர் பொருட்களைப் பார்வையிடுவதை விரும்பிச் செய்தார், ஏனெனில் கடைகளில் தான் இயல்பாக இருப்பதாக அவர் உணர்ந்தார்

தேவதைப் பருப்பொருளின் நெசவு

லியோ-எரிக் ஃபு ஹாங்காங்கிலிருந்து வந்திருக்கும் சுதந்திரப் போராட்டக்காரராக இருப்பாரோ என்ற ஐயத்துடன், பாட்ரிக் நிமிர்ந்து அவரைப் பார்க்கிறார். ஒரு கணத்துக்குப் பிறகு, இந்த ஊகச் சிந்தனையைத் தன் புத்திப் பக்கத்திலிருந்து அழித்து விடுகிறார். பெய்ஜிங்கிலிருந்து வருபவர் கூட சுதந்திரப் போராட்டக்காரராக இருக்கக் கூடும். ஒருக்கால் பாட்ரிக்தான் ஜனநாயக மனோபாவம் சிறிதும் இல்லாத மனிதராக இருக்கக் கூடும்.

தப்பி ஓடுதல்

ஏழு வருடங்களாக, வருடத்துக்கு ஒரு புத்தகம் எழுதிய பிறகு, மான்கெல் வேறு செயல்திட்டங்களில் ஈடுபட்டிருந்தார், கூடவே இந்தத் தொடரை வேறு எங்கு செலுத்துவது என்றும் யோசித்திருக்கிறார். நடந்ததென்னவென்றால், தொடரின் கடைசி நூலான  நொந்திருந்த மனிதன் (The Troubled Man-2009), நன்றாக உருவாக்கப்பட்டு, காத்திரமான இறுதிக்கட்டத்து முடிச்சவிழ்ப்பு கொண்ட உளவுக் கதையாக அமைந்திருந்தது.  ஆனால் முந்தைய பத்தாண்டில் வெளியான மூச்சடைக்கும் வேகம் கொண்ட மர்மக் கதைகள் போலன்றி இது சில நேரங்களில் மெதுவாக ஊர்கிற கதையாக இருந்தது. 

ஐந்து நாற்பத்தி எட்டு

அவளுக்கு வேலைத் திறமை இருந்தது, நேரம் தப்பாது வந்தாள், நல்ல தட்டச்சாளியாக இருந்தாள், அவளிடம் அவர் ஒரே ஒரு விஷயத்தில்தான் குறை காண முடிந்தது – அவளுடைய கையெழுத்தில். அவளுடைய தோற்றத்தோடு அவளுடைய சீரற்ற கையெழுத்தை அவரால் பொருத்திப் பார்க்கவியலவில்லை. அவள் வட்டமான சாய்வெழுத்துகளில் எழுதுவாள் என்று எதிர்பார்த்திருந்தார், அவளுடைய கையெழுத்தில் ஆங்காங்கே அப்படிச் சில தடயங்கள் இருந்தன, ஆனால் அவை நேர்த்தியற்ற அச்சு வடிவ எழுத்துகளோடு கலந்து இருந்தன. 

உள்ளும் வெளியும் பாகம் -2

எல்லாம் உடம்புகளைப் பற்றியவை, உன் கதகதப்பான, மென்மையான உடல், என்றன அவை, உடல் என்ற சொல்லுக்கு தடிப்பான ஒலி இருந்தது, பிறகு ‘காதல்’, வேறென்னவிருக்க முடியும், அதே போன்ற தொண்டையின் ஆழத்திலிருந்து வரும் ஒலிப்போடு, ‘ஐ லஹ்ஹ்வ் யெர் பஹ்ர்டி’, அதனால் கடைசியில் அவள் அதை அணைத்தாள். லவ் எனும்போது அவர்கள் பாலுறவைச் சொன்னார்கள் என்றால் சரிதான், போகட்டும், ஆனால் காதல் என்றால் என்ன என்று யாருக்குமே ஏதும் தெரிவதில்லை. ஆனால் நாம் காதலிக்கும் ஒன்றுக்கான சொல், ஒரு சவத்தை வருணிக்கும் அதே சொல்லாக இருக்கையில், நாம் காதலிப்பது ஒரு சவம் என்பது போல ஒலிக்கிறது

உள்ளும் வெளியும்

கே ஃபாரஸ்ட் ஒரு நாள் அம்மாவுடன் அமர்ந்திருக்க வந்தாள், அன்று ஹாம்பிள்டனின் அங்காடிக்கு ஜில்லியால் போக முடிந்தது, அப்போது பில்லி வைஸ்லரின் பட்டறை வழியே போனாள், அவரிடம், பொழுது போக்காக ஏதும் பொருள் செய்ய, என்ன வகைக் களிமண்ணை வாங்கலாம் என்று கேட்டாள். நம்ப முடியாதபடி கனமாக இருந்த சிறு காகிதப் பையை பில் அவளிடம் கொடுத்தார், அதில் உலர்ந்த சன்னமான பொடி மண் இருந்தது. களிமண்ணுக்கான இரண்டு கத்திகளையும், ஒரு பழைய சுழல் மேடையையும் கொடுத்தார், அவள் எது செய்தாலும் அதை அவருடைய சூளையில் சுட்டுக் கொள்ளலாம் என்றார், அவர் அதை ‘சுளை’ என்று உச்சரித்ததை அவள் கவனித்தாள், ஆனால் தடிமனான உருக்களின் உள்புறத்தைச் சுரண்டி வெறும் இடமாக்க வேண்டும், இல்லையேல் அவை சூளையின் வெப்பத்தில் வெடித்துச் சிதறும் என்றும் சொல்லிக் கொடுத்தார்

வாழ்வெனும் களிநடனம்: அமெரிக்கக் கவிஞர்கள்

எமெர்ஸன் கல்லூரியின் அசாதாரணச் செயல்பாடுகளில் ஒன்று காலாண்டு இதழாக அது வெளியிடும் ப்ளாவ்ஷேர்ஸ் (Ploughshares) என்கிற இலக்கிய இதழ். … இதன் 47 ஆம் ஆண்டான 2021 ஆம் வருடத்தில், கடைசிக் காலாண்டுக்கான இதழாக, பனிக்காலத்துப் பிரசுரமாக வந்த இதழில் கிட்டிய சில கவிதைகள் இங்கே கொடுக்கப்பட்டவை. நிறைய இதழ்களுக்கு, புகழ்பெற்ற எழுத்தாளர்கள்/ பதிப்பாசிரியர்கள், அழைப்பின் பேரில் வந்து பதிப்பாசிரியராக இருந்து இதழை வழி நடத்திக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.

கதவுகளின் ரகசியக் கதைகள்

அவர் தன் தினசரி வழக்கத்தை மாற்றக் கூடாது. அந்த முடிவெடுத்த பின்னர், அவர் கொஞ்சம் நிம்மதியானார். தான் உருவாக்கி, ஸ்கான் செய்து முடித்த போலி ஆவணங்களை அழிப்பது பற்றி அவர் மிகவும் எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். போலிச் செய்திகளை உருவாக்கிப் பொய்யைப் பரப்புவதற்கே வாழ்வைச் செலவழிக்கும் அவர் தன் மனதுக்குள் திரும்பத் திரும்ப ஒரு இசைத் தொனி போலச் சொல்லிக் கொள்வது இதுதான், ஏதோ ஒன்று நடந்ததென்று செய்தியாக ஒரு முறை அறிவித்து விட்டால், அது நடக்கவில்லை என்று நிரூபிப்பது மிகக் கடினம். குறிப்பாக பெரும்பாலான வரலாற்று ஆவணக் கிடங்குகளும், செய்தித்தாள் நூலகங்களும் நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கையில், சில நேரம் உவெஸ்கா அல்லது காஸ்டெயோன் போன்ற தொலை தூர இடங்களில் வைக்கப்பட்டிருக்கையில், நிரூபணம் தேடுவது கடினம்.

பள்ளத்தாக்கு மனிதர்கள்

மிக் அந்தக் கரி எண்ணெயைக் காயத்தின் மேல் ஊற்றி காயத்தைச் சுத்தம் செய்தார், பிறகு தன் மேல் சட்டையால் முன்னங்கையைச் சுற்றினார், அதை ஒட்டும் நாடாவால் சுற்றிக் கட்டினார். ஏதோ, தையல் போடத் தேவை இருக்கவில்லை. மிக் இதற்கு முன்பு ஒரு தரம் சுடப்பட்டிருக்கிறார், மூக்கு உடைபட்டிருக்கிறது, விலா எலும்புகள் உடைந்திருக்கின்றன, காலில் ஒரு வெடிகுண்டின் உலோகத் துண்டு எங்கோ புதைந்திருக்கிறது, ஆனால் கழுதைக் கடி இப்போதுதான் முதல் தடவை.

காக்கைகளின் மாட்சிமை – காக்கை பாடினிகளின் சாட்சியம்

சான் ஃப்ரான்சிஸ்கோ நகரின் தெருக்களில் கயோட்டி ஓநாய்கள் ஓடின. அமெரிக்கக் கோமான்கள் புழங்கும் மார்த்தாஸ் வைன்யார்ட் என்ற ஊரில் வான்கோழிகள் காலியான வீடுகளின் கூரைகளைப் பிடித்துக் கொண்டன, விளைவு தெருக்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாரிஸ் நகரில் பெருங்கொம்புள்ள கலை மான்கள் நிழற்சாலைகளில் உலாப் போயின, துருக்கியில் மாநகரப் புறநகர்களில் காட்டுப் பன்றிகள் கூட்டங்களாக படையெடுத்தன. ஆஸ்த்ரேலியாவின் அடலெய்ட் மாநகரில் கங்காருகள் நகர் மையத்தில் குதித்தோடிக் கொண்டிருந்தன. வேல்ஸ் மாநிலத்தில் காட்டுச் செம்மறி ஆடுகள் கிராமப் புறங்களில் எங்கும் ஓடின. சிலே நாட்டின் சாண்டியாகோ நகர மையத்தில் சிறுத்தைகள் உலவின.

வாழ்க்கை, காக்கை, ஹிட்ச்காக்

நகுல சகதேவர்களுக்கும், ஆக்டேவியா பட்லருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
இவரும் ஓரளவு நாடுகடத்தப்பட்டு, அகதி போல வாழ்வில் பெரும்பகுதியைக் கழித்த ஆஃப்ரிக்க இனப் பெண்மணி என்பது ஒரு ஒற்றுமைக் குணமாக இருக்குமோ?
ஆனால் தான் பட்ட துன்பங்களின் சாரத்தை யோசிக்கும் ஆக்டேவியா பட்லருக்கு, மனிதரில் ஒரு சாராருக்குப் பிறரின் துன்பத்தைச் சிறிதும் உணர்ந்து பார்க்கும் திறன் இல்லை என்பது நன்கு புரிந்திருக்க வேண்டும். அதற்கு எதிராக சிலருக்கு சுற்றிலும் இருப்பவர்களின் எல்லா மனத் துயரங்களும் (சந்தோஷங்களும்தான்) உடனே புரிவதோடு அவற்றைத் தம்முடைய உணர்வுகளே போலப் புரிந்து கொள்ளும், உணரும் திறன் கிட்டினால் என்ன ஆகும் என்பதுதான் அவர் கற்பனை.

மர்மமான அந்தச் சிலெ நாட்டான்

அந்த இரு புத்தகங்களும் கருக்கு இழந்திருப்பதைப் பார்த்த பிறகு, “நீங்கள் இவற்றைப் படிக்கிறீர்களா,” என்று அதிர்ஷ்டமில்லாத செர்க்காஸ் வியப்புடன் கேட்கிறார்….
“பின்னெ, இல்லையா?” பொலான்யோ பதிலளிக்கிறார். “நான் எல்லாவற்றையும் படிக்கிறேன். தெருவில் காற்றில் அடித்துப் போகும் துண்டுக் காகிதங்களைக் கூட.” அவர் அந்த நாவல்களைப் பாராட்டுகிறார்,

டெம்பிள் க்ராண்டின்: பேட்டி

சிலருக்கு, அவர்கள் படிக்க முயல்கையில், அச்செழுத்துகள் பக்கங்களில் குலுங்குவது போல உணர்வார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘எழுத்துக் கோர்வைக் குழப்பம்’ (டிஸ்லெக்ஸிக்) உள்ளவர்களாக தரம் பிரிக்கப்பட்டு விடுவார்கள். இதில் விஷயம் என்னவென்றால், இந்த அச்செழுத்து குலுங்கும் பிரமையை, சில சமயம் அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் நிறத்தை மாற்றினால் போதும், நீக்கி விடலாம். வேறு வெளிர் நிறக் காகிதங்களில், உதாரணமாக, வெளிர் லாவெண்டர், வெளிர் சாம்பல், வெளிர் நீலம் என்று பலவகை வெளிர் நிறக் காகிதங்களில் அச்சடித்தால் இந்தக் குறை ஏற்படுவதில்லை. இது ஏன் வேலை செய்கிறது என்பதை நான் அறியேன்.

நண்பனா, வாதையா?

தேய்வழக்காகப் போயிருக்க வேண்டிய ஒரு கதையை இப்படித் தடம் மாற்றி, ஆனால் இதே போன்ற கதைகளின் பல அம்சங்களைக் கைவிடாமல் கதையில் நுழைத்து, சாமர்த்தியமாக நயாகரா மீது கட்டிய கயிற்றின் மேல் நடந்திருக்கிறார் ஸிக்ரிட் நூன்யெஸ். நாய் என்பது கயிற்றில் நடப்பவருக்கு மிக உதவியாக இருக்கும் விரித்த குடை, அல்லது கையில் நிலைப்பைக் கொடுக்க வைத்திருக்கும் நீண்ட கம்பு. சோகத்தில் இவர் மூழ்காமல் இருக்க உதவும் மிதவை அந்த நாய். நாவலின் விசித்திரம் என்னவென்றால் ஒரு சாவின் சோகத்திலிருந்து மீள்பவர் சாகத் தயாராகும் இன்னொரு ஜீவனால் தேறி வருவதுதான்.

நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி

மாற்று வேலைகள் கிட்ட வாய்ப்பில்லாத நிலையில் ஏராளமான அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலையில்லாத காலத்தில் கிட்டும் உதவித் தொகையைக் கோரி விண்ணப்பிக்க வரிசையில் நிற்கிறார்கள். மிகச் சமீபத்துக் குத்து மதிப்பில் 1 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அதாவது அமெரிக்கத் தொழிலாளர்களில் சுமார் 13% பேர்கள் வேலையில்லாமல் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் சொல்கிறது.

கா-மென் – ரேச்செல் ஹெங்

This entry is part 2 of 2 in the series கா மென்

“கா மனிதர்கள் கடற்கரையோரம் நிலத்தை மீட்டுப் பயன்பாட்டுக்குக் கொணர புதிய, ஊக்கம் நிறைந்ததோர் திட்டத்தை முன்வைத்திருக்கிறார்கள். அது வடக்குக் கடற்கரையில் அறுபது சதவீதத்தைக் கையிலெடுக்கும். அதை முடிக்கப் பத்து வருடங்கள் போலாகும். இந்தப் புதுத் திட்டம் மக்களவையில் வரும் வாரம் வாக்களிப்புக்கு வரும்,” திரையில் இருந்த செய்தியாளர் சொல்கிறார்.

கா மென் – ரேச்செல் ஹெங்

This entry is part 1 of 2 in the series கா மென்

சந்தேகமின்றி அவர்கள் இங்கிலிஷில் பேசுவார்கள். இங்கிலிஷை நன்கு தெரிந்து கொண்டிராமல் கா-மனிதராக ஒருவர் ஆக முடியாது என்பது நன்கு தெரிந்த விஷயம். ஆ பூனால் இங்கிலிஷை நன்றாகப் பேச முடியாது. அவன் சீனப் பள்ளியில் படித்தான், கா மனிதர்களுக்கு எதிர்ப்புப் போராட்டம் நடத்திய பள்ளிகளில் அது ஒன்று, அப்படி வந்த அவர்கள் தங்கத்தான் போகிறார்கள் என்பது அப்போது தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. இடை நிலைப் பள்ளியில் படிக்கையில் ஆ பூனும் சக மாணவர்களுடன் கரம் கோர்த்துக் கொண்டு பஸ் நிலையங்களின் முன்னால், அரசுக் கட்டடங்களின் முன்னே நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். கா மனிதர்கள் அந்த ரகளையில் ஈடுபட்டவர்களைக் கலைக்கப் பயன்படுத்திய சக்தி மிக்க தண்ணீர் பீரங்கிகளால் அடித்துக் கீழே தள்ளப்பட்டிருக்கிறான்.

பதிலி செய்தலும் நிஜமும்

மதங்கள் கடவுளிடம் சரணடையச் சொல்வதன் காரணமே இந்த சமத்துவத்துக்கான பெருவிழைவுதான். அப்படிப்பட்ட பேரறிவு, பெருங்கருணை, பேருரு, பேராளுமையிடம்தான் அனைவரையும் ஏற்று, அனைவருடனும் ஒரே சமயம் பகிர்ந்து, அனைவருக்கும் குரல் கொடுக்க வாய்ப்பு கொடுத்து, அனைவரும் உண்டு, அனைவரையும் உண்டு, அனைவரும் ஜீரணித்து, அனைவரையும் ஜீரணித்து ஒன்றாக்கும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய பேராளுமைக்கு கால, இட நெருக்கடிகள் ஏதும் இல்லை. முப்பரிமாணம் கூட இல்லை, எப்பரிமாணமும் அதை அடைக்க முடியாத பேராளுமை என்று கடவுளை உருவகித்த காரணமும் அதுவே ஆக இருக்க முடியும்.

சிறிய, சிறப்பான அம்சங்கள்

டார்வின் தன் புத்தகத்தைப் பிரசுரிப்பதில் இருபது வருடங்கள் தாமதம் காட்டி இருந்ததற்குக் காரணம், தன் மனைவி எம்மாவுக்கு மனத் துன்பம் கொடுப்பது பற்றிய அச்சம்தான். மரபுவழி ஆங்கிலிகன் கிருஸ்தவரான எம்மா, இறுதித் தீர்ப்பை நம்பினார், மரித்தவர்கள் மீண்டும் உயிர் பெறுவர் என்பதையும், வேறு உலக வாழ்வு கிட்டப் போகிறது என்பதையும் முழுதும் நம்பினார்.