மாணாக்கன்

“அவர்கள் யேசுவை முதன்மை மதகுருவின் முன்னிலையில் கேள்விகள் கேட்கத் துவங்கினர். அந்த சமயத்தில் முற்றத்தில் வேலைக்காரர்கள் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டினர். அவர்களுக்கு அருகில் நின்றிருந்த பீட்டரும் கைகளை நீட்டி குளிர் காய்ந்தார். அப்போது, அங்கிருந்த ஓர் பெண்மணி, பீட்டரைக் கண்டு “இவரும் யேசுவுடன் இருந்தார்” என்றார்.  அதாவது, பீட்டரையும் இழுத்து சென்று கேள்வி கேட்க வேண்டும் என்று அர்த்தத்தில் கூறினாள். 

வெத்தலப்பட்டி

இரவானால் தண்ணியடிக்காமலும் இருந்தததில்லை. மாதம் நான்கைந்து முறை “பெண்” கூடுதலும் உண்டு. அப்படித் துரை பாட்டாவிற்கும், கேசவன் பிள்ளைக்கும் அறிமுகம் ஆனவள் தாள் இந்த “வெத்தலபட்டி”. வறுமையில் பிறந்து, புத்தி குறைந்த கணவனுக்கு மனைவியாகி, பின்னர் வயிற்று பிழைப்புக்காக “உடல் தொழில்”-லுக்கு உட்பட்டவள். இம்மாதிரி தொழில் செய்யும் மகளிரின் முந்தைய வாழ்வு எல்லோருக்கும் பொதுவானதுதான். வறுமை, வெறுமையைத் தவிர வேறென்ன இருக்க முடியும். காசு கொடுக்கும் கண்டவர்களோடு, அம்மணமாக உறவாட வேண்டுமென்பது அவர்களின் கனவா, ஆசையா என்ன? அவர்களும் மனிதர்கள் தானே.. அவர்களுக்கும் ஆசா.. பாசம்.. இருக்காதா…. ? 

மூட்டம் 

அவன் தயங்கினான். பிறகு குரலைச் செருமிக் கொண்டு ” நிஜமாவே எனக்கு இப்ப பேசப் பிடிக்கலே. நீ கிளம்பறேன்னு சொல்ல நான் உள்ள போனேன்லே. அப்ப சித்தி என்கிட்டே வயசுப் பிள்ளே நம்ம வீட்டுலே இருக்கு. அதை நீ ஞாபகம் வச்சுக்க. இந்தத் தனம் பிள்ளே விபரந் தெரியாம கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு வாயாடிகிட்டு இருக்கு. அவனும் வயசுப் பிள்ளதானே.  தனத்தை அவன் அடிக்கடி பாத்துகிட்டே இருந்ததை நானும் பாத்தேன். பொண்ண வச்சுக்கிட்டு நாமதான ஜாக்கிரதையா இருக்கணும்னாங்க.”

ஆயுதம்

டீக்கடைக்காரன் அவசரமாய் டீயை ஆற்றினான். டீ வழிந்து தரையில் விழுந்தது. “சேகர்ணா” என்று சொன்னான். பாதி வார்த்தை வாயிலிருந்து வரவில்லை. சேகர் தலைகுனிந்து அமர்ந்திருந்த வேலுவைப் பார்த்தான். பொருந்தாத பாண்ட் சட்டை அணிந்திருந்த வேலு மேசைமேல் கைகளைக் கட்டிக்கொண்டு குறுகி அமர்ந்திருந்தான்.  தலைமுடி கலைந்து, தூங்காத கண்களுடன் அவன் முகம் வாடிப்போய் இருந்தது.  

பிடி நிலம்

அதே போன்று அவருடைய காட்டில் வேலையென்றால் கலியனும் சேர்த்து உரிமையெடுத்துக் கொள்வான். எந்த பருவத்தில் எந்த பயிர் செய்யலாம், போன முறை வைத்த உரத்தின் வீரியம் எப்படி, தேங்காய் சிரையெடுக்கும் நாள் பக்குவம் என விவாதிப்பதோடு அனைத்திலும் அபார உழைப்பைக் கொட்டுவான். கூலிக்கு பார் ஒதுக்கும் போதெல்லாம் வியர்வைத் தண்ணீர் மூக்கு நுனியில் திரண்டு மண்வெட்டியில் ஒழுக ஒழுக இருபுறமும் வாரி இழுத்துச் சேர்க்கையில் மாது பின்னாலிருந்து கட்டியை எடுத்து எறிந்து ‘யே.. சாமி.. கொஞ்சம் மெதுவா தான் போப்பா.. என்னமோ உன் சொந்த காடாட்டம் இந்த வேகம் காட்டுறியே?’ எனக் கிண்டலாக இறைவான்.

கொடுக்கு

வீங்கிய முகத்துடன் காலையில் எழுந்து வந்தவளை மாமியார் கூர்ந்து பார்த்தாலும் ஒன்றும் கேட்கவில்லை. அவளாகச் சொல்லட்டும் என்று விட்டு விட்டாள். அவனோ எதுவுமே நடக்காதது போல் பேப்பரில் மூழ்கியிருந்தான். நேரமாக ஆக கௌசிக்குள் அவன் வார்த்தையின் விஷம் பரவ ஆரம்பித்தது. வீட்டில் யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது,.. முக்கியமாக அவன் தன்னுடைய அழுகையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவளுக்குள் ஆங்காரத்தை வளர்த்தது. மனம் கொதித்துக்கொண்டிருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக வீட்டுக்காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

அறுவடை

கதிரவன் நேரில் வந்து சம்பிரதாயத்திற்கு விசாரித்து விட்டு, அடுத்த பூ போகத்திற்கான மேற்பார்வையை பூபதிக்கே மீண்டும் கைமாத்தி விட்டுவிட்டுப் போய்விட்டான். வீட்டின் செலவுகள் இடிக்கத் தொடங்கியிருந்தது. பெண்களை கட்டி கொடுத்த இடத்தில் கையேந்தி நிற்க கூடாதென்பதில் நாயகமும், ராசமும் உறுதியாக இருந்தார்கள். அரிசிப்பானை தூரை தொட ஆரம்பித்திருந்தது. அரிசி தட்டுபாட்டை நாயகத்திடம் சொல்லாமல், இருக்கிற அரிசியை முடிந்த அளவிற்கு நீட்டித்து கொண்டு வரும் எண்ணத்தில் நாயகத்திற்கு மட்டும் வயிற்றுக்கு குறை வைக்காமல் பரிமாறி விட்டு, தனக்கு அரைவயிறும் கால்வயிறுமாக நிரப்பி ஒரு வாரமாக சமாளித்துக் கொண்டிருக்கிறாள் ராசம். 

சைக்கிள்

உள்ளறையில் விதவிதமான பழைய சைக்கிள்கள் சர்வீஸ் செய்யப்பட்டு பாதி கம்பீரத்தோடு நின்றிருந்தன. பள்ளிக்கூடத்தில் சும்மா தரப்பட்டவையும் நிறைய கடைக்காரரின் கைக்கு வந்திருந்தன‌. ஆனால் அவையெல்லாம் தண்ணீரடிக்க லாயக்கில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கேரியர் தடிமனாக இருந்த ஒரு சைக்கிளை சுற்றிச் சுற்றி வந்து நோட்டமிட்டான். எண்ணெய் தேய்த்த மினுமினுப்பில் கருகருவென காளையின் தோரணையில் இருந்த அது அவனுக்குப் பிடித்துப் போனது. அடித்து பேரம் பேசப் பேச படியாமல் போய்விடுமோ என்ற கலக்கம் தீர்ந்து ஒரு வழியாய் ஆயிரத்து ஐநூறுக்கு முடிந்தபோது தான் இவனுக்கு நிம்மதி வந்தது. 

இன்வெர்ட்டி-வைரஸ்

மணி இப்போது டாக்டருக்கு படித்து முடித்து விட்டான். திருநெல்வேலி டவுன் பக்கத்தில்  அன்சர்  கிளினிக்கில் வேலை. எனக்கு  இப்போது கல்யாணம் ஆகி ஒரு குழந்தை வேறு இருக்கிறது. எங்களுக்கும் அதே ஊரில் தான் வேலை என்றாலும் அம்மா அப்பாவை அடிக்கடி பார்க்க முடியவில்லை.  அன்றைக்கு நானும் என்  கணவரும் உணவகம் சென்ற போது   தான் மணியைப்  பார்த்தேன். அவன் என்னைப்  பார்க்காமல் யாரோ ஒரு  பெண்ணோடு பேசிக் கொண்டு இருந்தான். அவர்கள் இருவரின் உடல் மொழியை பார்த்தாலே தெளிவாக தெரிந்தது இது வெறும் நட்பல்ல என்று.

இப்படியும் ஒரு நாள், ஒரு கதை.

பிலடெல்பியா, அமெரிக்காவின் பழைய தலைநகரம் என்பதை அறிவீர்கள். வடமேற்காலே ஒரு 16 மைல் ஸ்கைகுல் (Schuylkill) நதியை ஒட்டிப்போகும்  202- பெருஞ்சாலையில் போனீர்களென்றால் நிச்சயம் இந்த ஊரை அடையலாம்.
1769 களில் வந்த ஒரு ஜெர்மானிய வந்தேரி, ஜேம்ஸ் பெர்ரி, தனது மன்னர் பெடரிக் II மேல் இருந்த விசுவாசத்தைக் காட்ட, மதுக்கடையின் பெயர்ப்பலகையில் ‘கிங் ஆப் பிரஷ்யா’ என்று பெயர் எழுத, அதுதான் அந்த ஊரின் பெயர் என்று ஒரு சோம்பேறி ஆங்கிலேய சர்வேயர் இலவச விருந்திற்கு பிறகு, இரண்டுக்கு மேல் போட்ட பெக்கினாலோ என்னவோ, அதையே கிராமத்தின் பெயர் என்று தன் பதிவேட்டில் குறித்துக் கொண்டு போனதாக ஒரு கதை உண்டு. 

ஒரு குழந்தையும் இரு உலகங்களும்

டிரவுசர் இளைஞன் பூனையின் அருகே அமர்ந்து அதன் தலையைத் தாங்கிப் பிடித்து கொஞ்சம் தண்ணீரை காயத்தின் மேல் ஊற்றினான். பூனை அசைந்தது. பூனையின் வாயருகே சில துளிகள் தண்ணீரை விட்டான். பூனை நாக்கை நீட்டி தண்ணீரைப் பருகியது. ஒன்றிரண்டு நொடிகளில் அதன் வாயின் ஓரத்தில் இருந்து நீர் சிவப்பாய் வழிந்து ஒழுகியது. பூனை தன் முன்னங்காலை அசைத்து முன்னே நீட்டி எழப் பார்த்து முடியாமல் மறுபடியும் அமர்ந்தது. மற்றொரு முன்னங்காலை வைத்து தன் உடம்பை இழுத்து மணலில் கொஞ்சமாய் நகர்ந்தது. பிரசாத் தலையை சிலுப்பிக் கொண்டு ஆனந்தியைத் தேடினான். அவள் அவனுக்கு முன்னால் நின்றுகொண்டு பூனையையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

Femino 16

எழுபது ஜீஎஸ்எம், மென்சிவப்புத் தாளில் கொட்டை எழுத்துகளில் ஃபெமினொ பதினாறின் முதல் துண்டுப் பிரசுரம் அவள் கண்முன்னே விரிந்ததும் ஆயிரம் பெண்களின் ஏக்கமும் நம்பிக்கையும் வேட்கையும் அதன் மேல் சுடராய் எரிவதை ஆயிரம் ஆண்கள் சபித்தபடி வசவுகளால் அச்சுடரை கைகளை வீசியணைப்பது போலவிருந்தது அவளுக்கு. கேடீ பதினாறில் ஒரு விசிறியும் ஒரு எதிரியும் வீட்டுக்கு வீடு தெருவுக்குத் தெரு ஒரு செவ்வரத்தையும் நந்தியாவட்டையும் அருகருகே பூப்பதைப் போல முளைத்திருப்பார்களென்று அனுமானித்தாள்.

சுத்தமும் ஐரீனும்

கணவன் தன்னை விட்டு இன்னொருப் பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஓர் பேரிடி தன்னை வெகுண்டு தாக்கியது போல் தோன்றியது.தான் யாரை நம்பி வந்தேனோ அவரே தன்னை ஏமாற்றியதை நினைத்து ஒவ்வொரு நாளும் முள் பாதையில் வெறும் கால்களோடு நடப்பது போன்ற உணர்வை அடைந்தார்.எதை எதையோ தாங்கி கொண்ட இரும்பு நெஞ்சம் நம்பிக்கைத்  துரோகத்தை மட்டும் தாங்க இயலவில்லை.அவ்வபோது வந்து செல்லும் கணவனை கண்டிக்கவும் வழி இல்லை

ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்

“நீ சொல்றது சரிதான் ஸ்ரீ. அப்பல்லாம் உன் அப்பா இசையமைச்ச ஒரு படத்தில் வர்ற்ற எல்லாப் பாட்டுக்களையும் என்னையேப் பாடச் சொன்னார். இப்ப பாரு ஒரு பாட்டுக் கேட்டேன். நாலு பேர் பாடறங்க.என்ன பண்றது. உங்கத் தலைமுறைக்கு நெறைய வேணும். வேகமா வேணும். சீக்கிரம் முடியணும். அதனால இன்றைய சினிமா உன் அப்பாக்கு வராதுன்னு நானும் சொன்னேன்.. கேகே எம்மேலயும் கோபமாய்ட்டார்.”

பனிக்காலத்தின் பகல்

மறுநாள் அதிகாலை மைதானத்திற்கு சென்றபோது பனிபடர்ந்திருந்த சிறுபுற்களைப் பார்த்தபடியே நடந்தேன். இந்த டிசம்பர் மாதக் காலை எப்பொழுதும் பனியுடனே மலர்கிறது. அறுபது நிமிட நடைப்பயிற்சிக்குப் பின் மூன்று முறை மைதானத்தை சுற்றி ஓடவேண்டும். முதல் இரண்டு சுற்று ஓட்டத்திற்கு பின் மூன்றாவது சுற்று கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஆனாலும் அதுதானே இலக்கு, மூச்சிரைக்க ஓடி முடித்து நின்றபோது உடலெங்கும் வியர்த்து தொப்பலாக நனைந்திருந்தது டிசர்ட். 

ஊர்பேர்

தவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது.

ஒரு துண்டு வெயில்

நம்முடைய இறந்த காலத்தின் மடிப்புகளை வெங்காயத்தோல் போல ஒவ்வொன்றாக உரித்துப் போட. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் – எல்லோரும் தத்தம் பங்கை வசூலித்துக்கொண்டு போக வருவார்கள். தாய்- தந்தை, கணவர், நண்பர்கள். எல்லா தோல்களும் அவர்களிடம். ஒரு உபயோகமும் இல்லாத, காய்ந்து போன கடைசி குச்சி உங்கள் கையில் மிஞ்சும். மரணத்திற்குப் பிறகு அதை எரிப்பார்கள் அல்லது மண்ணில் புதைப்பார்கள். மனிதன் தனியாகத்தான் இறக்கிறான் என்று எல்லாரும் சொல்கிறார்கள்.  நான் இதை ஏற்பதில்லை. அவனுக்குள்ளிருந்த, அவன் சண்டையிட்ட அல்லது அன்பு செலுத்திய அத்தனை பேரோடும் சேர்ந்து தான் அவன் இறக்கிறான்

திருவண்ணாமலை

சென்ற வாரம் ஒரு நண்பருடன் போனில் நடத்திய உரையாடல் நினைவில் வந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த நண்பருக்கு போன் செய்திருந்தேன். திருவண்ணாமலையில் இருப்பதாகச் சொன்னார். கொச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவர் அவர். நிறுவனத்துக்கு என்னாயிற்று என்று கேட்டேன். வேலையாட்களிடம் ஒப்படைத்துவிட்டதாகச்  சொன்னார். அடேங்கப்பா….கிட்டத்தட்ட 25 கோடி வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் முதலாளி வேலையாட்களிடம் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறாரே என்று அவருடைய தைரியத்தை வியந்தேன். திருவண்ணாமலையில் வேறு ஏதாவது தொழில் தொடங்கியிருக்கிறாரோ! இல்லையாம்! ஓர் ஆசிரமத்திற்கருகே வீடெடுத்துத்  தங்கி ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்துவருகிறாராம்! மனைவியும் மகனும் கூட  விரைவில் அவருக்கு ஒத்தாசையாக அவர் பணி செய்யும் ஆசிரமத்துக்கே  வந்துவிடப் போகிறார்களாம்! 

சுழற்சி

மெயில் படிக்க ஆரம்பித்தான். “உங்களுடைய அனுபவமும், திறனும் எங்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. உங்களை போன்ற ஒருவரை தான் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு வேலை அளிப்பதில் நாங்கள் பேரு மகிழ்ச்சியடைகிறோம்.” அவனுக்குளிருந்து ஆனந்தம் வெளியே சிரிப்பாக பொங்கி வந்தது. மனதில் என்றும் அவன் அனுபவிக்காத மகிழ்ச்சியொன்று பரவியது. வாழ்கையில் ஜெயித்துவிட்டோம். இனி எந்த ஒரு எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து போராடலாம். நமக்கும் திறமை இருக்கிறது. நாம் யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. லேப்டாப்பை மூடி பைக்குள் வைத்தான். இனி வீட்டுக்கு கிளம்பவேண்டியது தான். இவர்கள் தேடுவார்கள். தேடட்டும்.

பிடிபடா சலனங்கள்

நிரந்தரமாக ஏதுமில்லாமல் ஒரு அரசியல்வாதிக்கு அடியாள் போல வாழ்வு குறித்து கொஞ்சம் அச்சமாக இருந்தது. தானும் வில்லியம் போல ஒரு அர்த்தமற்ற வாழ்க்கை கொண்டிருக்கிறோம் என நினைத்தான். இன்னும் சொல்லப்போனால் அவனுக்காவது தேட ஒரு அழகிய மனைவி இருக்கிறாள். நமக்கு என்ன இருக்கிறது? இருக்கும்வரை அம்மா தேடுவாள்? இல்லாதபோது? எனும் கேள்வி ராஜாங்கத்தை இம்சை செய்தது. அர்த்தமற்ற வாழ்க்கைக்கு பெயர்கூட அர்த்தமில்லாமல் இருப்பது குறித்து நீண்ட பெருமூச்சு வந்தபோது காவல் நிலையத்தை அடைந்திருந்தான்.

ரத்னா

பாரதியார் காலனி நகர்ப்புற வளர்ச்சித் துறையால் குறைந்த வருமானம் ஈட்டும் ஏழ்நிலைக் குடும்பங்களுக்காக கட்டப்பட்டது. வடக்கில் செல்வசிந்தாமணிக் குளம், மெயின் ரோட்டில் இருந்து வழி குளக்கரையோர சாலையாக நீண்டு காலனியைத் தொடும், மேற்கே கவுண்டர் தோட்டம், கிழக்கே தனிவீடுகள், தெற்கே முள்ளுக்காடு. ஆங்கில எழுத்துக்கள் ‘A’ முதல் ‘T’ வரை இருபது பிளாக்குகள், தளத்திற்கு நான்கு என்று இரண்டு மாடிகள் கொண்ட ஒவ்வொரு பிளாக்கிலும் இரண்டு பத்துக்குப்பத்து அறைகள் கொண்ட பன்னிரண்டு வீடுகள். இருநூற்றி நாற்பது வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டதும் 1980ல் குலுக்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

பப்பிக்குட்டி

நான் கூடையைப்  பார்த்தேன்.  வெள்ளைப் பஞ்சு மேகம் போல புசு புசுவென்று  ஒரு அழகான குட்டி. பிறந்து சில வாரங்கள் தான் ஆகி இருக்க வேண்டும். பொமேரேனியன்  வகை என்று நினைத்தேன்.  கூடையின் பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாள் நின்று கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார். “ஆமாங்க, நம்ம பேரப்  பிள்ளைங்களுக்குத் தாங்க.  போன மாசம் தான் குட்டி போட்டது. எழுபதாயிரம்  கேட்டாங்க. நாங்க  அம்பதுக்கு  பேசி முடிச்சிட்டோம்”.

மாநகரம்

இரு நிமிட அமைதி. திடீரென குடிகாரன் திமிறி முன்னால் ஒரு அடி எடுத்து வைக்க சேகரின் பிடி நழுவியது. குடிகாரனின் சட்டைக் காலரை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த காவலன் அவனைப் பின்னால் இழுத்தான். குடிகாரன் முன்னே செல்ல முடியாமல் திணற அவன் கையைப் பிடித்து முறுக்கிய சேகர் “த்தா எங்க போற?” என்று அதட்டினான். குடிகாரன், “சார் சார் சார், வலிக்குது… விடுங்க விடுங்க” என்றான்.

பூனைகளின் குருதியாறு

துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலையைத் தேடி ஒரு குழு இரு படகுகள் மூலம் நேப்பியர் பாலத்துக்கு அருகிலான கூவத்தின் சாக்கடையில் தேடிக் கொண்டிருந்தபோது, ஜீப்பில்  செம்மஞ்சள் பூனையை வைத்துக் கொண்டு, இன்ஸ்பெக்டர் பூனை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று விசாரித்துக் கொண்டிருந்தது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்த அந்தச் செம்மஞ்சள் பூனை எந்த விசாரணைக்கும் மறுப்பு தெரிவிக்காமல் அழைத்த இடத்துக்கெல்லாம் சென்று முழு ஒத்துழைப்பு கொடுத்தது. “என்னய்யா… உன் ஒருத்தனால, எத்தனை பேருக்குக் கஷ்டம் பாரு. உண்மையைச் சொல்லிடுய்யா.’

எச்சத்தாற்பாகம்படும்

பதினொன்றரை மணிக்கு இண்ட்ரோல் பெல் அடித்தார்கள்.  அப்போது  என் அப்பாவை நான் பார்க்கவில்லை.  பள்ளிக்கூட  ஆசிரியரோ மாணவரோ ஆண்கள்  யாருக்கும் கக்கூஸ் கிடையாது. ஹெட்மாஸ்டருக்கும் இல்லைதான்.  பேருந்து செல்லும் சாலையோரம் தான் எல்லோருக்குமே எதற்குமே. பெண்பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டிடத்திற்குப்பின்புறம்  சிமெண்ட் ஷீட் போட்டு  ஒரு மறைப்பு கட்டி வைத்திருந்தார்கள். அதனுள்ளாக என்ன வசதியிருக்குமோ யார் அறிவார்.

குற்றம் கழிதல்

வெள்ளிக்கிழமைகளில் வேலைத்தள நண்பர்கள் மதியம் சாப்பிட டவுண்ரவுணிலிருக்கும் பலவிதமான உணவகங்களுச் செல்வது வழக்கம். கவிதா வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது கிழமையே ஹலன் அவளுக்கு லன்ஞ் இன்வரேஷன் அனுப்பியிருந்தாள். எங்கு செல்வதென்றாலும் சந்திரனோடு செல்லப் பழகியிருந்த கவிதாவிற்கு உடனே என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் மனம் சந்தோசத்தில் துள்ளியது. இது ஒருவகை புதிய அனுபவம். வேற்று இனத்தவர்களுடன் ஒன்றாக ரொறொன்டோ மத்தியில் இருக்கும் நவீன உணவகத்திற்குச் சென்று மதிய உணவு உண்பதை நினைக்கும் போது த்ரில் ஆக இருந்தது. இருந்தாலும் தான் கொண்டுவந்திருக்கும் சாப்பாட்டை என்ன செய்வது, எப்படியான உணவகத்திற்கு செல்லப் போகிறார்கள், எவ்வளவு காசு முடியும் இப்படிப் பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தாலும், “ தாங்ஸ் வில் ஜொயின்” என்று பதில் போட்டாள்.

தெளிவு

“சரி… ஒங்க பெரியப்பா ஊரவிட்டு போனது தெரிஞ்சதும் ஒங்க ஆச்சிதான் போலீசுல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திட்டு வாங்கன்னு சொன்னா. அங்க போனா கம்ப்ளைன்ட வாங்க மாட்டேனுட்டாங்க. எழுபது வயசுக்கு மேலானவங்கள காணாமுன்னு கேஸ் பதிஞ்சா ஆளு கெடைக்கிற வரைக்கும் நிலுவையிலேயே இருக்கும். பல தடவ ஆளுங்க அம்படறதேயில்ல. அந்த மாதிரி பல கேஸுங்க அப்படியே கெடக்குன்னுட்டாங்க”

வயோதிகம்

யுஸெல்கோவ் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தான்; கொஞ்ச நேரம் சிந்தனை செய்துவிட்டு ஷாப்கினை அவனுடைய அலுவலகத்தில் சென்று சந்திப்பதென சலிப்பாக முடிவெடுத்துக் கொண்டான். உணவகத்தை விட்டு வெளியே வந்து கிர்பிட்சினி தெருவை நோக்கி இலக்கற்ற மெது நடையில் அவன் சென்ற போது நண்பகலாகியிருந்தது. ஷாப்கினை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்தான்; அவனை அடையாளம் கண்டுகொள்ளவே சிரமமாக இருந்தது. நல்ல உடலுடனும் துடுக்குத்தனமானவனாகவும் குடிபோதையேறிய முகத்துடனும் திறமை மிக்க ஒரு வழக்கறிஞனாக நடந்து திரிந்த ஷாப்கின் தற்போது அமைதியான, நரைத்த தலையுடன் அடங்கி ஒடுங்கிய ஒரு கிழவனாக மாறிப்போயிருந்தான்.

வோல்காவின் வால்

நாங்கள்  என்ன தான் திட்டத்தை  இரகசியமாக வைத்திருந்தாலும், அது  கசிந்து விட்டது.   பெரும்பான்மை நாய்களுக்கு இந்த திட்டத்தின் தாக்கம் தெரியவில்லை. அவர்களின் கவனம் எப்போதும் அன்றாட உணவு தான்.  சில அறிவு ஜீவிகளுக்கு  திட்டம் புரிந்தது. ஆனால்  சரியா தவறா   என்று முடிவு எடுக்க இயலவில்லை. ஒரு சிறு பான்மையினருக்கு திட்டம் கொஞ்சம் கூட பிடிக்க வில்லை. ஏனென்றால் பலருக்கு அந்த  காவலர்களுடன் நல்ல நட்பு.  மனிதர்  போட்ட உணவை  உண்டு  துரோகம் செய்வது கண்டிப்பாக நாய்க்குணம் இல்லை  என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து இருந்தது.ஆனால்  வோல்காவை எதிர்த்துப் பேசும் தைரியம் யாருக்கும் இல்லை.  ஆனால் அத்தனை  குழுக்களும் விழித்திருந்து உறு  துணையாக இருப்பது என்று முடிவு எடுத்தன.  

பொன்டெங்

“என் மகன் இப்போது தொடக்க நிலை நான்கில் படிக்கிறான். அவனுக்குத் துணைப்பாட வகுப்பு, பள்ளியில் உள்ள மாணவர் பராமரிப்பு நிலையத்துக்கு வெளியே சில நூறு மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அவன் சரியாக வகுப்புக்குப்போகிறானா என்பதைக்கண்காணிக்க இது நிச்சயம் உதவும்”
அதிர்ச்சியாக இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல், தட்டிலிருந்து உணவை மென்றேன்.

சபிக்கப்பட்ட வீடு

வைக்கோம், “என் வாழ்க்கையில் இவ்வளவு உறுதியாக இதுவரை இருந்ததே இல்லை, என் நண்பரே” என்று பதிலுரைத்தான். “நான் முன்னமே சொன்னேன், மறுபடியும் சொல்கிறேன், வாடகையை குறைக்கத்தான்போகிறேன்”.
ஐயா நீங்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். நீங்கள் இதற்காக இம்மாலையே வருந்துவீர்கள். வாடகைதாரர்களின் வாடகையை குறைப்பதா? இதுவரை கேள்விப்பட்டிராதது ஐயா. வாடகைதாரர்கள் இதைப்பற்றி அறிந்தால் என்ன நினைப்பார்கள்? நம் அயல் குடியிருப்பாளர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்கள்? நிஜமாகவே…

பசி

நன்றி சொல்லக்கூட நேரம் இல்லாம அந்த விளக்குகளை நோக்கி ஓடினேன். நினைத்தபடியே ஒரு மலாய்க்கார ஆடவர் சில உணவுப் பொருள்களை விற்றுக்கொண்டிருந்தார். அவசரத்துக்கு நாசி கோரேங்கும் பொறித்த கோழியும் வாங்கித் தின்றுவிட்டு…… தின்றுவிட்டுத்தான்…(சாப்பிட்டு விட்டல்ல என்று தெளிவுபடுத்திக் கொள்கிறேன்) பேருந்துக்குத் திரும்பினேன். என் ஒருவனுக்காக மட்டுமே காத்திருந்ததுபோல், நான் ஏறியதும் பேருந்து நகரத் தொடங்கியது. பசி தன் வாலைச் சுருட்டிக் கொண்டு உறங்க ஆரம்பித்தது. சாலையில் மெதுவாய் ஊரத் தொடங்கிய பேருந்து, சற்று நேரத்தில் வேகமெடுத்தது. பின்னால் திரும்பிப் பார்த்தேன். சீனக் குமரிகள் இன்னும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி

“கோவப்படாத அம்பலண்ணே! மயினி இருக்காளான்னுதான் பாத்தேன். இந்த நேரம் பாக்க வந்ததுக்கும் காரியம் உண்டு. இப்பம் நான் பேசப்பட்ட விசயம் ஒரு குருவி அறியப்பிடாது, கேட்டயா? நீ மட்டும் மனசோட வச்சுக்கிடணும்…” “அப்பிடி என்னடே அந்தரங்கம்? எங்கயாம் கூட்டத்திலே தற்கொலைப் படை தாக்குதல் நடத்த அச்சாரம் வாங்கீருக்கியா? நீ குண்டு கூட வைக்காண்டாம்… கூட்டத்திலே நிண்ணு குசு விட்டாப் போதும்… பத்துப் பேரு தலை சுத்தி விழுவான்… தேரை இழுத்துத் தெருவுலே விட்டிராதடே கொள்ளையிலே போவான்…”

தொடர்பிற்கு வெளியில்

மூத்தவன், தான் திருமணமாகாமல் இருக்கும்போது வேறு ஜாதிப் பெண்ணை கட்டிக்கொண்டான், தனக்கு அடுத்திருக்கும் தங்கைகளின் வாழ்க்கையைப் பற்றிய அக்கறையில்லாதவன்’ என்ற பெரிய மாமாவின் பராதியை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று அம்மா அத்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த ஒரு பிற்பகலில் நான் அத்தையின் மடியில் படுத்திருந்தேன்.நான் தூங்கிவிட்டதாக எண்ணி, “பெரியவருக்கு என் மேல வேறக் கோவம். கல்யாணத்துக்கு முந்தி நான் அறிவொளி வவுப்பு எடுக்கப் போயிட்டு இருந்தேன். ஒருநா.. இவரு பெட்டிக்கடையோரமா சிகரெட் பிடிச்சுட்டு நின்னாரு..பெரியத்தானாச்சேன்னு சிரிச்சேன். அன்னைல இருந்து கரெக்ட்டா நான் வர்ற நேரம் ஆஜர் ஆகிருவாரு.. பாவமா இருக்கும்,” என்றாள் அத்தை

அத்திம்பேர்

This entry is part 4 of 4 in the series 1950 களின் கதைகள்

குமரநாதன் வயதில் ஒரு பையன். அதற்கு ஓவியர் வரைந்த படத்தை வெகுநேரம் ரசித்தான். தலை தீபாவளிக்கு அத்திம்பேர் வரப்போகிறார். அவன் அக்காவை அவர் பறித்துக்கொண்டதாக அவர் மேல் அவனுக்குக் கோபம். அவரை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்துவர அப்பாவுடன் போகவில்லை. வீட்டிற்கு வந்ததும், ‘அவருடன் பேசமாட்டேன். அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட மாட்டேன். அவருக்குப் பிடித்த சேமியா பாயசம் எனக்கு பாய்சன்’ என்று எதிர்ப்பு காட்டுகிறான். அவர் அவன் மனநிலையைப் புரிந்துகொண்டு அவனை அன்புடன் நடத்துகிறார். அவனுடன் பரிவாகப் பேசுகிறார். கடைசியில் அவன் சமாதானமாகப் போகிறான். 

ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும்

பிரேமா மூடிய கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டே அடுத்த பாடலை ஓடவிட்டாள். அவள் காதுகளில் ஒரு ரயில் மெதுவாக டுடுன் டைன்டுடுன் டுடுன் டைன்டுடுன்… என்று தீனமாக ஆரம்பித்து வேகமெடுத்து பாலத்தில் ஓடும்போது பாடலில் ஓ சாயா…(O saya) என்று ரஹ்மானின் குரல் ஆரம்பித்தது. ரயில் இன்ஜின் ஓசை, இரும்புடன் இரும்பு சேர்ந்தோடும் ஓசை, ஓடும் ரயிலில் கதவைத் திறந்து வாசலில் நின்று தலையை வெளியே நீட்டி மனம் விட்டுக் கத்தினால் வரும் ஓசை போன்ற அர்த்தம் இல்லாத ஓசைகள் அந்தப் பாடலில் இசையானது.

பிரம்ம சாமுண்டீஸ்வரி

எந்த அவசரமும் இல்லை. என் மனதிற்குள் அம்மா திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து கொண்டே இருந்தாள். இப்படி ஒரு நாளில் தானே அம்மாவும் தூக்கு போட்டுக் கொண்டாள். இதே போலத்தானே அம்மாவும் நிர்வாணமாக பிணவறையில் கிடந்தாள். அவளையும் இப்படித்தானே கட்டினேன் மனம் நினைவுகளால் அலைகழிந்தது. நீண்ட பெருமூச்சுடன் கண்களை இறுக மூடிக் கொண்டேன்.நாற்றம் ஒரு சுழல்.அதில் தான் எல்லா கசடுகளும் இருக்கிறது என்பதைப் புரிய எத்தனை காலம் ஆகித் தொலைக்கிறது ? அதை புரிந்து கொள்வதற்குள் காலத்தின் முடிவே வந்து தொலைத்து விடுகிறது. 

பெருங்கரடி: கிரெக் பேர் பற்றிய நினைவுகள்

கிரெக் பேரை நான் முதன் முதலில் எப்போது சந்தித்தேன் என்று நினைவில்லை, ஆனால் எங்கள் ஆரம்பகால சந்திப்புகளில் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன், மெதினா நகரிலிருந்த ஒரு கோடீஸ்வரரின் அடக்கமான ஆனால் உச்ச நிலை தொழில் நுட்பம் கொண்டிருந்த வீட்டில் (இதற்கான பாராட்டுகள் அவர் மனைவிக்கே சேரும்) நேர்ந்தது. (அந்தக் கோடீஸ்வரரின் பெயர் இங்கு தேவையில்லை.) கிரெக்கும் நானும் புத்தகங்களைப் பற்றி உரையாடினோம். 

ஒந்தே ஒந்து

சுவாமிநாதன் குமரநாதனின் நெருங்கிய நண்பன். அவன் பெற்றோர்கள் பல மாநிலங்களில் வசித்ததால் அவர்களுக்குப் பல மொழிகள் பழக்கம். அச்சமயம் அவன் தந்தை பெங்களூர் விமானப்படை அதிகாரிகளின் பயிற்சியில் இருந்தார். கன்னடம் தமிழ் மாதிரிதான். பல வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒண்ணா இருக்கும்.ஒன்று இரண்டு மூன்று… எப்படி சொல்லணும்? 

உன் பார்வையில்

பாட்டிலைக் காண்பித்து அவர்கள் போனதும் மீதமிருக்கும் இரு மடக்கு பியரை குடித்துவிட்டுப் போகலாம் என்று விக்னேஷ் உன்னிடம் கண் ஜாடையில் சொல்கிறான். நீ வேண்டாம் என்று தலையசைத்து பாட்டிலை வீசச் சொல்லி கண் காட்டுகிறாய். விக்னேஷ் மறுத்துத் தலையசைத்துச் சிரிக்கிறான். திடீரென ஒரு சைரன் ஒலி கேட்கிறது. சாலையில் ஒரு போலீஸ் ஜீப் தலையில் சுழலும் விளக்குகளோடு வந்து நிற்கிறது. உங்களுக்கும் ஜீப்புக்கும் நடுவே நிற்கும் பாஸ்கரும் ஜெயபாலும் சல்யூட் அடிக்கின்றனர். ஜீப்பின் முன்னிருக்கையிலிருந்து திரண்ட உடல்வாகுடன் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு காவல் அதிகாரி இறங்குகிறான்.

வானம் பொழிகிறது பூமி விளைகிறது

போவதற்கு முன் தயிர் சாதம். திரும்பிவந்ததும் ஒரு தம்ளர் மோர். மறுநாள் வீட்டில் தங்கியவர்களுக்குக் கதை சொல்ல வேண்டும். கடைசி காரியம் தான் சிரமம். நடுநடுவில் நிறுத்தி சங்கரி விவரம் கேட்பாள். ‘குளிகை சாப்பிட்டதுமே ராணி கிளியா மாறிட்டாளா? அது எப்படி?’ பதில் தெரியாமல் அவன் முழிப்பான். இந்த தடவை. கவனம் சிதறாமல் திரையில் வைத்த கண் எடுக்காமல்…

காரியம்

அவனது பேச்சு செய்யும் தொழில் பற்றி தாவியது. மரியாதைக்குக் கூட அவன் என்னைப் பற்றி விசாரிக்காமல் இருப்பது எனக்கு துக்கம் தருவதாக இருந்தது. தொழிலில் அவனது சாம்ராஜ்யம் எப்படி நீண்டது என்று குறித்து விளக்கும் போது என்னிடம் இருந்த வெள்ளரி தீர்ந்து போயிருந்தது. இதை எப்படி அவன் கவனித்தான் என்று தெரியவில்லை அவனிடம் இருந்த பொறித்த சிக்கன் துண்டுகளை கொண்ட தட்டை என்னிடம் தள்ளினான். நான் மறுக்காமல் எடுத்துக்கொள்வேன் என்று நினைத்துவிடக்கூடாது என்பதால் மறுத்தேன். இதை எடுக்காவிட்டால் நம்மிருவருக்கிடையே இனி ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எழ முற்பட்டான். நான் சிக்கனை எடுத்துவிட்டேன் ஆனால் வாயில் வைக்கவில்லை. வெகுநேரம் அப்படியே இருந்ததால் மீண்டும் கோபித்துக்கொண்டான். சிக்கனை எடுத்து வாயில் வைத்ததும்தான் மீண்டும் இயல்பானான்.

யார் ஐரிஷ்காரர் ?

இப்போதெல்லாம் என்னோட அழகான பொண்ணு அத்தனை களைச்சுப் போய் வரா, அவ அந்த நாற்காலியில உட்கார்ந்ததுமே தூங்கிப் போயிடறா. ஜானுக்கு மறுபடியும் வேலை போயிடுத்து, ஆனா அவங்க என் உதவியைக் கேட்கறத்தை விட்டுட்டு, இன்னொரு ஆயாவை குழந்தையைப் பாத்துக்கற வேலைக்கு அமர்த்தி இருக்காங்க, அவங்களுக்கு அது கட்டுப்படி ஆகாதுன்னு இருந்தாலும் பரவாயில்லையாம். வேற எப்படி இருக்கும், அந்தப் புது ஆயா ரொம்ப வாலிபம்தான், குழந்தையோட ஓடி ஆடித் திரிய முடியறது.

கிரியை

ஒரு நிமிடத்தில் சாலை சீதோஷ்ணம் மாற ஆரம்பித்தது. ஊர்தி ஓரமாக ஒதுங்க, நடந்து போன மக்களும், ஆடிக் கொண்டிருந்தவர்களும் சாலையின் இடப்புறமாக வரிசை கட்டி ஒதுங்கிக் கொண்டார்கள். வெடி வைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. நெற்றி வழிய திருநீறு பூசி ஈர வேட்டி அணிந்து மீசை, தலை சிகை மழித்துக் காணப்பட்ட ஆள் ஆம்புலன்ஸைப் பார்த்து ‘வழி விட்டாச்சு, வேகமா ஆஸ்பத்திரி போங்க’ என்று உரக்க முழங்கினான். தடைகள் விலக சீரான வேகத்தில் ஆம்புலன்ஸ் ஜீவனுடன் ஜீவனற்ற ஊர்தியைத் தாண்டிப் போனது.
பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ நொறுங்குவது போல மனம் ஊசலாட்டம் கொண்டது. உணர்வு, புத்தி, திட்டம் என்று வகுத்துப் பார்த்த யோசனை நீடிக்கவில்லை. உணர்வு மேலோங்கியது. சகலமும் துறந்தவன் பர்ஸில் சில ஆயிரம் ரூபாய் தாள்களை எண்ணிப் பார்த்தான். நான்கைந்து விஸிட்டிங் கார்டுகளை லைட்டர் துணையுடன் சாம்பலாக்கி எழுந்தவன், ஒரு கேரி பேக்கில் பர்ஸை வைத்துக் கட்டி எழுந்தான்.

பிரதிபிம்பம்

பெரும் செல்வம் படைத்தவன், ஏன் ஒரு பசுவைக் கொடுக்க மறுத்தான்? நீ என்ன நினைக்கிறாய்?’
‘அவன் நாட்டைக் கேட்டது அந்த நிமிஷத்தில் எழுந்த கோபம். தான் என்னதான் தவறு செய்திருந்தாலும், அதற்காக நான் சினம் கொள்வேன், சபையில் அந்த சினத்தை வெளியே காட்டுவேன் என்று அவனுக்கு தோன்றியே இருக்காது. நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அடித்திருந்தாலும் அது அவனுக்குத் தவறாகத் தெரிந்திருக்காது. அந்தக் கணம் வரைக்கும் அந்த உரிமை கொண்டவன் நான் ஒருவனே, ஏன் இன்றும் அந்த உரிமை கொண்டவன் நானே!’ என்று துருபதர் சொன்னார்.

அந்துப் பூச்சி

“புதுசா வேலைக்கு சேர்ந்தவங்க எல்லாம் இருக்காங்க… நான் மட்டும் என்ன?” என்று விக்கத் துவங்கியவள் முகத்தை அழுந்தத் துடைத்தபடியிருந்தாள்.

அழுது முடிக்கும் வரை பொறுமை காத்தேன். அமைதியான அவ்வறையில் என் தலைக்கு மேல் இருந்த மின்விளக்கில் டங்.. டங் என்று பூச்சியெதோ மோதும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

சிறுது நேர மௌனத்திற்குப் பிறகு “ஸாரி, ரெஸ்ட் ரூம் போய் வருகிறேன்” என்றபடி வெளியேறினாள்.

“நேற்றும் ஒரே அழுகை, நான் சாகத்தான் செய்யணும்னு என்னவெல்லாமோ சொல்லிட்டு இருந்தாங்க.”

தியேட்டர் இல்லாத ஊரில்

மாத்தையப் படம் ஒளிபரப்பப்படவிருக்கும் அன்றைய இரவை முன்னிட்டு அன்று பின்னேரமே நான் மாமியின் வீட்டுக்குப் புறப்பட்டு விடுவேன். இந்தப் பயணத்தில் என்னுடன் என் மூத்த சகோதரங்களான மர்ழியாவும் மர்வானும் இணைந்துகொள்வார்கள். மர்வான் படம் பார்ப்பதற்காக என்னை விட கடுமையாக முண்டக்கூடியவன். சத்தமில்லாமல் ஒரே நாளில் ஒன்பது படம் ஒரு முறை பார்த்திருந்தான்.
ஆனால் சிலவேளைகளில் இந்த மாத்தையப் படமும் கைகொடுக்காமல் விட்டு விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அப்போதெல்லாம் மனம் ஒரு எரிமலைபோல் வெடித்துக் குமுறும். சிலநேரங்களில் மாத்தையப் படம் ஓட இருக்கும் இரவாகப் பார்த்து கரண்ட் போய் விடும்.

திருக்கூத்து

அந்த கோயில்ல பூசன பண்ணின பண்டாரங்களால வாய்மொழியா சொல்லப்பட்ட கதைகளும் பாடல்களும்தான் பண்டார நூலா இன்னக்கி இருக்கு. அந்த நூல தொகுத்தவர் சின்னப் பண்டாரம். அவர் அந்த நூலுக்கு இட்ட பெயர் திருநடம். ஆனா பண்டார நூலுங்குற பெயர்தான் நெலச்சிருக்கு. அந்த நூல் பெருவெள்ளங்களப் பத்தி பேசுது. மொத்தம் நூற்றியெட்டு தடவ அங்க வெள்ளம் வந்து ஊர நீர் சூழ்ந்திருக்கு. ஒவ்வொரு முறையும் உச்சிகால பூஜையோட மழை வலுத்து வாரங்களுக்கு தொடர்ந்திருக்கு.

ஏகபோகம்

This entry is part 3 of 4 in the series 1950 களின் கதைகள்

மறுநாள் அப்பாவின் வருகைக்கு ஆவலுடன் காத்திருந்தான். ஐந்து மணியில் இருந்தே வாசற்படிக்கட்டு அவனை ஒட்டிக்கொண்டது.
சைக்கிளின் பின்னால் செய்தித்தாளில் சுற்றிய பெட்டி.
“ஆகா!”
“சௌந்தரம்! ஜாக்கிரதையாப் பிரி!”
உள்ளே. செக்கர்ஸ்-பாக்கேமன். மடிக்கும் அட்டையின் இரு பக்கங்களில் இரண்டு ஆட்டங்கள். தேவையான காய்கள், பகடைகள்.
குமரநாதனுக்கு அழுகை வரும்போல இருந்தது.
“இதை ஆடினா மூளைக்கு நல்லதுன்னு சொல்லிக்கொடுத்தான். செஸ் மாதிரி அவ்வளவு கஷ்டமா இருக்காதாம்.”

சில்லறைகள்

நான் தெரியும் என்று தலையாட்டினேன். அவள் தொடர்ந்தாள், “துர்கா பூஜைக்கு கொல்கத்தா எங்கும் வெச்சு வணங்கும் துர்காமாவோட மண் சிலை இருக்கே? எங்களை மாதிரி ஒரு பொண்ணு வீட்டுக்கு பூசாரி வந்து வேசி வீட்டுவாசல் மண் வாங்கி கலக்காமல் எந்த துர்கா சிலையும் செய்ய மாட்டாங்க. மரியாதையைப் பத்தி நீ எங்ககிட்ட பேசறயா? கிளம்பு இங்க இருந்து.”
பேசிவிட்டு அவள் நகர்ந்துவிட்டாள்.