வரலாறும் தத்துவங்களும் ஒரு நாவலுக்கு தேவை. வரலாற்று பின்னணியும் தத்துவ விசாரணையும் வெளிப்படையாக தெரியாதபடி அமைந்த நாவலாக சொர்க்கத்தின் பறவைகள் நாவலை சொல்லலாம். எந்த இடத்திலும் நாவல் தனக்குரிய வரலாற்றை நேரடியாக சொல்லவில்லை. எந்த தத்துவ தேடல்களும் அதற்கில்லை, ஆனால் அவை மிகச்சரியாக பின் தொடர்ந்தபடி இருக்கின்றன. நாவலில் உள்ளீடாக இருக்கும் வரலாறும் தத்துவத்தையும் வாசகன் அறியும் போது ஏற்படும் கிளர்ச்சிதான் நாவலை நடத்திச் செல்கிறது.
Tag: கே.ஜே. அசோக்குமார்
மெக்கானிக் கதைகள்
சிறிய எளிய கதைகள், எளிமை இக்கதைகளில் வலிமை எனலாம். நேரடியாக வாசகருடன் உரையாடும் இக்கதைகளை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தன் கதைகள் மேலிருக்கும் அளவிலாத பற்று ஒவ்வொரு கதைகளிலும் மிளிர்க்கிறது. தன் சொந்த அனுபவத்தின் சாயல்களும் நெருக்கமான ஒன்றின் அமைதியும் கதைகளில் பிரதிபலிக்கின்றன. கூடவே இக்கதைகளை சொல்லியே தீரவேண்டும் என்கிற ஆசிரியரின் வேட்கையும் வெளிப்படுகிறது.
பெரும் வீழ்ச்சியின் கதைகள்: ரித்னாபூரின் மழை – அசோக் ராம்ராஜ்
அசோக் ராம்ராஜின் கதைகூறல் முறை காஃப்கா, கமூய் கதைகூறல் முறையை ஒத்திருக்கிறது. எப்போதும் சோகம் ததும்பும், புனைவின் மையத்தை தொடாமல் சுற்றியே வரும் மொழி நடை. படைப்பின் உள்ளடக்கத்தைவிட வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பாணி. வடிவம் குறித்து கவலை கொள்வதனாலேயே உள்ளடகத்தின் வீச்சை பிரம்மாண்டமாக ஆக்குவதற்கு வடிவத்தை மாற்றி பயன்படுத்துகிறார்.
இந்தியாவின் சுருக்கமான வரலாறு – ஜான் ஜூபர்ஸிக்கி (தமிழில் அரவிந்தன்)
5000 ஆண்டுகளிலிருந்து இன்றுவரை நடந்தவை ஒரே நூலில் அமைந்த பூசரடுகள் போல நீண்டு வருகின்றன. இடுபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி மொகசந்தாரோ, ஹராப்பா நாகரிகத்திலிருந்து இன்று நடக்கும் அரசியல் மாற்றங்கள் வரை சமகாலதன்மையை உணர்ந்தும் வகையில் அமைந்திருக்கிறது.
