“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 4

This entry is part 48 of 48 in the series அதிரியன் நினைவுகள்

சக்கரவர்த்தி அதிரியனுக்கு எப்போதுமே அனைத்தையும் தெரிந்துகொள்வதில்   பொதுவாகவே ஆர்வமுண்டு. அத்தகைய  மன்னரைப்பற்றிய துல்லியமான செய்திகளையும்; போர் மற்றும் அமைதி விவகாரங்களில் அவர் காட்டிய ஆர்வத்தையும்; செதுக்கப்படும் சிலைகள், அவற்றின் மூலத்துடன் ஒத்திருக்கவேண்டுமென்கிற அவருடைய இரசனை குறித்தும்; அக்காலத்திய கவிதைகள் மற்றும் கட்டுக்கதைகளில் மன்னர் காட்டிய ஈடுபாடுபற்றியும் அறிவதற்கு, வேறு ஆவணங்கள் இல்லாத நிலையில், கருங்கடல் பயணம் சார்ந்து பேரரசர் அதிரியனுக்கு, அர்ரியன் எழுதிய கடிதங்கள் நமக்கு உதவுகின்றன

“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 1

This entry is part 45 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார் தமிழாக்கம் : நா.கிருஷ்ணா குறிப்பு வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு, கிரேக்க வரலாற்றின் அடிப்படையில் அதிரியின் நினைவுகள் என்கிற இப்புதினத்தைப் படைத்த மார்கெரித் யூர்செனார் இந்நாவல் உருவாக்கத்திற்கான கூறுகளை ஒன்றிணைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் பிறவற்ரையும் தமது வாசகர்களுடன் பகிர்ந்துகொணடுள்ளார். தமிழ்வாசகர்களுக்கு  பயனளிக்கக் கூடுமென்கிற நம்பிக்கையில், நாவலின் ““அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 1″

அதிரியன் நினைவுகள் – 45

This entry is part 44 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மருந்துகளால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை என்கிற நிலைமை. கைககால்களில் வீக்கம் கூடியிருந்தது. இப்போதெல்லாம் படுத்து உறங்குவதில்லை ; உட்கார்ந்தபடித் தூங்குகிறேன். மரணத்தின் நன்மைகளில் ஒன்று, அது மீண்டும் படுக்கைக்கு நம்மை அழைத்துச் செல்வதாகும். ஆண்ட்டொனைனஸ(Antoninus) ஆறுதல் படுத்துவது இப்போது என் கையில்.   எனது பிரச்சினைக்கு, மரணம் சரியானத் தீர்வாக  இருக்குமென்கிற எண்ணம் வெகுநாட்களாக  என்னிடத்தில் இருப்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்.

அதிரியன் நினைவுகள் – 44

This entry is part 43 of 48 in the series அதிரியன் நினைவுகள்

இருந்தபோதிலும், என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பொய்யான கனவுலகில் திரும்பப் பிரவேசிப்பதை  நான் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். கனவுகள்தோறும் ஒரு சில கணங்கள் சில இரகசியங்கள் எனக்குச் சொந்தமானவை. ஆம், நான் தெரிவிப்பதைப் போலச் சில கணங்கள் மட்டுமே சொந்தம் ; பின்னர் அவை என்னிடமிருந்து தப்பிவிடும்.

அதிரியன் நினைவுகள் – 27

This entry is part 26 of 48 in the series அதிரியன் நினைவுகள்

காதல், உடலைப் பிரிந்த ஒரு ஆன்மாவை மீண்டும் பூமிக்குக் அழைத்து வந்து, தற்காலிகமாக அதற்கு ஒரு உடலைக் கொடுப்பதாகும். அளவில் வேறுபாடுகள் இருப்பினும் இக்கதையின் ஆழம் எங்கள் மனதை நெகிழச் செய்தது.  எங்களில் அனேகர் இக்கதையை ஒத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினர் : சத்தீரஸ் தனது குரு  நாவன்மை படைத்த அஸ்பாசியஸை (Aspasius) நினைவு கூர்ந்தார் (இவர் சிஷ்யருக்கு சில வாக்குறுதிகளை அளித்திருந்தார்