அவ்வியற்கையின் துளியோடு
ஏகாந்தத்தில் இசைந்தபடி
எதிர்பாராத ஒரு கணத்தில்
என் புத்தியில் விரிகிறது
படித்தவையும்… படிந்தவையும்…
மலர்ந்து நிற்பது மட்டுமே
என் இறையடியின் தருணம்
என காற்றில் அசைகின்றன
பறிக்க இயலாத எட்டாத பூக்கள்.
Author: நா. சந்திரசேகரன்
நா. சந்திரசேகரன் கவிதை
அலைகளின் இடைவெளியில்
விரைந்து வளைபுகும் சிறுநண்டுகள்.
அப்போதுதான் உணர்ந்தேன்
அலை கொணரும் வரிகள்
வேறு வேறென!
ஆமென்று ஆர்ப்பரித்து
ஆடை நனைத்துச் சென்றது ஓரலை
