அன்றுதான் அல்கா முதன் முதலில் அந்த ஒளிரும் கிருஷ்ணனைக் கண்டாள். அதென்ன அப்படி ஒரு அழகு ஒய்யாரம். இடையில் என்ன ஒரு ஒசிவு. அவன் காலருகே தலையை அள்ளிப்பிடித்தபடி ஒரு பித்தி. அவள்தான் தான் என்று நினைத்தாள் அல்கா. கண்ணைக் கொட்டி கொட்டி எத்தனை முயன்றாலும் நீர் திரண்டுகொண்டே இருந்தது. ரமாபாய் சொன்னாள் ‘பரவால்ல இந்த அழகுக்கு முன்னாடி அழாட்டிதான் தப்பு’. அந்த ஒரு மாலையில் அந்த அயல் நிலத்தை தனதாக உணர்ந்தாள் அல்கா.
