இவர்களின் படைப்புகளில் தனித்துவமான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு ஆக்கமும் புதிய பல எண்ணங்களை விதைக்கிறது; ஒவ்வொரு கட்டுரையும் பற்பல கோணங்களைத் திறக்கிறது. பெண்களின் உள்ளுணர்வுகளை சூழலோடு பின்னிப் படைக்கும் திறன், அறிவியலையும் இலக்கியத்தையும் இணைக்கும் அதிர்ஷ்டமான சேர்க்கை, வரலாற்றை புனைவில் புதைக்காமல் ஒளிர வைக்கும் கலை — இவை இந்த எழுத்தாளர்களை சொல்வனம் குடும்பத்தில் தனித்துவமாக்குகின்றன.
Category: அறிவிப்பு
சொல்வனம் சிறப்பிதழ்: இந்திரா பார்த்தசாரதிஅவர்களின் படைப்புலகம்
தில்லி, போலந்து என்று உலகின் பல்வேறு கல்விச் சூழல்களில் ஆய்வாளராகவும் பேராசிரியராவும் பணியாற்றிய இ.பா., கல்விச் சூழலில் வாழ்ந்தாலும் எப்போதும் இலக்கியத்தோடும் வாசகர்களோடும் நேரடி நாடி தொடர்பை வைத்திருந்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில், புதிய குரல்களை அடையாளம் கண்டு களத்தில் நிறுத்துவதில் அவர் காட்டிய தன்னல மறுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவாக வேண்டிய ஒன்று.
350 ஆவது இதழ்
முந்தைய பல முக்கிய கட்டங்களில் வெளியிலிருந்து எழுத்தாளர்களைச் சிறப்புப் பதிப்பாசிரியர்களாக வரவேற்றுச் சில சிறப்பிதழ்களைப் பிரசுரித்திருக்கிறோம். இந்த முறை பத்திரிகையின் பல பதிப்பாசிரியர்களையே முன்னிறுத்தி இதழைக் கொணரத் தீர்மானித்தோம். அதன்படி இந்த இதழில் பதிப்புக் குழுவினரில் இன்று தொடர்ந்து இயங்குவோரும், பின்னிலையில் ஒதுங்கி இருக்கும் சில பதிப்பாசிரியர்களுமாக எழுதியவை, மொழி பெயர்த்தவை இடம் பெறுகின்றன.
ஜூலை கடிகை
ஜெர்மனியின் தனித்துவமான திரைப்படக் கலைஞரான வெர்னர் ஹெர்ஸாகின் கனவுகளும் வேட்கைகளும் நிறைந்த உலகத்திற்குள் இந்தப் புதிய தொடர் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தப் பதிவு அவரை ஒரு கவிஞராகவும் உண்மையைத் தேடும் பயணியாகவும் கொண்டாடும் முயற்சி.
கடிகை
குவிகம் இதழின் ஆகஸ்ட் மாத சிறப்பிதழுக்காக, நீங்கள் வாசித்த மிகச் சிறந்த தமிழ்ப்புத்தகம் (புனைவு அல்லது புனைவிலி) குறித்து 300 வார்த்தைகளில் ஒரு சுவாரஸ்யமான, கருத்துமிக்க விமர்சனம் எழுதுமாறு அழைக்கப்படுகிறீர்கள்.
‘சொல்வனம்’ எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
ஏப்ரல் 5 சனிக்கிழமை தரு பதிப்பகத்தாரால் ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன. மொழியாக்கம் செய்யப்பட்ட சிறுகதை தொகுப்புகள் இரண்டு. மலையாளத்திலிருந்து தமிழில் அரவிந்த் வடசேரி மற்றும் வட இந்திய மொழிகளிலிருந்து தமிழில் அனுராதா க்ருஷ்ணஸ்வாமியால் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளடங்கிய தொகுப்புகள். ஆவநாழி மின்னிதழ் ஆசிரியர் சுதேச மித்திரனின் ‘கோபுரம் தாங்கி’ சிறுகதை தொகுப்பின் இரண்டாம் பதிப்பு, ஆவநாழி மின்னிதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு மற்றும் ஓவியர் ஜீவா அவர்களின் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. இப்படியாக ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன.
சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”
இதழ்-340 – சொல்வனம் | இதழ் 340 | 13 ஏப் 2025 அன்பார்ந்த வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும், “கவிதையின் நேரம்” என்ற சொல்வனம் சிறப்பிதழுக்கான சிறப்பு தொகுப்புப் பணிகளின் காரணமுமாக, இம்முறை சொல்வனம் இதழ் சிறிது தாமதமாகி, ஏப்ரல் 30 அன்று பிரசுரிக்கப்படும் “சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்””
மனித ஆன்மாவின் நெசவு
இலக்கியத்தை மொழியின் கிரீடம் என்று கருதினால் அதன் மீது அமர்ந்திருக்கும் இறகு என கவிதையை உருவகிக்கலாம். மனித மனதிற்கு அதன் இயல்பில் தர்க்க ஒழுங்குகள் இல்லை, அது மொழியினூடாக ஒரு பயிற்சியாகவே வந்து சேர்கிறது. நாவல்களும் சிறுகதைகளும் கவிதை அல்லாத பிற இலக்கிய வடிவங்களும் மொழி கட்டமைக்கும் இந்த தர்க்கத்தினூடாகவே வாசகனிடம் உரையாடுகின்றன, கற்பனை விரிவினால் சிந்தனைகளை மறுவரையறை செய்கின்றன. கவிதை மொழிக்குள் தர்க்கமற்ற தூய இருப்பாக ஒளிந்திருக்கும் ஏதோ ஒன்றைத்தான் தொட எத்தனிக்கிறது. அதன் வாயிலாக ஆழ் மனதின் தர்க்கமற்ற ஒரு பரப்பை சீண்டுகிறது.
எம். கோபாலகிருஷ்ணன் கௌரவ ஆசிரியராக
உங்கள் பங்களிப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்:
அறிவிப்புகள்
சொல்வனத்தில் வண்ண நிலவனின் நாவல், ’எம். எல்’ பிரசுரமாகியது. சொல்வனம் வெளியிட்ட முதல் நாவல் தொடர் அது. அரசியல் நாவல்கள் சமீப காலத்தில் நிறையவே தமிழில் வெளி வந்துள்ளன.
வாழ்த்துகளும் அறிவிப்புகளும்
சொல்வனம் இதழ்கள் பிரதி மாதம் இரண்டாவது/ நான்காவது ஞாயிறுகளில் வெளியிடப்படுகின்றன. பிரசுர தினத்துக்கு ஆறு நாட்கள் முன்பு எங்களை வந்தடையும் படைப்புகளை மட்டுமே உடனடி இதழுக்குப் பரிசீலிக்கிறோம். அந்த நாளுக்குப் பிறகு எங்களை வந்தடைவன அடுத்த இதழுக்கு ஒத்தி வைக்கப்படும்.
முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும்
இம்முறை இளம் எழுத்தாளர்கள், புது எழுத்து முறைகள், தமிழின் அடுத்த கட்டப் பாய்ச்சல்களை முன்வைக்கும் முகமாக 300வது இதழை இளம் படைப்பாளிகளை கவனப்படுத்தும் இதழாக வெளியிட ஆசைப்படுகிறோம். 2000க்குப் பிறகு எழுத வந்த ஆசிரியர்களின் புனைவு நூல்கள் குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள் ஆகியவற்றை வெளியிடப் போகிறோம்.
முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும்
இம்முறை இளம் எழுத்தாளர்கள், புது எழுத்து முறைகள், தமிழின் அடுத்த கட்டப் பாய்ச்சல்களை முன்வைக்கும் முகமாக 300வது இதழை இளம் படைப்பாளிகளை கவனப்படுத்தும் இதழாக வெளியிட ஆசைப்படுகிறோம்.
2000க்குப் பிறகு எழுத வந்த ஆசிரியர்களின் புனைவு நூல்கள் குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள் ஆகியவற்றை வெளியிடப் போகிறோம்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
வாசக அன்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள். சுபகிருது எனப்படும் இந்த ஆண்டில் இந்திய மக்களும், தமிழகத்து மக்களும் கடந்த ஈராண்டுகளாக அனுபவித்த பெரும் தொல்லைகள் முற்றிலும் நீங்கி, சமூகத்தின் பொதுநலம், அன்றாட வாழ்க்கை, மேலும் பண்பாட்டு இயக்கங்களில் சிறந்த அனுபவங்களையும், மேம்பட்ட வளங்களையும் பெறவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
2022
சொல்வனம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடமாவது தொற்று நோய்கள் முற்றிலுமாக அகன்று இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். இயற்கையின் சீற்றங்களும் தணிந்து உலகெங்கும் மனிதர் நன்னிலைக்குத் திரும்பினால் அது உபரி நன்மை. *** ஓரிரு தினங்கள் முன்பு எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு சாஹித்ய அகதமியின் “2022”
சொல்வனம் வழங்கும்… கிண்டில் புத்தக வெளியீடு
சொல்வனம் வெளியீடாக “வீடும் வெளியும்” நூல் கிடைக்கிறது. இது அமேசான் கிண்டில் மூலமாகக் கிடைக்கும் சொல்வனம்.காம்-இன் மூன்றாவது புத்தகம். முந்தைய இரண்டும் சிறப்பிதழ்கள் என்றால், இந்தப் பதிப்பு எங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவரான ச. அனுகிரஹாவின் படைப்புத் தொகுப்பு.
அன்புள்ள வாசகர்களுக்கு… சிறப்பிதழ் அறிவிப்பு
உங்கள் வாசிப்பில், கவனிப்பில், சிந்தனையில் எந்த எழுத்தாளர்களை நீங்கள் பாராட்டிப் படிக்கிறீர்கள், அவர்களால் உங்களுக்குக் கிட்டிய மேன்மைகள் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று யோசித்து, ஒரு சுருக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்.
இந்தச் சிறப்பிதழ் புதுப் புனலாக வந்த எழுத்தாளர்கள் பற்றியது என்பதால் சமீபத்தில் எழுத வந்துள்ளவர்களைப் பற்றி இந்த யோசனைகள் இருக்க வேண்டும்.
2000த்துக்கு அப்புறம் எழுத வந்தவர்களைப் பற்றி இருக்கட்டும் என்று தற்காலிகமாக முடிவு செய்திருக்கிறோம்.
பையப் பையப் பயின்ற நடை
சொல்வனம் பத்திரிகையின் 250 ஆம் இதழைப் பற்றிச் சில எண்ணங்கள். சில பத்திரிகைகள்- மேலும் இதர பண்பாட்டு வெளிப்பாடுகள்- எடுத்த எடுப்பிலேயே உசைன் போல்ட் தடகளத்தைக் காற்று வேகத்தில் கடப்பது போல, அசாதாரண லாகவத்துடன், துரிதத்துடன் செயல்படத் துவங்கி விடுகின்றன. சொல்வனம் துவக்கத்திலிருந்து மதலை போல நடை பழகத் “பையப் பையப் பயின்ற நடை”
பிரான்சில் தமிழ் நவீன இலக்கிய விழா அறிவிப்பு
நவீன தமிழிலக்கியம் பற்றிய இன்றைய நிலை, புதுமைபித்தன், ஜெகயகாந்தன், சு.ரா, பிரபஞ்சன், சா. கந்தசாமி, தி. ஜானகிராமன், கி.ரா , அம்பை, பாமா பற்றிய கட்டுரைகள் வண்ண நிலவன், பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன் கி.ரா, சோ.தர்மன், மாலன் ஆகியோரின் சிறுகதை மொழிபெயர்ப்புகள்
சிறப்பிதழ் வரிசை: இந்திய மொழிகள்
இந்த இதழை வங்கமொழிச் சிறப்பிதழின் இரண்டாம் பாகமாகக் கொணர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்….இந்த இதழில் பல சிறுகதைகளைக் கொடுக்கிறோம். பனபூல், ராம்நாத் ராய், சமரேஷ் மஜும்தார், ஸீர்ஷோ பந்த்யோபாத்யாய், மஹாஸ்வேதா தேவி, ஆஷாபூர்ணா தேவி, சுபிமல் மிஸ்ரா, மோதி நந்தி, ரபீந்த்ரநாத் தாகுர்ஆகியோரின் கதைகள் உள்ளன. பிபூதி பூஷண் பந்த்யோபாத்யாயின் நாவல் ஒன்றின் அடுத்த பாகம் மொழிபெயர்க்கப்பட்டுக் கிட்டுகிறது. ஜாய் கோஸ்வாமி, ஸாங்க்யா கோஷ், புத்ததேவ் போஸ், சக்தி சட்டோபாத்யாயா ஆகியோரின் கவிதைகள் உள்ளன. தவிர நாடக உலகில் உத்வேகத்தைக் கொணர்ந்த பாதல் சர்க்கார் பற்றிய ஓர் அனுபவக் கட்டுரையையும், க்ளைவ் பெல் என்ற ஒரு குழல் இசைக்கலைஞரின் பேட்டியையும் கொடுத்திருக்கிறோம்.
வங்கச் சிறப்பிதழ்: அறிமுகம்
கலைச் செல்வங்கள் எங்கிருப்பினும் அவற்றைக் கொணர்ந்திங்கு சேர்ப்பது என்ற பணியில் சொல்வனம் எடுத்திருக்கும் முக்கிய அடுத்த படி இந்த வங்கமொழிச் சிறப்பிதழ். ….அம்மொழியின் உலகத்தரம் வாய்ந்த இலக்கியம், இசை, கலை சார்ந்த படைப்புகள் இத்தேர்வின் பொருத்தத்தை உறுதிப்படுத்தி உள்ளன.
சிற்றடி: ஏன் இந்த முயற்சி?
பல மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களைப் பெற்று வாசித்துப் பார்த்தபோது அவற்றின் சுகந்தம், நேரடித் தாக்கம், ஸ்பரிசானுபவமே போன்ற வாசிப்பனுபவம், எனக்கு இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குச் சென்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை, அதேபோல இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குப் போய் அங்கிருந்து தமிழாக்கம் பெற்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை.
அறிவிப்பு: வங்க மொழிச் சிறப்பிதழ்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் அடுத்த இதழ் (240) வங்க மொழி இலக்கியம், கலை ஆகியவற்றைச் சிறப்பிக்கும் இதழாக அமையும்.
வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு
சொல்வனம் தன் 12 ஆண்டுக் கால இயக்கத்தில் பல மொழிபெயர்ப்புகளைக் கொடுத்திருக்கிறது. ஒரு பருந்துப் பார்வையில் கவனித்தால், அவற்றில் பெருமளவும் இங்கிலிஷிலிருந்து பெறப்பட்டவையாகவே இருப்பது தெரியும். இந்தியாவைப் போன்ற முன்னாள் காலனிய நாடுகளின் ஒரு பேரவதி என்ன என்றால், அவற்றின் நெடுங்கால காலனியாதிக்கத்தின் சுவடுகள் வரலாற்றில் துவங்கி சமூகத்தின் “வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு”
225: ரொபெர்த்தோ பொலான்யோ சிறப்பிதழ் குறித்து
நம்பி கிருஷ்ணனையே இந்த இதழுக்குச் சிறப்புப் பதிப்பாசிரியராக இருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தோம். இந்த இதழில் பிரசுரிக்கப்படும் 30+ கட்டுரை, கதைகள் அனைத்தையும் அவர் கவனித்திருக்கிறார். தவிர அவரே பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Especially on the Bolano Special…
The special or the idea to revive them was an outcome of one of my rants as to how Solvanam lacked the passion of the little magazines of yore. Who better to exemplify that passion than the man whose characters go through extraordinary lengths in search of things literary? I know that we were living in times, where the notion of Little Magazine is passé, that we now have time to do literature only in passing, en passant if you will, an afterthought after work, in between the incessant frog hopping on social media and the perpetual binge watching of very well-made TV shows.
அறிவிப்பு: ரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ்
சொல்வனம் இதழ்-225, “ரொபெர்டோ பொலான்யோ” சிறப்பிதழாக வரவிருக்கிறது. பொலான்யோ-வின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் கட்டுரைகளை ஜூன் 10 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி
கதைகள் ஏதேனும் ஒரு சங்க இலக்கியப் பாடலின் செய்தியை மையக் கருத்தாகக் கொண்டு சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளாக இருக்க வேண்டும்.
லண்டனில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி
12 மார்ச் 20 (வியாழன்)
மாலை 4 மணி முதல் – மாலை 9 மணி வரை
Kerala House Hall
(Near the manor park Library )
671,Romford Road
Manor Park
E12 5AD
(Near the train Stations- Manor Park, Eastham, Stratford )
ரொன்றன்ரோப் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை
ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை தமிழ்மொழி ஆய்வுக்கு இடமளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று மில்லியன் டொலர் பணத்தை சேகரித்து பல்கலைக்கழகத்துக்கு கொடுக்க வேண்டும். இதுவரை தமிழர்களால் $700,000 நிதி சேர்க்கப்பட்டுவிட்டது. இப்பொழுது $2.3 மில்லியன் பணத் தொகையை இரண்டே ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
இதழ் 201 பதிப்புக் குறிப்பு
ஜூன் இறுதியில் வரவிருக்கும் சொல்வனத்தின் 204-ஆம் இதழை, நினைவுத்திறனின் போதாமைகளையும் மானுட வரலாற்றில் இடையறாது தொடரும் அழிவைப் பற்றியும் அண்மைக் காலத்தில் வேறெந்த எழுத்தாளரையும் விட நுணுக்கமாக எழுதிய சேபால்டை மையப்படுத்தும் சிறப்பிதழாகக் கொண்டுவரலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்.
அறிவிப்புகள்
சொல்வனம் இதழில் 2012 ஆம் ஆண்டு முதல் பல கட்டுரைகளும், சிறுகதைகளும் நரோபா எனும் புனைப்பெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ள செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் சொல்வனம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.
தமிழ் சிறுகதைப் போட்டி
தமிழ் மொழி வல்லுனர்கள் குழுவால் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ் ஆக்ஸ்போர்டு வாழும் அகராதியின் இணையத்தளத்தில் 31/7/2018 அன்று வெற்றியாளரின் பெயர் அறிவிக்கப்படும். வெற்றிபெற்ற கதை தமிழ் ஆக்ஸ்போர்டு வாழும் அகராதியின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் வெற்றியாளருக்கு ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு சிறிய வியப்பூட்டும் பரிசு வழங்கப்படும்.
அறிவியல் புனைவுச் சிறப்பிதழ் பற்றி…
அறிவியல் புனைவிலக்கியம், சில நாடுகளிலிருந்துதான் பெருமளவும் வெளிப்படுகிறது. அவை அனேகமாக யூரோப்பிய, மேலை நாடுகள் என்பது தெளிவு. சமீபத்துப் பத்தாண்டுகளில் சீனா, இந்தியா மற்றும் சில ஆஃப்ரிக்க நாடுகள் இந்த வகை இலக்கிய முயற்சியில் இறங்கி இருக்கின்றன. இந்த விஷயங்களில் அகழ்வாராய்ச்சி செய்பவர்கள் எங்கும் உண்டு. அந்தந்த நாட்டு அறிவியல் புனைவிலக்கியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் அனேகமாக 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தகைய முயற்சிகள் துவங்கி விடுவதைச் சொல்கிறார்கள். பற்பல யூரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும் இப்படி வேர் மூலம் காட்டும் ஆய்வுகள் உண்டு.
பதிப்பாசிரியர் குறிப்பு
சொல்வனம் தளம் கடந்த சில வாரங்களாக சரிவரச் செயல்படவில்லை என்பதை நண்பர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். அதே போல், இதழ் சீரான இடைவெளியில் பதிப்பிக்கப்படுவதில்லை என்ற குறையையும் தெரிவித்திருந்தனர். இவற்றைச் சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தளத்தில் உள்ள பக்கங்கள் திறப்பதில்லை என்ற மிக முக்கியமான தொழில் நுட்ப “பதிப்பாசிரியர் குறிப்பு”
சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி
சென்னை தினம் (மெட்ராஸ் டே) நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். கதைகள் சென்னையைப் பின்னணியாகக் கொண்டதாக இருக்கவேண்டும். சென்னையில் நடக்கும் கதையாகவோ அல்லது சென்னையைப் பற்றிய கதையாகவோ அல்லது சென்னையைக் களமாகக் கொண்டு நிகழும் கதையாகவோ இருக்கலாம். சென்னையை மையமாகக் கொள்ளாத கதைகள் நிராகரிக்கப்படும். போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2017.
சொல்வனம் வழங்கும்..
பன்னிரண்டு பகுதிகளாய் சொல்வனத்தில் வெளிவந்த அந்தத்தொடரில் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல் முதலிய பல துறைகளில் இருந்துவரும் பிரச்சினைகளை அலசவும், கருத்துக்களை விளக்கவும் உலகெங்கிலும் உருவாக்கப்பட்ட சிந்தனைச்சோதனைகளை தொகுத்து வழங்கி இருந்தேன். கடந்த ஒரு வருடமாக அந்தத் தொகுப்பை இன்னும் நிறைய பாலிஷ் செய்து, புதிதாக ஜனநாயகம், மருத்துவம் பற்றிய அத்தியாயங்களையும், ஆழ்ந்த அறிதல் (Deep Learning) முதலிய விவாதங்களையும் சேர்த்து ஒரு புதிய மின் புத்தகமாக “சிந்தனைச்சோதனைகள் – பணச்செலவில்லா பிரபஞ்சச்சுற்றுலா” என்ற பெயரில் வெளிக்கொணர்ந்து இருக்கிறோம். சொல்வனம் ஆசிரியர் குழுவின் உதவி/ஆசியுடன் .வெளிவரும் இப்புத்தகம், ஒரு சொல்வனம் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வலை இணைப்புகளின் மூலமாகவோ அல்லது அருகிலிருக்கும் QR குறியீட்டை உபயோகித்தோ நீங்கள் வாங்கலாம்.
அன்புள்ள வாசகர்களுக்கு…
சொல்வனம் இணைய இதழில் எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் சில கட்டுரைகள் வரவிருக்கின்றன. சொல்வனம் அ. முத்துலிங்கம் சிறப்பிதழ் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் வரலாம். அ. முத்துலிங்கம் அவர்களைப் பற்றியும், அவரது எழுத்து பற்றியும் நீங்கள் ஒரு கட்டுரை எழுத முடியுமா?
பதாகை சிறப்பிதழ்
ஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.
அறிவிப்புகள்
ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம். தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” பரிசுத்தொகை : முதல் பரிசு – 15,000, இரண்டாம் பரிசு – 10,000, மூன்றாம் பரிசு – 5,000. கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.
சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்
கலந்துரையாடல் பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியானந்தன் இவர்களுடன் சொல்வனம் சார்பில் ரவி சங்கரும், நவீன விருட்சம் சார்பில் அழகியசிங்கரும் இடம் : பனுவல் விற்பனை நிலையம் 112 திருவள்ளுவர் சாலை திருவான்மியூர், சென்னை 600 041 தேதி 02.01.2016 (சனிக்கிழமை) நேரம் துவக்கம்: மாலை 5.30 மணி “சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்”
அறிவிப்புகள்
“விமுக்தா” என்ற கதைத் தொகுப்பிற்காக திருமதி ஒல்கா சாகித்ய அக்காதமி விருதை பெறுகிறார். இந்தக் கதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் ராமாயண இதிகாசத்தின் பின்னணியில் சீதை சூத்ரதாரியாக சொல்லப்பட்டவை.
திசைகள் தளம் மின்னூல்களைப் பதிப்பிக்கிறது. சொல் சார்ந்தவை (text based) , ஓவியங்கள், புகைப்படங்கள் கொண்டு மெருக்கூட்டப்பட்டவை (image based), காணொளிக் காட்சிகள் கொண்டவை (video books) என்று எல்லா வகையான நூல்களும் பதிப்பிக்கப்படும்.
இலவச மின்னூல் வெளியீடு- அறிவிப்பு
அணுகுண்டு என்றவுடன், நமது ஊடகங்கள் எப்படியோ ஐன்ஸ்டீனையும் இத்துடன் இணைத்து கதை கட்டி வெற்றி கண்டுள்ளது. ஒருவர் என்னிடம், “ஐன்ஸ்டீன் மிகவும் மோசமானவர். இவர்தான் அணுகுண்டைக் கண்டுபிடித்து விஞ்ஞானத்தையே குட்டிசுவராக்கினார்” என்று சொன்னவரை, ஐன்ஸ்டீனைப் பற்றிச் சரியாகப் புரிய வைக்க, போதும் என்றாகிவிட்டது. இத்தனைக்கும் அவர் கணக்கர். விஞ்ஞானம் என்றால் ஓட்டம் பிடிப்பவர். இப்படி குற்றச்சாட்டை அடுக்காவிட்டாலும் அணு விஞ்ஞானம் பற்றிய பொதுப் புரிதல் மோசமாகவே இன்றும் உள்ளது
உலக இலக்கியத்தின் 2015 ஆம் வருடத்து நோபெல் பரிசு பற்றி
இவர் அளிப்பது உண்மையிலேயே ஒரு உணர்ச்சி ஊறியெழும் உலகம், எனவே இவர் தன் பல புத்தகங்களில் அளிக்கும் வரலாற்று நிகழ்வுகள், உதாரணமாக செர்னோபில் பேரழிவு, ஆஃப்கனிஸ்தானில் சோவியத் யூனியனின் போர், ஆகியன எல்லாம் சோவியத் மற்றும் சோவியத்துக்குப் பின் வந்த காலத்துத் தனி நபர்களைத்தான் ஆழ நோக்குகின்றன. இவர் சிறு குழந்தைகளோடும், பெண்களோடும், ஆண்களோடும் ஆயிரக்கணக்கில் பேட்டிகளை எடுத்திருக்கிறார். நமக்கு அதிகம் தெரிய வராத மனிதத் துயரங்களின் வரலாற்றை அளிக்கிறார். .. அதே நேரம் இவர் நமக்கு உணர்ச்சிகளின் வரலாற்றையும், ஆன்மாவின் வரலாற்றையும் கொடுக்கிறார்
பதாகை சிறுகதை போட்டி
பதாகை இலக்கியத்தளம் 2015க்கான சிறுகதைப் போட்டியை அறிவித்து இருக்கிறது. க. மோகனரங்கனும் பாவண்ணனும் நடுவர் குழுவில் இருக்கிறார்கள். சொல்வனம் வாசகர்களும் எழுத்தாளர்களும் இங்கே சென்று விவரங்களை அறியலாம்…
காசியில் பாரதி நினைவாக…. ஒரு கோரிக்கை, ஒரு கடமை.
எனக்கு கடந்த வாரம் மூன்றாவது முறையாக காசி செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஏற்கனவே முதல் இரு முறைகளிலும் மகாகவி பாரதி காசியில் வாழ்ந்த இடத்தைப் பார்த்து வந்த எனக்கு இம்முறை பாரதியின் அத்தை குப்பம்மாள் (எ )ருக்மணி அம்மாள் அவர்களின் மகன் திரு .கே வி கிருஷ்ணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது…
பெண்கள் சிறப்பிதழ்
சிறப்பிதழ் என்றால் இவையெல்லாம், இவர்களெல்லாம் இருக்க வேண்டும் என்கிற Blue Print பற்றியெல்லாம் எண்ணாமல் பல் கலைகளையும், இலக்கியத்தின் பல்வேறு வகைகளையும், பல வயதுப் பகுப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுத்தாளர்களின் தமிழ் எழுத்துகளையும் மற்றும் உலக, அகில இந்திய எழுத்துகளின் மொழி ஆக்கங்களையும் கொண்டிருக்கும் ‘பெண்கள் சிறப்பிதழை’ மிகுந்த மகிழ்ச்சியோடு வெளிக் கொணர்கிறோம்.
மூன்று விருதுகள்
எழுத்தாளர் அம்பை முன்னின்று நடத்தி வரும் ஸ்பாரோ(SPARROW – Sound & Picture Archives for Research on Women) என்ற ஆவணக் காப்பு அமைப்பிற்கு இந்த ஆண்டின் பிரின்ஸ் க்ளௌஸ்(Prince Claus) விருது வழங்கப்படுகிறது.
கடந்த நாற்பது வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் எம்.ஜி.சுரேஷ் அவர்களுக்கு இலக்கிய வீதியும், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து வழங்கும் 2014-ஆண்டுக்கான அன்னம் விருது வழங்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் வெ. சுரேஷ் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை பிரிவினரால், கோவை மாவட்டத்தின் நேர்மையான அலுவலர்களுள் ஒருவர் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அறிவிப்பு
இது சொல்வனத்தின் நூறாவது இதழ். இம்மகிழ்ச்சித் தருணத்தில் இதைச் சாத்தியமாக்கிய வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்புவோருக்கும் எங்கள் இதயப் பூர்வமான நன்றி. தமிழ் செம்மொழியாய் இருப்பதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அநாதி காலமாக இம்மொழியில் சிந்தித்து, பேசி, எழுதி வரும் கோடிக் கணக்கான சாமான்ய மக்கள். இன்னொன்று இதன் செழுமையையும், வளமையையும், சீரிளமைத் திறனையும் தம் எழுத்துகளின் மூலம் தொடர்ந்து கட்டிக் காத்து வரும் இலக்கிய கர்த்தாக்கள். பாரதியுடன் துவங்கிய நவீன கால தமிழ் இலக்கியத்தின் முதன்மை இடத்தில் இருக்கும் சிகரங்களில் ஒருவரான திரு. அசோகமித்திரன் அவர்களின் சிறப்பிதழாக இந்த நூறாவது இதழை வெளிக் கொணர்வதில் பேருவகையும், பெருமிதமும் கொள்கிறோம்.
பாரத் ரத்னா CNR ராவ் அவர்களுக்கு சொல்வனத்தின் வாழ்த்துக்கள்!
இந்திய வேதியியல் விஞ்ஞானி. முழுப்பெயர் சில வாசனை மூலக்கூறுகள் போல நீண்டது. சிந்தாமணி நாகேஸ ராமசந்திர ராவ். அவர் ஆய்வுக்கூடத்தில் முதன் முதலில் கால்வைத்தே 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் ஒரு வருடத்தில் 80 வயது தாத்தா. வேதியியல் என்ற துறைதான் அவரது சுவாசம், தவம் எல்லாம்….
