ஒன்றரை அங்குலம் மேலே 

வெகு நாட்களாக காஸ்ட்டோபி போலீஸ் அவளை கண்காணித்து வந்ததாக பிறகு எனக்கு தெரியவந்தது. அவளிடம் சட்டத்துக்கு விரோதமான சில நோட்டீஸ்களும் துண்டு பிரசுரங்களும் இருந்ததாகத் தெரிய வந்தது. இவை அந்நாட்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. ஜெர்மனி அதிகாரிகளின் பார்வையில் இது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டது.

குவாரண்டீன்

உயரத்தில் தீச்சுவாலைகள் மாலை நேரத்தின் ஆரஞ்சு நிறம் கலந்த அடிவானத்துடன் கலக்கும் போது, இன்னும் அரைகுறை உயிருடன் இருந்த நோயாளிகள், ஏதோ உலகமே தீப்பற்றி எரிகிறதோ என்று நினைத்தார்கள். குவாரண்டீன் இப்படி மேலும் பல மரணங்களுக்குக் காரணமாக இருந்தது. ஏனென்றால் வலுக்கட்டாயமாக குவாரண்டீன் மையத்தில் அடைக்கப்படும் அச்சத்தினால் மக்கள்  தங்கள் நோயின் அறிகுறியை யாருக்கும் சொல்லாமல் மறைக்கத் தொடங்கினார்கள்.

ரோபோ தமிழ்க் குழப்பம் 2075

அடுத்த கட்சி கூட்டத்தில், பெரும்பாலும் ஆண்களே இருந்தார்கள். ஒரு தலைவர், ஒரு மணி நேரம், ஏதேதோ பேசினார். பெண்களின் கூந்தலை அழகுபடுத்துவதுதானே, தமிழில் ‘பின்னல்’? அவர் பேசி முடித்தபின், அங்கு ஒருவர், ‘பிண்ணிட்டாருடா தலைவர்’ என்று சொன்னவுடன் எனக்கு ஒரே குழப்பம். தலைவர் வெறும் பேசத்தானே செய்தார். இதில் பெண்களின் கூந்தல் எங்கு வந்தது?

அவம்

டத்திற்கு மட்டும் வாடகை என்பதால், மற்ற இடங்களைவிட வாடகை குறைவாக இருக்கும், பெரும்பாலும் தென்னை ஓலை வைத்து கட்டிக்கொள்ளவேண்டும், தளக்கட்டுமானம் கூடாது என்று கட்டளை. எப்போது வேண்டுமானாலும் இடத்தை காலி செய்யவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு. எங்களுக்கு மட்டும் நாட்டு ஓடு வேய்ந்து கொள்ள அனுமதித்திருந்தனர்.

நிழல் மகன்

இறந்த மனைவி ரத்னா பரமசமுத்திரத்தில்  டீச்சராக, அதுவும், பெண்கள் உறைபள்ளியில் வேலை செய்தாள். அவளும் கர்னூல்காரி. ஜொன்ன ரொட்டியில் கெட்டிக்காரி. கடப்பா காரதோசை செய்வதில் எக்ஸ்பெர்ட். அவளுடைய மிளகாய் ஊறுகாயிக்கும் கோங்குராப் பச்சடிக்கும் நானும், என் மகளும் மாத சந்தாதாரர்கள். 

உயிர்மெய்

தனியார் வங்கியில் அடிமைதன வேலையிலிருக்கும் அவளை, உடற்கல்வி ஆசிரியர் என்ற சுகபோக அரசாங்க வேலை பார்க்கும் நான், ஏகத்தாளமாய் குறை சொன்னால் கோபம் வருமா?வராதா? கோபத்தில் சிவக்கும் அவள் முகத்தை, பைக்கின் முன்புறக் கண்ணாடியில் பார்த்து ரசிப்பேன். அவள் கோபத்தை ரசிக்கும் “சேடிஸ்ட்” இல்லை நான். அவள் என்றால் உயிரெனக்கு. இருந்தும் அவளை இப்படி வம்புக்கிழுப்பதில் ஒரு சுகம்

புனரபி ஜனனம்….

நான் செய்த எத்தனையோ செயல்களுக்கு அவரிடம் மன்றாடி மன்னிப்பு கேட்பதற்கு, சத்தமே செய்யாமல், சந்தோஷமாக, என்னிடம் எதையுமே எதிர்பார்க்காமல் அவர் செய்த அத்தனை செயல்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்கு, எனக்கும் அவருக்குமேயான பிரத்தியேகமான தருணங்களில் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு இருப்பதற்கு,

வேர்முள்

அந்த நேரத்தில் தான் செழியனின் வரன் வந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரம். முடிவு ஏதும் ஆகி இருக்கவில்லை. ஆனாலும் கலையரசி “அச்சச்சோ இப்பதான் என் மகளுக்கு மாணிக்கராஜ் வீட்ல பேசி முடிச்சோம், நீ அப்பவே வந்திருக்கக் கூடாதா” என்று ஏதோ சோப்பு விற்க வந்தவனிடம் பேசி அனுப்புவது போல் பேசினாள். அந்த வரன் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததால் ஏதும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.

பாரபட்சம் 

கீழ் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் எங்கோ மறைமலை நகர் உறவினர் வீட்டுக்குப்போய்த் தங்கிவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார். கீழ் வீட்டு தோட்டக்கதவு, ரூம் கதவு  இவை பொல பொல என உதிர்ந்து தூளாய்க் கொட்டியன. தரை தள வீட்டில்  குடியிருந்தவர் ஆந்திரா ஊறுகாய் வியாபாரம்,  எல் ஜி கூட்டுப் பெருங்காயம்  இத்யாதிகளை லொட லொட  டூவீலரில் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்பவர்.

கழிவுமுடிவுகள் -பல்ஸ் பார்த்தபோது

அவர், எல்லா தலைப்புகளிலும். எந்த நேரமும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார். சமூகவியல் கருத்தரங்கமா? அவருடைய உயர்ந்த சமூகப் பார்வை இருக்கும். உளவியல் கருத்தரங்கமா?  உங்கள் மனதை புட்டு புட்டு வைப்பார். இயற்பியல் கருத்தரங்கமா? அவருக்கு தெரியாத குவாண்டம் பிஸிக்ஸா? எல்லாம் கூகுள் அப்பாவின் உதவிகள். சரியா தவறா – கிடையாது. சும்மா, அடித்து விளையாடுவார்.

நான்கு நாட்கள் கொண்டாட்டம்

சரசுவின் வேலை மேய்ப்பதும் தோய்ப்பதும். மாடு ஆடு கோழி தாரா வாத்துகள் எனப் பலவற்றைப் பராமரிக்கின்றாள். அத்தோடு உடுப்புகள் தோய்க்கின்றாள். சிலவேளைகளில் தோட்டத்திற்குள் களையும் புடுங்குவாள். இவையெல்லாவற்றையும் விட, கமலத்தின் முழுத்தொட்டாட்டு வேலைகளையும் அவளே செய்வாள்.

கொட்பின்றி ஒல்லுதல் நட்பாம்

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு பார்க்கப் போகும் கல்பனாவின் முகத்தையும் உருவத்தையும் தன் நினைவில் நிறுத்த முயர்ச்சித்தாள். தன் வகுப்பறையிலேயே உயரமான, தடிமன் ஆன பெண் கல்பனா. மிகவும் கலகலப்பானவள். கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள் ஆதலால் எப்போதும் நிறைய தோழிகளுடனேயே காணப்படுவாள். அவளுக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும். பேசிக்கொண்டே இருப்பாள், ஆதலால் கரும்பலகையில், பேசியோர் பட்டியலில் கல்பனாவின் பெயரே முதலிடம் பிடித்திருக்கும்.

தூண்டில்

விண்ணிலிருந்து வீழ்ந்த ட்ராகோவின் கலத்தில் நிறைந்திருந்த நீர்/திரவத்தின் உப்பு மற்றும் வளிகளின் செறிவை அடையாளம் கண்டு, அதை பன் மடங்காக உற்பத்தி செய்து பெரும் தொட்டியில் நிரப்பி, கலத்தினுள் நினைவிழந்திருந்த ட்ராகோவை அதற்குள் இட்டுச் சென்று, பல்வேறு வகையான திரவ புரதசத்து கலவைகளை ட்ராகோவின் உணவுக்காகப் பரிட்சித்து, ட்ராகோவின் ஓட்டில் எழும் வண்ணங்கள் பாஷை என்பதை அவதானித்து, அதை மொழியாக்கம் செய்ய செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பழக்கி, இவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க ஒரு திறமையானக் குழுவை அடையாளம் கண்டு அமர்த்தி என்று செயல்கள் மூலமாகவே அவன் தன் துக்கத்தை மறந்தான். 

சலூன் சிந்தனைகள்

இன்க்ளூசிவான அன்பு, கருணை மூலமா உருவாகிற ஒழுங்குக்கு ஒற்றைப்படைத் தன்மை வந்து சேராதா? அது அதிகாரமா ஆகாதுன்னு என்ன நிச்சயம். அப்புறம் இங்க ஒரு முரண் இருக்கு. அதாவது நீங்க சொல்ற அந்த அன்போட விளைநிலம், அல்லது அதை ஒரு தனி ஆன்மா கண்டுகொண்ட முதல் இடம்ங்கிறது குடும்பம் தான். குடும்பம் அப்படின்னாவே அது எக்ஸ்க்ளுசிவ் அமைப்பு தான். அப்பா அம்மா பிள்ளைகள்ங்கிற பிரத்தியேக தன்மை. அங்க தான் அன்பு முதல்ல அடையாளம் காணப்படுகிற இடம்,

சரோஜாதேவி புத்தகம்

மன்சூருக்கு ஏன் மல்லிகா மீது மட்டும் காம உணர்வு எழவேண்டும்? மல்லிகா வயதுடைய அவயங்கள் கொண்ட வனப்பான பெண்கள் இந்த விடுதியிலேயே இருக்கிறார்களே? அவர்களிடமெல்லாம் அவன் காமுறவில்லையே? அது ஏன்? பார்க்கப்போனால், இதே வாதத்தை பெண்கள் மீது காமுறும் ஆண்கள் எல்லோர் மீதும், அதே போல் ஆண்கள் மீது காமுறும் பெண்கள் எல்லோர் மீதும் வைக்கலாம். இல்லையா? ஒரு பெண் மீது காம உணர்வு கொள்பவனுக்கும் பிடிக்காத, அவனால் காம உணர்வு கொள்ள முடியாத பெண்களும் இருப்பது எதைக் காட்டுகிறது

நெருஞ்சில்

லீலி பயந்தவாறு இல்லாமல் சிறியபுஷ்பத்திற்கு ஒரு தனியார் கம்பெனியில் உதவி மேனேஜராக பணியாற்றிக் கொண்டிருந்த எட்வின் கணவராக அமைந்தார்.  நல்ல வீடு வாசல் என்று இருந்தாலும் சிறியபுஷ்பமும் எட்வினும் தங்களுக்கென்று தனியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலவில்லை.  பெரிய குடும்பம் தம்பி தங்கைகள் என்று எட்வினுக்கு பொறுப்புகள் அதிகம். சிறிய புஷ்பமும் தான் படித்த படிப்புக்கு எப்படியாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல பள்ளிகளில் வேலை பார்த்தாள்.

மலையோதிகள் 

இயற்கை செதுக்கிய ஓதிமலை.  மனிதர்கள் இது வரைக்கும் தன்னை எதுவும் செய்யாமல் விட்டதற்கு நன்றி – என்பதைபோல – இளவெயிலில்  மின்னியது. அந்த மினுப்பில் “எத்தனை முறை நான் பகைகளைப் பார்த்தவன்”  “நான் கடவுள்- கடவுள் மோதலைப் பார்த்தவன் மட்டுமல்ல, கடவுள்-அசுரன் பகை மோதலையும் பார்த்தவன்” என்கின்ற நயதொனியில்,

சுழல்

எண்ணங்கள் பலவற்றைத் தொட்டுத் தொட்டுத் திரும்பிக்கொண்டிருந்தது. மனது எதையும் தொகுக்கும் நிலையிலில்லை. காலையில் லோகமாதேவியை சந்தித்ததை பற்றி நினைத்துக்கொண்டாள். எப்போதும் அவளிடமிருக்கும் அந்தக் கனிவான பார்வையும், உண்மையான அக்கறையும் ஆறுதலாக இருக்கிறது. எத்தனை பிரசவங்கள் பார்த்திருப்பாள். எத்தனை குழந்தைகளின் தரிசனத்தை, முதல் அழுகுரலை அவள் கேட்டிருப்பாள். அவளைவிட வேறு யாருக்குத் தெரியும் தனக்கென்று ஒரு குழந்தை இருக்கும் மேன்மையும், இல்லாமல் இருக்கும் வேதனையும்

முளைக்கா  விடைகள்

முல்லைக்கு எப்பொழுதும் அறைகளில் அடைந்து உறங்குவது பிடிக்காது. வராந்தாவில், முற்றத்தில், மாடியில் இப்படி.  இடி மின்னல் நாட்களில் உள்ளே இழுத்து வரவேண்டி இருக்கும். அன்றும் அப்படித்தான் வராந்தாவில் படுத்திருந்தாள். உடல் உள்ளே இருக்க இடதுகை பரப்பி வாசலில் உள்ளங்கையில் நிலா வெளிச்சம் வாங்கிக்கொண்டு படுத்திருந்தாள். உறங்கும் மகளை இப்படி உற்று பார்ப்பதே குற்ற உணர்ச்சியாக இருந்தது . வேறு வழி இல்லை. ஆனால் எதை கண்காணிப்பது என்று புரியவில்லை.

வேதாந்த் வேதாந்தம்

என் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து இங்கே குடியேறியவர்கள். இல்லத்தில் பூஜைக்கு ஒரு தனி அறை, கோவிலுக்கு வாரம் தவறாமல் போவது, முக்கியமான ஐந்தாறு பண்டிகைகள் கொண்டாடுவது என ஹிந்து மரபை ஓரளவு பின்பற்றுகிறவர்கள். எனக்கு ஹிந்து என்றால் என் பெற்றோர்களின் நண்பர்கள் மற்றும் என்னைப்போல சத்யா, (புன்னகையுடன்) வித்யா என்று ஹிந்துப்பெயர்கள்

விளிம்பின் வெளியில்

பத்து நாளைக்கு முன்னால ஒரு மாலுக்குப் போயிருந்தேன். அங்க ஒரு அழகான பொண்ணு வெண்ணிற கலர்ல ஃப்ராக் மாதிரி ஒரு ட்ரெஸ்ல அசத்தலா இருந்தா! யாருக்காகவோ காத்துக்கிட்டிருந்தா. உங்களுக்கு மர்லின்மன்ரோ படத்துல வந்த, செவென் இயர்ஸ் இட்ச்னு நினைக்கிறேன், பிரசித்தமான அந்த வெள்ளை  கலர் ஃப்ராக் காட்சி நினைவிருக்கா? அந்த மாதிரி இப்ப நடந்தா எப்பிடி இருக்கும்னு நினைச்சேன்!  அதே மாதிரி  அந்த டிரஸ் காத்துல பறக்கற மாதிரி  பறக்க ஆரம்பிச்சது. அவ தன்னோட டிரஸ்ஸை தன் கைகளால் கட்டுப்படுத்த முயன்றாள். முடியலை.

கலி 

ஆனால்  அதற்கு முக்கிய காரணம் வளர்மதிதான். இன்று அந்த அம்மாள் கலியாணம் ஆகி விட்டதா என்று கேட்ட போது சட்டென்று அவன் மனதில் தோன்றி மறைந்தது வளர்மதிதான். இப்போதும் அவன் நினைவில் மஞ்சளும் லேசான பழுப்பும் கலந்த அவள் உருவம் வருகிறது. அவளும் அவனும் நாயகமும் ஒரே ஸ்கூலில் படித்தார்கள். நாயகம் செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்தான். அவன் அப்பா சப்-ரிஜிஸ்திரார் ஆபீசில் இருந்தார். கே.ஆர். புரத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளை ரிஜிஸ்தர் பண்ணும் போது அவர் இடது கையால் வாங்கியது அவரது இரண்டடுக்கு வீட்டின் ஒவ்வொரு செங்கல் மீதும் படர்ந்திருந்தது

எலும்புச் சடங்கன்கள்

அவன் சதிஸ். காமாட்சி உயிரோடு இருந்திருந்தால், ’டேய், சதிஸ், பெரியவன் வீட்டுக்கு போனியா, எப்படிறான் இருக்கான்?, அவனுக்கு உடம்பும், கட்டினவளும் சரியில்லப்பா என்று சொல்லி அவனுக்கு காபிபோட்டு பெரியவன் வீட்டு சங்கதிகளைக் கேட்டிருப்பாள். சதிஸும், காபியோடு கலங்கியிருந்த பால் போல, சுவைத்துச் சொல்லியிருப்பான். சதிஸைப் பார்த்ததும், இங்கேயும் கோள் வைக்க வந்துவிட்டான் என்பதைப் போல், வண்டிக்கு ஒரு வெள்ளிக்கோள் வேகம் எடுக்கவைக்கப்பட்டது. 

நிழல்கள், நீட்சிகள்

அவர்கள் கூட யாரோ ஒருவரின் நிழலாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முற்றத்தில் படர்ந்த கொடி சம்பங்கியாக, மலைக் காட்டில் பூக்கும் பொன் கொன்றையாக, அடர்ந்த கிளைகளின் உள்ளே கூவும் குயில்களாக, அவர்களின் சிறப்புக்களை தங்கள் பெருமைகளாகக் கூவும் அதிகாரிகளின் ஆணவத் திமிரை சகித்துக் கொள்பவர்களாக….

கொடை

கண்ணன் தனது பாதத்தை தூக்கி அர்ஜூனன் மடியில் வைத்துக்கொண்டு “அர்ஜூனா! கர்ணன் கொடை வழங்கும்போது சொல் பொருள் அறிவு உணர்வு என்ற நான்கு படிகளில் நகர்ந்து நகர்ந்து ஏறுவதில்லை. உணர்வு என்ற நான்காவது   படியில் துள்ளி ஏறி அக்கணத்திலே சென்று நின்று வழங்குகின்றான். நீ சொல் பொருள் அறிவு என்று மூன்று படிகளை நகர்ந்து நகர்ந்து கடக்கிறாய். அதனால் அறிவு படியில் களைத்து நின்று விடுகின்றாய். சரியா? தவறா? அதிகமா? குறைவா? என்ற கேள்வியின் கொக்கியில் மாட்டி துடிக்கிறாய். பின் எப்படி நீ உணர்வுப்படியை தொடுவாய்

அடையாளம் 

கடைகளும் தெரு வியாபாரங்களுமாக ஜேஜேயென்றிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கவிருக்கும் நாட்டியாஞ்சலி விழாவுக்கென்று இப்போதே ஊர் விழாக் கோலம் பூண்டு கொள்ள ஆரம்பித்து விட்டது என்று சென்னையில் இருந்த போதே ஜெயராமன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. சுற்று வட்டாரத்திலிருந்து வந்து அப்பும் கடை கண்ணிகள் இல்லாத விழா ஏது?

ஒருத்தி மகளாய்ப் பிறந்து…

கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனையோ சிசுக்களைப் பிறந்த சில நாட்களுக்குள் பெற்ற தாய்களிடம் இருந்து பிரிக்கும் பாவத்தையும், அந்தப் பச்சிளம் குழந்தைகளை அன்புடன் ஆதரவுடன் வளமுடன் வளர்க்கும் குடும்பங்களில் சேர்த்த புண்ணியத்தையும் ஒருசேர செய்து வருகிறேன். இதுவரை நான் வழிசெய்த எந்த இடமாற்றமும் துயரத்தில் முடிந்தது இல்லை. இதற்கு முக்கிய காரணம், மனிதர்களின் தராதரத்தைக் கணிக்கும் எனது சாமர்த்தியம்

பிரதி

அன்றுதான் அல்கா முதன் முதலில் அந்த ஒளிரும்‌ கிருஷ்ணனைக் கண்டாள். அதென்ன அப்படி ஒரு அழகு ஒய்யாரம். இடையில் என்ன ஒரு ஒசிவு. அவன் காலருகே தலையை அள்ளிப்பிடித்தபடி ஒரு பித்தி. அவள்தான் தான் என்று நினைத்தாள் அல்கா. கண்ணைக் கொட்டி கொட்டி எத்தனை முயன்றாலும் நீர் திரண்டுகொண்டே இருந்தது. ரமாபாய் சொன்னாள் ‘பரவால்ல இந்த அழகுக்கு முன்னாடி அழாட்டிதான் தப்பு’. அந்த ஒரு மாலையில் அந்த அயல் நிலத்தை தனதாக உணர்ந்தாள் அல்கா.

என்ர ராசாவுக்கு

திருமணமாகி ஒன்பது மாதங்கள் கடந்திருக்கும். இருவரும் தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசிக்கும் எண்ணத்தில் திருச்சி வந்திறங்கி, பின்னர் சில திருத்தலங்களை தரிசித்துவிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலை வந்தடைந்தனர். ஆகம விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டிருந்த ராஜகோபுரங்களின் கம்பீரமும் அழகும் அவர்களை பிரமிக்கவைத்தது.

கரிக்குருவி நூறு

பிரகாசிக்கும் முகம், சுருக்கம் விழாத தோல், சரியாத ஸ்தனங்கள், தேயாத வளைவுகள் இவையெல்லாம்தான் அவன் கண்ணுக்கும் தெரிந்திருக்குமா… நான் கணவனோடு நிறைவாக வாழ்ந்து முதிர்ந்தவள் என்பது தெரியாதா? என் மனம் குறித்து ஏன் அவன் சிந்திக்கவில்லை? இதற்காக எத்தனைநாள் திட்டமிட்டு காத்திருந்தான்… தெரிந்தவனா? தெரியாதவனா? அறிமுகமானவனா? பேசிப் பழகியவனா? உறவா? எதிரியா? வழிப்போக்கனா…. விடையற்ற கேள்விகள் உதயமாகும் போதெல்லாம் எனது உடல் முழுவதும் சன்னி வந்தது போல் நடுங்குகிறது

இருள் வெளிச்சம்

அதிகாரத்தின் நெடிய கைகளில் இருந்து தப்பிக்க அது இயங்கும் நேரத்தில் நாம் இயங்காமல் இருக்க வேண்டும் என்பது என் அம்மாவின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும். வறியவர்களின் கைகள் இருளில் தான் ஓங்கியிருக்கும் வாய்ப்பிருக்கிறது. அது அதிகாரத்தை கூட நடுங்க வைக்கும். அம்மா செய்த ஒரு கொலையை நான் கண்டிருக்கிறேன். அது இருளில் ஆரம்பித்து இருளில் முடிந்ததால் பகலின் நியாய சட்டங்கள் அதற்கு பொருந்தாது என்ற வியாக்யானம்

தங்க நகரம்

அதை வெகு நேரம் மார்க் ஆராய்ந்து தன் குறிப்பேட்டில் ஏதோ எழுதினார். சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். ஜானை அருகில் அழைத்து அந்த கல்லை சுட்டி காட்டினார். பார்ப்பதற்கு அது ஒரு துணியை அடித்து துவைக்கும் துவைகல் போன்று தோன்றியது. அதன் மேற்பரப்பில் எல்லாம் பச்சை பாசி படர்ந்திருந்தது. ஆங்காங்கே சில மஞ்சள் மற்றும் சிவப்பு கறைகள் போல் திட்டுகள் தெரிந்தன.

மாதவிப் பொன் மயிலாள்

ஒரு ஆவர்த்தம் ஜதி சொல்லி பின்னழகைக் காட்டி அசையாமல் அவள் நிற்க உளி அந்த மென்மையான கற்களில் அவள் நின்ற நிலையை வடித்துக் கொண்டிருந்தது. பின்னர் ‘தர்ஷன் தேஜோ நாத்’ என்ற ‘ஸ்தாவன்’ (பதம்) எடுத்து அபிநயிக்க அதில் சித்தம், சித்தாலயம் என்ற நிலையில் அவள் ஆடாமல் அசையாமல் நின்றாள். அந்த நிலையில் உடலின் கீழ்ப் பகுதி ஒரு நேர்க்கோட்டில் நிற்க, இடை ஒசிந்து, மார்புகள் விம்மி, கரங்களில் தாமரைத் தண்டு கொண்டு வருடும் வீணை அமர்ந்திருக்க, காதுக் குழைகள் நிலைத்து நிற்க, நெற்றி விரிய, எடுத்துக் கட்டிய சிகையே மகுடமாக அவளே ஒரு சாத்யகி போல நின்றாள்

உதிர்தல்

பசுக்களெல்லாம் கொட்டடைந்தபின்னான மாலையில் சொன்ன நாள் நேரத்துக்கு ஊர் கூடியிருந்தது. பறவை திசை நோக்கி ஷிவலிங்கையா இந்த வருடம் மழை அதிகமிருக்குமென்றும், இன்னும் இரண்டு நாட்களில்  மழை துவங்குமென்றும் சொன்னார். ஊர் தானியங்களை நீர்ப்பதமேறாமல் பாதுகாக்கக் கிடங்குக்கு இன்னும் இரண்டு சுவர் கூடுதலாக எடுக்க வேண்டுமென்றார். அதுவரை அவ்வூர் கண்டிராத மழை அவ்வருடம் இருக்கப்போவதாகச் சென்னார். நிகழாதவை தன்னை நிகழ்த்திக்கொள்ளும் காலமது.

அசல்

வாழ்க்கை அதேபோல் நெருக்கடியில் செல்வதாகவே விதிக்கப்பட்டது என்பதாகவே நான் எடுத்துக்கொண்டேன். இப்போது செல்பவர்களும் அப்படித்தான் எண்ணக்கூடும். இரண்டு பெட்டிகளுக்கு பின் கூட்டம் குறைவாக இருக்கக்கூடும் என்பதையோ உடலும் மனமும் நெருக்கடியின்றி செல்லமுடியும் என்பதையோ அறியவேயில்லை. முதல் பெட்டியில் செல்வதால் எப்பயனும் இல்லையென ஒரேயடியாக மறுத்துவிடமுடியாது. சாலையிலிருந்து வந்து ஏறுவதற்கு அதுதான் முதன்மையானது.

ஓவியம் என்பது யாதெனில்…

வெண்ணிற தாடி, தொப்பிகள் மறைக்காத நரை மயிர், சுருக்கங்களும் பள்ளங்களும் நிறைந்த சுமுகமான முகங்கள். அவற்றில் என்ன தத்ரூபமான வெளிப்பாடுகள்! காலமெல்லாம் தோழமை கொண்டாடிய இருவர். பரஸ்பர அன்பு, நம்பிக்கை, ஒருவரின் ரகசியங்களையும் குறைபாடுகளையும் மற்றவர் அறிந்த அன்னியோன்யம். உரையாடலில் ஒரு இடைவெளி. அந்தக் கணம் சித்திரத்தில் உறைந்திருக்கிறது. ஒருவர் ஏதோ சொல்ல நினைக்கிறார். அதற்கு சரியான வார்த்தைகளைத் தேடுகிறார்.

வரம்

நல்லதுதான், ஒரே முதலீட்டை நம்பி இருக்க முடியாது, இன்றைக்கு என்ன ஆயிற்று என்று சொல்லுங்கள், தேவைப்பட்டால், இன்னொன்று பார்க்கலாம், என்னுடைய நீண்ட கால நண்பன் தான்“ என்று இன்னொரு பெயரை உதிர்த்தார். நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால் எனக்கு பழக்கம் இல்லை, எழுதிக் கொண்டேன். ஒரு வேளை அவருக்கு அதில் ஏதாவது கமிஷன் கிடைக்குமோ என்னவோ என்ற ஒரு சந்தேகம் இருந்தது.

சுமதிக்கு அவள் பெயரை பிடிக்காது

பாலசுப்ரமணியன் ரயில்வே ஊழியர். திருமணம் சொந்தத்திலேயே அமைந்தது. பின்னே சும்மாவா, பட்டமங்கலத்தான் பரம்பரையில் முதல் அரசு ஊழியன். முறை உள்ள சொந்தங்கள் எல்லாம் நீ நான் என்று போட்டி போட, பாலசுப்ரமணியன் தெரிவு செய்தது தூரத்து உறவுக்கார பெண்ணான தங்கத்தை. வந்த வரன்களில் தங்கம் படித்தவள். பட்டம் பெறவில்லை என்றாலும், பனிரெண்டு வரையில் படித்தவள். கிளை நூலகத்தின் உறுப்பினள்.

களத்திர ஸ்தானம்

காலைலேர்ந்து ஒரு பொண்ணு வீட்டுக்காரன் வரல பாத்துக்கோ. தொண்ணூறு பையன் ஜாதகம் வந்தா பத்து பொண்ணு ஜாதகம் வருது. என்னத்தச் சொல்ல போ.. ஒரலும்  ஒலக்கையுமா செய்யச் சொன்னா வெறும் ஒலக்கையாச் செஞ்சு போட்டுருக்கு, கிறுக்குக் கூதி புள்ள..ஒலக்க வேணும்னா சொல்லு…என்று கண்ணடித்த மீனாச்சியைப் பார்த்து ‘அப்பிடி ஏதும் பிடிச்சிட்டயா என்ன?’ என்று கேட்க நினைத்து கேட்காமல் சிரிப்பதைத் தவிர ஏதும் செய்ய முடியவில்லை

கதவு

” பஞ்சாயத்துல தீர்வை பாக்கி கட்டலைன்னு, நேத்து சாய்ந்தரம் கதவ கழட்டி கொண்டு போய்ட்டாங்க. விடிஞ்சா, என் கடைசி பொண்ணு தங்கத்தை, பொண்ணு பார்த்து பரிசம் போட வராங்க. அடுத்த முகூர்த்த தேதியில கல்யாணம் முடிவாயிரும்.இப்ப இப்புடி ஒரு சூழ்நிலை. எனக்கு உதவி பண்ணு கந்தா” என்று பொன்னுசாமி கண்ணீர் விட்டு கலங்கி நின்றபடி கேட்டார்.

சண்டிகா

என் கட்சிக்காரர் தான் சுமக்கும் மூன்றாவது கருவை சட்டப்படி அழிக்க நினைக்கிறார். அவர் கணவரின் முழு சம்மதமும் இதற்கு இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்து ஒராண்டுதான் ஆகிறது. உடல் உபாதைகள், மன நோய்க்கான சிகிச்சைகள் என்று அவர் தெம்பற்று இருக்கிறார்

தில்லையாடி வள்ளியம்மையின் சொந்தக்காரர்

நானும் இங்க இருந்தப்ப சாதி எல்லாம் பாத்த குடும்பத்துக்காரந்தாங்க. அது பாருங்க தில்லயாடிக்குள்ளே அங்காளி பங்காளிக்குள்ளேயே தகராறுதான். ஆனால் நூறு மைல் தாண்டி திருச்சிக்கு போனா நம்ம சாதின்னு யார் கிட்டயாவது போய் ஒட்டிக்கிடுறோம். மெட்ராசுக்கு வந்தா தஞ்சாவூர் திருச்சி ஜில்லாகாரங்க சிநேகிதம் பிடிச்சுக்கிடறோம். டெல்லிக்கு போனா? தமிள் பேசறவன் எல்லாம் சிநேகிதன்

நன்றே செய்வாய், பிழை செய்வாய்!

“எல்லாமே ரெண்டு வரி, மூணுவரி கவிதைதான். இப்பம் எனக்கு ஒரு யோசனை பாத்துக்கிடுங்கோ. நம்ம ஓட்டல்லே டபுள் ரூம், சூட் எல்லாம் சேத்து எழுவத்திரண்டு ரூம் இருக்கு… எல்லாமே ஏசிதான். எல்லா ரூம்லேயும் நாலு செவுருலேயும் நம்ம கவிதைகளைப் பெரிய எழுத்திலே, ஓவியரைக் கொண்டு எழுதி பிரேம் போட்டு மாட்டுனா என்னாண்ணு

கடன்காரன்

எங்கிட்ட ஐம்பதாயிரம், ரெஜினாக்கிட்ட ஐம்பதாயிரம், அப்புறம் எங்க க்ளாஸ்மேட்ஸ் சதீஷ்கிட்ட அம்பதாயிரம், மகேஷ்கிட்ட எழுபதாயிரம்னு நிறைய பேர்ட்ட இப்டி வாங்கியிருக்காண்டா, இன்னும் யார் யார்லாம் இருக்காங்கன்னு தெரியல! சத்தியமா உன்னோட பேரு என் நெனப்புக்கே வரலடா, வந்திருந்தா உன்னையாவது காப்பாத்தியிருக்கலாம்..’ என்று கவின் சொல்லிக்கொண்டே போக என்னால் என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தேன்.

வாலு போச்சி கத்தி வந்தது

சம்பந்தி அனுப்பிய லிஸ்ட்டை எடுத்துக்கொடுத்து  சாமான்கள் அத்தனையும் வாங்கிக்கொண்டான். ரூபாய் மூவாயிரத்து முந்நூற்றி முப்பத்து மூன்று  . ரூபாயை இரண்டு முறை எண்ணினான். கடைக்காரனிடம் கொடுத்தான்.  அவன் சொல்வதுதான் கணக்கு.  எந்த பொட்டலத்தில் என்ன வைத்துக்கட்டினானோ யார் கண்டார்கள். நேராக வாயுவேகா கொரியர் காரனிடம் போய் நின்றான். 

தீர்த்தம்

 எல்லா திசைகளிலும் தேடி அலைந்தவளுக்கு இன்னும் கீழத்தெரு மட்டும் பாக்கியிருந்தது.நேற்று தேடிவிட்டு வரும் வழியில் வாரியூர் வெற்றிலைக் குறிகாரரை பார்த்துவிட்டு வந்தாள்.’ஒன்னோட மாடு இந்நேரம் வண்டியேத்தி அறுப்புக் கடைக்கு போயிருக்கும்’ என மை தடவி கை விரித்த குறிகாரரின் வார்த்தைகளைக் கேட்டு மயங்கி விழுந்தவளை தண்ணீர் தெளித்து தெளிய வைத்து அனுப்பி வைத்திருந்தார்கள்.கல்யாணிக்கு இரண்டு நாட்களாக சரியான உறக்கமில்லை

சரண் நாங்களே

உண்மைதான். எப்போதும் நாங்கள் அடிக்கிற மாதிரி அடிப்போம், அவன் அழுகிற மாதிரி அழுவான். எந்த நெறிமீறலுக்கும் இதே சூத்திரம்தான். எப்போதும் எங்கள் வற்புறுத்தலுக்காகத்தான் நெறி தவறுவது போல நடிப்பான். அப்படி ஒரு பிம்பத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்வது சுமைதான். தந்தையரிடம் பிள்ளைகளால் வெளிப்படையாக பேசவே முடிவதில்லை.

படையல்

வயக்காடு போதைடா.. சேத்துல கால் வைக்காத வரைக்கும் தான் தயக்கமெல்லாம்.. காட்டுல இறங்கி ரெண்டொரு நாள் வேல செய்ய ஆரம்பிச்சிட்டா அப்புறம் இந்த ருசியே பழகிடும். லாபமோ நட்டமோ செடி பயிரு மரம் மட்டை காக்கா குருவி மாடுனு இதுங்ககூடவே வாழ்ந்துடலாம்னு தோணும். அதான் அவனுங்கள காட்டுல அண்டவே விடுறது இல்ல. என்ன படிச்சாலும் பெரிய பதவிக்கு போனாலும் இந்த சேறு படிஞ்ச கோவணம் தானே எல்லாத்துக்கும் முதலு..

நினைவில் நின்றவை

மஞ்சுவை வெளியே கூட்டிச் சென்ற நந்தன், அங்கு நின்ற கார்களில் ஒன்றை மஞ்சு வீட்டிற்குப் போவதற்காக ஒழுங்கு செய்தான். காருக்குச் சமீபமாகக் குந்தியிருந்த ஒருவர் சாப்பாடு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். ஒன்றுகூடலுக்கு வந்திருந்த அவரை மஞ்சுவால் அடையாளம் காண முடியவில்லை. ஒத்துவராத சாப்பாட்டை உடல் உதறித் தள்ளுகின்றது. ஒவ்வாதவற்றை உடம்பு மாத்திரமா வெளியேற்றும், மனமும் தான் துரத்தும். மஞ்சு காரின் பின்புறம் ஏறிக் கொண்டாள்.

என் குழந்தைகளின் புகைப்படங்கள்

‘‘எங்கேதான் இருப்பாங்க அவங்க? ஏன் இவ்வளவு நேரம் ஆகுது? வெளியே போயிட்டா போதும், எப்ப திரும்பி வரணுங்கிறதே அவருக்குத் தெரியாது’ என்று கணவரை மனதுக்குள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் அவள்.  எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி கதவருகே உட்கார்ந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று தன் விழிகளால் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.