நடு வீட்டில் அப்பா புன்னகையோடு படுத்திருந்தார். வெண்ணிற மேல்சட்டை. நீல நிற கால்சட்டை. இரண்டும் அவரது முந்தய வருட பிறந்த நாளுக்கு அம்மா வாங்கிப் பரிசளித்தது. ஆனால் அது காமாட்சி தேர்ந்தெடுத்தது. அவரது தொப்பை மேல் இணைந்திருந்தபடி இருந்த அவரது விரல்களைத் தொட்டாள். சில்லென்று இருந்தது. அப்பாவுக்கு சூடாக இருப்பது தான் பிடிக்கும். சின்ன மழைக்காலக் குளிர் கூட அவருக்கு ஆகாது. தன் இரு கைகளைக் கொண்டு தேய்த்து சூடு கொடுக்க முயன்றாள்.
Author: மலர்விழி மணியம்
வெற்றிடம்
நீ இல்லாம பொண்ண எப்புடி வளர்த்துருவான்னு பாத்துரலாம் என்று சொன்ன அவனது அக்கா, அவளது குடும்பத்தோடு சந்தோஷமாகத்தானே இருக்கிறாள். இவங்க பேச்சக் கேட்டு நான் தான் தனியா நிக்குறேன். வெறும் ஏழு வருச நினைவுகளோட. நிலா தொட்டு வெளையாடின பொம்மைகளோட.. அந்தரத்துல.. இந்தப் பத்தாவது மாடியில..” என்று எண்ணிக்கொண்டே அடுத்த மாத்திரையை விழுங்கினான்.
இரண்டொழிந்தது
எது எதையோ பொருத்தம் பார்த்த எழிலின் மனம் எப்படி சாதியை மறந்தது எனத் தெரியவில்லையே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தான் இருப்பது கொல்லப் பக்கம் என்ற தெளிவு வரவே, துளிர் விட்ட மொட்டு காற்றின் விசையால் மண்ணில் விழுந்தது போல் ஆனாள் எழில். காப்பியை வாங்காமலேயே கோதையின் வீட்டை விட்டு புத்தகப் பையோடு வெளியேறினாள்
கொட்பின்றி ஒல்லுதல் நட்பாம்
கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு பார்க்கப் போகும் கல்பனாவின் முகத்தையும் உருவத்தையும் தன் நினைவில் நிறுத்த முயர்ச்சித்தாள். தன் வகுப்பறையிலேயே உயரமான, தடிமன் ஆன பெண் கல்பனா. மிகவும் கலகலப்பானவள். கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள் ஆதலால் எப்போதும் நிறைய தோழிகளுடனேயே காணப்படுவாள். அவளுக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும். பேசிக்கொண்டே இருப்பாள், ஆதலால் கரும்பலகையில், பேசியோர் பட்டியலில் கல்பனாவின் பெயரே முதலிடம் பிடித்திருக்கும்.
