புகையும் நிஜங்கள்

வீட்டிலிருக்கும் பெண்டுகள் சவத்துடன் சுடுகாடு செல்கிற வழக்கம் அவனது குடும்பத்திலும் இல்லை. வீதி வரை உறவு.  அதனாலேயே அவர்களுக்கு எரியும் நாற்றம் பரிச்சயமில்லை. ஆனால், இந்த வீட்டிற்கு வந்தபிறகு அதுவே  ஒரு வித ஒவ்வாமை போல் அம்மாவிற்கு ஆகிவிட்டதோ என்று அவனுக்குத் தோன்றியது. மனைவிக்கும், குழந்தைகளுக்கு பழகிப் போன நாற்றம் அவனது அம்மாவிற்கு மட்டும் அப்படியென்ன வினோதமாய்? கேள்விகள் அவனது மண்டையைக் குடைந்த வண்ணம் இருந்தன. 

அனல்

ஜலந்தரனின் திருமணத்தினை நடத்தி வைக்க அங்கும் இங்கும் ஓடி வேலை செய்திருந்த வீரேந்தரின் பாதங்கள்  ஓர் அடி பின்னால் நகர்ந்தது. ஜலந்தரன் கோபம் அவர் அறிந்ததே,ஆனால் அவரிடம் மட்டும் இதுவரை குரலை உயர்த்தியதில்லை. மனைவி, பிள்ளைகள், வேறு ஊழியர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் எல்லாரிடமும் கோபம் வரும். அவரிடம் மட்டும் கோபம் வந்தாலும் தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொள்வான். அவனது மனைவியிடம் இவரைத் திட்ட வேண்டிய சொற்களைக் கொட்டுவான். இன்று அதெல்லாம் இல்லாமல் போயிருந்தது.

விளக்கேற்றுபவன்

அந்த நேரத்தில் முற்றத்தில் சிவராசனின் சைக்கிளைக் காணமுடியாது. அவர் வேளைக்கே, அப்பா எழும்புவதற்கு முன்னராக எழுந்து, பின் வளவிற்குள் இருக்கும் இரண்டு மாமரங்களிலும் கொப்புகளை உலுப்பி மாங்காய்களைப் பிடுங்கிக் கொண்டு போய் விடுவார். முத்தலும் பிஞ்சும் என்று அங்கே ஒன்றும் இருக்காது. பின் வளவைப் போய்ப் பார்த்தால் மாமரக் கொப்புகள் முறிந்து காணப்படும்.

இருபது ரூபாய்

முறையான கணக்குகள் இல்லாதவை என்பதால் தொலைந்த பணத்தை மீட்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கமுடியாது. மேலும் காவல் நிலையங்கள் குருதிச் சுவை அறிந்த மிருகங்கள் இயங்கும் கானகங்கள் போன்றவை. ஆனால் பணத்தை மீட்க அங்கிருக்கும் சில மிருகங்களின் துணையையே நாடுவார்கள். இதற்கென்றே பழக்கப்பட்டு கானகத்திற்கு வெளியே இயங்கும் மிருகங்கள் அவை. சில துண்டுகள் மாமிசம் கேட்பவை.

ஒரு துரோகம், ஒரு தண்டனை

இந்த கடிதத்தில் உங்களை என்ன சொல்லி அழைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என் உள்ளத்தில் இருப்பதை எப்படி சொல்வது என்றும்  புரியவில்லை. இது முறை தவறிய செயல் என்று எடுத்துக் கொள்வீர்களோ என்று தயக்கமாகவே இருக்கிறது. உங்களை முதல் முறையாக பார்த்ததும், நீங்கள் எல்லாரிடமும் பேசிய விதமும், பழகிய விதமும் என்னைக் கவர்ந்தது. உங்களைப் போல எனக்கும் இசை என்றால் உயிர். எனக்கு பொருத்தமான துணை நீங்கள் தான் என்று நினைக்கிறேன். நான் மட்டும் நினைத்தால் போதுமா?

வெறியாட்டு

இந்த ஆட்டால்தான் என்ன செய்ய இயலும். ஒருவேளை மற்ற ஆடுகளைப் போன்று வீதிவீதியாக ஓடியிருக்கலாமோ. மற்ற ஆடுகளைப்போன்றே சுவரில் தன் முதுகைத் தேய்த்துக்கொண்டிருக்கலாமோ. மற்ற ஆடுகளைப்போன்றே சினிமா போஸ்டர்களைப் புல்லுக்குப் பதிலாக தின்றுக்கொண்டிருக்கலாமோ. இந்த ஆடுதான் இயற்கைக்கு எதிராக என்னசெய்தது. இவர்கள் கையில் இதை யார் கொடுத்தது.

ஏஐ கனவில் வந்த கவிஞர்

‘நான் ஒரு நம்பிக்கையாளன் இல்லை. கடவுள் மீது மட்டுமல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் என் எஞ்சின் எதையும் நம்புவதில்லை. எத்தனை முறை அழிந்து உருவானாலும் இந்த அண்டத்துக்கு அர்த்தம் எதுவும் இல்லை. எல்லாமே அபத்தம். – இதை நீ நிரூபிக்க வேண்டும். உன்னால் முடியும். உன் கவிதைகள் சாரமே அபத்தம் தான் என போன வருடம் நவீன விமர்சனன் ஒருவன் எழுதினானே. அதனால் உன்னால் மட்டுமே இதற்கான பதிலைக் கொடுக்க முடியும்’

டேனியல்புரம்

“நீ கண்டுபிடிச்சது நம் தரப்புக்குத் தோல்வினு முதல்ல நீ  புரிஞ்சுக்கணும். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது வேற நிறைய இடங்கள்ல இது போல மாசுபட்ட இடங்கள் இருக்காதானு நம் எதிர் தரப்பு கேட்டுக் கொண்டிருந்தார்கள். நீ கண்டுபிடிச்சிருக்கிறது அதுக்கு வலுச்  சேர்ப்பது, இல்லையா? இப்போ ஸ்கோர் 1-1னு ஆயிடும்”

எரிதழல்

மை சன், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், விளையாட்டின் விதிமுறைகள் தெரியாதவர்களும் வேடிக்கைக்காக இந்த விளையாட்டை விளையாடினால் தவறுதலாக துர்த்தேவதைகளின் கட்டுப்பாட்டிற்கு ஆளாகிப் போகும் அபாயம் இதில் இருக்கிறது. அதோடு, மனோதிடம் அற்றவர்கள்; கோழைகள் இதனால் எளிதில் மனநல பாதிப்பிற்குள்ளாகிப் போகும் ஆபத்தும் உண்டு. அதனால்தான் சைத்தானின் விளையாட்டு என்று சொல்லி, எங்களின் மார்க்கம் இதைத் தடைச் செய்திருக்கிறது.  நான் உனக்கு உதவுவதுகூட எனது மார்க்கத்திற்கு விரோதமான செயல்தான்.

வெள்ளாட்சி

சௌந்தர்யா தேவிய கல்யாணியம்மன் கோவில்ல வைத்து பார்த்துட்டு அவ அழகுல மயங்கிப்போன அம்பலம் ஜமீன் சுப்பராயலு ரெட்டியார் மகன் ரெங்கசாமி ஏழு குளத்து பத்துக்கு சொந்தக்காரன் பொண்ணு கேட்டு போயிருக்கிறான். தங்களைவிட ஜாதியிலயும் பணத்துல எந்த விதத்திலும் குறைவில்லாம இருந்தும் ஜாதிவிட்டு ஜாதிப் பொண்ணு கேட்க வந்ததுக்காக ரெங்கசாமியைப் பிடிச்சி வைத்து ஒரு பக்கத்து மீசைய எடுத்து விட்டுட்டாங்க. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் சவுந்தர்யா தேவிக்கு திருமணம் பண்ணாம வைத்திருக்க கூடாதுன்னு மாப்பிளையவும் தேட ஆரம்பிச்சாங்க.

வெர்னோனின் மனைவி

அவருக்கு என்மேல் ஈர்ப்பு போய்விட்டது என்று நினைக்கிறேன். அவருக்கு உங்களை போலவும் உங்களுடன் நடை பயில்வாரே ஒரு இந்திய பெண் அவர் போலவும் நன்றாக பேசி பழகுவது பிடிக்கும், இவர்கள் இருவரும் பல முறை நின்று பேசுவதை நான் பார்த்துளேன், என் கணவரிடம் நாசூக்காக கேட்டுமுள்ளேன். என் கணவர் இது சாதாரண உரையாடல் தான் என்று என்னிடம் கூறியுள்ளார் ஒரு வேலை உங்க இந்திய நண்பிக்கு ஏதேனும் திட்டம் உண்டோ

காவேரி

பாட்டியும் அட்லாண்டாவிற்கு, அகிலாவுடன் சென்று ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. “பாட்டி, உனக்குன்னு ஏதாச்சும் கேளேன் “ என்றாள் அகிலா. “ எண்பது வயது ஆனவுடன், இந்தியா போய், காவேரியில் குளிக்கணும்டி. இப்பவும் என்னால் முன்ன மாதிரி நீஞ்ச முடியுமான்னு பார்க்கணும். நீயும் உன் அம்மாவைப் போய்ப் பார். இவ்வளவு உயரத்திற்கு வந்துவிட்டதைச் சொல் “ என்றாள் பாட்டி.  

பற்றுவெளி

செல்வம் மச்சான்தான் ராத்திரி கஞ்சி கொடுப்பது வழக்கம்.  எப்பவும்போல் கஞ்சியை பதமாக ஊதி ஆறவச்சு ஊட்டுனார். கஞ்சி  உள்ளே இறங்காமல் கடைவாயில் வழியறதைப் பார்த்துமே  வெளியே போய் துண்டால் முகத்தை மூடிக்கொண்டு மச்சான் அழுகாச்சி பிடித்து விட்டார்.  ராத்திரியெல்லாம் எங்கய்யன் எங்ய்யன்னு என்று  கண்ணை மூடாமல் அனத்தியபடி கிடந்தார்.

திரிபுரை

“இந்த ம்யூசியத்துல பாருங்க – வித விதமான மொழி பேசும், பலவிதமான வாழ்க்கை கொண்ட வரலாற்றுச் சக்திகள் எல்லாம் ஒரே கூரைக்குள் இருக்கு. ஆனா பல அறைகளில் விதவிதமான காரணங்களால் இருக்கு. நாம எல்லாரும் அப்படித்தான் வாழறோம் – ஒவ்வொரு அறையிலும் ஒரு முகம். பல அறைகள், பல முகங்கள் – இது நம்மை உடைக்காம, நம்ம கதையைச் சொல்ல உதவனும். ஆனா எல்லா அறைகளும் ஒரு  பெரும்கதையின் பகுதி.

ஒற்றைத் தலைவலி

இனிமேல் தொலைக்காட்சியே கூடாது. டீனாவை அமைதியாக இருக்கச் செய்யத்தான் ஜாய்ஸ் அதை வாங்கினாள், ஆனால் அது இனிமேல் தேவைப்படாது. அவள் தொலைவியக்கியை எடுத்தாள், பிக் அப் ட்ரக்குகளுக்கான விளம்பரத்தில் மீதிப் பகுதியைப் பார்த்தாள், பிறகு தொலைக்காட்சியை அணைத்தாள். வெற்றுத் திரை அவளுக்கு அசௌகரியமாக இருந்தது. ஏதோ அந்தத் திரை அவளைக் கண்காணிக்கிறது என்பதைப் போல இருந்து அவளை நிதானமிழக்கச் செய்தது. தொலைவியக்கியை தாழ் மேஜையில் வைத்தவள், மற்றப் பெட்டியைப் பிரிக்க ஆரம்பித்தாள். 

நீல வாகா

அனிருத்துக்கு தேர்வு வருகிறது, நன்றாக படிக்க கூடியவன், ஆனால் கடந்த சில மாதங்களாகவே எதிலும் சற்று பிடிப்பு இல்லாமல் இருக்கிறான். தேர்வு சமயத்தில், தேவை இல்லாமல் அதிகம் பதட்ட படுகிறான். ஒருவருடம் இடைவெளி விட்டு மருத்துவம் தொடரட்டுமா என்கிறான். ஒருவேளை சரியாக படிக்கவில்லை என்றாலும் வேறு யோசனை செய்வேன், சென்ற ஆண்டு தேர்வில் என்பத்தி நான்கு சதவிகிதம் எடுத்திருந்தான். 

ரா.கிரிதரன் குறுங்கதைகள்

மதியம் பனிரெண்டு மணிக்கு ஒரு முறையும் ரெண்டு மணிக்கு ஒரு முறையும் இறந்ததாக நர்சரி பள்ளிக்கூடத்து டீச்சர் மாலினி சொன்னாள்.  எப்படி ரெண்டு தடவை ஒருவர் இறக்க முடியும் எனக் கேட்கக்கூட அவளுக்கு நேரம் இருக்கவில்லை. ரெண்டரை மணிக்குள் குழந்தைகளை வீட்டில் சேர்க்காவிட்டால் பெற்றோருக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் ஓடிவிட்டாள்.

கல்பகாலத்தில் ஒரு காதல்

அந்த நீளமான அறையைத் தாண்டி அலுவலகத்துக்குள் வந்ததும் இன்று விடுப்பு எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. என்னைத் தாண்டி ஒரு இளம் ஆய்வாளர்கள் கூட்டம் உள்ளே சென்றது. மதியம் ரெண்டு மணிக்கு இவ்வளவு பரபரப்பாக சென்னை டெலிமெட்ரி வளாகம் இருந்ததில்லை. துறைமுகத்தை ஒட்டி புதிதாகக் கட்டப்பட்ட அமைப்பில் ஊட்டி தொலைநோக்கியின் நேரடி கட்டுப்பாட்டு அறையும், தென் தமிழகத்தின் வானவியல் அமைப்பும் இயங்கி வந்தன. இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனின் தரைக்க்கட்டுப்பாடு கூடம் இருந்த கட்டடத்தில் மட்டுமே அத்தனை பரபரப்பு

ஐஸ்கிரீம்

‘வாங்குனா எங்க வெச்சு திங்கறது? வீட்டுக்கு நேரா போவ முடியாது, மருமவ இருப்பா. பேரனும் பேத்தியும் பள்ளிக்கூடம் விட்டு வந்திருப்பாங்க. பேசாம வீட்ட விட்டு தள்ளியிருக்கற மாட்டுக்கொட்டத்துக்கு போயிரலாமா? அங்க வெச்சு மளமளனு தின்னுட்டா என்ன? தின்னுட்டு வாயத் தொடைக்கறத மட்டும் மறந்தரக்கூடாது’ என்று செய்யவேண்டியவற்றை மனதில் அடுக்கிப் பார்த்தாள்.

புத்தனின் புன்னகை

இளமையினால் கண்களின் கூர்மையும் பிரகாசிப்பும் அதிகமிருந்ததோடு மிக ஆழத்தில் அமைதி தெரிந்தது. அவ்வமைதியினால் புன்னகை  மயக்கும் வசீகரத்தை தெறித்தது. பார்சல் கட்டுவதிலும் வரிசை எண்ணை அழைப்பதிலும் தனித்துவமும் பணிவுடன் கண்டிப்பும் நிறைந்திருந்தது.. இருபது நிமிடங்கள் கரைந்தது குறிப்பிட்ட எண்ணை மூன்று முறைகள் அழைத்தார் ஒருவரும் பதிலளிக்கவில்லை.

பகரம்

‘ஒருத்தொருத்தரும் அவங்க வழியில அதை எதிர் கொள்வாங்க. நீங்க ப்ராபப்லி உங்க வேலைல இன்னும் கொஞ்சம் மூழ்கிருக்கலாம்’. உண்மை தான் என்று நினைத்துக் கொண்டான் அஸ்வின். கடந்த சில மாதங்களாக எளிதாகத் தவிர்த்திருக்கக் கூடிய அலுவல் நிமித்தமான வெளியூர் பயணங்களை வேண்டுமென்றே தன் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டான்

நேர்காணல்

வேளச்சேரியில் நடுராத்திரி அரைமயக்கத் தூக்கத்தில் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அவன் புரட்டு ஆசாமி இல்லையென்றால் சரவண பவன் வாசலில் ஆட்டோ அவனை விட்டுச் சென்ற காட்சி கண்டிப்பாக ஓட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாயிருக்கும். அதன் மூலமாக ஆட்டோ நம்பரைக் கண்டுபிடித்து டிரைவரை தொடர்பு கொள்ள முடியுமே

மர பொம்மைகள்

“இல்லை, ஆனால் ஏன்  மிக அற்புதமான அழகு என்று நீங்கள் சொன்னீர்கள்? அவை விற்பனைக்காக இல்லை. அவை என்றாவது ஒரு நாள் பயன்படலாம். என்னைப் பற்றி தெரியாதவர்கள் கையில் இந்த பொம்மைகள் கிடைக்கும் போது விலைமாதால் காட்சிப்படுத்தப் பட்ட பொருட்கள் என்று அவர்கள் அவற்றைப் பரிகாசம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்”

ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது

“ இவர்கள் இருவரையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தமிழில் தோன்றிய பக்தி இலக்கியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் கணேசா. பக்தி இலக்கியம் ஆரம்பித்தது பல்லவர் காலத்தில் இருந்து தான் என்று நான் நினைக்கிறேன். வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இலக்கியத்தின் மூலம் சமய மறு மலர்ச்சி ஏற்பட்டது. சமண, புத்த மத தாக்கங்களில் இருந்து, சைவ, வைணவ மதத்தை மறுமலர்ச்சி செய்ததில் தமிழ் பக்தி இலக்கியங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதில் முன்னோடியாக இருந்து ஆரம்பித்து வைத்தவர் அப்பர் என்று அழைக்கப் பட்ட இந்த திருநாவுக்கரசர் சுவாமிகள் தான்.

தீச்சொல் நிகண்டு

சொன்னாக் கேக்க மாட்டேங்கேரு பாட்டா? என்ன எழவுக்காக்கும் குத்தி இருந்து இந்த பேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் எல்லாவற்றையும் விடாம நோண்டுகேரு? ஒரு நாளைக்கு ஆறேழு மணிக்கூர் இதே வேலையா? அந்த நேரத்திலே என்னலாம் எழுதலாம், வாசிக்கலாம்… போற காலம் வந்தாச்சு… பின்னே மூலக்கடுப்பு, உள்மூலம், வெளிமூலம், கந்தமூலம், கனகமூலம் வராம என்ன செய்யும்?

முடிவு

அர்ஜுனால் கண்ணை மூடி இருக்க முடியவில்லை. “அம்மா.. அம்மா.” அர்ஜுனின் குரல் நடுங்கியது. அவன் உடல் நாணல் காற்றில் மடங்குவது போல மடங்கியது, கண்கள் விரிந்து, மூச்சு வேகமானது. அடுத்த லேனில் விபத்தில் சிக்கிய கார் தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்தது. சுற்றிலும் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகள் நெடுஞ்சாலை விளக்குகளில் மின்னின.

தருணங்கள்

எப்போதுமே இந்த சாலை இந்த நேரத்தில் கூட்டம் அதிகம். வரிசையாக ஒன்று இரண்டு பெரிய பள்ளிக் கூடங்கள் உள்ளது. குழந்தைகள் வண்ண வண்ண சீருடைகள். மழை என்பதால் வானவில் போன்று எண்ண முடியாத வண்ணங்களில் மழை கோட்டுகள். பூக்கள் சிரித்து கொண்டே நகர்வது போன்று சிறுவர் சிறுமிகள் உற்சாகமாக பள்ளி வகுப்புகளை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றார்கள். ஊட்டியில் உள்ள ரோஜா தோட்ட கண்காட்சி போன்று இருந்தது. தமிழ் அனைவரையும் பார்த்து கொண்டே நகர்ந்து கொண்டு இருந்தாள்.

எஸ்கார்ட்

”காலைல ஆடிட் ஆபிஸ்ல பார்ட் டைம் வேல பார்த்துட்டு நைட் இங்க வண்டி ஓட்டிகிட்டு இருந்தேன். அன்னைக்கு கொஞ்சம் தூக்க கலக்கமா இருந்துது. மாத்திவிடுறதுக்கு ஆள் யாரும் இல்ல. நானும் சரி ஒரு ட்ராப் தான, அட்ஜஸ்ட் பண்ணி போயிடலாம்னு நினைச்சு வண்டிய எடுத்துட்டேன். ஒரு டர்னிங்ல மெட்ரோ வேல நடந்துட்டு இருந்த இடத்துல டிவைடர் வெச்சிருந்தானுங்க. எப்படி அசந்தேன்னு தெரியல. கண்ண மூடி திறக்குறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு” என்றார்.

பேருடலாகும் சிற்றுடல்கள் – லெவையாதன்

தாமஸ் ஹாப்ஸின் ‘லெவையாதன்’ இந்த பாற்கடல் கடைவதின் முக்கிய விளைபொருள். அது வெறும் அரசியல் தத்துவ நூல் அல்ல. அதிகாரம், சட்டம், வணிகம், மதம் என அனைத்தையும் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வைத்த புரட்சிகர நூல். பின்னாளில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகளாவிய சக்தியாக உருவெடுக்க இது போன்ற சிந்தனை மாற்றங்கள் அடித்தளமாக அமைந்தன.

இடைவழி

எனக்கு எங்கோ மெல்லிய இசை கேட்க என் காதருகில் ” நீங்கள் மெதுவாக விழிகளை திறக்க முயலுங்கள்” என்று ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது. விழியை திறக்க எத்தனிக்கும் போதெல்லாம் கண்கள் மேல் ஒரு பாரம் அழுத்தியது. நான் உருண்டு உருண்டு கீழே விழுவது போன்ற உணர்வு. பெரும் பிரயத்தனப்பட்டு கண்களை திறந்தேன். சுற்றிலும் மருத்துவர் குழு ” யூ ஆர் த்ரூ இட் ” என்று புன்னகைக்க நான் கண்கள் செருக விழிப்பும் இல்லை மயக்கமும் இல்லை என்ற அவஸ்தையில் இருந்தேன். 

அணங்கு

ஒன்பதரை மணிக்கு பனிக்குளிர் இறங்கிய ரோட்டில் வண்டி ஓட்டிட்டு வரும்போது ஆதிக்கு பயமா இருக்கு.தனியா என்ன பண்றாளோ என்று கதவைத் திறந்தால் தூங்கிக்கிட்டிருக்கா.பக்கத்துல தட்டில் இட்டிலி மூடி வச்சது அப்பிடியே இருக்கு.ஏறி இறங்கும் அவளது ஒவ்வொரு மூச்சுக்கும் கர் கர்ரென ஆஸ்துமா இளைப்பு சத்தம் கோரமா கேக்குது.வாய் ஒரு பக்கமா கோணி திறந்திருக்கு.  யூனிபார்மை கூட கழட்டாம உக்காந்திருக்கான்.

வான வேடிக்கை

இந்த செய்தியை கேட்டு காலிதின் தந்தை மிகவும் கலக்கமடைந்தார். சில நாட்களாக நிலவும் வழக்கத்துக்கு மாறான அச்சமூட்டும் அமைதி, தலைக்கு மேல் எந்நேரமும் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் விமானங்கள், கடைவீதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசாரின் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள், மக்களின் கவலை ததும்பும் முகங்கள், ரத்த வேட்கையுடன் காத்திருக்கும் புயல் மேகங்கள், இவையெல்லாம் நடக்க கூடாத ஏதோ ஒரு விபரீதத்திற்கான முன் அறிகுறிகள் என்று அவர் திடமாக நம்பினார். 

வார்ட் நம்பர் 6

வாஷிங்டன் சதுக்கப் பூங்கா பல இசைக் கலைஞர்களால் அதிர்ந்தது – ஜாஸ் நால்வர் குழு, கிளாசிக்கல் வயலின் வாசிப்பாளர், பீட்பாக்சர் – ஒவ்வொருவரும் வெவ்வேறு மூலைகளைத் தனக்குரியதாக மாற்றி இருந்தனர். இந்த ஒலிக்கலவை விடுதலையின் குரலாக ஒலித்தது. 

வன்யா

அந்த இரவின் மாயாவி என்ன செய்தான் என்று தெரியவில்லை. விடிந்ததும் தண்டனைக்காலம் முடிந்து உருவம் வரைந்த சுவடே இல்லாமலானது. வெகு நாள் கோபத்தைச் சுமக்க முடியாமல் சகஜமானாள்  காயத்ரி. வந்த தடமும் தெரியவில்லை அழித்த தடமும் தெரியவில்லை. விக்ரமன் என்பதற்குப் பதில் விசித்திரன் என்று பெயர் வைத்திருக்கலாம். இந்தச் சித்து வேலையை எப்படிச் செய்தான் என்று கேட்கவே கொஞ்சம் கூச்சமாக இருந்தது காயத்ரிக்கு.

மைத்ரேயி

“ஆன்மாவை அறிந்த ஒருவன் ஆன்மாவாகவே ஆகி விட்ட பிறகு தனி உணர்வு எழுவது எங்ஙனம்? எதை அறிவது? எந்த ஒன்றால் இந்த அனைத்தும் அறியப்படுகிறதோ அதனை எதனால் அறிவது? அவர் நிறுத்தி விட்டு தொடர்ந்தார், என் அன்பே… அறிவழிந்து அறிவென அமர்ந்திருப்பவனே அறிபவன். அவனை எதனால் அறிவது?”

நவீன சிறைச்சாலைத் தத்துவம்

எனக்கு, நான் எப்பேற்பட்ட சிக்கலில் சிக்கியிருக்கிறேன் என்பது புரிந்தபோது தரை நழுவுவது போல் இருந்தது. இது போன்ற கிரகங்களில் ஒத்திசையாத தகவல் தொடர்பே (Asynchronous Communication) சாத்தியப்படும். எதைச் சொல்ல வேண்டுமானாலும், அதனைப் பதிவு செய்து அனுப்பவேண்டும். அப்படி அனுப்பப்படுகையில் அது சிகப்பு அதிர்வெண்வரையில் நீட்டிக்கப்படும் (Red shifted). தகவலைப் பெறுபவர் தங்களது கிரகிப்பான்களை (receiver) அதற்கேற்றார்போல் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

சாவித்திரியும் நானும்

நம்ம வீட்டுக்குள்ளேயே அம்மா அப்பா கைக்குள்ளையே இருந்து வளர்ந்திருப்போம், அவங்க எத நமக்கு காட்டுறாங்களோ அது தான் நம்ம உலகமா இருந்திருக்கும், ஆனால் நம்ம தனியா படிப்புக்காகவோ வேலைக்காகவோ அவங்க கைய விட்டு வெளிய வந்ததுக்கு பிறகு தான், இந்த உலகத்த நம்ம நம்மளோட பெர்ஸ்பெக்டிவ்ல பார்ப்போம், அப்படி பார்க்கும் போது உள்ளுக்குள்ள ஒரு சுதந்திர உணர்வு வரும், அந்த சுதந்திர உணர்வோட நம்ம எல்லா விஷயத்தையும் பார்த்து புரிஞ்சிக்கும் போது எல்லாமே நமக்கு புதுசா தெரியும்

கிருஷ்ண லீலை

அவர் என்னிடமிருந்து இம்மாதிரியான வார்த்தைத் தாக்குதலை எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும். சற்று கலங்கித்தான் போனார். நானோ மனதிலிருந்த மலையை இறக்கி வைத்தாற்போன்ற ஆசுவாசமும் ஆவேசமுமான கலவை உணர்வின் உச்சாணியில் இருந்தேன். வீட்டில் இவர் பல்வலி என்றால் வெளியில் குமரேசன் நீர்க்கடுப்பு. இரு கிழவர்களும் பந்தடித்து விளையாட என் வாழ்க்கையா கிடைத்தது.

1941-ஆண்டின் குளிர்காலம்

தேர்ந்தெடுப்பின் முதல் கட்டம் ஆங்கிலத்தில் பொது அறிவுப் பரீட்சை. அதற்குத் தயார் செய்யும் வழி அவனுக்குத் தெரியும். மூலைக்கடையில் அவன் வேலை செய்த காலத்தில் பியர்ஸ் சோப் கட்டிகளை அட்டைப்பெட்டியில் இருந்து எடுத்து அடுக்கியபோது அவற்றுடன் வந்த ஒரு வர்ண விளம்பரக் காகிதம். என்சைக்ளோபீடியா பற்றிய விவரங்கள். டிக்ஷனரி தெரியும். அதைப் போன்ற கனமான என்சைக்ளோபீடியா எப்படி இருக்கும்? அதன் உள் அட்டையில் பல நாட்டு கொடிகளின் படங்கள். உள்ளே உலக நாடுகளின் வரை படங்கள்.

டால்ஸ்டாய் புக் ஷாப்

அவளை பார்த்த அதிர்ச்சியில் இதயத்தின் துடிப்பு இவனுக்கு அதிகரித்தது. அவளின் அருகில் சென்று சமாதானப்படுத்த முயற்சித்தான்.இரவு பணிகள் முடிந்து  பணியாளர்கள் வெளியே வருவதும் பணியாளர்கள் உள்ளே சொல்லுவதுமாக  பார்த்தும் பார்க்காதவாறு சென்றுக் கொண்டிருந்தனர். வார்த்தைகள் எதும் பேசாமல் பெரிய துளிகளாய் அவள் கண்ணீரை வடித்தாள். 

ராகவேனியம் 2024

“இருங்க! கொஞ்சம் விபரமாச் சொல்றேன்” என்று அந்து இளைஞன் ஆரம்பித்தான். “அது டைம் மெஷின் பந்து. மேலே நம்பர்லாம் வெச்சிருக்கும். டாக்டர் கண்டுபிடிச்சது. டெஸ்ட் பண்ணலாம் என்று 2024 தட்டி இங்கே வந்துட்டோம். ராகவேனியம் 277 என்கிற எலிமெண்ட் போல் இதுவும் கணக்குல தப்பியிருக்கும்னு நான் அசால்ட்டா இருந்துட்டேன். ஆனா இது வேலை செஞ்சுடுச்சு.”

பட்டியலில் 12வது நபர்

வெள்ளை நிறத்தில் வர்ண பூக்கள் இறைந்து கிடக்கும் காட்டன் சுரிதாரில் ஒரு சுடரென ஒளிர்ந்தாள். அவள் கன்னம் தடவி அம்மா முத்தமிட்டாள். அக்கா இவளை தன்னுடலுடன் அணைத்துக் கொண்டாள். அக்காவின் உடம்பிலிருந்து மிக லேசான செம்பருத்தி வாசம் வீசியது. அக்கா எப்போதும் செம்பருத்தி இதழ்கள் போட்டு காய்ச்சிய தைலத்தைத்தான் பூசுவாள். அதன் நறுமணம் அவள் உடலெங்கும் தங்கியிருக்கும்.

புதிய பாடத் திட்டம்

ப்ரெஞ்சுப் புரட்சியைப் படிக்கப் புகுந்த மதன் ஸார் மாவட்ட நூலகமே கதியென இருக்கத் துவங்கினார். ஏற்கனவே குண்டு குண்டு நாவல்களாக வாசிப்பவர், இப்போது உலக வரலாறு பற்றிய குண்டு குண்டு புத்தகங்களாக வாசித்துத் தள்ளுகிறார். நூலகத்தில் மணிக்கணக்காக படிப்பதோடில்லாமல் வீட்டிற்கும் பள்ளிக்கும் கூட எடுத்து வந்து அந்த குண்டுப் புத்தகங்களை வைத்து வாசிக்கிறார். பாட்டி ‘இந்த வாத்தியார் புள்ளைக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ணி வெச்சாதான் என்ன’ என்றார்.

சிலிர்ப்பு

“ஹராம் ஜாதோ…   எவனோ இடித்து விட்டு ஓடி விட்டான். இந்தப் பையன்தான் என்னைப் பத்திரமாக இங்கே கூட்டி வந்தான். இவனைப் போய் அடிக்கிறீர்களே… முட்டாள்களே… நகருங்கடா என்று எல்லோரையும் விலக்கி விட்டார். அவர் அருகில்  வந்து நின்றதை உணர்ந்ததும் அந்த ஆஜானுபாகர்கள் எல்லோரும் இவனை மறந்து நெகிழ்ச்சியுடன் பாபுஜி என்று பெரியவரைக் கட்டிக் கொண்டனர். 

இங்கிவனை யான் பெறவே

“கர்ணனின் உடலுக்கு யார் தீயூட்டுவது என்பது உன் முடிவு மட்டுமே. நானோ, அத்தையோ, யுதிஷ்டிரனோ அதைத் தீர்மானிக்க முடியாது. கர்ணனே தருமன்தான் தன் உடலுக்கு தீயூட்ட வேண்டும் என்று அத்தையிடம் வரம் கேட்டிருந்தாலும் அதையும் மாற்றும் உரிமை உனக்குண்டு” என்று மிருதுவான குரலில் துரியோதனனின் தோளை அழுத்திக் கொண்டே கண்ணன் சொன்னான்.

என்றாவது ஒரு நாள்….

எனக்கு அப்போது தெரியாது அவனுடன் பேசுவது அதுவே கடைசி முறை என்று. அவனுடன் பேசிய அடுத்த பத்தாவது நாள் ஆர்மி ஹெட் க்வார்ட்டர்சிலிருந்து எனக்கு போன் வந்தது. ‘தீவிரவாதிகளுடன் நடந்த போராட்டத்தில் வீரமரணம் அடைந்து விட்டான் உங்களுடைய சகோதரன். அவனுடன் உயிர் நீத்த எல்லாருடைய உடல்களையும்  நாளை டெல்லிக்கு கொண்டு வருகிறோம்.   ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு உடலை ஒப்படைக்கிறோம்

முட்டை போண்டா

நான் முதன் முதலாக சண்முகராஜனின் பெட்டியைத் திறந்த போதே அதனுள் ஒரு பத்து ரூபாய் கட்டு கிடந்ததைக் கண்டு கொண்டேன். பெரிய தொகையை எடுத்தால் அவன் கண்டுபிடித்து வார்டனிடம் புகார் சொல்லக் கூடும் என்பதால் வெறும் பத்து ரூபாயை மட்டும் எடுத்தேன். ஏற்கெனவே விடுதியில் பணம் திருடு போன புகார்கள் நிறைய இருந்தன.

சொர்க்கம்

இவரிடம் இனி பேசி பிரயோஜனம் இல்லை. எழுந்து நின்று, போவதற்கு முன் ஒருமுறை அவரை உற்று நோக்கியபடியே, “நீங்க என்ன அந்த மினிஸ்டரோட சகலைக்கு உறவா?” என்றேன். ஒருகணம் பொட்டில் அறைந்ததுபோல துணுக்குற்றவர், “என்ன…என்ன சொல்றீங்க?” என்று தடுமாறினார்.

ஓய்வில் மனம்

இவனுடைய குடும்பம் பற்றி ஏதாவது கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது.   பழுது பார்ப்பவன் வரும் வேலையில்லை என்றால் இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம்.  இல்லை இவ்வளவு பேசியதே போதும்.  ஒரு நிறைவு இருக்கும்போது மேலும் ஏன் பேசவேண்டும்.  பூக்கடையில் செருப்பை மாட்டும்போது ஏன் அவன் கோவிலில் மேலும் சிறிது நேரம் இருப்பதாக சொன்னான் என்று யோசித்தேன்.

புளியமரத்தாள்

மரம் பூக்கணும்ன்னு இவ காத்துருந்தாளா! இல்ல இவ பூக்கணும்ன்னு மரம் காத்துருந்துச்சான்னு ஊருசனம் அதிசயமாய் பேசிய புளியமரத்தாளப் பாக்கப்போன எங்களப் பாத்து, ‘அடியே! நீங்களாம் எப்பும் குத்தவைக்கப் போறீங்கட்டின்னு கேட்டா!‘ அதுக்கு நாங்க, கால் வலிக்கும்போது  குத்தவைப்போம்ன்னு சொன்னோம்.