கிளைக்கு உயரும் மலர்

This entry is part 10 of 11 in the series ஹைக்கூ

தமிழில் ‘கறந்த பால் மடி புகாது’ எனப் பழமொழி உள்ளதைப் போல ஜப்பானிய மொழியில் ‘உதிர்ந்த மலர் கிளை திரும்பாது’ எனப் பழமொழி உள்ளது. ‘ஓச்சி ஹனா யெதானி கயேராசு’ என அதனைச் சொல்வர். ஓச்சி – விழுந்த, ஹனா – மலர், யெதா_னி – கிளை_க்கு, கயேராசு – திரும்பாது. இந்தப் பழமொழியின் ஒரு பாதியை முதலடியில் கொண்டது இக்கவிதையின் முதற்சிறப்பு.