கல்லை மலராக்கும் கவிதைகள்

இதற்கு இணையாக வேறு வகையான சித்தரிப்புகளைக் கொண்ட கவிதைகளும் இன்னொரு பக்கத்தில் ஏராளமாக எழுதப்படுகின்றன. தன்னை ஏமாற்றப்பட்டவன் என்றும் வஞ்சிக்கப்பட்டவன் என்றும் ஒருவித மிகையுணர்ச்சியோடு முன்வைத்துக்கொள்கின்றன அக்கவிதைகள். கசப்பும் அவநம்பிக்கையும் மிதக்கும் நீர்நிலையென வாழ்க்கையைக் கருதவைக்கும் வரிகளைக் கொண்டவையாக அக்கவிதைகள் இருக்கின்றன. உறவுகளாலும் உலக அமைப்பாலும் குரூரமாகச் சிதைக்கப்பட்டவர்களின் குறிப்புகளைப்போல அவை தோற்றமளிக்கின்றன

தெய்வநல்லூர் கதைகள் 14

This entry is part 14 of 18 in the series தெய்வநல்லூர் கதைகள்

அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளியான நியூ ஏல் இங்லீஷ் ஸ்கூல் நடத்திய ஆண்டுவிழா. எல் கே ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை – எல் கே ஜி யை முதன்முதலில் தெய்வநல்லூரில் அறிமுகம் செய்த நர்சரி பள்ளி நியூ ஏல் இங்க்லீஷ் ஸ்கூல் என அறிக.  தெய்வநல்லூரே வியக்கும்வண்ணம் ரதவீதியில் பந்தல்  மேடை போட்டு     புளியங்குடியிலிருந்து மைக் செட்டும், சங்கரன்கோவிலில் இருந்து டிஸ்கோ லைட்டுகளும்( போட்டோ எடுக்கும்போது அடிக்கும் ஃப்ளாஷ் போல மேடையில் அடிக்கும் லைட்டும்

புருஷ சூக்தத்திற்காக உறுதியாய் நிற்பதைப் பற்றி! –  முதல் பகுதி

இப்புதினத்தின் முன்னுரையிலும் கதையின் பல பகுதிகளிலும், ஏராளமான  குறீப்பிடுகள் தூவப்பட்டுள்ளன. இவை  கதையுடனும்  அக்காலத்திய இந்து சமுதாயத்துடனும்  குறிப்பாக சாதியுடனும் சம்பந்தமுள்ளதாக அமைந்துள்ளது.  உண்மையாகவே, சாமானிய இந்துக்கள்  எதிர்கொள்ளக்கூடிய  விவரங்களின் சிறந்த சுருக்கமாக அமைந்துள்ளது.

மிளகு  அத்தியாயம் அறுபத்துமூன்று

கவுட்டின்ஹோ பிரபு பக்கத்தில் அப்போது சாயந்திரம் நடை பயின்று அரட்டையடித்துப் போக வந்திருந்த விக்ஞான உபாத்தியாயர் மட்டும் இருந்ததால் அவரை எளிதாக வென்று தன் பக்கமாக்கி விட்டார் கவுட்டின்ஹோ பிரபு. உபாத்தியாயரே, விக்டோரியா ஆசைப்படி நான் சுபமங்களத்தம்மாளை வீட்டு நிர்வாகி ஆக்கி விடுகிறேன். இப்படி புத்திசாலித்தனமாக அவர் உரைக்க, விக்டோரியா, ”மறுபடி சொல்லும், கேட்கலே” என்று திரும்பத் திரும்ப முணுமுணுத்தபடி சுவாசம் நிறுத்தினாள். வீரையனும் தோட்ட வேலை பார்க்கும்போது பாம்பு தீண்டிப் பரலோகம் போனான் பின்னர் ஒருநாளில்.

கதைகளை ரசிப்பது எப்படி?

This entry is part 50 of 72 in the series நூறு நூல்கள்

புதிய வாசகனுக்கு புத்தகத்தின் மொழி என்ன, அதை எவ்வாறு வாசித்தால் உதவியாக இருக்கும், கதையின் உத்தேசம் என்ன, கதை ஏதேனும்  தத்துவ பின்புலத்தில் உலக பார்வை உள்ளவரால் எழுதப்பட்டதா, அது சொல்லும் கதையில் உள்ள புதுமை என்ன என்றெல்லாம் புதிதாக வாசிக்க இருப்பவருக்கு ஒரு உரையாடலை உருவாக்கி அளிக்க இடம் உள்ளது. 

வேதாந்த் வேதாந்தம்

என் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து இங்கே குடியேறியவர்கள். இல்லத்தில் பூஜைக்கு ஒரு தனி அறை, கோவிலுக்கு வாரம் தவறாமல் போவது, முக்கியமான ஐந்தாறு பண்டிகைகள் கொண்டாடுவது என ஹிந்து மரபை ஓரளவு பின்பற்றுகிறவர்கள். எனக்கு ஹிந்து என்றால் என் பெற்றோர்களின் நண்பர்கள் மற்றும் என்னைப்போல சத்யா, (புன்னகையுடன்) வித்யா என்று ஹிந்துப்பெயர்கள்

புல்வெளியில்

பட்டுடைகளுடன் ஆரம்பம்; வானத்துக்கு எதிராக
எண்ணிக்கைகள் மற்றும் சிறுகுடைகள்: வெளியில்
விமானப்படையை ஒத்தக் காலி வாகனங்களின் அணிவகுப்பு, வெப்பம்,
மற்றும் குப்பைக் கூளமாகப் புல்வெளி: அதன்பின் அந்த நீண்ட ஆரவாரம்
அமைதியற்று அலைந்து, மெல்ல மெல்ல அடங்க –
தெருவெங்கும் பத்திரிகையாளர்கள்

ரேபிஸ்

லூயி பாஸ்டர் வெறிநாய் கடித்த சமயத்துக்கும் ரேபிஸ் நோய் உருவாகும் சமயத்துக்கும் இடைப்பட்ட தேக்க நிலையை  சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்த தடுப்பூசியை வெற்றிகரமாக சிகிச்சைக்கு பயன்படுத்தினார். ரேபிஸ் தடுப்பூசி லூயிபாஸ்டர் கண்டுபிடித்த நான்காவது தடுப்பூசி முன்பே அவர் Pig Erysipelas என்னும் பறவை/பன்றிகாய்ச்சலுக்கும், ஆந்தராக்ஸ் மற்றும் பறவை காலராவுக்கும் தடுப்பு மருந்துகளை கண்டறிந்திருந்தார்.

விளிம்பின் வெளியில்

பத்து நாளைக்கு முன்னால ஒரு மாலுக்குப் போயிருந்தேன். அங்க ஒரு அழகான பொண்ணு வெண்ணிற கலர்ல ஃப்ராக் மாதிரி ஒரு ட்ரெஸ்ல அசத்தலா இருந்தா! யாருக்காகவோ காத்துக்கிட்டிருந்தா. உங்களுக்கு மர்லின்மன்ரோ படத்துல வந்த, செவென் இயர்ஸ் இட்ச்னு நினைக்கிறேன், பிரசித்தமான அந்த வெள்ளை  கலர் ஃப்ராக் காட்சி நினைவிருக்கா? அந்த மாதிரி இப்ப நடந்தா எப்பிடி இருக்கும்னு நினைச்சேன்!  அதே மாதிரி  அந்த டிரஸ் காத்துல பறக்கற மாதிரி  பறக்க ஆரம்பிச்சது. அவ தன்னோட டிரஸ்ஸை தன் கைகளால் கட்டுப்படுத்த முயன்றாள். முடியலை.

வெளியின் துகள்கள்

அடிப்படை நடைமுறைகள் என்பது தருணங்களின் தொடர்ச்சியான ஒழுக்காக இருப்பதில்லை. வெளியினுடைய துகள்களின் நுண்-அளவு நிலையில், இயற்கையின் நடனம் என்பது , இசைக்குழு நடத்துனர் கோலின் ஒரு தாளத்திற்கு ஏற்ப ஆடுவது அல்ல. ஒவ்வொரு நடைமுறையும் தன்னுடைய தாளத்தில்,மற்றதுடன் தொடர்பின்றி ஆடுகின்றன

எடின்புரஃஹ் பயணக்குறிப்புகள்

This entry is part 3 of 9 in the series பயணங்கள்- லண்டன்

அழகான சாலைகளின் ஓரம் மஞ்சள் Daffodil பூக்கள் வசீகரிக்க, இலைகளுடன் மரங்கள் இருந்திருந்தால் அந்த இடமே சொர்க்கபுரி தான்! கதிரவன் மறைய, போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது வானம். அதிசயமாக ஓரிரு வண்டிகள் கடந்து சென்றது. மலைகளில் பனி இறங்கி மரங்களை அணைத்து நின்றது அழகு! குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து விட்டோம்

கலி 

ஆனால்  அதற்கு முக்கிய காரணம் வளர்மதிதான். இன்று அந்த அம்மாள் கலியாணம் ஆகி விட்டதா என்று கேட்ட போது சட்டென்று அவன் மனதில் தோன்றி மறைந்தது வளர்மதிதான். இப்போதும் அவன் நினைவில் மஞ்சளும் லேசான பழுப்பும் கலந்த அவள் உருவம் வருகிறது. அவளும் அவனும் நாயகமும் ஒரே ஸ்கூலில் படித்தார்கள். நாயகம் செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்தான். அவன் அப்பா சப்-ரிஜிஸ்திரார் ஆபீசில் இருந்தார். கே.ஆர். புரத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளை ரிஜிஸ்தர் பண்ணும் போது அவர் இடது கையால் வாங்கியது அவரது இரண்டடுக்கு வீட்டின் ஒவ்வொரு செங்கல் மீதும் படர்ந்திருந்தது

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்

This entry is part 53 of 72 in the series நூறு நூல்கள்

எழுத்தாளர் காலத்துகள் தனது அண்மைய சிறுகதை தொகுப்புகள் இரண்டை அனுப்பி வைத்திருக்கிறார், அவற்றில் ஒன்றன் பெயர், _முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்._ “சிசிபஸ் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நினைத்தாக வேண்டும்,” என்று ஆல்பர் காம்யூ எழுதியதாக நினைக்கிறேன் (அவர் அப்படி எழுதியிருக்க வாய்ப்பில்லை – பிரஞ்சு மொழியில் “முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்”

நிலவினும் நெடிது!

மனைவியின் வீட்டுக்குக் கணவன் இரவில் மட்டும் வந்து செல்வது வழக்கமாக இருந்த காலத்தில் ஒவ்வொரு இரவும் கணவன் தம் வீட்டுக்கு வருவாரா அல்லது வேறொரு மனைவியின் வீட்டுக்குச் சென்றுவிடுவாரா எனப் பெண்கள் தவித்திருப்பார்கள். கணவன் வரும்போது கொண்டுவரும் பரிசுப்பொருட்கள் அப்பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருப்பவை.

தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே

பல்லாயிரம் ஆண்டுகளாக, உறவினர்களுடனும், விரிந்து பரந்த குடும்பத்துடனும், இணைந்து பணி செய்பவர்களுடனும், நண்பர்களுடனும், பயணத்தில் இருக்கும் வியாபாரிகளுடனும் மனிதர்கள் ஒன்றாக ஒரே படுக்கையில் உறங்கியிருக்கிறார்கள். பயணத்தின் போது முன்பின் அறியாதவர்கள் தன்னருகில் படுத்திருப்பதை அனுமதித்திருக்கிறார்கள். ஆனால், அதிர்ஷ்டம் காலை வாரியதென்றால், கூட படுத்திருக்கும் நபர், குறட்டை விடுபவராகவோ, உடல் வாசத்தைப் பரப்பி சங்கடத்தில் ஆழ்த்துபவராகவோ, பிறந்த மேனியில் தூங்குபவராகவோ அமையலாம்!

ஐந்து கவிதைகள் – கு.அழகர்சாமி

தளைகளெல்லாம்
ஒழுங்காய் அழகாயிருக்கும்
அபாயம் அறிந்தேன்.
தளைகளை உடைத்து
வெளிவந்து விடப் பார்த்தேன்.
அப்போது தான் தெரிந்தது-
எத்தனையோ சதுரங்கள்
எத்தனையோ வட்டங்கள்
எத்தனையோ செவ்வகங்கள்
என்னைக் கட்டம் போடக்
காத்திருப்பது.

நீயும், நானுமா?

வழக்கின் முதன்மையான கேள்வி, தங்கள் இதழில் வெளியாகும் கட்டுரைகளையும், செய்திகளையும், தனது செயற்கை நுண்ணறிவின் ‘உரையாடலுக்காக’, அதன் கட்டமைப்பான, பெரும் மொழி மாதிரிகளுக்கான (Large Language Models) பயிற்சிக்காக எடுத்தாளும் ஓபன் ஏஐ, உரிமை மீறல் செய்துள்ளது; எங்கிருந்து பெறப்பட்டது என்ற செய்தியையும் அது வெளியிடுவதில்லை.