பாட்டியும் அட்லாண்டாவிற்கு, அகிலாவுடன் சென்று ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. “பாட்டி, உனக்குன்னு ஏதாச்சும் கேளேன் “ என்றாள் அகிலா. “ எண்பது வயது ஆனவுடன், இந்தியா போய், காவேரியில் குளிக்கணும்டி. இப்பவும் என்னால் முன்ன மாதிரி நீஞ்ச முடியுமான்னு பார்க்கணும். நீயும் உன் அம்மாவைப் போய்ப் பார். இவ்வளவு உயரத்திற்கு வந்துவிட்டதைச் சொல் “ என்றாள் பாட்டி.
