கடன்காரன்

எங்கிட்ட ஐம்பதாயிரம், ரெஜினாக்கிட்ட ஐம்பதாயிரம், அப்புறம் எங்க க்ளாஸ்மேட்ஸ் சதீஷ்கிட்ட அம்பதாயிரம், மகேஷ்கிட்ட எழுபதாயிரம்னு நிறைய பேர்ட்ட இப்டி வாங்கியிருக்காண்டா, இன்னும் யார் யார்லாம் இருக்காங்கன்னு தெரியல! சத்தியமா உன்னோட பேரு என் நெனப்புக்கே வரலடா, வந்திருந்தா உன்னையாவது காப்பாத்தியிருக்கலாம்..’ என்று கவின் சொல்லிக்கொண்டே போக என்னால் என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தேன்.