அறிவியல் கொள்கைகளுள் அழகானது

ஜூரிச் (Zurich) பல்கலையில் சேர்ந்த பிறகு, இயற்பியல் கல்வியில் முழுதாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு, 1905ம் ஆண்டில்,அக்காலத்தின் முதன்மையான அறிவியல் இதழான Annalen der Physikக்கு மூன்று கட்டுரைகளை அனுப்பினார். அந்த ஒவ்வொரு கட்டுரையும் நோபல் பரிசு பெறும் தகுதி கொண்டது. முதல் கட்டுரை பொருட்களில் அணுக்கள் இருப்பதை உறுதியாக விளக்கியது.

கதவு

” பஞ்சாயத்துல தீர்வை பாக்கி கட்டலைன்னு, நேத்து சாய்ந்தரம் கதவ கழட்டி கொண்டு போய்ட்டாங்க. விடிஞ்சா, என் கடைசி பொண்ணு தங்கத்தை, பொண்ணு பார்த்து பரிசம் போட வராங்க. அடுத்த முகூர்த்த தேதியில கல்யாணம் முடிவாயிரும்.இப்ப இப்புடி ஒரு சூழ்நிலை. எனக்கு உதவி பண்ணு கந்தா” என்று பொன்னுசாமி கண்ணீர் விட்டு கலங்கி நின்றபடி கேட்டார்.

பாழ் நிலப் படுவம்

தீவு கப்பல் விமானம் விசைப்படகு
சொகுசு வாகனம் வணிக வளாகம்
மருத்துவப் பொறியியல் கலைக் கல்லூரி
மருத்துவமனை வணிக வளாகம் சாராய ஆலை
மாளிகை நட்சத்திர விடுதி மலைத்தோட்டம்
கடலலைகள் கால் தழுவும் பங்களா
சினிமா கொட்டகை காடுகள் தோட்டம் துரவு

எட்டு கவிதைகள்

மேகம் மறைப்பதனால்
மேரு இல்லையென்றாகிடுமா?
காகம் கரைவதொன்றே
கானமழை என்றிடவோ?

சண்டிகா

என் கட்சிக்காரர் தான் சுமக்கும் மூன்றாவது கருவை சட்டப்படி அழிக்க நினைக்கிறார். அவர் கணவரின் முழு சம்மதமும் இதற்கு இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்து ஒராண்டுதான் ஆகிறது. உடல் உபாதைகள், மன நோய்க்கான சிகிச்சைகள் என்று அவர் தெம்பற்று இருக்கிறார்

மிளகு  அத்தியாயம் ஐம்பத்தெட்டு

அது தவறான தகவல் அம்மா, முற்றிலும் தவறானது என்று ரஞ்சனாவிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார் பெத்ரோ துரை. ரஞ்சனா அழ ஆரம்பித்து அழுகையூடே சொன்னாள் – எப்படியோ, நான் சேவை சாதிக்க வேண்டும் என்றால், அப்படி இருந்தால் தான் மகாராணிக்கு ஆபத்து ஏதும் இருந்தால் நீங்கும், என்னுடைய உடல் உங்களுக்கு கிட்டினால் தான் இந்த ஜெரஸூப்பா நிலப் பிரதேசத்துக்கு வரும் இடர் தீருமென்றால், என்னை எடுத்துக் கொள்ளுங்கள்.

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 8

This entry is part 8 of 8 in the series கணினி நிலாக்காலம்

90 -களில், லோடஸ் என்ற நிறுவனம் நோட்ஸ் (Lotus Notes) என்ற மென்பொருளை அறிமுகப் படுத்தியது. இந்த மென்பொருளை நிறுவி நான் வேலை செய்த நிறுவனத்தில் பயனர்களிடம் போராடிய தருணங்கள் இன்று வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அந்த காலத்தில், மிகவும் நொந்து போகும் ஒரு விஷயமாக இருந்தது. இந்த நோட்ஸ் மென்பொருளில், ஒத்துழைப்பு மற்றும் மின்னஞ்சல் போன்ற விஷயங்கள் அடக்கம்.

தில்லையாடி வள்ளியம்மையின் சொந்தக்காரர்

நானும் இங்க இருந்தப்ப சாதி எல்லாம் பாத்த குடும்பத்துக்காரந்தாங்க. அது பாருங்க தில்லயாடிக்குள்ளே அங்காளி பங்காளிக்குள்ளேயே தகராறுதான். ஆனால் நூறு மைல் தாண்டி திருச்சிக்கு போனா நம்ம சாதின்னு யார் கிட்டயாவது போய் ஒட்டிக்கிடுறோம். மெட்ராசுக்கு வந்தா தஞ்சாவூர் திருச்சி ஜில்லாகாரங்க சிநேகிதம் பிடிச்சுக்கிடறோம். டெல்லிக்கு போனா? தமிள் பேசறவன் எல்லாம் சிநேகிதன்

அதிரியன் நினைவுகள் -26

This entry is part 25 of 25 in the series அதிரியன் நினைவுகள்

மார்க்-ஆண்ட்டனிக்கு அவருடைய இறுதி  யுத்தத்திற்கு முன்பாக சில சகுனங்கள் தோன்றின அதுபோல அன்றைய இரவும், காவல் தெய்வங்கள் பணிநேரம் முடிந்து விடைபெறும்போது ஒலிப்பவை என சொல்லப்படுகிற  இசை மெல்லமெல்ல விலகிச்செல்வதைக் காதில் வாங்கினேன்… ஆனால் அதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளத் தவறினேன்.

வாள்போல் வைகறை

ஜப்பானிய அரசகுடும்பத்தின் திருமணங்கள் பெரும்பாலும் பலதாரமணங்களாகவே இருந்தன. அரசியல் காரணங்களும் அடங்கும். பெண்ணின் தந்தையும் அரசரும் சேர்ந்து இதை முடிவு செய்வார்கள். மணமுறிவுகளும் அதிகம் இருந்தன. அதிகச் சிக்கல் இல்லாத முறிவுமுறையும் வழக்கத்தில் இருந்தது.

சித்திரம்: அருண்

சிவிங்கி – அத்தியாயம் நான்கு

This entry is part 4 of 4 in the series சிவிங்கி

எல்லாப் போர்களும் நிகழ்ந்ததாகக் கருதப்பட்டன. ஒரு துப்பாக்கி வெடித்துக்கூட சம்பவம் ஆனதில்லை எதுவும். ஏதேதோ காரணம் காட்டி நடந்ததாகக் கருதப்படும் யுத்தங்கள் அவை.   யுத்தம் எதையும் பிரபஞ்சம் இனித் தாங்காது.  ஏழு இரவு, ஏழு தினம் வானத்தைப் பார்த்து விளையாட்டுத் துப்பாக்கி சுட்டு நடைபெற்ற சமர் இவற்றில் முக்கியமானது. அரசு இரண்டாகப் பிரிந்து இரு வகுப்புக்கும் நிதி உதவி செய்து நிகழ்த்திய வீடியோ விளையாட்டுப் போர் இது. பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட சம்பவமாகும். 

காணாமல் போன ஐந்து நாட்கள்

பால்கனி தொட்டிச் செடியில்
புதிதாய் டேபிள் ரோஸ்
இரண்டு சாம்பல்
ஒரு கருப்பு நிற குட்டியை
ஈன்ற தாய்ப் பூனை
உக்கிரம் குறைந்த வெயில்
பைனலுக்கு முன்னேறிய கிரிக்கெட் அணி

லாவண்டர்

லாவண்டர் தீக்காயங்களை ஆற்றும், நல்ல உறக்கம் வரவழைக்கும் படபடப்பு மற்றும் மன அழுத்தத்தை குறைத்து நல்ல அமைதியை அளிக்கும். தசை பிடிப்பு மூட்டுவலி ஆகியவற்றிற்கும் லாவண்டர் எண்ணெய் நல்ல நிவாரணம் அளிக்கும். லாவண்டர் உண்ணத்தக்கதும் கூட

தொட்டால் பூ மலரும்

ப்ரோஸ்தெடிக் கரங்கள் அல்லது ரோபோடிக் கரங்களின் பரப்பில் இந்த உணரிகள் இடம் பெறும்போது, அவை இலாகவமான, தொட்டுணரும் தன்மையைக் கொடுக்கின்றன. இந்த உணரிகள் இடம் பெறும் தோலினால் அமையும் ரோபோக்கள், முட்டையை உடைத்தல், சிறு பழத் துண்டுகளை எடுத்துச் சுவைத்தல் போன்ற சின்னஞ்சிறு செயல்களுக்கும் உதவும். மனிதத் தோலைப் போலவே இந்த உணரியும் மிருதுவாக இருப்பதால், மனிதர்களுடன் செயல்படும்போது ஆபத்து விளைவிக்காமலும், மென்மையாகவும் மனித வாழ்க்கைக்கு ஒத்துப் போகிறது.