போதும்’ என்ற குமாரிக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. நெடுநாள் கழித்த ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவள் எழுந்து சென்று அவளிடத்தில் படுத்துக்கொண்டாள். அவள் மனது குழம்பிப் போயிருந்தது. பகல் முழுவதும் ஈர உடையுடன் அலைந்ததால் அவளில் காய்ச்சலும் தொற்றிக்கொண்டது. நள்ளிரவில் உக்கிரம் கொண்ட காய்ச்சலால் அவள் புலம்பிக்கொண்டிருந்தாள்.
