ஞானம், ஞேயம், ஞானகம்யம்

ஞானயோகத்தைப் பயில்தல் என்றால் தன்னைப் பற்றிய உண்மையான அறிவை அடைதலை, ஆத்ம ஞானத்தை அடையும் அறிவைக் குறிக்கும். ஒரு ஆன்ம சாதகன் இறுதியில் அடைய வேண்டியதை கீதையில் கிருஷ்ணர்  “ஞானம், ஞேயம், ஞானகம்யம்” என்று குறிப்பிடுகிறார். இங்கு ஞானம் என்றால் பரம்பொருளை அறிவதற்குக் கருவியாக இருக்கும் சாஸ்திர அறிவு மற்றும் சாதகனுக்கு இருக்க வேண்டிய மனப்பக்குவம், நற்பண்புகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது. ஞேயம் என்ற சொல் இந்த ஞானத்தின் மூலம் அறியப்பட வேண்டிய இறுதிப் பொருளான பிரம்மம் அல்லது ஆத்மாவைக் குறிக்கிறது. ஞானகம்யம் என்ற சொல் அந்த இலக்கு ஞானயோகப் பயிற்சியின் மூலமாக மட்டுமே அடையக்கூடியது என்பதைக் காட்டுகிறது.