துருபர் சொல்வதில் உள்ள நியாயத்தை நான் முழுவதும் ஆதரிக்கிறேன். நானும், பலராமாரும் இரு தரப்புக்கும் சொந்தக்காரர்கள். எனவே , எந்த ஒரு முடிவெடுப்பதாக இருந்தாலும் பலவற்றையும் சீர்தூக்கி பார்த்தே முடிவெடுக்க வேண்டும். நீங்கள் அனைவரும் அனுபவசாலிகள் மட்டுமல்ல , அறிவிலும் சிறந்தவர்கள். யுத்தத்திற்கு தயாராவீர்களாக! துரியோதனனுக்கு கடைசி நேரத்தில் நல்புத்தி வந்தால் சமாதானத்திற்கு உடன்படுவான்
