நானாகிய

பூங்காவை விட்டு வெளியேறும் போது அழகான அரிவை என் முன் தோன்றினாள், அன்று நான் பார்த்ததில் கடைசி முகம் அதுதான் என்ற அளவிற்கு அந்த முகம் என்னுள் பதிந்துள்ளது. அவள் அணிந்திருந்த உடை எனக்கு சிந்தையில் இல்லை, கருமையான அவளது முகத்தின் சிறப்புகளை மட்டுமே மீட்க முடிகிறது-கடுமையான செயல் ஒன்றும் இல்லை இப்போதும் என்னால் எளிமையாக அந்த முகத்தை விவரிக்க இயலும்- புருவம் குறைவாக இருந்தது; உதடுகளுக்கு அரக்கும் சிவப்பும் கலந்த ‘பால்ம்’ பயன்படுத்தியிருப்பாள்போல, தண்ணீர் போன்ற அந்த உதடுகள் அவளது அழகென்ற சேனைக்கு அணு ஆயுதம்போல வலு சேர்த்தது. இருப்பினும், என்னை பெரிதாக கவர்ந்தது அவளது தாடைதான்.

காஞ்சி பூசூடா உமையாள் படலம்

யாருக்கு கற்றுத்தருவது என்று காத்திருந்தாற் போல சொன்னாள். “நிரம்ப செய்யலாம்பா, மொளகா இருக்குல, அது, கொஞ்சூண்டு எண்ணெய், சின்னவெங்காயம் நிறைய, உப்பு, புளித்தண்ணி, பெருங்காயம் இதெல்லாம் போட்டு வதக்குனினா தொட்டு திங்க நாக்கு மெச்சுக்கொட்டும், கீரைய பொரிச்சுவைக்காம பருப்பு கொத்தமல்லி புதினா போட்டு கடஞ்சு வைய், தோசைக்கு மாத்தா ஆப்பஞ்செய்.”