பிரகாசிக்கும் முகம், சுருக்கம் விழாத தோல், சரியாத ஸ்தனங்கள், தேயாத வளைவுகள் இவையெல்லாம்தான் அவன் கண்ணுக்கும் தெரிந்திருக்குமா… நான் கணவனோடு நிறைவாக வாழ்ந்து முதிர்ந்தவள் என்பது தெரியாதா? என் மனம் குறித்து ஏன் அவன் சிந்திக்கவில்லை? இதற்காக எத்தனைநாள் திட்டமிட்டு காத்திருந்தான்… தெரிந்தவனா? தெரியாதவனா? அறிமுகமானவனா? பேசிப் பழகியவனா? உறவா? எதிரியா? வழிப்போக்கனா…. விடையற்ற கேள்விகள் உதயமாகும் போதெல்லாம் எனது உடல் முழுவதும் சன்னி வந்தது போல் நடுங்குகிறது
