அடையாளம் 

கடைகளும் தெரு வியாபாரங்களுமாக ஜேஜேயென்றிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கவிருக்கும் நாட்டியாஞ்சலி விழாவுக்கென்று இப்போதே ஊர் விழாக் கோலம் பூண்டு கொள்ள ஆரம்பித்து விட்டது என்று சென்னையில் இருந்த போதே ஜெயராமன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. சுற்று வட்டாரத்திலிருந்து வந்து அப்பும் கடை கண்ணிகள் இல்லாத விழா ஏது?